Sunday, May 22, 2022

SriSinka Thoththa paya

 ஸ்ரீசிங்கா தோத்தபய ராஜபக்சே


இன்றைய நிலையில் ஒரே ஒரு நாளைக்குத்தான் பெட்ரோல் இருப்பதாக இலங்கையின் புதுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இலங்கையின் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இளவரசன் சித்தார்த்தன் போதி (அரச) மரத்தடியில் ஞான நிலையை  தமிழ் மாதமான வைகாசி விசாகத்தில் முழு நிலவு நாளன்று (16.5.2022 ) அடைந்ததாக உலகம் முழுவதும் பௌத்தர்கள் இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் கொண்டாடினர். புத்த மதத்தை தழுவிய இலங்கை சிங்களவர்களால் இந்த பௌர்ணமியை மனதார கொண்டாட முடியவில்லை.

புத்தனின் அக விரிவாகத்தை உள்வாங்காமல் போன புத்தனை வணங்கும் சிங்களவர் உள் விரியாமல், ஆதிக்க வெள்ளை தோல் மயக்கத்தில் இன்றும் அடிமையாய் பிரித்தாளும் அயல் நாட்டு சதிகளில் சிக்கி சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என்று பன்முனை வன்முறைக்கு உள்ளாகி பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது. 

இலங்கை இந்தியாவின் கேரளாவை ஒத்த மலை சீதோஷண நிலையில் அற்புதமான பல மூலிகைகளை இயற்கையாகவே உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு இந்தியாவை போன்று மிளகு, ஏலக்காய் போன்ற அடர் காடுகளில் இயற்கையாய் வளர்ந்த தாவரங்கள் கொண்டு தனது பொருளாதாரத்தை சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலங்களுக்கும் முற்பட்டு இயற்கையால் வார்த்தெடுக்கப்பட்ட சொர்க்க பூமியாக இருந்தது. 



17-18 நூற்றாண்டுகளில் சீனாவை பலமுறை ஆக்கிரமிக்க முயன்றும் தோற்ற ஆங்கிலேயர்கள் , சீனாவை பொருளாதார ரீதியாக முறியடிக்க சீனாவின் ஏற்றுமதியில் முதல் இடம் பெற்ற தேயிலையை உறபத்தி செய்ய, இலங்கையின் மலை பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியை தொடங்கியது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் நீலகரி, டார்ஜிலிங் போன்ற மலைகளிலும் தேயிலை உற்பத்தியை துவக்கியது.  தேயிலை மரத்தை 4 அடிக்கு மிகாமல் வெட்டப்படுவதால் அந்த மரங்களால் மலைகளில் கூடும் மேகங்களை ஆறாக்க முடியாமல் போனதால் மழை பொழிவு குறைந்தது.  மழை பொழிவும் , ஆறுகளின் ஓட்டமும் குறைந்ததால் பல விவசாய விளைச்சல்களும் குறைந்து இலங்கை ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமானது. இலங்கை வாழ் மக்களும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்த அற்புத நுகர்வு குறைவான வாழ்க்கைமுறைகளிலிருந்து மாறி அதிகமாக இயற்கையை நுகரும் ஐரோப்பிய அமெரிக்க கலாசாரத்தை பின்பற்றி இப்போது தற்சார்பு வாழ்க்கை முறையை இழந்து உலக நாடுகள் கொடுக்கும் கடன் பத்திரங்களில் கடன்பட்டு திருப்பக் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது.

பிரபஞ்சத்தில் அனைத்தும் உயிரகளிடத்தும் அன்பை போற்றிய புலாலை மறுத்த புத்தனின் அகிம்சையை மறந்த சிங்களவரும்,  சைவத்தின் தலைமை பீடமாக கொண்ட யாழ்பாணமும் திரிகோணமலையும் அதன் உன்னத தத்துவங்களை மறந்த தமிழருக்கும் 1980களில் தீவிரமடைந்த உள்நாட்டு சமய, சித்தாந்த போர் 2009 ல் உச்சகட்டம் அடைந்து போர் தளவாடங்களை வாங்கி சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷியா என்ற பல நாடுகளிலும் கடன் வாங்கி தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். இதன் உச்சகட்டமாக குடும்ப அரசியல் கும்பல்கள் நாட்டின் சொத்துகளை களவாண்டு தங்கள் குடும்பத்தாருக்காக சொத்துகள் பல நாடுகளிலும் சேர்த்து,  சொந்த நாட்டு மக்களை கடனில் இலவச பொருட்களில் ஆசைகாட்டி மயக்கமுற செய்து நாட்டை சூறையாடியுள்ளனர். அரசு பதவிகளில் குடும்ப அரசியல் நுழைந்து மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கும் நாடுகள் அனைத்தும் இலங்கையின் இன்றைய நிலையை அடையும் என்பது யதார்த்தம்.


