Search This SAKRITEASE Blog

Friday, October 11, 2024

காந்தி எங்கே தோற்றார் ஆர் எஸ் எஸ் அங்கே ஜெயித்தது

Why Gandhi Failed & RSS Won 
என்ற இந்த கட்டுரை காந்தியடிகளின் 75வது நினைவு நாளில் ( 30 ஜன 2023 )ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. 

அதனை இந்த விஜய தசமி அன்று ( 12-அக்டோபர்-2024) ஆர் எஸ் எஸ்ஸின் 100 வது ஆண்டு நிறைவு பெறுவதை ஓட்டி தமிழிலும் தருகிறோம்.

காந்தி இந்திய அரசியலில் நேரடியாக களத்தில் இறங்கிய அதே 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் ஆர் எஸ் எஸ் ம் தொடங்கப்பட்டது. ஆனால் சரியாக 100 ஆண்டுகள் கழித்து நாம் இந்த நிகழ்வை திரும்பி பார்க்கும் போது ஆர் எஸ் எஸ் என்கிற ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் இன்றும் களத்தில் இறங்கி தொண்டர்களுடன் பணியாற்றி வருகிறது. ஆனால் காந்தியின் ஆசிரமங்கள் இன்று அருங்காட்சியகங்களாக, நினைவு சின்னங்களாக, நூலகங்களாக ,கடந்த காலமாக காட்சி அளிக்கிறது.


காந்தியின் காந்தியம் ஒரு தனி மனிதனின் அடையாளமாக இன்று வரை பார்க்கப்படுகிறது. அவர் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இன்று அவரைப் போல் வாழ்பவர்களை காண கிடைப்பதில்லை.

இன்று எத்தனை காந்தி ஆசிரமங்கள் அதே கொள்கையுடன் வாழ்பவர்கள் உடன் இயங்கி வருகின்றன ?

இன்றும் சிலர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதன் படி செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் காந்தி வாழ்ந்த அளவிற்கு எளிமையாக அரை ஆடையுடன் வாழ முடியுமா ? வாழ்கிறார்களா ? என்ற கேள்வி நிற்கிறது.

இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவிலும் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியை அறிவார்கள் ஆனால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை துவக்கிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களை எத்தனை பேருக்கு தெரியும் ?

காந்தி தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கினார். அவரைப் போல் இன்னொருவர் வாழ முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பி விட்டு சென்று விட்டார் ஆனால் இன்றளவும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தொண்டர்கள் இந்தியாவின் மூலை முடுக்கு எங்கும் டாக்டர் ஜி உருவாக்கி கொடுத்த வழிமுறையில் தேச சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 

"காந்தி ஏழ்மையில் வாழ என்ன செலவாகிறது என்பதை அறிவாரா ?" என்று காந்தியின் சமகாலத்தவரும் நீண்ட கால நண்பருமான கவிஞர் சரோஜினி நாயுடு வியந்திருக்கிறார். காந்தியின் எளிமையான வாழ்க்கைக்கு காங்கிரஸோ அல்லது வேறு ஒரு நிறுவனமோ அதற்கு ஈடு கட்ட செலவுகள் செய்தன என்று அவர் குறிப்பில் தெரிய வருகிறது.

காந்தியின் எளிமையான வாழ்க்கைக்கு அவரை ஆதரித்த நிறுவனங்களின் செலவு ஈடு செய்ய வேண்டி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் காந்தியை சுற்றி இருந்த பலர் காந்திக்கு மட்டுமே எளிமை என்று நம்பி அவரை அரை நிர்வாணமாக நடமாட வைத்து அவர் எளிமையை பிரகடனப்படுத்தினர்.

ஆர் எஸ் எஸ்ஸில் மட்டும் எப்படி உணவை குறைந்த செலவில் தயாரிக்க முடிகிறது? என்று காங்கிரஸால் ஏன் முடியவில்லை ? என்று காந்தியே வியந்துள்ளார். ஆர் எஸ் எஸ்ஸில் ஒவ்வொருவரும் சமையலுக்கு தேவையான  சமைத்தல், சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் உட்பட அனைத்தையும் தன்னார்வ தொண்டர்கள் அவர்களே செய்து வருகிறார்கள்.

இது குறித்து காந்திஜிக்கும் ஆர் எஸ் எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் ஜிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை படித்தால் விளங்குகிறது. இதில் காந்திஜி டாக்டர் ஜியை ஏன் காங்கிரஸில் இருந்து விலகினீர்கள் ? சங்கத்தை ஏன் தொடங்கினீர்கள் ? என்று வினவி இருக்கிறார்கள். அதற்கு டாக்டர் ஜி - காங்கிரஸ்ஸில் சேவா தள தொண்டர்கள் என்பவர்கள் வெறும் நாற்காலிகள் எடுத்து போடவும் இடங்களை சுத்தபடுத்தவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் ஆனால் ஆர் எஸ் எஸ் சில் அனைவருமே தேசத்தை கட்டி காப்பவர்கள் அதற்காக அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கி வருகிறோம் என்று விளக்கி உள்ளார்கள். 

காந்திஜி தானே கழிவறைகளை சுத்தம் செய்து முன்னுதாரணமாக வாழ்ந்த்துள்ளார் ஆனால் அவரை சுற்றியிருந்த பலருக்கு அவருடன் இருக்கும் நேரத்தில் மட்டும் செய்யும் சேவையாக நினைத்துள்ளனர். ஆச்சார்ய வினோபா பாவே, ஜே சி குமாரப்பா , ராஜாஜி போன்ற சிலர் காந்தியை காட்டிலுமே அதிக காந்திய கொள்கைகளை கடைபிடித்தாலும் பலரிடமும் அந்த சேவை உணர்வை 100 ஆண்டுகள் கொண்டு செல்லக் கூடிய தன்னனலமற்ற தொண்டர் படையை உருவாக்கும் இயக்கத்தை அவர்களாலும் உருவாக்க முடியவில்லை.

காந்திஜிக்கும் டாக்டர்ஜிக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் லிங்க் கிழே வழங்கப்பட்டுள்ளது.

https://organiser.org/2021/10/02/19165/bharat/mahatma-gandhi-s-tryst-with-dr-keshav-baliram-hedgewar-at-wardha-in-1934/

காங்கிரஸை கலைக்கும் முடிவு :

காந்திஜியின் சத்திய சோதனை முயற்சியில் அவர் பல உயர்ந்த கொள்கைகளை பின்பற்ற முயன்றுள்ளார், ஆனால் அவற்றை அவர் காலத்திற்கு பிறகு பலராலும் கடைபிடிக்க முடியுமா என்று கணிக்க தவறி விட்டார். அதனாலேயே தன்னை போல் சிந்தனை உள்ளவர்கள் மிக குறைவாகவே உள்ளனர் என்பதனை உணர்ந்து, காந்தி காங்கிரஸ் இந்திய விடுதலைக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இயக்கம் என்று அதனை 1947ல் விடுதலைக்கு பின் கலைக்கவும் விரும்பினார். பல சித்தாந்தங்களை கொண்ட பலரையும் காங்கிரஸ் என்ற ஒரு கொடையின் கீழ் இனி நடத்த முடியாது என்று தெளிவாக காந்தி உணர்ந்திருந்தார்.

