Search This SAKRITEASE Blog

Showing posts with label admk. Show all posts
Showing posts with label admk. Show all posts

Friday, September 2, 2022

This Goat will hatch a Egg

 இந்த ஆட்டுக்குட்டி கண்டிப்பாக  முட்டை போடும் 


கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று நினைக்க தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது திரு. செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் கூறியது  போல் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர், கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு வந்து   "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள்,  ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்  ஆடு வளர்ப்பிலும் ஈடுபடும் இவரை "ஆடு" என்று ஏளனமாக கிண்டலடிக்கிறார்கள். ஆனால் சாமான்ய குடிமக்களுக்கு அடிதட்டிலிருந்து மேலெழுந்து வருபவர்களை பிடிக்க  ஆரம்பித்து விட்டது.  திரு மோதியை "டீக்கடைகாரர்" என்று திரு. மணி சங்கர அய்யர் கிண்டலடிக்க போக அதுவே நாட்டில் உள்ள பல டீக்கடைகளிலும் விவாத பொருளாகி, பத்திரிகையாளர் திரு சோ கூறியது போல அந்த ஏளன பேச்சு ஏணிப்படி போட்டுக் கொடுத்தது. 

இப்போது இவரை "ஆட்டுக்குட்டி" என்று கிண்டலடிக்க போக கிராமங்களில் ஆடு மேய்ப்பவர்கள் கூட இவரை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திரு .அண்ணாமலை !!! உங்களை ஏசுபவர்களை திரும்பி ஏசவும் வேண்டாம் ஏசு போல்  காட்டவும் வேண்டாம் , வீசப்படும் கற்களின் மீது ஏறி நின்றால் போதும். உங்களுக்கு  முன்னே  இருந்த  திருமதி. தமிழிசைக்கோ, திரு .முருகனுக்கோ  கிடைக்காத எதிர்ப்பை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள். ஒரு டாக்டரால் முடியாததை ஒரு வக்கீலால் முடியாததை, ஒரு இன்ஜினீயர் செய்து காட்ட வேண்டும். 

தமிழகமே சாராய வியாபாரத்தின் பிடியில் இருந்து மீளவே முடியாது என்ற அவநம்பிக்கையில் அலறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஆட்டுக்கு குட்டி முட்டை இட்டால் தான்  இந்த அவல நிலை மாறும் என்று மக்களின்  உள்ள குமுறலை உங்களால்  மட்டுமே மாற்ற முடியும்  என்ற எண்ணத்தை உங்களை எதிர்பவர்களே ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த ஆட்டு குட்டி முட்டை தான்  வாங்கும் என்று வாய் பேசினாலும் இந்த "ஆட்டுக்குட்டி முட்டை  போட்டு விடும்" என்ற நம்பிக்கை கழகங்களின் அறிக்கைகளில் தெளிவாக தெரிகிறது. 

சகிருட்டிஸ்
Sakritease

Friday, April 15, 2022

அண்ணாமலையை வாழ்த்திய ராகுல்


கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர் கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு  "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள் ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

சகிருட்டிஸ்

Monday, March 15, 2021

50 years of DMK- ADMK alliance

 

50  வருட கழக கூட்டணி

50 years of DMK- ADMK alliance


2021 மீண்டும் ஒரு தேர்தல். எந்த கூட்டணி வெல்லப் போகிறது என்பது பல கோடி ரூபாய்களுக்கான கேள்வி ??? ஆனால் யதார்த்த நிலை இரண்டு கழகங்களின் கூட்டணி 50 வது ஆண்டை பொன் விழாவை தமிழகத்தில் இந்த பொது தேர்தலில் கொண்டாட போகிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? 1971ல் திமுக இரண்டாக பிரிந்ததே கழகங்களின் மொத்த பிடியில் தமிழ்நாட்டை கொண்டு வரவே.  ஏனென்றால் அரசியல் என்பது ஒரு மிகப் பெரிய பண வியாபாரிகளின் சதுரங்கம், பதவி,  அதிகாரங்களுடன் கிடைக்கக் கூடிய வருமானம்.

தமிழ்நாட்டில் எல்லா பொதுமக்களுக்கும் நன்றாக தெரிந்த விஷயம் – எந்த கழகம் ஆட்சியிலிருந்தாலும் சாராயம் மாற்று கட்சிகாரரின் கம்பெனியிலிருந்தும் வாங்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.  இது எப்படி சாத்தியம் ? இப்படி பழி சண்டை போடுகிறவர்களுக்குள் கூட்டணியா என்று ஆச்சரியப்படுகிறீர்களா ? இதனை பல இடங்களில் திரு. கருணாநிதியும் திரு. எம்.ஜி. இராமசந்திரனும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.



