Friday, December 3, 2021

Oh My (Micron ) God

                         ஓ மை (க்ரான்) கடவுளே !!!!!


2019ல் வுஹானில் ( சீனா) தொடங்கிய ஒரு கரோனா உயிரியின் ( வைரஸ்) பயணம் தொடரியாக தொடர்கிறது. 

உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களின் உயிரை காக்க தடுப்பூசி எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன. 

இந்த உயிரிகளின் இயல்பே தங்களை கொல்ல / அடக்க வரும் விஷத்தை கொண்டே தங்களை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மையை இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் அளித்துள்ளது.

பூச்சி மருந்து தெளிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அனுபவத்தில் ஒரு பூச்சியை கொல்ல ஒரு மருந்தை பயன்படுத்தினால்  அடுத்த வருடம் அதே மருந்து அந்த பூச்சியை கொல்லாது என்றும்  அடுத்த வருடம் அதை விட வீரியமான ஒரு விஷத்தை தெளித்தால் தான் அந்த பூச்சியை கொல்ல முடியும் என்பது அனுபவ பாடம்.

ஆனால் உண்மையில் நமது பாரம்பரிய ஆரோக்கியமான விவசாய முறையில் பயிரை பலப்படுத்தி பூச்சியை விரட்டும் வழிமுறைகளினால் மட்டுமே ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய முடிகிறது. பூச்சிகளை கொல்லும் எந்த மருந்தும்  மனிதனையும் கொல்லும் என்பதே இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம். 

வைரஸ் / பாக்டிரியா போன்ற நுண்ணியர்கள் இல்லாமல் உலகில் எந்த இயக்கமும் இல்லை. பாலை தயிராக்குவதற்கு கூட ஒரு நுண்ணியரி உதவினால் மட்டுமே முடியும். 

இந்த பதிவை எழுதும் போது இந்தியாவில் 125 கோடி பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில் கரோனா கிருமி இப்போது தன்னை எதிர்க்கும் உடல்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டே வருவது புலனாகிறது.  இப்போது வந்திருக்கும் வடிவ மாற்றத்திற்கு ஓமைக்ரான் என்று பெயரிட்டுள்ளனர்.  இது வரைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகள் "டெல்டா" என்ற வடிவமைப்பிற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.  அதனால் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல் இந்த ஓமைக்ரான் வடிவமைப்பை எதிர்க்குமா ?? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

மனிதர்கள் தோன்றுவதற்கே இந்த கிருமிகள் தான் காரணம்.  இந்த ஐப்பசி மாதத்தில் ( அக்டோபர் - நவம்பர் 2021 ) வரலாறு காணாத அடைமழை பெய்து இது வரை வெள்ளமே வராத ஓட்டமே இல்லாத பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த பல வருடங்களாக ஓடாத ஆறுகளில் வெள்ளம் வந்த போது மீன்கள் எங்கிருந்து வந்தன ????????  



இயற்கை மீன்கள், தவளைகளின் முட்டைகளுக்கு தகுந்த சூழ்நிலை வரும் வரை உறங்கும் நிலையில் இருக்கக் கூடிய தன்மையை வழங்கியுள்ளது.  இதே போல் கோடானு கோடி உயிரினங்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய உயிரிகள் வெளியே வருவதற்கும் பூமியில் மனித இனம் அளவிற்கு அதிகமாக இயற்கை வளங்களை சுரண்டுவதால் கிருமிகளின் வீரியம் அதிகமாகி மனித இனத்தின் எண்ணிக்கையை குறைக்க முனைந்திருக்கிறது. மீனிலிருந்து . தவளை, தவளையிலிருந்து ஆமை என்று பரிணாம வளர்ச்சியில் மனிதன் வரை இயற்கை பல வித உயிரினங்களை படைத்துள்ளது.  இந்த உயிர் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. இதில் எந்த உயிரினம் பாதிக்கபட்டாலும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும். 

இது போல் அதிக நாள் பயன்படுத்தாத தானியங்கள் வைத்திருக்கும் காற்று புகா வண்ணம் இருக்கும் ஜாடிகளில் கூட புழுக்கள், வண்டுகள் உருவாகிவிடுகின்றன. எங்கே இருந்தன அந்த வண்டுகள் ?? எந்த உயிரினத்தின் உடலும் இறந்த பின் அதன் வெப்பம் குறைய தொடங்கிய உடன் புழுக்கள் வந்து அழுக தொடங்குவது எப்படி ? அத்தனை மெதுவாக ஊறக்கூடிய புழுக்கள் எப்படி இந்த உடல் இறந்துவிட்டது என்று தெரிந்து கொண்டன ? எங்கிருந்து வந்தன ??  உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் இதே போல் நடப்பது யார் எழுதிய இலக்கணம் ??? இதுவே பிரபஞ்ச விதி.  ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் உறக்க நிலைகளில் பல உயிரினங்கள் இருக்கின்றன. தகுந்த சூழ்நிலை உருவானால் அந்தந்த உயிரிகள் உயிர் பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. 

https://www.who.int/news-room/fact-sheets/detail/chronic-obstructive-pulmonary-disease-(copd)

நெஞ்சகத்தில் நுரையிரல் சம்பந்தமாக வரும் நோய்களால் வருடத்திற்கு 32 இலட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் இந்த இணையதள தகவல் தெரிவிக்கின்றது. 

https://www.worldometers.info/coronavirus/?utm_campaign=homeAdvegas1?

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஜனவரி 2020 முதல்  நவம்பர் 2021அதாவது கிட்டத்தட்ட 2 வருடத்தில் கரோனாவினால்  52 இலட்சம் பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

கரோனாவோ வேறெந்த கிருமியினாலோ தாக்கபடாமலேயே கூட இந்த உலகத்தில் மக்கள் இதே அளவிற்கு இறந்து வருகின்றனர் என்பதே யதார்த்தம். மிக முக்கிய காரணம்  சுற்று சூழல் மாசு அதிகமாக விரியும் தன்மை குறைந்து உள்ள நுரையிரல்களை தாக்குகின்றன.  சுத்தமான காற்று, சுத்தமான குடினீர், தூய்மையான  சத்தான உணவு, இயற்கையை ஒத்த வாழ்க்கை முறை மட்டுமே நுரையிரல் சார்ந்த இறப்புகளை குறைக்க உதவும். 