"ராஜராஜன்" பெயர் பொறித்த கல்வெட்டு 
இலங்கையின் பிரதமர் பதவியை மக்களின் போராட்டத்திற்கு பயந்து விட்டு விட்டு ஒடியுள்ள "மகிந்த" ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் , தமிழ் எழுத்தாளர் திரு. கல்கி அவர்களின் அற்புத படைப்பான "பொன்னியின் செல்வனில்" இராஜ இராஜ சோழனின்  படைகளுக்கு அஞ்சி இலங்கை மலைகளில் தலைமறைவான "மகிந்தன்" என்ற இலங்கை அரசனை நினைவூட்டுகின்றார்.  என்ன ஒரு பெயர் பொருத்தம். 


ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மகிந்தனின் செயல்பாடுகளில் மாறுதல் இல்லை. மகிந்தர்கள் என்றும் மக்களின் பொது நன்மைக்காக என்றும் ஆட்சி நடத்துவதில்லை. தங்களின் தங்கள் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கைகாக தங்கள் ஆட்சியின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கையை அடகு வைத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகின்றனர்.  இராஜ இராஜ சோழன் போன்ற பேரரசர்கள் தங்கள் குடிமக்கள் நன்மை கருதி பல நீண்ட கால தொலை நோக்கு உள்ள திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.  காவிரி என்ற ஆறு வளப்படுத்தியதால் சோழ வளநாடு உணவு தானியங்கள் உற்பத்தியில் பெரும் தன்னிறைவு கண்டது. தன் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொண்ட தானியங்களில்  மித மிஞ்சியவற்றை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்துள்ளனர். அவற்றை கடல் கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க அவர்கள் கடற்படைகள், கப்பல் கட்டும் தளங்களை நிறுவி தங்கள் வளத்தை பலருடன் பகிர்ந்துள்ளனர்.  

மன்னராட்சியில் தன்னை நோக்கி மன்னர் பதவி வந்தும் அதனை மக்கள் மூலமாக குடவோலை முறையில் ஓட்டெடுப்பு நடத்தி தான் பதவி ஏற்பதை அந்த மாமன்னர் இராஜ இராஜ சோழர் மக்களாட்சி நடத்தி உறுதிபடுத்தியிருக்கிறார்.  அரசன் என்ற அகம்பாவம் துளியும் இன்றி அனைத்தும் இறைவன் என்னும் இயற்கையின் பேராற்றல், மக்கள் அதனை போற்றி அந்த இறைவனின் திருப்பணியாக மக்கள் சேவையாக வாழ்க்கையை இறைபணியாக வாழ வேண்டும் என்று தஞ்சையில் பெரூவுடையார் - சிவ பெருமானை - பிருமாண்டத்தை விளக்கும் விதமாக ஒரு பெரிய கோவிலை அமைத்து, அதனை மையமாக வைத்து நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ளார். அனைத்து செயல்களிலும் இறைவனின் பேராற்றலை ஒவ்வொரு கணமும் போற்றி வாழும்படியாக வாழ்ந்ததால் அந்த நாட்டில் மக்களிடம் பொறுப்புணர்வும் கலையுணர்வும் காவிரி ஆறு போல் பெருக்கெடுத்துள்ளது.  பல நாடுகளுக்கும் தமிழர்களை விவசாயம் செய்ய, சொல்லிக் கொடுக்க ஆங்கிலேயர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம். இதனாலேயே இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்ரிக்கா என்ற பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்வியல் பரவியுள்ளது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் "மகிந்தனின்" எண்ணம் மாறவில்லை, இலங்கை இன்றும் நல்ல ஆட்சியாளர்களை தேடிக் கொண்டிருக்கிறது.  அதே போல் ஆயிரம் ஆண்டுகளின் பின்பு மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் "ராபர்ட் ஹான்சன்" ஆக பிறந்தாலும் இதே இலங்கைக்கு அந்த இராஜாதி இராஜன் தன் குருவான "யோகசுவாமி" என்ற சைவ சித்தாந்த குருவை நாடி வந்து சிவாய சுப்ரமணிய சுவாமியாக அவதாரமெடுத்து சைவ சித்தாந்தத்தை உலக மெங்கும் 50 இடங்களில் "இறைவனார் திருக்கோவில்" களை நிறுவி நல்லெண்ணங்களை பல கோடி மக்களின் மனத்தில் நிறுவி அதற்கு தலைமை பீடமாக ஒருங்கிணைந்த அமெரிக்காவில் உள்ள  ஹவாய் தீவில் குஹ்வாய் மடத்தினை நிறுவியுள்ளார்கள். அரசனாக பிறந்தாலும் எளிய தொண்டனாக தன்னிரகற்ற சேவை செய்வபர்களால் மட்டுமே இந்த பூமி வளம் பெரும்.  (  இவரை பற்றிய இணைய குறிப்பு Sivaya_Subramuniyaswami ) 