இந்த தேர்தலிலும் ஒரு காட்சி வருகிறது கட்சியின் முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதியில் மாற்று கட்சியினர் பலவீனமான வேட்பாளர்களையே நிறுத்திக் கொள்வர். திரு. அர்விந்த் கேஜ்ரிவால் வாராணாசியில் திரு. மோடியை எதிர்த்து போட்டியிட்டது போல் தமிழ்நாட்டில் பெருந்தலைகள் நேருக்கு நேர் ஒரே தொகுதியில் மோதுவதில்லை. திரு. உதயநிதி ஸ்டாலின் நிற்கும் தொகுதியான சேப்பாக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க வில் சேர்ந்த நடிகை திருமதி. குஷ்பு போட்டியிடுவதற்காக அலுவலகம் கூட திறந்து விட்டார். ஆனால் திமுகவின் எதிர்காலமான திரு. உதயநிதிக்காக அதிமுக தொகுதியை விட்டு கொடுத்துவிட்டு அதிமுக முக்கியஸ்தர்களுக்காக அவர்களின் தொகுதியில் பலவீனமான பிரமுகர்களை திமுகவும் நிறுத்துகின்றன.



இந்த மறைமுக உறவு கடந்த 50 வருடங்ககள் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் மொத்தமாக தேயவைக்க பயன்பட்டுத்துள்ளது. இந்த மறைமுக கூட்டணியை திரு. கருணாநிதியும் திரு. ஆர். எம். வீரப்பனும் ஒரே மேடையில் முன்பே உறுதிப்படுத்தி உள்ளனர்.


இரண்டு கழகங்களுக்கும் அவர்கள் கொடியில் உள்ளது போல் ஒரு சின்ன வெள்ளை கோடு தான் வித்தியாசம். பெருந்தலைவர் திரு. காமராஜர் கூறியது போல் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்.



மொத்தமாக தமிழகம் ரூபாய் ஐந்து லட்சம் கோடி கடனை 50 வருடங்களாக சேர்த்தது தான் கழக அர்சுகளின் சாதனை.  இரண்டு கட்சிகளும் செயலாற்றும் முறையும் ஒரே பாணியில் இருவரும் மாறி மாறி அடுத்த கட்சியை ஊழலில் ஈடுபடுபவர்கள் என்று கைக்காட்டி திசை திருப்பி விட்டு விட்டு வெறும் அடியாள் பலம், கட்டப் பஞ்சாயத்து, சட்டத்துக்கு புறம்பான தொழில்கள், சாராய தொழிற்சாலைகள், கல்வி வியாபாரம் அனைத்து செயல்களிலும் இலஞ்சம் , முக்கியமாக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் இலஞ்சத்தில் பங்களித்து இலஞ்சம் ஊழல் செய்வது சமூகத்தில் இயல்பானது, அன்றாட வாழக்கையில் இலஞ்சம் தவறில்லை என்ற மனநிலையை உருவாக்கி தமிழக மக்கள் ஒரு மந்த நிலையில் அடிமை போல் இரு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றனர்.



இந்த சூழலில் 2006ல் மாற்றம் கொண்டு வர திரு. விஜயகாந்த் களமிறங்கினார், ஆனால் அவரால் குடும்ப கட்சியை தாண்டி பல வெளி திறமையாளர்களை ஈர்க்கமுடியாமல் உடல் நலமும் ஒத்துழைக்காமல் அவர் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது.



2021ல் நடிகர் திரு. ரஜினிகாந்த வருவார் , ஆன்மீக அரசியல் என்ற பெயரிலாவது ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார் என்று இரு கட்சிகளை வெறுக்கும் பலரும் எதிர்பார்த்து இருந்த போது, அவர் “மூன்று முடிச்சு” திரைப்படத்தில் செய்தது போல் திரு. கமல ஹாசனை குட்டையில் தள்ளிவிட்டு விட்டு அவர் கரை ஒதுங்கி கொண்டுவிட்டார். பலமான பரட்டையை எதிர்பார்த்த மக்கள் சப்பாணியாவது கிடைத்தாரே என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.


சாதாரணமாகவே தெளிவாக குழப்பும்
பரமக்குடிக்காரர் தெளிவாக தென் கோவையை தேர்ந்தெடுத்துள்ளது நல்ல துவக்கம் தான். மேற்கில் மையம் கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லா ஆறுகளும் கிழக்கு நோக்கி பாய்கின்றது. கோவையிலிருந்து மய்ய நாயகன் கிழக்கு கடற்கரையோரம் சென்னையில் கரையேறுவார் என்று எதிர்பார்க்கிறார்.



1967ல் ஒரு வைணவ ஞானியார், திரு . இராஜகோபாலசாரியார் (இராஜாஜி ) யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து காங்கிரஸை விரட்ட புறப்பட்டதால் வந்த வினை தமிழ்நாடு ஊழலிலே மக்களின் தார்மீக வளர்ச்சியிலே மிகவும் பின் தங்கி வருகிறது.  




மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு வேலை நடப்பதற்கும் ஒரு சிபாரிசு, சம்பளத்தை தாண்டிய கிம்பளம் தப்பில்லை என்ற மனோபாவம் தமிழ்நாட்டில் ஆழமாக வேறூன்றிவிட்டது. இலவச மோகம் தலை விரித்தாடுகிறது. இரு கழகங்களும் ஐந்து வருடத்திற்கு ஒரு ஓட்டு போடும் இயந்திரமாக வெறும் ஜட பொருளாக மக்களை மட்டமாக எடை போட்டு மலினமாக இலவசம் இலவசம் என்று மக்களின் வரிப்பணத்திலே மக்களுக்கே கடன் சுமையை ஏற்றிவிட்டு அரசியல்வாதிகள் நமது மாநிலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி வருகின்றனர்.






இரண்டு கழகங்களும் எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் இலவச கவர்ச்சி அரசியல் செய்துக் கொண்டு தமிழகத்தின் மக்களை தரத்தை மற்ற மாநில மக்கள் மற்ற நாடுகளின் கேலி பொருளாக்கிவிட்டு மக்களையும் அரசியல்வாதிகளின் கூட்டு களவாணி ஆக்கியுள்ளனர். சட்டப் பேரவைக்கு பண பலம் ஆள் பலம் சட்ட புறம்பாக சொத்து சேர்பவர்கள் மட்டுமே அரசியல் செய்து வர முடியும் என்ற நிலையில் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.



யார் இந்த நிலையை மாற்ற முடியும் ? இன்று தமிழகத்தை நல் வழிப்படுத்த முடியும் ??? என்ற ஏக்கமான கேள்விகள் பல மக்களிடையே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இரண்டு கழகங்களிலும் உள்ள வியாபாரிகள் வெளியில் கட்சி ரீதியாக சண்டையிடுவது போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர்களிடையே அரசாங்க சொத்தை எப்படி தனியார் சொத்தாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவான உடன்பாடு உள்ளது. தொழில் உடன்பாடு செய்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப சண்டைக் காட்சிகளும் வசன நாடக காட்சிகளும் அரங்கேறுகின்றன.



அதனால் தமிழ்நாட்டில் எப்பவும் எடுபடற ஃபார்முலா சினிமா நடிகர்களை நம்புவது தான். மக்களுக்கு குறைந்தபட்சம் இவர்கள் திரையிலாவது நல்லவராக நடிக்கவாவது செய்கிறார்களே என்கிற அல்ப சந்தோசம் தான்.



இந்த 2021 தேர்தல் நமக்கு மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே,  மிக குறைந்த நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது.

சப்பாணிய விட்டா இப்ப மயிலுக்கு வேற வாய்ப்பேயில்லை. இந்த பிறவி வைணவர் போலி நாத்திகம் பேசி மத அரசியல் செய்தாலும் மைனாரிட்டி மெஜாரிட்டி அரசியல் செய்தாலும் அவர் “விஸ்வரூபம்” காட்டின மாதிரி அவர் உள்ளே ஒருவருக்கு ஆதரவு வெளியே ஒன்று செய்ய போகிறார் என்று நம்புவோம்.



கமல் ஆட்சிக்கு வரணும் சொல்லலை, வந்தா கழகங்கள் கிட்டயிருந்து நமக்கு விடுதலை கிடைக்குமேனு சொல்றேன். இவரும் இன்னொரு கொள்ளிக் கட்டைதான் நிருபித்து கழகங்களை போல் இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தமாட்டார்னு நிச்சயம் நம்பலாம். ஏன்னா அவர் ஒரே மாதிரி வேஷம் ஒரே மாதிரி மனிதர்கள் எல்லாம் அவருக்கு சீக்கிரம் சலிச்சுரும்னு,  அவர் வாழ்க்கையில அவரே வாழ்ந்து காட்டியிருக்கார்.  அவர இந்திரன் - சந்திரன் சொல்ல முடியாது தான், அவர் தெனாலியாவே ஆட்சி நடத்தினாலும் நிச்சயம் கழகங்களை விட "பெட்டரா" செய்ய வாய்ப்பிருக்கு



இந்த கொள்ளை இருட்டில இப்போதைக்கு டார்ச் அடிச்சு முன்னேறுவோம் கூடிய சீக்கிரம் அகன்ற பேரொளி நம்மை வழிக் காட்டுவோம்னு நம்புவோம்ங்க. நம்பிக்கை தான் வாழக்கை.

 


சகிருட்டிஸ்

 

 

 

 

 

 

 

Translate

Contact Form

Name

Email *

Message *