கரோனாவிற்கு பயந்து இப்பொது மீண்டும் ஓமைக்ரானிற்கு பயந்து ஏ.சி. அறைகளில், கார்களில் இரண்டு முகக் கவசங்கள் போட்டால் நுரையிரல் விரியாமல் மேலும் சுருங்கிவிடும். எதற்கு பயப்படுகிறோமோ அந்த விபரீதத்திற்கு வழி வகுப்பது போல் நமது முன்னெச்சரிக்கை கொண்டு செல்கிறது.



முக்கியமாக நாம் நெருக்கமாக வாழும் நகரங்களை விட்டு நகர வேண்டும் என்று கரோனோ மற்றும் அதன் புது வடிவம் ஓமைக்ரான் நமக்கு உணர்த்தும் பாடம்.  

இயற்கையிலிருந்து நாம் நுகர்வதை குறைக்க வேண்டும்.  மலைகளை , மரங்களை, அதில் உற்பத்தியாகும் ஆறுகளை நாம் சீராக பாதுகாத்து போற்றி நன்றியுடன் வாழ்வதே நமக்கு நோய்களிலிருந்து விடுதலை பெற வழி. 

நாம் போடும் குப்பைகளை போட்டபடியே நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்தோம் என்றால், மனிதர்களை குறைக்க இயற்கையிடம் ஆயிரம் வழிகள் உள்ளன.  இயற்கை அனுப்பும் ஒரு சின்ன ஓமைக்ரான் கிருமியை தாங்ககூடிய சக்திகூட பெரும்பான்மையான மனிதர்களிடம் இல்லை என்பது தான் இன்றைய நிஜம். 

கிருமிகளிடம் இருக்கும் இறை தன்மையை உணர்வோம்.  இயற்கையின் படைப்பாற்றலை பணிவோடு போற்றி வாழ்வோம். 

சகிருட்டிஸ்.

Monday, November 1, 2021

NO ash No win

 NO Ash No Win


Everyone is puzzled Why Virat Kohli is avoiding R Ashwin in any format.

In a must win game against New Zealand on 31st Oct 2021 he chose to not to pick Ashwin.

There is something gone wrong between Ashwin & Kohli before the England Tour where he benched Ashwin in all the four tests played there. That too when Ashwin of recently playing only Test format for BCCI's team.  R Ashwin even played one off game for Surrey and picked 6 wickets in an innings on the English Soil. Even on the World Test Chamionship final , Only Ashwin was threatening NZ batsmen and only one to pick the wickets. 

Most bizzare happened before the 4th test started in England, when Kohli explained he prefers Jadeja over Ashwin as there are more left handers in English side. The statistics says the quite opposite story where Ashwin is the highest wicket taker of Left Handers. Even the most dangerous English Player Ben stokes had become a sitting bunny for Ashwin.

In the ongoing ICC T20 world cup too. In the two matches played till now, neither bowlers nor batsmen could make any impact on the opposition. Pakistan rubbed hard on the wound with a NO Loss victory. Kohli has now a unique record of being the only captain to get defeated by a Pakistan Side in a ICC tournament. 

All these are happening because of high ego quotient of Kohli. Even after his ignominious exit after 36 all out at Adelaide against Australia, more silent task master Ajinkya Rahane could win the whole series with the same set of men & that too even with Net bowlers  at Gabba, Brisbane.

It is mainly due to the Chest Thumping attitude of Virat Kohli and not listening to the fellow mates instead even focusing fighting with Spectators on the Ground. Calm & Cool captains like Kane Williamson, Eoin Morgan, Rohit Sharma & Ajinkya Rahane are able to inspire more and are allowing the team members to raise up to the occasion. Kohli's "I am the boss" attitude is not bringing the best of out of Indian Cricketing Men. Lets not allow the great Batsman in Kohli to die in this process. Virat !! Quit Captaincy and focus on Batting like Sachin Tendulkar.

Everyone is able to gauge from Kohli's reactions that he is not happy with BCCI management in appointing Rahul Dravid as the Next Head Coach. Rohit, Rahane or KL Rahul or even Pant will gel with the Task Master Dravid and bring out their best in the best interests of the team. 


Kohli must know Kumble's 619 wickets is more valuable than Sachin's 25,000 runs or Kohli's 50,000 runs.  Batsmen scoring runs on a batsmen friendly wickets and rules in either on IPL or ICC tournaments, bowlers are more valuable than a batsman. So Ashwin quick to take 400 + test wickets needs to get more opportunities and bring more glory to the cricket mad country like India. 

 



Rajini (K) Can't (H) Be Fair

 Rajini (K) Can't (H) "Be Fair"

அண்ணாத்தேசே😲


எத்தனை கோடி மக்கள் மனதில் மாற்றம் வராதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தி, புண்களை ஆற்றக்கூடிய ஆற்றல் மிக்கவராக பார்க்கப்பட்டவர் இன்று அந்த புண்ணிற்கு உரம் போட்டு புற்று நோயாக மாற்றிவிட்ட புகழுக்கு சொந்தக்காரர். 


திரு. "சோ" ராமசாமி ஒரு தீர்க்க தரிசி என்று நினைத்திருந்தோம். 1996ல் இவரை முதல்வராக்க அரும் பாடுபட்டார். நல்ல வேளை இன்று இந்த "அண்ணாத்தை"யை கண்டிருந்தால் அவர் "அச்சச்சோ" ராம சாமி இப்படி ஆயிடுச்சே பலராலும் துக்கம் விசாரிக்கப்பட்டிருப்பார். 


"ஆன்மீக அரசியல்" "இப்ப இல்லன்னா எப்ப ?" என்ற இந்த ஸ்டண்ட் மன்னனின் மராத்திய- கன்னட வசனங்களை நம்பி பார்டரில் தத்தளித்த ரசிகர்களை ஈரோட்டு நாத்திக கன்னட ராமசாமியை காட்டிலும் வெறும் வெங்காயமாகவே ஆக்கிவிட்டார் இந்த "அண்ணாச்-சே" !!


தமிழக மக்களுக்கு எப்பவுமே ஒரு ஏக்கம். அதுவும் சினிமா ஹீரோக்களின் மீது  ஒரு தனி மோகம். குறைந்தபட்சம் இவர்கள் சினிமாவிலாவது நல்லவர்களைப் போல் நடிக்கிறார்களே என்று மனதை தேற்றிக் கொண்டு ஓட்டை குத்துகிறார்கள். 