விடுதலைக்கு பின் இந்தியா -டாக்டர் ஜியின் திட்டம் :

ஆனால் டாக்டர் ஹெட்கெவார் ஜி ஆரம்பித்த இயக்கம் விடுதலைக்கு பின் இந்தியா எப்படி வலிமையாக இருக்க வேண்டும், அதற்கு பொது மக்கள் எப்படி வலிமையான கொள்கைகளோடு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இயக்கத்தை எப்போதும் ஒரு தொண்டு நிறுவனமாக இயக்குவதற்கு வடிவமைத்துள்ளார். முக்கியமாக இந்தியா (பாரதம் ) இனி ஒரு நாட்டிற்கு அடிமையாக கூடாது என்பதற்காகவே இந்த மண்ணின் பாரம்பரியத்தை ஊட்டும் விதமாக பயிற்சிகளை வடிவமைத்து, செய்து காட்டி வழி காட்டி சென்றுள்ளார். 

சங்கத்தின் குரு யார் ?

அதனாலேயே அவர் தன்னை சங்கத்தின் குருவாக காட்டவில்லை. அர்பணிப்பு, தியாகத்தின் அடையாளமான காவி கொடியையே சங்கத்தின் குருவாக வழிபட செய்து சென்றுள்ளார். ஒவ்வொரு ஆர் எஸ் எஸ் தொண்டரும் அந்த கொடியையே வணங்க வேண்டும் அதனடியிலேயே தேச சேவைக்காக உறுதி ஏற்க வேண்டும் என்று வழிப் படுத்தியுள்ளார். அதனாலேயே விஜயதசமி ஆன இன்று சங்கம் 100 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து உள்ளது. 

காந்திஜியை ஒவ்வொரு ரூபாயிலும் படம் பிடித்து போட்டாகி விட்டது ஆனாலும் அவர் கொள்கைகளை 100 % பின்பற்றுவோர் இன்று இல்லை. தன்னை முன்னிறுத்தாமல் பிரபலடுத்தி கொள்ள முயலாமல் செய்த டாக்டர் ஜியின் வழிமுறை 100 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை - ஆர் எஸ் எஸ் ஸே காரணம் ? :

இதே காலகட்டத்தில் விடுதலை அடைந்த பாகிஸ்தானின் நிலையை 2024 ல் ஒப்பிட்டால், பாகிஸ்தானிலும் ஜின்னா ஜி இருந்தார்கள், அவர்கள் நாட்டிற்கு ஒரு பச்சை கொடி தான், அந்த நாடு ஒரே ஒரு மதத்தை மட்டும் பின்பற்றுவதாக அறிவித்து கொண்ட நாடு, ஆனால் இன்று பாகிஸ்தான் மூன்றாக பிரிய கூடிய தருவாயில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி அனைத்து தேவைகளுக்கும் அமெரிக்காவையும், சீனாவையும், சவுதி அரேபியாவையும் நம்ப வேண்டிய நிலையில் உள்ளது. பாகிஸ்தானில் ஒரு ஆர் எஸ் எஸ் இல்லாததே அந்த நாடு இன்று பின் தங்கி உள்ளதற்கு காரணம். 

ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் சில பண்புகள் :

1. ஓவ்வொரு தொண்டரும் ( ஸ்வயம் சேவக் ) இந்த நாட்டிற்கு தான் தொண்டர் எந்த தலைவருக்கும் அல்ல.

2. பாரத தேசத்தில் எந்த பேரிடரிலும் அங்கு தன் சொந்த செலவில் சென்று சேவை செய்ய வேண்டும். இதற்கு எந்த வகையிலும் ஆர் எஸ் எஸ் இயக்கம் பஞ்சப்படி , பயணப்படியோ வழங்காது. இன்றைய சூழ்நிலையில்  அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு எதுவும் பணம் செலவு செய்யாமல் கூட்டம் கூட்ட முடியவில்லை. கடந்த 6ம் தேதி நடந்த சங்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய பொது நிகழ்ச்சியிலோ ஊர்வலத்திற்கோ தங்கள் சொந்த செலவில் சீருடை வாங்கி அணிந்து நிகழ்விடத்திற்கு வந்து கலந்து கொண்டனர்.

சூனாமி பேரழிவின் போது 2004ல் நாகப்பட்டினத்தில் இருந்த அழுகிய பிண குவியலகளை எடுத்து இறுதி சடங்குகள் செய்ய துப்புரவு பணியாளர்களே துணியாத போது ஆர் எஸ் எஸ் தொண்டர்களே அனைத்து சடலங்களுக்கும் இறுதி சடங்குகள் செய்தனர். ஆனால் இது எதற்கும் ஒரு போட்டோ கூட எடுத்து அந்த சேவைக்கு விளம்பரம் தேடவில்லை. சமீபத்தில் வயநாட்டில் நிலச் சரிவு பேரழிவின் போதும் "சங்கி"களே முன் நின்று பல்லாயிர கணக்கில் உதவிகள் செய்தனர்.

1965 பாகிஸ்தான் போரின் போது இந்திய இராணுவமே சங்கத்தின் உதவியை நாடிய தருணங்களும் இருக்கின்றன.

3. எந்த வித விளம்பரங்களும் இன்றி எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை செய்ய மட்டுமே ஆர் எஸ் எஸ், தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இதனை எந்த ஒரு அரசியல் கட்சியிலோ, தொண்டு நிறுவனங்களிடமோ, தனியார் துறையில் சம்பளம் வாங்கிக் கொன்டு வேலை செய்யும் ஊழியரிடம் கூட எதிர்பார்க்க முடியாது.

4. எந்த வித மத, ஜாதி, இன, மொழி உணர்வு சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் காண முடியாது. இங்கு உயர் பதவியில் இருப்பதனாலோ செல்வ செழிப்பின் படியோ எந்தவித பாகுபாடும் காட்டபடுவதில்லை. பல இடங்களில் மிக குறைந்த வசதிகளுடன் கூட சேவை செய்ய ஆர் எஸ் எஸ் அமைப்பினர் தயங்குவதில்லை

5. ஒவ்வொரு தொண்டருக்கும் உடல் -மன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. அவர்கள் என்றைக்கும் ஆரோக்கியமான எண்ணங்கள் உடனும் உடலுடனும் சேவை செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்.

6. ஒவ்வொரு சேவகர்களையும் அவரவர் திறனிற்கு கேற்ப பல்வேறு களப்பணியில் சங்கம் பயன்படுத்தி கொள்கிறது.

7.  மிகப் பெரும்பான்மையான பணிகளில் பணம் வசூலிப்பதில்லை. அப்படியே உதவி செய்ய வருவோரிடமும் பொருளாகவோ பிற சேவைகளுக்கு நன்கொடையாளரே நேரடியாக பணம் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சேரும் பணத்திற்கும் முறையான வரவு செலவு கணக்குகள் பராமரிக்கபடுகின்றது.

இந்தியாவில் வேறெந்த நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னார்வ தொண்டர்கள் ஆர் எஸ் எஸ் சிற்கு இருப்பதை போன்று இல்லை.

தீர்க்கதரிசி டாக்டர் ஹெட்கெவார் தொலை நோக்கு சிந்தனையுடன் அடுத்த அடுத்த தலைமுறைக்கு தொடர் ஓட்டமாக கோண்டு செல்ல வேண்டிய வழிமுறையை உண்டாக்கிவிட்டு சென்றுள்ளார். அவருக்கு பிறகு வந்த தலைமையும் மிகச் சிறப்பாக  வழி நடத்தி இன்று திரு. மோகன் பகவத் வரை இயக்கத்தை வழி நடத்தி வருகின்றனர்.