இதற்கு பொதுமக்களின் பார்வை,எண்ணம் குறைந்த கால லாபங்களை, இலவசங்களை நாடாமல் உயிரினங்களின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு வாழ்வோமானால் நம்மிடையே பிறக்கும் அரசியல்வாதிகளும் எண்ணங்களில் செயல்களில் விரிவார்கள். 

இன்றைய அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படும் அனைத்து பேராசைகளும், அடாவடிகளும், அட்டூழியங்களும் சாதாரண குடிமக்கள் பலரிடம் நிறைந்திருக்கும் குணங்களின் பிரதிபலிப்பே.  நாம் எல்லோரும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் போலவும் தலைவர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல சித்தரித்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.  நம்மிடைய நன்மை மிகுந்தால் "இராஜ இராஜ"ர்கள் ஆட்சிக்கு வருவார்கள். நம்மிடையே தீமை மிகுந்தால் "மகிந்த"ர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். 

 அனைவரும் இறைவனின் (இயற்கையின்) அற்புத படைப்பு என்ற மன பக்குவ கண்டு தொலை நோக்கொடு அனைவரோடு பகிர்ந்து வாழும் உண்மையான நாகரீகத்திமான ஆப்பரிக்க பழங்குடி மக்களின் "யுபுந்து" என்ற தத்துவப்படி இயற்கையிடம் குறைவாக நுகர்ந்து அவரவர் வாழும் இடங்களில் இயற்கையாக விளையும் பொருட்களை உண்டு வாழ்ந்து மனிதப் பிறவி என்ற அற்புத வாழ்வை போற்றி இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களும் எந்தவித பயமுமின்றி வாழ எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் அருள் புரியட்டும்.

ஒரு மானுடவியலாளர் பல ஆப்பிரிக கோஹ்சாஹ் வனவாழ் குழந்தைகளிடம் ஒரு ஓட்டபந்தய போட்டியை அறிவித்தார். முதலில் ஓடி வருபவர்களுக்கு பலவித பழங்கள் வழங்கப்படும் என்றார். உடனே அந்த குழந்தைகள் அனைவரும் கைகளை ஒன்றாக கோர்த்துக் கொண்டு ஒன்றாக இலக்கை அடைந்தனர். "ஏன் இப்படி ஒன்றாக ஓடி வந்தீர்கள் ? யாராவது ஒருவர் எல்லோரையும் முந்தி வந்திருந்தால் அவர் அனைத்து பழங்களையும் உண்டிருக்கலாமே ?" என்று கேள்வி கேட்டார். அதற்கு குழந்தைகள் " உபுந்து !!  மற்ற அனைவரும் வருத்தமாக இருக்கும் போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் ?? " என்று உற்சாகமாக பதில் கேள்வியை நமது மனித குலத்தின் நோக்கி வீசினர். உபுந்து என்றால் நான் என்பது இந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பு.  


"உபுந்து" என்பது கிட்டத்தட்ட மகாகவி சுபரமணிய பாரதியார் கூறியதை போல் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற கோட்பாடின்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது.  இன்றைய நிலையில் நாம் நாகரீக உலகில் வாழ்வது போல் அலட்டிக் கொண்டு அநாகரீகமாக மலைகளை வெட்டி குவாரிகள் ஆக்கி மரங்களை வெட்டி சவப் பெட்டிகள் அலங்காரங்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். ஆப்பரிக்க காடுகளில் தான் இன்றும் சில நாகரீகமான மனிதர்கள் இயற்கையோடு மிகவும் ஒன்றி மிக குறைந்த நுகர்வு முறையில் இயற்கை அளிப்பதை மட்டும் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்க்கிறார்கள்.

தனக்காக வாழ்பவர் அனைவருமே "தோத்தபய" தான். அதுவரை இந்த பூமி ஒரு "ஸ்ரீசிங்கா" தான். மனிதம் என்பது மூழ்கிய "சிங்க்" (sink ) தான்.


சகிருட்டிஸ் 

sakritease May 2022

Translate

Contact Form

Name

Email *

Message *