அதனை ஒரளவிற்காகவாவது நல்லது செய்ய முயற்சித்தார் "ரிக்ஷாக்கார" மதன கோபால ராமசந்திரன். அந்த புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பால் குடிக்க அலைந்தன / அலைகின்றன. இந்த "ஆட்டோக்கார" அண்ணாத்தையையும் நம்பின அனைத்து மக்களையும் சென்னையில் "ஆட்டோ"க்களை நம்பி பின்னாடி போன டூவிலர் காரர்களைப் போல் முட்டு சந்தில் முட்டிக் கொண்டு தவிக்கின்றனர். 


இந்த "முள்ளும் மலருமா" என்ற அல்ப சந்தேகத்தோட ஒரு பதிவை அக்டோபர் 2017ல் போட்டோம். 

இந்த விமர்சனித்தில் "ஸ்ரீதேவியை" தமிழ்நாடாக குறிப்பிட்டிருந்தோம்.  அதில் அந்த போலி "நாத்திக மணி"க்கூடப் பரவாயில்லை ரீட்டையர் ஆன பின்பு அரசியல் செய்து பொழுதை கழிக்கலாம் என்று தோற்றாலும் பரவாயில்லை என்று இரண்டு தேர்தல்களில் தோற்று மய்யம் கொண்டுள்ளார். இந்த ஏ"காந்த" மணி மட்டும் மக்களின் முகத்தில் கறி பூசுவேன் என்று இன்னமும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். 


இவர் "சிஸ்டம்" சரியில்லை என்றார், நாமும் "ஆஹா !! இவர் சாக்கடையில இறங்கி சுத்தம் செய்யப் போறார்னு பார்த்தோம் " பார்த்தா பெருந்தலைவர் கூறியபடி " இவரும் அந்தக் குட்டையில் ஊறின மட்டை" தான் தன் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதில் "மன்னன்""இராஜாதி ராஜா" என்று நிருபிக்கிறார்.  

தமிழ்நாட்டோட சிஸ்டம் எப்பவும் எப்படி இருக்கிறதென்றால் இங்கும் எல்லோருமே "பெறும்" தலைவர்கள் தான் (மக்கள் உட்பட - 5 வருடத்திற்கு ஒரு 2000, பிரியாணி, சாராய பாட்டில்)  சிலர் மட்டுமே "பெருந்"தலைவர். 

கர்ம வீரர் "காமராஜர்" கனவு வீரர் "கலாம்" மட்டுமே பிள்ளைகளை "பெறாதவர்" அதனால் அவர்களே "பெருந்தலைவர்"

ன்றைய தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு "பெறு" விற்கும் "பெரு" விற்கும் வித்தியாசம் தெரியாது என்பதே யதார்த்த நிலை. 

மராத்திய மாமன்னன் சிவாஜி மட்டுமே "வணங்காமுடி". இந்த முடியில்லா "சிவாஜி"யை வணங்கும்படி செய்தது எந்த வணங்காமுடி ? தான் பெற்றவர்களுக்காக மக்களின் அன்பை பெற்றும் இழக்க துணிந்தது ஏனோ ?? 

"நிதி"பெற ஆயிரம் வழிகள் "உதய"மாகலாம் அதற்காக இந்த "கறுப்பு" "ஜெயண்ட்" (Giant Magnet) விழலாமா ??

Rajini is not fair, we know. 


சின்ன சந்தேகம் : 

சேப்பாக்கத்தில் மணம் வீச முயன்ற தாமரை பூவின் "வாசம்" தீடீரென்று "ஆயிரம் விளக்கில்" சென்று பொசுங்கியது ஏனோ ? மூன்றாம் அரண்மனைக்கு வந்த போது தான் தெரிந்தது "நிதி"யின் மீது மட்டுமே "கருணை" உள்ளவரை "விடியல்" ஒரு பகல் கனவே என்றே. அந்த "அண்ணாமலை"க்கும் ஒரு அரோகரா. அந்த அண்ணாமலையில் ஆடுகள் மேய்த்த "இடைக்காட்டு" சித்தர் தமிழகத்திற்கு அருள் புரியட்டும். 










Monday, August 2, 2021

Medals Reservation for India in Olympics


Olympics happening now in Tokyo (2020) -Around 11,000 athletes from 206 countries participating in this sporting event happening once in 4 years & due to pandemic instead of 2020 it is happening in 2021.

As on today India could fetch One Silver ( Ms. Mira Chanu ) & One Bronze ( Ms. Sindhu). India Could send only 125 candidates along with their 100 + coaching bandwagon.  A country with 125 crores population could send only 125 sports persons of International Level whereas China- 406, Japan - 552 USA -613 could send these many people.

Even out of 125 may be another 2 or 3 medals may add up.

Every 4 years we Indians have been betting on few names on Medals list though rest of the contingent also giving their best after years of training. 

How to increase our Medals tally hereafter ??? When we could face China at Galwan with eye ball to eye ball and could give a fitting 20 : 50 score head on at the deadly Himalayan Heights. Our Jawans who represent the great country based on their valor, true merit and sacrifice.
 

In sports too we must start asking reservation for medals as it is being done for everything in India.

Just today India has been given the Presidency of UN security council, we must make use of it & push International Olympics Committee to give fair representation for India based on the Population.



Just like the Indian Government has passed the Bill to give 27% reservation for OBCs  & 10% for Economically weaker sections in Medical seats in Central Government's quota, Our country should teach social justice theory to the world as we were in slavery for last 700 years and we were a deprived and looted country.



Most likely some of the African countries too may ask for similar concessions, we must attempt for getting at least 20% quota for India, 25% for Africa, 10% for South America, 10% for Asia other than China & Japan, 5% for Arabia  & Remaining for other Countries. 

Around 5000 medals are being presented this edition of Olympics so India could have easily got 1000 Medals easily. 

https://medium.com/@thirtysixlabs/voice-against-reservation-say-no-to-reservation-bee8a0ec60a1


There too we have to ensure social justice as practiced in India.  If Hussain Bolt runs for 100 metres, Indian SC/ST candidate will run only for 50 metres, Indian OBC 65 metres and Indian OC 85 metres. There also we can teach a Lesson to the world on how we are creating equals among unequals.  


Even though Nelson Mandela rejected the idea of reservation in South Africa, India should push through reservation for Blacks and Indian origins there to get a quota system.   https://www.youtube.com/watch?v=a_iPAKcAOZs

Already many member countries of International Cricket council are complaining that BCCI is arm twisting them with their money power. Already Mr. Modi has trained his man Mr. Anurag Thakur there.