பல தலைவர்களும் தோற்ற இடம் :

ஆனால் இந்த பண்பில் தான் காந்திஜி, இராஜாஜி, நேதாஜி என்ற பல முக்கிய தலைவர்களும் கோட்டை விட்டுள்ளனர்.  அதுவும் காந்திஜிக்கும் நேதாஜிக்கும் மிகப் பெரிய ஆதரவு இருந்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "இந்திய நேஷ்ணல் ஆர்மி" என்ற ஒரு படையையே நடத்தி ஆங்கிலேயரை ஓட ஓட விரட்ட மிக முக்கியமான காரணமாக அமைந்தார். இருப்பினும் அந்த ஆளுமை நீங்கிய பின் படிப்படியாக அவர்கள் நிறுவனங்கள் காணாமல் போகின அல்லது அவர்கள் ஏற்ற சித்தாந்தங்களை பின் வந்தவர்கள் பின்பற்றவில்லை.  காந்திஜி, நேதாஜி  டாக்டர் அம்பேத்கர் என்று பலரையும் ஆச்சரியபட வைத்தது ஆர் எஸ் எஸ் சின் கட்டமைப்பே. அவர்களால் மிக பெரிய உயரத்தை தொட முடிந்தது, ஆனால் அவர்களுக்கு பின்னால் வந்தவர்களால் அவர்கள் விட்டு சென்ற வெற்றிடத்தை இன்று வரை நிரப்ப முடியவில்லை.  வசீகரமான ஒரு தலைமை போன பின் அந்த இடத்திற்கு வேறு யாரையும் தயார் படுத்தவில்லை. 


இங்கு தான் டாக்டர் ஹெட்கெவார் பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்க  வைத்துள்ளார். அவர் எங்குமே தன்னை முன்னிறுத்தவில்லை. பாரத மாதா வைதான் முன்னிறுத்தினார். தன் படங்களுக்கு பூ போட சொல்லவில்லை. ஒரு காவி கொடி அதன் கீழ் தேச சேவைக்காக ஒரு சபதம்.  இதுவே ஆர் எஸ் எஸ் சின் வெற்றியின் தாரக மந்திரம்.  

சங்கத்தின் பல கிளை நிறுவனங்கள் :

இந்தியாவில் ஆர் எஸ் எஸ் சினால் பா.ஜ.க என்ற அரசியல் கட்சி, வி,எச்.பி என்ற இந்து சேவை அமைப்பு  மற்ற பல துணை நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன.  தாய் சங்கத்தில் இருந்து தொடர்ந்து இந்த இயக்கங்களுக்கு தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தக் காலகட்டதில் இந்தியாவில் சங்கம் போல் அனைத்து தரப்பினருக்கும் ஒரு இயக்கம் இல்லை. ஒரு சின்ன டீக்கடையில் பெயர் தெரியாத ஒரு சிறு ரயில் நிலையத்தில் இருந்தவரை பாரதத்தின் பிரதமர் ஆகக் கூடியளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

சங்கத்தில் யார் இணையலாம் ?

திருமணம் செய்து கொள்ளாத திரு வாஜபெயி, வாழும் பிரம்மச்சாரி திரு நரேந்திர மோதி, துறவறம் பூண்டுள்ள திரு யோகி ஆதித்யநாத் ஆகியோரை நமது பாரம்பரியத்தில் ஊரச் செய்து தேச சேவைக்கு தந்துள்ளது.  திரு அத்வானி, திரு அமித் ஷா போன்ற குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவோரையும் அது ஈர்த்துள்ளது. இந்த சங்கம் இதே போல் செயலாற்றினால் இது போல் பல தலைவர்களை தேச சேவைக்கு தந்து கொண்டே இருக்கும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இந்த சங்கத்தினால் உருவாகும் தலைவர்கள் யாரும் அவர்கள் வகிக்கும் பதவி நிரந்திரம் என்று நினைப்பதில்லை. என்று சங்கம் கட்டளை இடுகிறதோ அன்றே அடுத்தவருக்கு வழி விட்டு சென்றுவிடுகிறார்கள். என்ன தான் பா.ஜ.க சங்கத்தின் வார்ப்பு என்றாலும் அதில் இன்று பல் வேறு அமைப்புகளில் இருந்து பலரும் சேருவதால் சங்கத்தை போல் நீண்ட கால பயணம் சாத்தியம் குறைவு தான். ஒரு காலத்தில் இந்திய கம்யூனிச கட்சிகளில் எண்ணற்ற தன்னலமற்ற பொது சேவையில் ஈடுபட்ட தொண்டர் படை இருந்தது. ஆனால் இடது சாரி கொள்கைகள் நீர்த்து போன பின் அவை இன்று செயலிழந்து முன் இருந்த உற்சாகத்தில் செயலாற்ற முடியவில்லை.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி :

சீனாவில் நீண்ட நெடும் காலமாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சியின் அடிப்படை தத்துவமான பொதுவுடைமை என்ற தத்துவத்தில் இருந்து விலகி முதாலளித்துவ தனிவுடைமையில் சிக்கி இன்று இராணுவத்தின் இரும்பு பிடியினால் மட்டுமே ஒன்றாக இருக்கிறது. அங்கும் தன்னலமற்ற பொது சேவை ஆற்றக் கூடியவர்கள் அந்த கட்சியில் இன்று இல்லை. பெரும்பான்மையான மக்கள் சீனாவில் ஒருவித விரக்தியில் தங்கள் மனதில் உள்ள குமுறல்களை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆர் எஸ் எஸ் ஸின் வேக தடைகள் என்ன ?

ஒரு 100 ஆண்டுகளை கொண்டாடும் ஒரு இயக்கத்தின் சிறந்த பண்புகளை பாராட்டும் வேளையில் அந்த நிறுவனத்திலும் சில வேக தடைகளையும் குறிப்பிட வேண்டி உள்ளது.

இயற்கையை விட்டு விலகலாமா ?

நாகரீகத்தையும் பண்பாட்டையும் போற்றும் சங்கம், அந்த பாரம்பரீயம் உருவாக காரணமான இயற்கை வழி வாழ்வியலில், மலைகள் , நதிகள், மரங்கள் பராமரிப்பது பாரதத்தின் அடிப்படை தன்மை என்பதை மறந்து வருகிறது. 

பெயர் அளவிற்கு "பர்யாவரன்", "வன விகாஸ்", "கிராம் விகாஸ்" என்ற பெயர்களில் அமைப்புகள் இருந்தாலும் இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் இயற்கை சுரண்டல்களை தடுக்க கூடிய ஆற்றல் சங்கத்திடம் இல்லை.

கிருஷ்ணனின் உபதேசத்தை ஏற்க மறுப்பதேன் ?

கிருஷ்ணன் கோவிலை காப்பாற்ற துடிக்கும் இயக்கம் அந்த கிருஷ்ண பரமாத்மாவே வணங்கச் சொன்ன மலைகளை காப்பாற்றுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. 

கலாசாரத்திற்கும் நதிகளுக்கும் என்ன சம்பந்தம் ?

மலைகளில் அடர்ந்த வனம் இருந்தால் மட்டுமே ஆறுகள் உற்பத்தியாகும். நதிகள் ஓடினால் மட்டுமே நாகரீகம் வளரும். கலைகள் வளரும். 

பூமி வெப்பமான பின் எதை காப்பாற்ற போகிறோம் ? கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் கலைகளை காப்பாற்றுகிறேன் என்று இவை அனைத்திற்கும் ஆதாரமான மலைகளையும் மரங்களையும் ஆறுகளையும் அழித்த பின் வெப்பத்தில் எதை காப்பாற்ற போகிறோம் ? 

மலைவாழ் மக்களின் பங்கு என்ன ?

