Monday, October 8, 2018

Sakritease Facebook Page


Posts posted at Sakritease FB page 

Got the inspiration to name after the Philosopher Socrates & logo has been designed based on two great magazine editors & critiques of their time - MKG ( Mohandass Karamchand Gandhi) & MKB (Maha Kavi Subramania Bharathiar)

Responses received have been varying according to the type of posts. Interesting observations by many people on different occasions.

















Monday, August 27, 2018

Christianity to become part of Hinduism கிருத்துவமும் இந்துக்குள் அடங்கிவிடுமா ???

Christianity to become part of Hinduism 
கிருத்துவமும் இந்துக்குள் அடங்கிவிடுமா ???


After sharing this in whatsapp - one of  the friend shared this picture of Jesus with vibhuti. 
Christians ! This is high time - believe in your faith on Jesus & do not try to indulge in belittling other religions.


பின்னர் ஆயி விஜயனும் க மல காசனும் பக்கம் Pinnar ayi Vijayan Ka mala Kaasan Kerala floods


Kerala - man made floods 2018 - Root Causes listed
தனக்குத்தானே குழித் தோண்டிக் கொண்ட கேரளா !!!!!

கேரள வெள்ளம்!! சில சிந்தனைகள் படிங்கள் நண்பர்களே.....

இரண்டு லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி ஆலுவாவையும்...எர்ணாகுளம்...கொச்சியை வெள்ளக்காடாக்கிய இடுக்கி அணைமீது உனக்கு வராத கோபம் 

வெறும் 20 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் முல்லைப்பெரியாறு மீது வருகிறதென்றால் உன்மீது நாங்கள் எப்படி இரக்கங்கொள்ள முடியும்.

பம்பை ஆற்றையும் அச்சங்கோவிலாற்றையும் (Pamba & Acchan kovil rivers)  இணைத்து அதை தமிழ்நாட்டின் வைப்பாறோடு ( Vyppaaru ) இணைப்போம் என்று நாங்கள் ஒரு நூற்றாண்டாக கத்திக்கொண்டிருக்கிறோம்.அது உங்கள் செவிகளில் ஏறியிருக்குமென்றால் பம்பை இன்று வெள்ளக்காடாக மாறியிருக்காது.

மொத்தத்தண்ணீரையும் வைப்பாற்றில் ஓடவிட்டிருந்தால் காய்ந்துகிடக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டம் கடைத்தேறியிருக்கும்.

செண்பகவல்லி அம்மன்கோவில் அணைக்கட்டை உடைத்தெறிந்த உங்களையே திரும்ப கட்டித்தாருங்கள் என்று கதறினோம். கட்டுவதற்காக நாங்கள் கொடுத்த நிதி ஐந்துலட்சம்.ஆண்டு 1967.அதைக்கட்டி எங்களுக்கான தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொடுத்திருப்பீர்கள் என்றால் இன்று சபரிகிரி அணையும் பிளீச்சிங் அணையும் இத்தனை வேகமாக நிரம்பியிருக்காது.

நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறுத்தண்ணீரை மதுரை மக்களுக்கு குடிநீர் தேவைக்குத் தாருங்கள் என்று எம்ஜிஆரும் மதுரை மேயர் பட்டுராஜனும் கேரளாவிற்கு படையெடுத்தார்கள்.

அன்றைக்கு கேரள முதல்வர்களாக இருந்த அச்சுதமேனனுக்கோ...கருணாகரனுக்கோ எங்கள் கதறல் கேட்டிருக்குமென்றால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கியிருக்கும்.

இன்று மூணாறையே மூழ்கடித்து ஓடும் குட்டியாறையும்...கன்னியாறையும்...நல்லதண்ணி ஆறையும் மூணாறு நகரிலிருந்து பெரியபாறை...நயமக்காடு...தலையாறு...லக்கம்...சட்டமூணாறு...பள்ளக்காடு வழியாக மறையூர் கொண்டுவந்து அங்கிருந்து கிழமேலாக நீண்டுகிடக்கும் பள்ளத்தாக்கில் ஓடச்செய்து அமராவதியோடு ( Amaravathi River )இணைத்திருக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அதை நிராகரித்தது நீங்கள்.