So hereafter in cricket team selection also we must give due representation for the caste and religions. If there is a tussle between Virat Kohli and Rohit Sharma for T20 world cup captaincy, it must be decided based on their community. Most likely Sharma sounds like a forward community name hence He must not be given priority. If in England test series, you have to select only one spinner between Ravichandran Ashwin and Kuldeep yadav and all likelihood Yadav has to be selected. In fast bowlers Umesh Yadav has to be given priority over Ishant Sharma. e.g. in five match series Ashwin should play 2 matches and Kuldeep 3 matches. Umesh 3 & Ishant 2 like that also acceptable.

If the bowler is from SC / ST community, BCCI must tweak laws  to allow to bowl two no-balls, two bouncers and Two wides in an Over.  At least one Mohammed has to play - either Shami or Siraj. If the tussle is coming between Ishan Kishen and Sanju samson comes for wicket keeping, Samson should be given priority.

For appointing Coaches to use the same policy. Rahul Dravid or Ravi Shastri, preference to Dravid especially if he is from Karnataka's Lingayat community as Shastri sounds totally Bhramanical name from Konkan coast. 


Where treating the Human body from ailment itself with utmost care and quality is needed, we can make Doctors based on Caste and religions, why not implement it all systems. Already Political parties are demanding reservation in Private sector companies, why not implement it in every aspect of life. 


Even Modi's prime opposition members believe in his invincibility in 2024 elections but Mr. Modi & co does not believe so it seems by this announcement of Reservation has come before for UP Assembly elections. In 2014, development was given thumping victory across the country. Probably Mr. Prashant Kishore's recent caste -religion arithmetic win in WB & TN assembly elections has put BJP in back foot it seems.

Only by Merit, we could produce Jamshedji Tata, Abdul Kalam, Dhirubhai Ambani, Lakshmi Mittal, Sundar Pichai, Narayana Murthy , Satyam Nadella from India. Even Vajpayee, Advani & Modi came only on merit to their positions. P T Usha to P V Sindhu came to this level only by sheer hard work and merit.

Reservation based on economical backwardness is quite acceptable, there too Government must develop more training centers for economically deprived to take the challenge on economically affluent in education & Jobs to make India formidable in International arena, giving merit the utmost importance. Muslim Young Men & Gujarati Young men are more in to business and are more successful though many of them didn't participate in the education race. They are believing the innate talents and survival instincts to become successful. Electoral Politics has already taken a heavy toll on India.  So Politicians should stop creating wedges between Indians on various grounds. 



Every Indian will then feel proud of their country and more forthcoming and competing with best efforts instead of becoming Lazy with a Government Cushion. 


Sakrit(Un )ease

Sunday, June 27, 2021

NEET opposing politicians No to quality treatment

 


"NEET" நீட் தேர்விற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள் தங்கள் சிகிச்சைக்கு மட்டும் உலக தரம் வாய்ந்த மருத்துவர்களை மட்டுமே நாடுவது ஏன் ? தனியார் மருத்துமனையில் அதுவும் வெளிநாட்டினரின் சிகிச்சையை மட்டும் நம்புவது ஏன் ? மருத்துவம் என்பது உயிர் காக்கும் ஒரு துறை.  தங்கள் உயிரை வெல்லம் போல் நினைக்கும்  அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் உயிரை வெறும் கிள்ளுக் கீரையாக மதிப்பது ஏன் ?

எவ்வளவு பொது மக்கள் தங்கள் உறவினர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லையென்று மருத்துவமனைகள் முன் போராடுகிறார்கள் ???
விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை சூறை 26.6.2021 தினமலர் செய்தி


 தங்கள் உறவினர்களுக்கு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்கபடவில்லை என்று பல இடங்களில் பொது மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.  இதற்கு அடிப்படை காரணம் மருத்துவர்களின் தர குறைபாடுகள் தான்.

மனிதர்கள் அனைவரும் எல்லா துறைகளிலும் தேர்ச்சி பெற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையினில் சிறப்பு திறமை பெற்றிருப்பர். 
அதனால் ஒவ்வொரு நபரும் எந்த துறையில் சிறந்தவர் என்று உறுதி செய்ய தேர்வுகள் அவசியமாகிறது. 

"நீட்" எதிர்பவர்களுக்கு அனைவரிடமும் அவர்கள் மனசாட்சி தொட்டு பதில் சொல்ல வேண்டிய கேள்வி " உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிக்க எத்தகைய மருத்துவரை நீங்கள் தேர்தெடுப்பீர்கள் ?? உடற் கூறு பாடங்களில் பல பாடங்களை புரிந்து கொள்ள முடியாதவர், 40 சதவிகித மதிப்பெண் மட்டுமே வாங்கியவரை நம்பி உங்கள் குழந்தையின் உயிரை ஒப்படைப்பீர்களா ?"

அவ்வளவு ஏன் ? பள்ளிக் கூடங்களில் ஒட்டப்பந்தயம் என்ற போட்டியே வைக்கக் கூடாது. ஒரு மாணவன் 100 மீட்டர் ஓட வேண்டும் ஒருவர் 60 மீட்டர் ஒடினால் போதும் என்றால் ஒத்துக் கொள்ள முடியுமா ??? இப்பொது நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் இப்படி ஒரு சலுகையை கேட்டு பெற முடியுமா ? 

தமிழ்நாட்டை தவிர வேறெந்த மாநிலத்திலும் நீட் தேர்வை எதிர்த்து பெரியதாக அலட்டி கொள்ளவேயில்லை. ஏன் நம்ம ஊர் மாணவர்களே நீட் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நாமெல்லாம் கடைக்கு சென்று ஒரு 10 ரூபாய் பேனா வாங்கினால் கூட எழுதி பார்த்து விட்டு தான் வாங்குகிறோம்.  ஒரு வெண்டைகாய் வாங்கினால் கூட நுனி உடைத்து விட்டு வாங்குவது ஏன்?  இது போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட தரம் எதிர்பார்க்கும் நாம், உயிரயே பணையம் வைக்கும் மருத்துவத்துறைக்கு மட்டும் தரம் வேண்டாமா ??