அதற்கு மிக முக்கியமானது மலைகளை, வனங்களை பாதுகாப்பதே. அதனை காப்பாற்ற நினைப்பவர்களை அங்கு இயற்கையோடு ஒத்து வாழ்பவர்களை அங்கு இருந்து விரட்டி விட்டு நிலக்கரி எடுக்கிறேன் இரும்பை எடுக்கிறேன் என்று இயற்கை வளங்களை இழப்பது நமது பாரம்பரியமல்ல.  மீண்டும் மலையில் வாழ நினைப்பவர்களுக்கு அதற்குரிய சூழலை, பயிற்சியை சங்கம் மேற்கொள்ள வேண்டும். 

மலை வாழ்வினத்தை சேர்ந்த ஒருவரை இந்திய குடியரசு தலைவராக ஆக்கிய சங்கத்தின் செயல் மிகவும் பாராட்டுகுரியது. அதற்கும் ஒரு படி மேலே மலையில் இயற்கை வழியில் வாழக் கூடிய ஒரு பெண்ணை தலைவராக்கி நமது நாட்டின் தலை நகரையும் "ரெய்சினா ஹில்"லில் இருந்து ஒரு மலையின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் ( பின் குறிப்பு : இதற்காகவே தலைநகர் அமைக்கிறேன் என்று மலை எங்கும் கட்டிடம் கட்டி மொட்டை ஆக்க கூடாது ) 


விந்திய மலையில் விஜய தசமி

விஜயதசமி அன்று பிறந்த சங்கம் விந்திய மலையில் கலைமகளாம் சரஸ்வதி தேவியின் அருளாட்சி நடக்க முயற்சி எடுத்தால் ஆயிரமாவது ஆண்டை காணக் கூடிய வாய்ப்பை இயற்கையின் ஆசியோடு நடக்கும்.

தமிழ் நாட்டில் சங்கி : சங்க காலம் முதல் 

தமிழ்நாட்டில் சங்கத்திற்காக பணி செய்பவர்களை "சங்கி" என்ற அழைக்கிறார்கள். "சங்கம்" என்பதே தமிழ் சொல். அதனை மூன்று தமிழ்ச் சங்கங்கள் அமைத்து தமிழையையும் வளர்த்து சங்கத்தையும் வளர்த்தவர் தமிழர்.

 இதில் நாகரீகத்தில் முந்தியது "சிந்து சமவெளியா ?" திராவிட சமவெளியா ?" என்ற கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. தமிழரின் வாழ்வியலை வெறும் 2000 ஆண்டுகளுக்குள் முடக்க "கீழடி" வேலை நடக்கிறது. 
தமிழர் நாகரீகம் எவ்வளவு பழமையானது ?
ஆனால் 20,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு மொழியியல் வாழ்வியல் தொடங்கி வளர்ந்ததாக, அமெரிக்காவில் வெள்ளையராக பிறந்து பிறகு "சைவ சித்தாந்தத்தின்" பால் ஈடு கொண்ட மெய்ஞானியாம் சிவாய சுப்பிரமணிய சுவாமி என்ற அடையாளத்தில் "லெமூரியன் ஸ்காரல்ஸ்" என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். அதன் படி லெமூரியா என்கிற "குமரிக் கண்டம்" இன்றைய இந்திய பெருங்கடலில்
ஆஸ்திரேலியா, ஆப்பரிக்கா இடையே நீரில் முழுகி இருப்பதாக தெரிகிறது.

மதுரை மீனாட்சியே பாரதத்தின் மாதா :
நிலாவிற்கும், செவ்வாய்க்கும் விண்வெளியிலும் முன்னேறிய நாம், நமது பாரம்பரியத்தின் அடிநாதமான "முதல் மதுரை" யை தேடி முச்சங்கம் அமைத்து தமிழர் கண்டெடுத்த அறிவு சுரங்கத்தை மீட்டெடுக்க, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம், இந்திய அரசை முயற்சி செய்ய தூண்ட வேண்டும்.  அந்த முதலாம் மதுரை மீனாட்சியே பாரத மாதா. 



அவர் பாதம் பணிவோம். 


Sakritease 

சகிருட்டிஸ் 

12 Oct 2024



Thursday, July 27, 2023

Sex is Not Sin Open Him Her


In this week, there is a controversy erupted regarding a movie scene in the movie  "Oppenheimer", where the lead pair seem to recite verses of Bhagavad Gita before sexual intercourse. Information and Broadcasting Minister Mr. Anurag Thakur found it objectionable and expressed that insults the Hindu sentiments. Actually, all Hindus must take pride, that the Director of the Movie, Mr. Christopher Nolan, is very fond of the verses of the Gita and have learnt even Sanskrit to know the direct language. Though sounds controversial, The scientist, Mr. Oppenheimer, on whom this biopic is made, was considered an atheist but he found solace in reading Bhagavad Gita, which means that sacred verses were giving answers to lateral thinking, brain dominated logic seekers too, so this act of incorporating Gita verses in this generation of technological advancements, Gita is relevant.



If reciting Gita verses before sex in bed is a sin, we have to know where the Gita was 1st delivered. It was delivered on a battle front, where thousands of bloodily related cousins were dead, many injured, many maimed. Gita was not delivered inside a temple. In fact, core essence of Gita, is that the Omni present all pervading supreme being is a witness to every act of every being. 

On scientific front, we have to notice, Germany, so advanced in Engineering, even before Hitler's days, was so interested in learning Sanskrit language and the practice is still continuing in many universities in Germany. Many scientists and scholars, have unearthed many scientific practices of ancient India which was stored in Sanskrit mantras. Actually, present India has to owe a lot to Germans as many like Oppenheimer have specifically acknowledged the knowledge and wisdom they have gained from ancient Indian
Vedas and Upanishads.

With India leading the world in Population, Indians should not look down upon the act of procreation, sexual reproduction or pretend act of reproduction as something filthy. Both the leading players of Bhagavad Gita, Dark Skinned Krishna and Fair skinned Arjuna were the most sought after by many women in their generation. Gita is relevant and would be forever relevant for generations to come as it is a reference manual for every human mind as it guides us in every deed of our day today life. Even if Government of India, introduces Gita in the syllabus of schools and Colleges, Students may not find it appealing as a subject, whereas Christopher Nolan has taken a step further in teaching the application of Philosophy in day today life. This is really where, India is failing to take the subject of Sex  to the young minds. In fact most of the Indian films have to be banned as they show young men stalking women on roads as heroes. Women are merely treated as body and objectified. Many Indian state governments are giving gold free of cost for the women to get married, probably as an incentive for authorized sex. 


Act of reproduction, a science of reproduction should spread as an art of reproduction. That's why our ancestors sculpted it ,painted it and even explained in detail as "Kama sutra". That was the advancement of civilization, our ancestors achieved. Ancient Indians, were not seeing sex as an act of unison of bodies, but as an yearning for unison with supreme consciousness, which is the very purpose of Birth of every being.  Saint Saivite siddhar like Thiru moolar had explained about the aspect of realizing the aspects of cosmos through the realization of the physical body (
Andame pindam, pindame andam in Tamil - What is there in Cosmos is there in the body and what is in the body is there in the Cosmos. Thats why without the need for physical travel, Tamizh siddhas, called Mars as Red Planet, Sevvai. 
 Probably Indian scientists should spend more time reading Thiru Mandiram and exploring the intricacies of the verses than spending on Gaganyaan, chandrayan etc...Nolan is Listening. Now learn is the message for physical rocket guys  ).