வம்படியாக இந்த மூன்று பேராறுகளையும் மின்சாரத்தை தவிர எதற்கும் பயனில்லாத ஆனையிறங்கல் அணையோடு ( Anaiirangal dam) சேர்த்து செய்த அழிச்சாட்டியத்தால் மூணாறு (munnaru ) நிரம்பி வழிகிறது.

அச்சுதானந்தன் என்கிற அதிமேதாவி கேரளத்தை ஆளும்போது மண்வெட்டி கடப்பாறையோடு நாலைந்து மார்க்சிய குண்டர்களை அழைத்து வந்து செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கட்டை (adaviya nayinaar dam) உடைக்க அத்துமீறி தமிழக எல்லைக்குள்ளேயே வந்தார்.காரணம் அச்சங்கோவிலாறுக்கு செல்லவேண்டிய நீரை மறித்து தமிழகம் அணைகட்டியதாக அடாவடி செய்தார்.


பரம்பிக்குளம் ஆழியாறில் பிரச்சனை.(Parambikulam -aazhiyaaru )
.நெய்யாற்றின்கரை இடதுகால்வாயில் பிரச்சனை...அட்டப்பாடி அருகே முக்காலியில் பவானியை ( mukkali bhavani river) முன்வைத்து பிரச்சனை...பில்லூர் அணையில்  (Pillur dam )பிரச்சனை...இப்படியாக மலையாள நாட்டின் நீர்த்துரோகங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

தமிழர்கள் ஆதிகாலத்தில் வகுத்துத்தந்த நீர்மேலாண்மை எனும் அரிய தத்துவத்தை மலையாளச்சகோதரர்கள் இனியாவது உணரவேண்டும்.
இது வரைக்கும் யாரோ ஒரு தமிழ் நாட்டுகாரர் வாட்சப்பில் கேரளா தமிழ் நாட்டு இடையே இருக்கும் ஆறுகளை பத்தி தெளிவா தெரிஞ்சு எழுதியிருக்கார்.

இனிமே நம்ம எழுத்துங்கோ


"மிஸ்டர் விஜயன் ! காலம் காலமா நாங்க அனுப்பி தந்த சோத்தை அள்ளி தின்ன வாயி ! இப்போ நிங்கள் பின்னர் ஆயி !!! தொடச்சு போட்டு போங்கோ " என்று விசிறு பிடிச்ச தெனாலியாக கூவ தோனுதுங்கோ !! உங்க ஊரு நாறுதுங்கோ.

அத கூட்டி கழுவ நம்மவரையும் 25 இலட்சம் ருபாயும் அனுப்புரோமுங்கோ !!! அவருக்கு கேரளாவில மழை பெஞ்சாதாம் குளிருதாம்மா !!! இங்க வெள்ளம் வந்தா அவரு மய்ய அரசுக்கு கட்டின வருமான வரி நிறைய இருக்குதுங்கோ !!!

உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொன்னாலும் அது குறிச்சு மறுபடியும் பேச்சு வார்த்தை நடத்த அவரு வருவாரு.  அவருக்குத்தான் பெரியாரை ரொம்ப புடிக்கும். வைக்கம் வரைக்கும் உங்க கக்கத்தில் இடுக்கி கொண்டு போய் முல்லை பெரியாறு அணை மேல வைச்சு இன்னம் ஒரு 25 வருஷம் பேச்சு வார்த்தை நடத்துங்க.

பின்னர் ஆயி விஜயனும் க மல காசனும்  பக்கம் 2 /3


சபரிமலையும் விஞ்ஞானமும் :

எங்கள் ஊர் போலி நாத்திகரை சபரிமலைக்கு கூட்டிக் கிட்டு போய் விஞ்ஞான ரீதியாக ஆராய சொல்லுங்க.  

அவருக்குத்தான் பெண்களை பற்றி உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அதிகம் தெரியும். மாதவிடாயின் போது பெண்களக்கு உடலியல் உளவியல் ரீதியாக பல மாற்றங்கள் உண்டாகும். அதுவும் பல சக்திகளை ஈர்க்கக் கூடிய தன்மை அதிகமாக இருக்கும்.  இதனாலேயே  அந்தக் காலத்தில் அவர்களை ஊருக்குள் ஒரு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் ஈர கோணி கட்டி இருப்பார்கள்.  இந்து மத கோவில்களில் கடவுளின் மூல விக்கிரங்களில் சித்தர்கள் தவ வலிமையினால் பெற்ற சக்தி அனைத்தையும் இறக்கி இருக்கிறார்கள்.