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் மட்டும் தான் ஒரே படிப்பா ? எத்தனை விதமான விதமான படிப்புகள் உள்ளன. குறைந்த செலவில் ஐஐடி மற்றும் பல உலக தரமான பல்கலைகழங்களிலும் படிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.  இன்று ஆண்ட்ராய்டு போன் வைத்துக் கொள்ளாத கிராமத்து இளைஞனே இல்லை என்ற அளவிற்கு உலகத்தின் எந்த மூலையில் இருப்பவருடனும் தொடர்பு கொள்ளும்  தொழில் நுட்பம் கையில் இருக்கிறது. 

மருத்துவமுறை பற்றிய மாற்று சிந்தனை வரவேண்டிய நேரமிது. அதிலேயும் ஆங்கில நவீன மருத்துவம் மட்டுமே உயர்ந்தது போலவும் மற்ற பாரம்பரிய மருத்துவமுறைகள் ஒரு மாற்று குறைந்தது போலவும் மக்கள் மத்தியில் நிலவும் ஒரு அவல நிலை. பாரம்பரிய மருத்துவமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து வருபவை. அவற்றை படிக்க பல்வேறு வகையான வாய்ப்புகள் இருந்தும் ஆங்கில மருத்துவர்களால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மருத்துவ சேவை செய்ய நினைக்கும் பலராலும் மருந்து வியாபார சுழலில் சிக்கி தவிப்பது தான் யதார்த்த நிலை. 
மக்களும் மருத்துவ செலவுகளாலயே வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழும் அளவிற்கு பயந்து வாழ்கின்றனர். அதனால் மக்கள் அனைவருமே உடல் ஆரோக்கியத்திற்கு தொடு சிகிச்சை, யோகா போன்ற எளிய நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் வாழ்வியலை பின்பற்றி வளமோடு பயமின்றி வாழ வேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கியமாக  எந்த விஷயத்தில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே நிலைப்பாடை எடுத்தால் அங்கே அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வியாபாரம் இருக்கிறது என்று நாம் ஒன்றை உணர வேண்டும்.  முதலில் சாராயம்,  இந்த இரண்டு கட்சிகளும் மது விலக்கு கொண்டு வரமாட்டார்கள். சாராய ஆலைகள் அனைத்தும் கட்சிக்காரர்கள் நடத்துகிறார்கள். அது போல தனியார் மருத்துவ , பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் கட்சிக்காரர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டின்  தனியார் இஞ்சினீயரிங் கல்லூரிகளில் கடன் வாங்கி படித்த பல இளைஞர்கள் தரமில்லாத கல்வி கற்றதினால் அந்த கடனை அடைக்க  இந்த  சொமேட்டோ, ஸ்விக்கி, டன்சோ போன்ற பைக் மூலம் டெலிவரி செய்து தான் தங்கள் கடங்களை கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். மிகப் பெரிய கனவுகளுடன் அவர்களின் பெற்றொர்கள் இரத்தம் சிந்தி சம்பாதித்தது பொறியியல் படித்தாலே பெரிய வேலை கைநிறைய சம்பளம் என்ற மாயையில் சிக்கி எவ்வளவு குடும்பங்கள் இன்று கஷ்டப்பட்டு வருகிறார்கள். 

 முழுமையான மருத்துவ படிப்பிற்கு அதுவும் நவீன இயந்திரங்களை கையாள்வதற்கு வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கேற்ப செலவு செய்ய வேண்டிய அவசியத்திலும் உள்ளனர்.  மிக ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட்டாலும் படிப்பு காலம் முழுக்க செலவு செய்ய கடன் வாங்கி மருத்துவராக ஆனாலும் அரசாங்க மருத்துவமனைகளில் சம்பளம் மிக குறைவு.  தனியார் மருத்துவமனைக்குள் சேர வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் மாணவர் இருந்தால் தான் அங்கு வேலை கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும் மாணவர் மனசாட்சியை விற்று தான் கடனை அடைக்க முடியும். அது நிச்சயமாக மக்கள் சேவையாக இருக்காது. 

டாக்டர் அப்துல் கலாம் போன்றோர் மிக ஏழ்மை நிலையிலிருந்து உயர் பதவிகளை அடைந்தது மிக கடுமையான உழைப்பால் மட்டுமே.  அப்படி உழைக்க விரும்புபவர்கள் மிக எளிதாக எந்த நீட் தேர்விலும் சுலபமாக வென்றுவிடலாம். அரசியல்வாதிகளின் மித மிஞ்சிய செல்வ கொள்கையில் கடன் வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

அப்துல் கலாம் அய்யாவுடனேயே பணியாற்றிய அறிவியல் விஞ்ஞான பேராசிரியர் திரு .பால குருசாமி அய்யா "நீட்" தேர்வு ஏன் அவசியம்" என்று பட்டியல் இட்டுள்ளார்கள்.  அதற்கு அவரை விட ஒரு அறிவு அதிகமாக இருக்கிற "ஏழாம் அறிவு" சூர்யாவை  பதில் சொல்லும் படி அன்போடு கேட்கலாமே. 


Thursday, June 24, 2021

Virat Kaned by Williamsons

 Simplicity Simply Wins



History repeats in all formats 2019 & 2021 Indian Cricket Hype
all to be written about Indian Cricket aggrandisement in this 2019 article itself.


In Australia tour in Jan 2021 too, a calm captain in Ajinkya Rahane could bring out the best in the players. Problem with Virat is over shouldering the responsibility and not allowing others to own up things. Virat is a prolific run getter and it will be better he focusses on Batting. IPL should come clean and should remove all the tainted hands for ever. All the betting syndicates associated with IPL brand of cricket should be banned for ever.

New Zealand is a quite and low profile country. With minimal resources and revenue, they could still produce the best team with level headed players.

Monday, May 31, 2021

உங்க சிகிச்சைக்கு துப்பு இருக்கா ??




 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

ஒரு மருத்துவர் எப்படி மருத்துவம் பார்க்க வேண்டும் என்று வள்ளுவர் வாக்கு.  நோயாளியின் நாடியை ஒரு நிமிடம் தொட்டு பார்த்தவுடன் ஒரு நல்ல மருத்துவருக்கு நோய் என்ன ? அதற்கு மூலக் காரணம்  என்ன ? என்று தெரிய வேண்டும்.

இயந்திரங்களைக் கொண்டு ஒரு யூக தோராயமாக அறிகுறிகளை களைய மட்டும் மருந்துகள் கொடுப்பது நல்ல மருத்துவமல்ல.