In fact, our Prime Minister Mr. Modi's favourite language, Tamizh and his favorite Tamizh Poet Saint Thiruvalluvar have written extensively about art of love making in his Thiru Kural. Tamil Poet from Modiji's own consituency, Kashi, ( where he conducted Kashi Tamizh Sangamam with pride) Mahakavi Subramaniya Bharathi, wrote about this motherland as where his parents bliss fully procreated him. ( Modi can teach Mr. Anurag Thakur to recite " endayum thayum maghizhundu kulaviyadu in Naade" )

This article also request the readers to ponder, we the human beings, who are in to fashion design technology and have come a long distance in clothing ourselves, are not able to stop raping, harming fellow human beings, whereas the Animals who are still roaming nude, are able to easily predict when their mates are ready for mating. Animals don't rape. So somewhere our sixth sense theory is failing isn't it ?

 Probably Charles Darwin didn't learn Sanskrit nor he studied animals properly in his hypothesis of Human Evolution.  

Sex is not Sin.
Open him-her.
We are not Limited by Physical bodies. 
We are immortals.

Death is unreal 
is that what dark skinned cow herd boy 
heard telling the white skinned warrior. 



Sakritease
சகிருட்டிஸ் July 2023



 

Friday, June 30, 2023

உரிமை இருப்பவர் பறிக்காவிட்டால் உரிமை இல்லாதவர் பறிப்பர்


 உரிமையை பறிக்க வேண்டியவர்

உரிமையை பறிக்காவிட்டால்

உரிமையை பறிக்க கூடாதவர்

உரிமையை பறித்துவிடுவர்

உற்றார் குழந்தையை கண்டிக்காமல் வளர்த்தால்

ஊரார்தான் கண்டிக்க வேண்டி வரும்

உன்னை "செ" என்று விலக்குவதற்கும்

உன்னை "ஜி" என்று வாழ்த்துவதற்கும்

உன் செயல்களே காரணம்

திருசெந்தூர் மணலிலும்

திருப்பதி மலையிலும்

இடியும் இறங்கும்

ஈடியும் இறங்கும்

தில் மனதில் வேண்டும் பாலகனே !!!!

உதய சூரியனின் சூடு உறைக்காது

இரவி உச்சத்திற்கு வந்தால் சூடு தாங்காது


சகிருட்டிஸ் 2023

Sakritease 2023


Thursday, June 15, 2023

Stop Superstardom Save Cricket



One more WTC final loss by the Indian cricket team and Cricket pundits wants now heads to roll on.




Where and what is the root cause?? 

Very straightforward - Cricket is team game and India churns out superstars like Rajini kanth who are single handedly expected to win matches. But see the two title winners - New Zealand and Australia - which are teams winning on collective brilliance. 


Even the Indian team which achieved the impossible in Gabba, Brisbane was led by a unassuming Captain Rahane and no nonsense simple Cricketers who rose to the occasion. 

Sachin Tendulkar's confession that he does not want virat kohli to break his records speaks shallowness of Indian super star mindset. 24 years he played for records and for his sponsors who want to sell everything with his endorsements and same legacy is being followed his successors in super stardom. 

Dhoni who never loses his cool when India was facing loss whereas he fumes if CSK is about to lose. 


No player is fit enough to play three formats in Cricket. 

Reality is very open. Body and mind fatigue sets in any individual if he or she does same routine again and again everyday. Brutal loss at Indore Indian team suffered because Rohit Sharma urging the well set Pujara to accelerate on the 2nd day of the Test match, who could have in his own style tormented the Australian bowling attack, whereas Rohit Sharma's Mumbai Indians brain sees even a test match with T20 attitude. 

Test match is called so because it tests the players' composure in different moments of the Game. It is also revealed every franchise of IPL wants their respective team captains to be in the Indian Test, ODI & T20 teams just like a reservation quota.

After grueling 3 months of IPL, Gill was labelled as next big thing. ( see sponsors wants someone to be groomed in to the shoes of Sachin - Dhoni - kohli ) Gill showed his feet is no where moving for a test match cricket.
India has enough manpower to play three separate teams for Tests, ODIs and T20s. Why one individual with fatigue and under performance need to play everywhere ?????. Don't make few billionaires instead make many more cricketers come out of poverty. 



BCCI being the richest cricketing body can afford to have two teams for each format, which means at least 66 players be benefitted. 


Nation before franchise :
Australian bowler Mitchell Starc has made a head turning statement rather slapping statement on BCCI and over greedy Indian cricketers that he took rest from IPL to keep himself freshly available for His nation, Australia than his franchise.

Till 7 days prior to WTC final - Rohit Sharma, Virat Kohli, Gill, Rahane, Jadeja, Shami, Siraj were playing body tiring games of IPL all around India. Already many famed cricketers are in hospital as they have screwed up their bodies beyond repair. 

One word of caution for commentators :

Some are most respected players in their hey days are jumping to one man hero worship to save matches for India. Despite you are more experienced than ordinary Cricket crazy Indian citizen, we are able to see corruption is deep rooted and favoritism is always burning. It is more evident when political masters want to share the limelight with cricketers. Should we ask Supreme Court to permanently appoint committees to monitor the cricket board? 

Do we need powers and Pawars to win World cups and ICC Tournaments? 

Statistical analysis clearly says Indian top order constantly fails in putting up good scores in last two WTC cycles, only batters below batting position no 5 are saving matches. Last Australia tour of India, it was Axar Patel who stitched the scores with likes of Jadeja, Ashwin ,shardul, sundar etc... But tired soul Rohit Sharma blames it on Bowlers for failures. 

So verdict is clear :
1. No player will play all three formats 
2. 3 separate teams for all 3 formats with 3 separate captains. 
3. No super stars to be made out of anyone. 

If these three cannot be followed, It is better for Indian Cricket Fans to look for some other sports than Cricket (which cashes in on fans emotions and Money ) 

Sakritease June 2023
சகிருட்டிஸ் ஜுன் 2023

A Goat is roaring in TN தமிழ்நாட்டுல ஆடு உறுமுதாம்

 

அதெல்லாம் ஒரு காலம் !!! அது காமராஜர் இருந்த வரை சாத்தியம் !!!
இந்த வாசகங்கள் காமராஜர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்களின் அடிக்கடி எழும் மனக் குமுறல். அதன் பிறகு அமைந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகளையும் காமராஜரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் "ஒரே குட்டையில் ஊறின மட்டை".

கடந்த 56 வருடங்களாக வெறும் மேடைக்கு மேடை தேர்தலுக்கு தேர்தல் ஊழல் சேற்றை ஒருவருக்கு வாரி இறைப்பது நடந்தது. சிலரின் ஊழல் மட்டுமே நிருபிக்கப்பட்டு சிலருக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. ஆனால் மக்களின் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஊழல் இரண்டறவே கலந்துவிட்டது. ஊழல், இலஞ்சம் இல்லாமலே ஒரு வேலையும் சாத்தியம் இல்லை என்ற மனநிலைக்கு தமிழகம் சென்று விட்டது. "ஊழல் தவறு" என்று பேசுபவர்களும், நினைப்பவர்களும் யாராவது வந்து இந்த ஊழல் வழிமுறைகளை மாற்ற மாட்டார்களா என்ற ஏக்கம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. சினிமாவிலாவது நல்லது செய்கிறார்களே என்று நம்பி சில நடிகர்கள் பின்னாடியும் போய் பார்த்தும் அதுவும் நடிப்பு தான் என்று மிகுந்த விரக்தி அடைந்திருந்த நேரம் - ஒரு ஒளிக் கீற்று மிக மெல்லியதாக பரவ தொடங்கியுள்ளது. அந்த ஒளி பேரொளியாகுமா என்பது போக போக தெரியும். அந்த ஒளி ஊழல், இலஞ்சம் என்ற இருள்களை நீக்குமா என்ற ஆர்வத்தை கடந்த ஒரு வருடமாக திரு. கு. அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த இளைஞர் ஒரு விவசாயி , ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளார், மக்களின் அபிமானத்தை பெற்ற "சிங்கமாக" உள்ளார். தனது அரசு வேலையையும் துறந்து ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். அந்த கட்சி மிக தூயமையான கட்சியா என்றால் நிச்சயம் இல்லை. அந்த கட்சியில் எல்லா கட்சிகளிலும் உள்ளது போல் அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும், புகழிற்காகவும் பலரும் அந்த கட்சியில் உள்ளனர். 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சாலையில் உள்ள பள்ளமும் அனைத்து துறைகளில் உள்ள ஊழல்களை பறைசாற்றுகின்றன. மக்களில் பலரும் இந்த ஊழல்களை தடுக்க முடியாது என்று தளர்வடைந்து அந்த ஊழலில் ஒரு சிறு தொகையை கையூட்டாக  ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக் கொண்டு இந்த ஊழல்களை வளரவிட்டு வருகிறோம்.