மாதவிடாயின் போது பெண்கள் இந்த சிலைகளின் முன் வந்தால் அவர்கள் உடம்பு இந்த காந்த அலைகளை அதிகம் ஈர்க்க நேரிடும்.  திடீரென்று மாறிடும் சக்தி நிலையால் அவர்கள் உடம்பாலும் மனதாலும் பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால் தான் சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை மாதவிடாய் வரக்கூடிய வயது பெண்களை அனுமதிக்காமல் இருந்தார்கள்.

இந்த இணையதளத்தை கொஞ்சம் படிங்க :

உச்ச நீதிமன்றத்தில போய் தப்பு தப்பா வாதாடி இப்ப சபரி மலைக்கு யாருமே போக முடியாதபடி செஞ்சுட்டீங்க. ஒரு வேளை அது தான் உங்க அடிப்படை நோக்கமேவா ??? காலம் காலமா இங்குள்ள மதங்கள வேரறுக்கறதானே உங்க வேலையே. இதுக்குதானே மத்திய ஆசியா நாடெல்லாம் உங்க நிறுவனத்துக்கு வாரி வழங்குது.

மேலும் நம்ம ஆளு எப்பவுமே ரொம்ப தெளிவானவரு - சினிமா என் தொழில் அது நான் காசு சம்பாதிக்கிறதுக்காகத்தான் செய்கிறேன் தெளிவா விளக்கம் கொடுப்பாரு. மய்யத்தின் கொள்கை விளக்கப் பாடலான " காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது" ரொம்ப காலம் முன்னாலேயே தீர்க்க தரிசனமா பாடிட்டாரு.

அதனால உங்களுடய திடீர் கூட்டணியே சபரி மலை தானோ. அய்யா பாத்துங்கய்யா ! இப்படித்தான் ஆந்திராவில ஒரு ஆளு திருப்பதி வெங்கடாசலபதிக்கு போட்டியா கட்டறேன் கான்ட்ராக்ட் எடுத்தாரு. அவர் என்ன ஆனாருன்னு யாருக்கும் புரிபடலை. இப்ப தீர்ப்புக்கு  நீங்க போராடினத்துக்கே 100 வருஷமா பெய்யதாதெல்லாம் சேர்த்து வைச்சு கொட்டுது.  நம்மாள நம்பி கடவுள் இல்லைனு சபரி மலைல ஏறிட போறீங்க - அங்க அய்யப்பன புலி மேல பார்த்தவுடனே " நான் எப்போ இல்லன்னு சொன்னேன் இருந்தா நல்லாயிருக்குமேன்னு தான சொன்னேன் " அப்படி சொல்லிட்டு அய்யப்பனும் திருமாலின் மகன் தான் சொல்லிட்டு "பல்லாண்டு " பாடிட்டு ஒடி வந்துடுவாரு. நீங்க தான் அப்பறம் புலிக்கு பதில் சொல்லனும். உங்கள் அபூர்வ சகோதரரான அப்பு ஆப்பு வைக்கிறதல கில்லாடி. அய்யப்பன் மகிமையை உணறும்னா நம்ம யேசுதாஸ் அய்யாவின் பாட்டை கேட்டாலே போதுமே. எப்பவும் ஒரிஜினல் குரல் கொடுக்கிறவங்கள நம்புங்க முன்னாடி வாயசைக்கிறவன் வேண்டாம் ஆபத்து.


மீண்டும் மிஸ்டர் விஜயன் - நீங்க இப்ப ஆள்ற நாட்டோட தாய் மொழியான மலையாளத்திற்கே தாய் மொழியான தமிழ் மொழியை
அதாவது உங்க பாட்டி மொழி பேசும் எங்களை "பட்டி" "பாண்டி" "படிக்காதவன் " னு இகழாம, எங்க பாசத்தை ஏத்துகிடுங்க, ஆறுகள திருப்பி விடுங்க. இப்படி செஞ்சிங்கன்னா நம்ம நல்லசிவம் "பொழச்சுபோங்கன்னு" சொல்லிட்டு திரும்பிடுவான்.  