தமிழ்நாட்டில் பொதிகை மலைகளில் தவ வலிமையினால் பல மூலிகைகளின் தன்மையை உணர்ந்து அதன் மூலம் மனித உடலின், மனதின் நோய்களை தீர்க்க அகத்திய மாமுனிவர் முதற் கொண்டு அவரின் சீடர்களான பல சித்தர்களால் வடிவமைக்கப்பட்டது சித்த மருத்துவம். 

பொதிகை மலையின் மறுபுறம் மலைகளில் வசித்த முனிவர் பரசுராமர் தொடங்கி பல்வேறு தவசீலர்கள் இயற்கையின் வரமான மூலிகளை கண்டறிந்து கொடுத்தது ஆயுர்வேதம்.

இந்திய மருத்துவமுறைகள் அனைத்துமே பஞ்சபூதங்களின் அடிப்படையிலேயே மனித உடலின் ஆரோக்கியத்தை அளக்கின்றன. 
பாரம்பரிய தொடு சிகிச்சை, இயற்கை மருத்துவம், யோகா, வர்மம் - இந்த முறைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாய தன்மைகளை உடலளவிலும் மனதளவிலும் ஆராய்ந்தே சிகிச்சையை பரிந்துரைக்கின்றன.

நவீன சிகிச்சை முறை என்ற பெயரில் ஒவ்வொரு உறுப்புக்கு என்று  ஒவ்வொரு மருத்துவர் என்று  மனித உடலை பிரித்து மேய்ந்து மனிதரை காசு கொட்டும் இயந்திரங்களாக இந்திய பாரம்பரிய மருத்துமுறைகள் பார்ப்பதில்லை. 

ஒரு மனிதன் என்பவனை உடல், மனம் & ஆன்மா என்ற மூன்று நிலைகளில் பிரிக்கிறது. இதில் ஆன்மா என்ற தன்மைக்கு எந்தவித பாதிப்பும் வர வாய்ப்பில்லை. உடலுக்கும் மனதிற்குமே நோய் வர வாய்ப்புள்ளது. அதிலும் உடலுக்கு தன்னை தானே குணபடுத்திக் கொள்ளும் தன்மையை இயற்கை வழங்கி உள்ளது. ஆனால் மனம் என்ற சொல் தான் மனிதம் என்ற சொல்லின் மூலச் சொல்லாகும். 

மனித உடல் அதிகமாக பலவீனமடைவது மனத்தினால் தான். நோயை பற்றிய பயம் முக்கியமாக அதன் விளைவுகளை பற்றிய கவலை.  இந்தியாவில் அதிகமாக பாம்புக்கடியால் இறப்பவர்கள் பாம்பு கடித்தாலே விஷம் என்ற நம்பிக்கையினாலே மடிகின்றனர். உண்மையில் ஆறு வகை பாம்புகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தன்மை உள்ளது. மற்ற நூறு வகையான பாம்புகளுக்கு எந்தவிதமான விஷ தன்மையும் இருப்பதில்லை.  நம்மில் பலர் தங்களை வாழ்நாள் முழுமைக்கும் நோயாளியாக நினைத்துக் கொண்டு தானும் கஷ்டப்பட்டு கவனிப்பவரையும் அல்லாட வைக்கிறார்கள். 

இந்த கரோனா பெருந்தொற்றிலும் பலரும் பயம் காரணமாகவே இறக்கின்றனர். 




யோகா என்ற இயற்கை வாழ்வியலை பதஞ்சலி முதற்கொண்டு பல முனிவர்கள் இயற்கையை உற்று நோக்கி விலங்குகளின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்து பல ஆசன முறைகளை உருவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தார்கள்.  இன்று நவீன ஆராய்ச்சியாளர்கள் பல்லாயிரக்காண கோடிகள் பணத்தை கொட்டி ஆராய்ச்சி செய்து மருந்துகளை பின் விளைவுகளை முழுவதுமாக உணராமல் வெளியிடுகிறார்கள். ஆனால் நமது பாரம்பரிய விஞ்ஞானிகளான சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இயற்கையை உற்று நோக்கி  அதன் நன்மை தீமைகளை தங்கள் உள்ளுணர்வாலும் பிரபஞ்ச தொடர்பாலும் மக்களுக்கு வழிக்காட்டினார்கள்.  பிராண வாயுவை மிதமாக அளவோடு பயன்படுத்தினால் வாழ்நாளை எப்படி நீட்டித்து வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டி வழிக்காட்டியுள்ளனர். 

பலவிதமான சிகிச்சை முறைகளை பற்றி பலருக்கும் "வாழும் கலை" "மனவளக்கலை" என்று எளிமையாக கொண்டு சேர்த்த  ஆசான் வேதாத்திரி மகரிஷி  சிகிச்சை முறைகளின் நுணுக்கங்களை விளக்கியுள்ளார்கள். 


ஆனால் இவ்வளவு அருமையான சிகிச்சை முறைகள் இருந்தும் மக்களை மனத்தை பயமுறுத்தும் முறை எதற்கு ????

நமது முன்னோர்கள் பல் துலக்க உப்பு , கரி பயன்படுத்தியதை ஆங்கிலேயர்கள் காலத்தில் கிண்டலடித்த வெளிநாட்டு நிறுவனங்கள் இன்று அவர்களே :
 "உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா . கரி இருக்கா "  என்று நமது பாரம்பரியத்தை நமக்கே விற்க தொடங்கிவிட்டார்கள். 
" எங்கள் டீயில் அதிமதுரம் இருக்கிறது" என்கிறார்கள்
வேத காலத்திலிருந்தே " எங்கள் காபியை" தான் குடித்தார்கள் என்று மக்கள் இப்பொழுது இயற்கையின் பக்கம் திரும்ப தொடங்கிவிட்டார்கள் என்று உணர்ந்த வியாபாரிகள். 

"இன்னும் கொஞ்சம் தான் மக்களே !!"  இயற்கைக்கு திரும்பும் பாதை மிக அருகில் தான் இருக்கிறது.  