இந்த மனிதரால் ஊழலை ஒழிக்க முடியுமா ?? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இதுக்கெல்லாம் நம்பிக்கை அளிப்பதே இந்த நபரை இரண்டு கழகத்தினரும் போட்டிக் போட்டி கொண்டு தாக்குவதே அண்ணாமலை மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இது வரை இருந்த எந்த பா.ஜ.க வின் மாநில தலைவரையும் இந்த இரண்டு கழகங்கள் இணைந்து தாக்கியதே இல்லை. அப்போ இந்த நபரிடம் ஏதோ ஒன்று சரியாக இருக்கிறது. இவரது இலக்கை கண்டு பல அரசியல் தலைவர்களுக்கும் அச்சம் ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கழங்களை நேரடியாக ஒரு கோட்டில் எதிர்க்க துணிவதற்காக இவரை ஆதரிக்கலாம். 

குமாரசாமி காமராஜரை நம்பினோம்
குப்புசாமி அண்ணாமலையை நம்பலாம்

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

இந்த நபரை ஆட்டுக் குட்டி என்றே இவரது எதிர் கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். அதனால் "இந்த ஆட்டுக் குட்டி முட்டை போடும்" என்ற எமது கட்டுரையையும் படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.


https://sakritease.blogspot.com/2022/09/this-goat-will-hatch-egg.html





Tuesday, May 30, 2023

Hail Sengol Nandi why fail real nandis

 Hail SENGOL Nandi !!!!

Why fail real Nandis ???

On 28th May 2023, Indian Government led by the Prime Minister made a historic move to bring back the SENGOL to the lime light after 75 years of Indian Independence from the British.

The Sengol, The sceptre, is a symbol of righteousness and it was a practice to give the SENGOL from the previous King to the Next King by the Guru in Chief of that Kingdom. This was practiced by all Tamizh ( Tamil ) Kings and queens, which includes Pandiya, Pallava, Chera and Chozha dynasties. In Chozha Kings, as they were saivaites, who considered themselves to be the representatives of Lord Siva, and ruled their kingdoms in the Name of Lord Siva and hence only Saiva Adheenams, The Pontiffs of Saiva Mutt, anointed the rulers as a mere staff ( in Tamizh - word Thandam means a stick ) or as a tool and executed all the functions as that of the decisions of Lord Siva only.  



This is simil
ar to Bharatha of Ramayana, keeping the foot wear of his elder brother, Rama, on the throne and ruling it.

This SENGOL, when held by the King or queen, on their hands, consistently reminded them, that they are merely a rod or the stick, and execute the power given to them, without fear or fervor or favor to anyone and had to uphold righteousness. 

They added sanctity to the Rod by adding the symbol, a Nandi, a bull on which Lord Siva travelled to rule the world. Nandi, as Saivites believed as a constant witness to their actions to ensure righteousness.

The PM, did the right thing by bowing down - prostating before the SENGOL in front of 21 Saivite Adheenams and carried the sengol with great reverence and installed it next to Lok Sabha speaker's Chair.

Well, showing reverence to the Nandi, The Bull is great. But in reality , day today life, How are we treating bulls ?

The Govt of India, has earmarked several crore Rupees only to produce female calves by sex sorting of semen derived from the BULL. This is being carried out in all states.

Already we had raised this question in our previous post https://sakritease.blogspot.com/2023/03/male-not-needed.html

Prime Minister Mr. Narendra Modi can verify with the 21 saivite adheenams about the practices of treating Bulls in the erstwhile Chozha Kingdoms. Till 20th Century, there used to be "Kovil Kaalai ( Temple Bull ) " in every village temple. These bulls are allowed to roam free in villages and impregnate many cows of that village in the natural mating process. 

Honourable PM, in your rule, if you prevent the birth of Male Calves to be born in this Land, How will be the dharma or righteousness can prevail ?? That too of a native traditional breed, native to that region have to roam around, then only this Land will get back its Traditional Virtues.

is it enough if we live a symbolic life with token gestures ??

Then will it not be sufficient to keep statues of Yours and other political leaders be kept in that new building and declare ourselves as Vibrant democracy ??????

In the Rama Rajya too, righteousness or dharma is assessed by allowing the Horse to move freely across the Kingdom.

Respected Saiva Adheenams, please ensure in all the temples managed by your Holinesses, Temple Native Bull, scheme is implemented in full spirit and the Temple bull without any ropes or strings are allowed to go around the villages. 

Even the PM calling for introspection of Farmers and adopting organic farming is not possible without Country Bulls and cows. 



Treating SENGOL as walking stick & Treating Nandis as mere symbols cannot revive the culture. Needed Course Correction. Loving all the creatures and ensuring peaceful co-existence is the fundamental of Righteousness / Dharma.


Sakritease May 2023

Sunday, March 12, 2023

Male Not Needed ஆண்கள் தேவையில்லை

 


9. மார்ச் 2023 அன்று தமிழக முதல்வர் காணொளி வாயிலாக மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் மூலமாக பசுக் கன்றுகளை ( கிடாரி / பெண் கன்றுகள் ) மட்டுமே பிறக்கும் படி செய்யும் செயற்கை சினை ஊசி தயாரிக்கும் ஆராய்ச்சி கூடத்தை நீலகிரி மாவட்டத்தில் திறந்துள்ளதாக இந்த செய்தி இணைப்பு தெரிவிக்கிறது  https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/mar/10/tamil-nadus-first-sex-sorted-semen-lab-opened-in-nilgiris-2554693.html

இது நாள் வரை அநேக கிராமங்களில் மாடுகள் வைத்திருப்போர் கால்நடை மருத்துவரிடமோ அல்லது தனியார் பால் நிறுவனங்கள் வாயிலாக மாடுகளுக்கு சினை ஊசிப் போட்டு கருவூட்டல் நடத்தி வந்தனர். அதில் அந்த மாடுகளுக்கு காளை கன்றோ ( ஆண் கன்று ) அல்லது கிடாரி கன்றோ ( பெண் / பசுக் கன்று ) பிறந்து வந்தது.  இதில் மாடு வளர்ப்பவர்களுக்கு காளை கன்று பிறந்தால் அவற்றை இறைச்சிக்காக விற்று வந்தனர். ஆனால் நாள் நாளாக சில மாதங்கள் தங்கள் மாடு பால் கறக்க வேண்டும் என்பதற்காக அந்த காளை கன்றுக்கும் தீனிப் போட்டு பராமரிக்க வேண்டி வந்தது. பசுக் கன்று என்றால் சில வருடங்களில் வளர்ந்து அதுவும் ஒரு பசுவாகி அதற்கும் ஒரு ஊசி போட்டு தாயாக்கி பால் கறக்கின்றனர். 