இல்ல மய்ய நாயகனை "உன்னால முடியும் தம்பி"னு உசுப்பேத்தி விட்டிங்கன்னு வைய்யி அந்த படத்துல கதாநாயகி பேர சுருக்கி கூப்பிட்ட மாதிரி தான் அவரு அரசியலென்னும் சாக்கடையில் விழுந்தபின் கூப்பிட வேண்டி வரலாம் .
 Unnal mudiyum thambi

Thursday, August 9, 2018

மோ க காந்தியும் மு க நிதியும் காளியின் ஊழி கூத்தும் Kaali's Dance in Kali yuga

மோ க காந்தியும் மு க நிதியும் காளியின் ஊழி கூத்தும்













அன்னை காளியின் சுடும்காட்டு தர்பாரில் தன் மிக விசுவாசமான படையினருக்கு தன் ஊழி ஆட்டத்தில் நடத்தவிருக்கும் நாடகங்களை விளக்கி அதில் பங்கு பெறவிருக்கும் தன் அத்யந்த சீடர்களுக்கு அவர்களுக்கு வழங்கவிருக்கும் கதாபாத்திரங்களை விளக்குகிறாள்.

"எனது அருமை கணங்களே ! எனது ஊழித் தாண்டவத்தின் உக்கிரகத்தை கூட்ட முடிவெடுத்துள்ளேன். ஏற்கனவே நம்மால் அனுப்பப்பட்ட இராபர்ட் கிளைவ் போன்ற வெள்ளைத் தோலிகள் மக்களை கொத்து கொத்தாக கொன்று செல்வங்களை கொள்ளையடித்து எனது கோரப் பசிக்கு தினிப் போட்டார்கள்.


மனிதனை மனிதனே அடித்துக் கொண்டு சாகும் வீண் போர்களை உங்களை கொண்டு கூட்டி கலியின் கொடுமையை என்னிடம் பிறவி கேட்டு நச்சரித்து பிறந்த நரர்களுக்கு உணர்த்தப் போகிறேன்.

எனது எளிய அன்பு பக்தனே ! நீ இப்போது பாரதம் எனும் தேசத்தில் பிறந்து மோ.க.காந்தி என்று அழைக்கப்படுவாய். அமைதிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவாய் "

மோ.க. காந்தி " அன்னையே எனக்குப் புரியவில்லை. அமைதியின் வழியே எப்படி உங்கள் ஊழி ஆட்டத்திற்கு வழி செய்ய முடியும் ???? "

" மகனே !!! நீ எங்கெல்லாம் சென்று அமைதி அமைதி என்று கூறினாலும் அங்கெல்லாம் இரத்த ஆறு ஒடுமாறு செய்ய நமது பிற கனங்களை அனுப்பி வைப்பேன். இதோ இவர்கள் எலிசபெத் ராணியாக, சர்ச்சில், ஹிட்லெர், ஸ்டாலின், முசோலினி என்று எந்த நேரத்திலும் போர்களை உருவாக்கி கொண்டே இருப்பார்கள். இவர்கள் மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிடுவார்கள் "

மோ.க.காந்தி " அம்மா ! இத்தகைய நாசங்களில் மக்கள் மிஞ்சுவார்களா ? நரக வேதனையில் தவிக்க மாட்டார்களா ???"

காளி " அன்பனே !! எனது அன்பு கோலத்தினை நீ அறியமாட்டாயா !!!!! இத்தகைய துன்ப நிலையிலும் உன்னை போன்ற தவ வலிமை பெற்ற பலரையும் நான் அனுப்பி வைப்பேன். ஆன்ம நிலையில் உன்னத நிலை அடைந்த வள்ளல் இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரம்ஹம்ஸர், அரவிந்தர், இரமண மகரிஷி என்ற எண்ணற்ற மகான்களையும் துன்பத்திலிருக்கும் மக்கள் இன்பமுற நல்வழிப்படுத்த அனுப்பி வைப்பேன். இது தவிர எனது மிக பிரியமான பக்தனான கவிஞன் காளிதாசனை மகாகவி பாரதி என்று பலர் மனக் கவலைகள் போக்க என் நினைவூட்ட பாடல்கள் பண்ண வைத்து மக்களில் நல் வழியின் மீது தீரா நம்பிக்கையுள்ளவர்களை நான் அரவணைப்பேன் "