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் "மக்கள் செக்கில் ஆட்டிய எண்ணை தான் வேண்டும் என்று கேட்டால் வியாபாரி உடனே நானும் செக்கெண்ணை தான் விற்கிறேன் என்று கடையை போடுவான் " என்றார்.  இன்று சென்னை மாநகரில் பல இடங்களில் ஓடாத மரசெக்கையாவது வைத்து தான் மரசெக்கு எண்ணைதான் விற்பதாக ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே போல் உணவுமுறையிலும் சிகிச்சை முறையிலும் நாம் பாரம்பரியத்தை நோக்கி திரும்பும் போது பண வியாபாரமாகிப் போன மருத்துவம் மாறிவிடும்.  மனிதர்களால் அற்பமாக ஐந்தறிவு கொண்டதாக பார்க்கப்படும் தெருவில் வசிக்கும் நாய்களே வயிறு அஜீரணம் என்று தெரிந்தால் அருகம் புல்லை தின்று வாந்தி எடுத்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் மீட்கும் தன்மையை இயற்கை இயல்பாகவே நாம் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்திருக்கிறது. 

"நாய்க்கே நாவடக்கம் இருக்கும் போது நமக்கும் இருக்க வேண்டாமா??? " 

" சூரிய வெளிச்சத்திற்கு பின் காக்காய்க்கு சோறு வைத்தால் காக்கைகள் சாப்பிடுவதில்லை " 

இந்த கரோனா மாதிரி கிருமி தொற்றுக்கும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக் கூடிய முதல் சிகிச்சை " சூரிய ஒளிக் குளியல்" . காலை சூரியன் உங்கள் உடம்பில் படும்படி நில்லுங்கள் காற்றை நன்றாக சுவாசியுங்கள்.

( அதற்காக வெள்ளைகாரன் மாதிரி பேராசையோடு முழு உடம்பின் மீதும் சூரிய ஒளி பட வேண்டும் என்று கடற்கரைக்கு செல்ல வேண்டாம் )😂😂



சகிருட்டிஸ்






Saturday, May 29, 2021

Xi Lanka

சீ ஸ்ரீ லங்கா

Xi Sri Lanka



லங்கையின் பாராளுமன்றத்தில் 25 மே 2021 கொழும்பு துறைமுக நகரத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்து இங்கு எந்த நாட்டு நாணயத்திலும் வியாபாரம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்ட சட்டத்தை வோட்டெடுப்பின் மூலம் சட்டம் செயலாக்கம் பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(https://www.seatrade-maritime.com/ports-logistics/sri-lanka-passes-controversial-port-city-bill )

ற்கனவே இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு அந்த நாடு இலங்கைக்கு வழங்கிய அமெரிக்க டாலர் 1.2 பில்லியன் கடனை திருப்பி அடைக்க முடியாமல் போனதால் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டதாக 2018 ல் அறிவிக்கபட்டது.

 https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html

ப்போது கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதர மண்டலமும் மற்ற நாடுகளிடம் இலங்கையின் தேசியத்தை அடகு வைத்துவிட்டதாக இலங்கையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பரவலாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ந்தியாவிற்கும் சீனாவிற்கும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டுமே இருந்து வந்த போர் மேக பதட்ட சூழ்நிலை இப்பொழுது இந்தியாவின் தெற்கு பகுதிக்கும் நீண்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே சீனா இந்திய பர்மா எல்லை வரை, பூடானின் எல்லையில் கிராமங்கள் அமைத்தும் மற்றும் கரோனா கிருமிகளை இந்தியாவில் பரவ செய்து இந்திய பொருளாதாரத்தை நலிவுற செய்தல் என்று பலவிதங்ககளிலும் தொந்தரவு தந்துக் கொண்டே இருக்கிறது. 

லங்கையில் ஏற்கனவே பல ஆண்டுகள் நடந்த சிங்கள- தமிழர்கள் மோதல் பல்லாயிரக்காண மக்கள் மாண்டும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறிவிட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் ராஜபக்சே சகோதரர்கள் பல காரணங்களை காட்டி இம்சித்து வந்துள்ளனர். 

ந்த சூழ்நிலையில் நாட்டை,  இந்தியா முகாலயரிடமும் ஆங்கிலேயரிடமும் உள்நாட்டு பிரிவினைவாதிகளால் சிக்கியது போல், இலங்கையும் ஏற்கனவே ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு விடுதலை அடைந்திருந்தும் மீண்டும் உள்ளூர் ஊழல் அரசியல்வாதிகளின் சண்டைகளினால் சீனாவிடம் அடிமையாக்க தொடங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சிங்கார சீனன்

காகவி சுப்ரமணிய பாரதியார் " சிந்து நதியின் இசை" பாடலில் "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” "  என்று மிக தீர்க்க தரிசனுத்துடன் அன்றே பாடினார். 



அன்றே கட்டியிருந்தால் இலங்கை உள்னாட்டு போர் நடக்காமலே கூட இருந்திருக்கும்.  தமிழர்கள் கொத்து கொத்தாக அழிந்தும் அகதிகளாக புலம் பெயர்ந்தும் தவித்தனர். இன்னும் சில வருடங்களில் சீனாவின் ஆதிக்கம் பெருக பெருக சிங்களவரும் அகதிகளாக ஓட வேண்டியது தான். உலகத்தில் இன்னும் சில நாடுகளில் தான் புத்த மதம் பெயரளவிற்காகவவது இருக்கிறது.  புத்தரின் உண்மையான அன்பையும் அகிம்சையும் உணராமல் வெறுப்பை மட்டும் உமிழ்ந்த சிங்களவர் புத்தம் பிறந்த மண்ணிற்கே அகதிகளாக வரவேண்டிய சூழ்நிலையை மஹிந்த ராஜ்பக்சே சகோதரர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். 

விசித்திரமான உண்மை என்னவெனில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் இராஜ இராஜ சோழன், மஹிந்தன் என்ற சிங்கள அரசனை வென்றார். அந்த மஹிந்தன் மலைகளில் ஒளிந்துக் கொண்டதாக அன்றைய வரலாறு கூறுகிறது. அன்றும் புத்தர்களை மதம் மாற்றவோ அவர்களின் புத்த விஹாரங்களை இடித்தோ பெண்களை அவமான படுத்தும் எந்த சம்பவங்களும் சோழர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறவில்லை. சைவத்தை உண்மையாக நேசித்து பெரிய கோவில்கள் மக்கள் நலனிற்காக தந்தார்கள்.  ஆனால் இத்தகைய நற் பண்புகளை நாம் சீ ஜின்பிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. 