இனிமேல் இந்த பசுக் கன்று ஊசி மட்டுமே போடப்பட்டு வந்தால் இன்னமும் சில வருடங்களில் நமது நாட்டில் காளை மாடுகள் என்ற ஆண் மாடுகளை நாம் கண்ணால் பார்க்க முடியாது அவை ஆராயச்சி நிலையங்களில் மட்டுமே வளர்க்கப்படும் அபூர்வ இனமாகிவிடும். 

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கூட கோவில்களில் முக்கியமாக சிவன் கோவில்களில் கோவில் மாடு என்று காளை மாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊருக்கு பொதுவாக வளர்க்கப்படு வந்தன. அந்த கோவில் காளைகள் ஒவ்வொரு விவசாயியும் வளர்க்கும் பசு மாடுகளுடன் இணைந்து சினை ஊட்டும். இதனால் அந்த காளை மாடுகள் கிராமத்தினரால் வணங்கப்பட்டு வருடாவருடம் தைப்பொங்கலின் போது அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. 

விவசாயத்தில் படிப்படியாக இயந்திரங்கள் நுழைய தொடங்கியபின் வண்டி ஓட்ட, ஏர் ஓட்ட என்று எருதுகளாக்கப்பட்ட காளைகள் டிராக்டர் மற்ற வாகனங்கள் வர துவங்க கிராமத்தினருக்கு காளைகளின் தேவை குறைய ஆரம்பித்தது. அதுவும் பாரம்பரிய நெல் ரகங்கள் மாறி குட்டை ரக நெல் ரகங்கள் அறிமுகபடுத்திய பின் வைக்கோல் கிடைப்பது குறைய குறைய மாடுகளுக்கு தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டு காளை மாடுகள் பராமரிப்பது செலவாக பார்க்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் காளை மாடுகளை லேபில் வைத்து விந்தணுக்களை சேகரித்து அதில் பெண் கருவை மட்டும் உருவாக்கும் எக்ஃஸ் X  வகை க்ரோமோசோமகளை வைத்துக் கொண்டு ஆண் கருவை உருவாக்கும் Y வகை க்ரோமோசோமகளை அழித்து விட்டு அதன் மூலம் தயாரிக்கப்பட்ட சினை ஊசியை பசுமாட்டின் கருப்பையினுள் செலுத்திவிடுவர். 

ஆண் மாடுகளை இனிமேல் பார்ப்பதற்கு ஆராய்ச்சி கூடங்களுக்கு தான் செல்ல வேண்டும். இந்த திட்டத்தை இந்திய அரசாங்கம் மாநில அரசுகளின் மூலமாக நாடெங்கும் பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் மனிதர்களாகிய நாம் பார்க்க வேண்டியது மனிதர்களாகிய நமது மன நோயை :

விலங்குகள் அனைத்தும் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டது போல மாடுகளில் பெண் தான் வேண்டும், 
நாய்களில் ஆண் தான் வேண்டும், 
மரங்களில் காய்க்கும் பெண் மரம் தான் வேண்டும், 
யானைகளில் ஆண் யானைகள் தான் தந்ததிற்காக வேண்டும், 
மயில்களின் தோகைக்காக ஆண் மயில் தான் வேண்டும், 
மான்களின் கொம்புகளுக்காக ஆண் மான் தான் வேண்டும் 
என்று மனிதருக்கு எது பயன்படுகிறதோ அந்த வகை உயிரினம் மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகிறது.

விலங்குகளுக்கு இந்த உலகத்தில் தங்கள் விருப்பம் போல வாழ அனுமதி இருக்கிறதா ? விலங்குகள் ஏன் மனிதர்களிடம் தாங்கள் வாழ அனுமதி கேட்க வேண்டும் ?? மனிதர்கள் என்ன பூமியின் முதலாளிகளா ???

 காடுகளை எல்லாம் கொள்ளை அடித்து அழித்து இன்று பல காட்டு விலங்குகளும் வாழ இடமின்றி அவை முன்னாடி வாழ்ந்த காட்டு பகுதிகளை தேடி வரும் போது அவை நமது நகரத்திற்குள் வந்துவிட்டதாக கூப்பாடு எழுப்பி ஆர்பாட்டம் செய்வது. அவற்றை கொன்றழிப்பது என்று மனித விபரீதங்கள் மேலும் அவலங்களை விலங்குகளின் மீது கட்டவிழுத்து விடுகிறது.

மனிதரின் வக்கிர சிந்தனைகள் மற்றும் விபரீத முயற்சிகளால் மனித குழந்தைகள் பிறப்பதற்கும் செயற்கை கருவூட்டல் மூலம்  (பெண்களுக்கு சினை ஊசி )  தான் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. 
பெண் கருப்பைகுள் ஊசி மூலம் கரு
மனிதர்கள் சினை ஊசி மூலம் பிறந்த மாடுகளிலிருந்து தான் பெரும்பான்மையாக பால் குடிக்கின்றனர், பல பால் பொருட்கள் தயிர், வெண்ணை, நெய், பாலாடை கட்டி, பால் கோவா பயன்படுத்துகின்றனர். இதனால் மாடுகளின் இயற்கைக்கு விரோதமான கருவூட்டலினால் பசுமாடுகளின் மன நிலையும் பாதித்து அவைகளிடம் பெறும் பொருட்களால் மனிதர்களின் மன நிலை, உடல் நிலை பாதிப்பும் சமுதாயம் அனுபவிக்க தொடங்கி விட்டது. 

பல சிறுவர்கள் ஆட்டிசம், மன வளர்ச்சி, மூளை வளர்ச்சி, வேகமான உடல் வளர்ச்சி என்று பல விதமான உடல் மன பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். உலகத்தில் அதிகமாக இளைஞர்களை உடைய நாடு என்று இந்தியாவை இன்று கூறினாலும் ஆனால் அந்த இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை. 

மனோதத்துவ ரீதியாக பசுவின் பொருட்களை மற்றெந்த விலங்குகளை காட்டிலும் மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் பசுவின் வாழ்க்கை தரம் குறைய குறைய மனிதர்களின் வாழ்க்கை தரமும் குறைந்து வருகிறது. மக்களின் மனநிலையில் ஒரு இயலாமை, தாழ்வு மனப்பான்மை, கோபம், வருத்தம் மிக ஆரம்பித்துவிட்டது. இதுவும் நாம் கட்டிப் போட்டு மாடுகளுக்கு செய்யும் கொடுமை மனிதர்கள் வாழ்வில் கொடும் குற்றங்களாக கூட வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. மனிதர்கள் மாடுகளை அவைகளின் இணையுடன் சேர அனுமதி மறுப்பதால், மனித ஆண்களும் பெண்களும் இணைந்து இந்த பூமி பந்தில் வாழ்வதில் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது.  