மோ.க. காந்தி : " இந்த பணியில் எனக்கு உதவிட மற்ற கனங்களையும் அனுப்பலாமே தாயே !!! "

காளி " நிச்சயமாக ! உனக்கு வழிக்காட்டிட பா. திலகர், கோ. கோகலே. டால்ஸ்டாய், மற்றும் உன் பணியில் உதவிட ச.ரா. சாரி, கு.கா. ராஜ், வ.பட்டேல், வ.உ.சி, சு. போஸ், மு. தேவர் போன்றவர்களையும் அனுப்புவேன். உனக்குகூட இருந்தே எனது திருப்பணியை செய்ய மோ.ஜ.நேரு, மொ.அ. ஜின்னா என்ற இருவரும், உன் பெயர் சொல்லி என் களப் பணியை மக்களை மதத்தின் பெயரால் பிரித்து இரத்தக் களரி உருவாக்கி என்னை அனுதினமும் மக்கள் நொந்தே நினைக்கும்படி செய்வார்கள் "

மோ.க. காந்தி " அம்மா !!! எனக்கு இந்த தண்டனையிலிருந்து விடிவே கிடைகாதா ??? கேட்கவே என் மனது மிகவும் பதறுகிறதே "

காளி " என் பணியில் உன் மனது எப்பொழுதும் பதறக் கூடாது என்பதற்காகவே இந்த பயிற்சி. உனது முயற்சியால் பலவற்றையும் முயன்று தோற்ற பிறகு இனிமேல் முடியாது என்ற தருணத்தில் எனது முரட்டு பக்தன் ஒருவன் உன் பணியினால் வெறுப்படைந்து உன்னை என்னிடம் அனுப்பி வைப்பான் "

இப்படி பல வருடங்கள் இந்தியாவும் உலகமும் பல போர் மேகங்களையும் கண்டபின் முதலாம் உலகப் போர் முடிந்து இரண்டாம் உலகப் போர் நடக்கும் வேளையிலே காளிக்கு இந்த சூழ்நிலையில் வேகத்தை கூட்டலாம் என்று நினைத்தாள்.

காளி " பக்தனே !!! வா !!! உன் பணி ஆற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் நாடகத்தினை எப்பவும் இரசித்து கொண்டே இருந்தால் எப்படி ?? நீ போய் ஒரு நாடக கர்த்தவாகவே பிறந்து உன் கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டே இருந்து எனது பணியை எளிமையாக்கிவிட்டு வா !!!! ஊரில் ஒருத்தன் கூட ஒற்றுமையாய் இருக்கக் கூடாது புது புது காரணத்தை கண்டுபிடித்து பிரித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு ஏன் ? உனக்கு நான் தரப்போகும் பிள்ளைகளுக்கு கூட ஒற்றுமை வந்துவிடாதபடி மூட்டிவிட்டு கொண்டே இருக்க வேண்டும். நிதி பற்றாகுறையான குடும்பத்தில் உன்னை பிறக்க வைப்பேன். அதனால் உன் குடும்பத்தில் வரப் போகும் அனைவருக்கும் நிதி, செல்வம் என்றே பெயர் வைப்பாய். எவ்வளவு நிதி கண்டாலும் உனக்கு இந்த பிறவியில் திருப்தி வராது. அதனால் உனக்கு இந்த பிறவியில் மு.க. நிதி என்று அறியப்படுவாய்"



மு.க.நிதி : " அப்படியே ஆகட்டும் தாயே ! தங்கள் சித்தம் என் பாக்கியம் "