மாமல்லைக்கு வந்து கலைகளை கண்ட சீ இப்பொழது இந்தியாவிற்கு தொல்லை தர கொல்லை புறத்திற்கு வந்துள்ளார். சீன பேரரசு என்ற கனவுடன் வலம் தரும் சீனா போர் முரசை ஏற்கனவே இமயமலை திபெத்து எல்லையில் கொட்டிவிட்டது.  ஆனால் தன் உள்நாட்டு மக்களின் பெரும் வெறிப்பிறகு ஆளாகியிருக்கும் சீன அரசு மக்கள் அடக்குமுறையை மீறி வெடிக்கும் போது பல சிறிய நாடுகளாக சிதறும் வாய்ப்பு அதிகம். 


க்கள் எல்லாம் "சீ" என்று ஒதுக்கும் முன் "சீ" மனம் திருந்தி பல சிறு நாடுகளின் மீது செலுத்தி வரும் ஆதிக்கத்தை நிறுத்திக் கொண்டு உலக அமைதிக்கு தங்கள் பங்காற்ற வேண்டும். பண பலமும் ஆயுத பலமும் கொண்டு உலகாள துடிக்கும் சிலரும் ஒரு சிறு கிருமி அளவிற்கு கூட நமது பலத்தினால் பயனில்லை என்பதை இனியாவது உணரவேண்டும். சிங்களவரும் உண்மையான புத்த தன்மையை உணர்ந்து இயற்கையோடு ஒத்து வாழ பழக வேண்டும். 

தேவை மனமாற்றம். 

Wednesday, May 19, 2021

Rahuls of India


 If this Rahul is able to catch the imagination of the audience for atleast next 20 years, India & even world will be more peaceful place to live in. His singing with great devotion and the typical bhava ( expression with deep understanding of the lyrics ) is really soul stirring. He is just entering the adolescence, with a young boyish voice , he is able to understand the mood of the composer of songs in any language with utmost perfection to tie the soul of his listeners with his music.  If he is able to keep his passion towards music alive despite likely distraction of stardom & related addictions, he is likely to influence another generation to name the children as RAHUL. He will be a great ambassador for peace with Music.

Tons of inspiration, perspiration & determination this Rahul is able to give India in the last 25 years.  To a certain extent , Kapil Dev was the 1st one to shore up Indian dream of Sports as a profession & later gave a platform in Indian Cricket League (ICL ) for youngsters to be groomed, which later BCCI overshadowed with IPL. From KD, it was RD who has started shouldering the responsibility to grow youngsters. Dravid was the best motivator from non striker's end is the value even his famous over rated contemporaries could not match. Even in 2021 Rahul Dravid is busy training 500 odd coaches for training youngsters in every nook & corner of the cricket crazy nation. Right from his playing days to till now as the Head of National Cricket Academy, Every Rival Captain , Coaches & trainers acknowledge The Great Wall of India is becoming stronger & Making India Stronger. It is high time, political system absorb him in the political spectrum and use his training & administrative skills for the betterment of the Nation.  Rahul Dravid should not shy away from politics. The 1st step in acting as a angry man (in Credit card Ad ) has surprised many and he proclaims in the ad as " Indira Nagar ka gunda hoon mein " is probably a right qualification for a politician. 


Rahul Dravid is already a motivational speaker and he must get inspired from Rahul Gandhi, who could daringly speak on anything anywhere without any data on Hand. Rahul Gandhi could see Modi everywhere. From the clogged drains to the choking viruses he could see Modi's hand anywhere. He is actually become a PM Modi's Bhakt.  Modi's biggest boon is Mr. RG as the opposition leader. More He tantrums on the actions and inactions of  the Central Government, it gets a political mileage to NaMo. 

Rahul Gandhi's biggest contribution to Indian politics was putting efforts to bring RTI Act 2005. It could really bring out many bureaucratic corrupt practices to the public domain. Unfortunately his party's own government UPA II had to pay the price heavily with the list of charges through this act. He went on to become Rahul Chahar in bowling more googlys.
Rahul Gandhi is hitting the wrong lines and already his actions and messages are more helping India's arch rivals to file potshots at India. The speed at which 2nd wave Started spreading in India, no country can handle it easily , that too with huge population load India is having. Rahul Gandhi is fast losing the ground as he is busy accusing the ruling party for everything at the moment of serious crisis. Even if the Present Government is not able to handle it efficiently as alleged by him, the series of events strongly makes India becoming a victim of bio war for its over adventure towards Vaccine Diplomacy where it started exporting Vaccines to 75 odd countries. Whole world knows the cunningness of powerful pharmaceutical lobbies and their adverse reactions to loss of business. India paid a heavy price in the name of " Green Revolution" in 1960s by introducing pesticides in farming & decades later same companies come to sell anti cancer drugs.  Investing in diseases & reaping in the medicine has been the international pharmaceutical companies' modus operandi.

In 2024, if all the opposition parties and their masters still thinking of RG's face to could stop Modi Juggernaut,  it will be a sitting duck to score a Hatrick. For a democracy to win, the opposition has to be strong & healthy to give a healthy environment to evolve public conscience. Though Mamata of Bengal has given a hatrick of Victories,  making her as a common candidate will not be easier for other regional parties and get a pan India appeal. Same with TN's Stalin, Kerala's Vijayan, Odisha's Patnaik, Bihar's Nitish etc... Common person acceptable to all the  regional Kings may be their pet King Maker Mr. Prashant Kishor (PK ). Probably he can be made the Chair Person of the Congress Party as the Mother- son duo couldn't make a choice & 23 grumbling voices are echoing the walls for a change. It will be a real test for Mr. PK to lead from the front.  Then rope in all the khans of Bollywood to pitch in with their concerns about the safety of India. These can be a mega ghatbandhan, may be all of them can collectively pounce on that untameable bull with a 56" Chest. That will be a real Jallikattu 2024. Otherwise we have to a Import a Martian alien only. 



Unbearable summer heat & breaking news of repeated calamities to COVID's second wave, China's hegemony propelling WW3, only one person can bring real peace to the mind is world's 1st Rahul's Father, who went on to became Gautama Buddha. 




OMG !!! Xi Jinping getting headache on dreaming His Holiness Dalai Lama becoming the Head of Tibet. 



Oh Mind  !! Relax !! Stop watching TV , 
seeing web stories, reading news papers.
 
Just listen to " Pibare Rama Rasam" by Rahul Vellal 


Mohd. Rafi's " Sukh ke sab saathi"


KJ Yesudas's  " kaa karoon sajini "


Sakritease

Translate

Contact Form

Name

Email *

Message *