பல மனித ஆண்களால் பெண்களை கவரக் கூடிய தனமை குறைந்து அது வெறியாக மாறி பல ஊர்களிலும் பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த விபரீதம் இன்னமும் தீவிரமாகி சிலர் மிருகங்களை கூட வன்புணர்வு  செய்யும் அளவிற்கு மனிதனின் உடலும் மனதும் காளைக்கும் பசுவிற்கும் இயல்பாய் நடக்கும் இசைதலை தடுத்ததால் மனிதன் வாழ்க்கையும் மாடுகளின் வாழ்க்கையை போல் சீரழிந்து வருகிறது.
நாயை கற்பழித்த ஆளை தில்லியில் கைது செய்தனர்

விஞ்ஞானம் என்ற பெயரில் பின் விளைவுகளை நீண்ட கால நோக்கில் சிந்திக்க தெரியாத வருமானம் மட்டுமே கவனத்தில் கொண்ட விஞ்ஞானிகளும், அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் மாட்டையும் அதன் பாலையும் ஒரு இயந்திரத்தனமான வியாபரமாக பார்க்க பார்க்க மனித சமுதாயம் இனி படிப்படியாக மனிதர்களிலும் ஆண்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். குழந்தைகள் பெற விரும்பும் பெண்கள் எண்ணிக்கை குறையும்.

மனிதன் என்ற உயிரினத்தை ஏன் படைத்தோம் என்று இந்த பிரபஞ்சம் வெறுத்து போய் மனிதனை மனிதனை கொண்டே அழிக்க ஆரம்பித்துவிட்டது தான் இன்று மாடுகளின் பால் இனத்தை கொண்டு சினை ஊசி போடுவது வரை கொண்டு விட்டுள்ளது. 

இன்றைய மனிதருக்கு பால் தேவையே இல்லை. உண்மையாக பால் மனிதருக்கான உணவே இல்லை. பால் அருந்தும் கன்றுகள் பிறந்து சில வருடங்களிலேயே பருவத்திற்கு வந்து விடும். ஆனால் மனித உடலுக்கு பருவ நிலைக்கு வர 13 -16 வருடங்கள் தேவைப்படும். என்று சீமை பசுக்களை அறிமுகப்படுத்தி அவற்றுக்கு சினை ஊசி போட்டு பால் தயாரிக்க ஆரம்பித்தனரோ அன்றே மனிதரின் உடல் ஆரோக்கியம் சீர் குலைய தொடங்கி இன்று 8 வயது சிறுமி கூட பருவமெய்தும் சூழ்நிலை. பால் கறக்கும் இயந்திரங்களாக பசுவை கொடுமைபடுத்த ஆரம்பித்தலிருந்து மனிதனின் பேரழிவு தொடங்கிவிட்டது.

பாலை காட்டிலும் அதிகம் சுண்ணாம்பு சத்து முருங்கை இலைகளிலும் கேழ்வரகிலும் உள்ளது.  இதுவும் தவிர பாலுக்கு மாற்றாக தேங்காயிலிருந்து எடுக்கப்படும் பால், பாதாம் பருப்பிலிருந்து பால், சோயாவிலிருந்து பால் விற்பனைக்கு வந்துவிட்டது. 

புவி  வெப்பமயமாதலில் மாடுகளின் பங்கு :

மாடுகள் பாலுக்காக மட்டும் அல்லாமல் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் பல இலட்சம் ஹெக்டேர்கள் நிலப் பரப்பு இது போல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்காக பயன்படுத்தபடுகிறது. இதனால் ஒரு கிலோ இறைச்சி உற்பத்தி செய்ய பயிர்கள் உற்பத்தி செய்வதைவிட பல மடங்கு அதிக இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மனிதர்களின் உணவு தேவைக்கு போதுமான நிலங்கள் இல்லாத சூழ்நிலைக்கு பலரும் பட்டினியால் வாட நேருகிறது. இந்த பூமி பத்தாது என்று நிலவுக்கு போகலாமா ? செவ்வாய்க்கு போகலாமா ? என்று வீண் ஆராய்ச்சியை உலகம் செய்து கொண்டிருக்கிறது. அனைவரும் தாவர உணவு உண்டால் இந்த பூமி இன்னமும் 7 மடங்கு மக்கள் தொகை உயர்ந்தாலும் உணவளிக்க தயாராக இருக்கிறது.

மாடுகள், ஆடுகள், கோழிகள் என்று அனைத்து உயிரினங்களும் அவரவர் விருப்பப்படி காடுகளில் சுதந்திரமாக மனிதர்களின் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ நாம் அனுமதித்தால் மட்டுமே மனிதர்களும் இந்த பூமியில் வாழ இடம் இருக்கும். அதை விடுத்து மாட்டின் இன சேர்க்கையை நாம் கையில் எடுத்துக் கொண்டால் மாடுகளின் இயல்பான இணை தேடும் இணையும் அனுபவங்களை மனிதன் தடுத்தால், மனிதர்கள் வாழ்விலும் ஆண் பெண் இணைந்து வாழக் கூடிய வாழ்க்கை உலகத்தில் முடிவிற்கு வந்துவிடும்.

விலங்குகளுக்கு மனிதனின் விலங்கிலிருந்து விடுதலை வேண்டும்.


உலகம் ஆண்களில்லாமல் ஆனந்த பூஞ்சோலையாக மாறுமா ??
சதாசர்வகாலமும் ஏதாவது ஒரு நாட்டில் புகுந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு , போர் செய்து பல உயிர்களையும் கொன்று குவித்து வரும் மனித ஆண்களை கண்டு பிரபஞ்சத்திற்கும் அச்சம் வந்துவிட்டதா ??? அதனால் மனிதர்களை தேவையில்லாமல் இயற்கையோடு விளையாட வைத்து இந்த அழிக்கும் நாடகத்தை தொடங்கிவிட்டதோ ???

 தமக்கு தாமே ஆப்பு வைத்துக் கொள்ளும், கொல்லும் கலையை மனிதன் கைவிட வேண்டும். அதைவிடுத்து மாடுகளின் கர்ப பைக்குள் கையை விடக் கூடாது.




துணை கேள்விகள் :

1. தமிழ்நாட்டில் தான் இந்தியாவில் மிக அதிகமாக சிவனுக்கு கோவில்கள் உள்ளன. அதில் பல கோவில்களிலும் மாதம் இருமுறை பிரதோஷ நாளன்று சிவன் ஏறும் வாகனமாக கருதப்படும் காளைக்கு (நந்திக்கு ) பல விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன. "அன்பே சிவம்" என்று திருமூலர் சித்தரின் வாக்கின்படி சிவனையும் நந்தியையும் வணங்கும் சிவன் அடியார்கள் ஒவ்வொரு சிவன் கோவிலிலும் ஜீவன் உள்ள ஒரு காளை மாட்டையாவது ஆரோக்கியமாக வைத்து பராமரிக்கிறார்களா ???

2. ஜல்லிக்கட்டு காளைக்காக 2017ம் வருடம் மிகவும் பிரபலமாக போராட்டம் எல்லாம் நடந்தது.  அத்தகைய காளைகளை அவர்களின் இணை தேவை எழும் போது ஏதாவது பசுவிடம் செல்ல அனுமதிக்கிறார்களா ?? காளைகளின் காய் அடித்து ( ஒரு கொடூரமான விந்து அடக்கும் முறை ) அதற்கு பருவ எழுச்சி ஏற்படாமல் செய்வது சரியா ?? இந்த கொடுமை இப்போது தெருக்களில் வாழும் நாய்கள் வரை தொடரப்பட்டு பல ஊர்களில் ஆண் நாய்களின் விதை பைகளை கருத்தடை செய்கிறேன் என்று நீக்கிவிடுகிறார்கள்.

3. வாடிய பயிர்களை கண்டு வாடிய வள்ளலார் வாழ்ந்த வாழ்கின்ற நாட்டில் வாழ நமக்கு தகுதி இருக்கிறதா ??


சகிருட்டிஸ் மார்ச் 2023
sakritease March 2023

Translate

Contact Form

Name

Email *

Message *