காளி : " முக்கியமான விஷயம் இந்த மோ.க.காந்தி மாதிரி என்ன படுத்த கூடாது. சதா சர்வ காலமும் என்னையே நினைச்சுகிட்டு என் வேலைய முழுசா செய்ய விடமாட்டேங்கறான். அழிக்கவே விடமாட்டேங்கிறான். அதனால நீ இப்ப போய் மோ.க. செய்யற எதையும் இந்த மு.க. செய்யகூடாது. அவன் கண் தெரியுற மாதிரி கண்ணாடி போட்டா நீ கண்ணே தெரியாத மாதிரி கருப்பு கண்ணாடி போட்டுக்க. இன்னம் கேட்டா நான் இல்லவே இல்லனு அடிச்ச சொல்லனும், கடவுளை நம்புறவன் முட்டாள்னு அங்க அங்க சிலை வைக்கனும். எப்படி வேணா வாழலாம், ஒழுக்கம் எல்லாம் வெறும் வெங்காயம்னு மக்கள் எல்லாரும் நடந்துகிற மாதிரி நீ வாழந்து காட்டனும். புரியுதா ? மோ.க. ஆத்திகத்தின் பெயரால் செய்த்ததை காட்டிலும் நீ நாத்திகத்தினால் நிலை நாட்ட வேண்டும்   "

மு.க. நிதி : " அய்யோ தாயே !!! உன்னை நினைக்காம இருக்க எப்படி என்னால முடியும். எனக்கு அப்படி ஒரு பிறவியே வேணாம் தாயே "

காளி : " டேய் உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா ???நீயும் ஒரு இறை தூதுவன் தான். முரண்களின் மொத்த உருவமா உன்னை உருவாக்கி என்னை பத்தி புரிஞ்ச்சிக்க ஒரு வாய்ப்பு தரப் போறேன். உனக்கு இரண்டு வழிக்காட்டிகளை தந்திருக்கேன் , ஈ.வெ.இரா. சாமி மற்றும் அ. துரைன்னு. இவங்க இரண்டு பேரும் "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் " என்கிற கலையை உனக்கு சொல்லிக் கொடுப்பாங்க. உனக்கு என் நினைப்பு வரும் போதெல்லாம் தோள் இருக்குற துண்டு கிழ விழுந்தத எடுக்கிறாப்ல கிழ தொட்டு கும்பிட்டுக்க. நீ போகாம உன்னோட குடும்பத்து பெண்கள என்னோட கோவில்ல உன் பெயருக்கு அர்ச்சனை பண்ண வை, போதும். நான் எல்லாம் பாத்துக்கறேன் "

மு.க. நிதி : "ஆத்தா !!! என் மேல உனக்கு என்ன கோவம் ஆத்தா ?? என்ன ஏன் இவ்வளவு பாவம் செய்ய சொல்ற ??? "

காளி : " இதெல்லாம் என் கலியுக விளையாட்டுடா !!!! நீ ஆட்சி செய்யுற பாத்துதான் மக்களுக்கு கடவுளா விட்டா வேற வழியில்ல என்கிற எண்ணத்த ஏற்படுத்துவ. இது நீ எனக்கு செய்யுற மாபெரும் தொண்டு. உன் ஆட்சியில தான் தெருவல்லாம் கூழ் வைப்பாங்க மைக் செட்டல்லாம் வைச்சு என் புகழ பாட்டாப் போட்டு கதறி கதறி அழுது என் அன்பை பெற முயற்சிப்பாங்க. உன் பாவத்தையெல்லாம் போக்க பல சாமியார்களையும் மகான்களையும் உன் வீட்டுகே வந்து உன் பாவங்கள போக்க வைப்பேன் "

மு.க. நிதி :  "அம்மா !!! இவ்வளத்தயும் நான் மட்டுமே செய்யனுமா ?? எனக்கு யாரும் உதவமாட்டங்களா ??? "

காளி: " பக்தனே ! நான் எப்பவாவது என் பக்தர்கள தன்னந்தனியே தத்தளிக்க விட்டிருக்கேனா. உன்னோட பணியை பரவலாக்க எல்லா இடங்களிலேயும் உன்னை முன்னோடியா கொண்டு இ.காந்தி, லா.யாதவ், ரா.காந்தி, சோ.காந்தி, ம.மோ. சிங், ச.பவார், ப.சி. தம்பரம், ஜெ.லலிதா, மு.யாதவ், தே.கவுடா, ந. ஷெரிப், ம. ராஜபக்சே னு பலப் பல ஊர்கள்ல பல பல பேர்கள்ல நான் அனுப்பிகிட்டே இருப்பேன். இன்னம் கேட்டனா மோ.க.காந்தியோட அனுப்பின இரண்டு பேர் ச.ரா. சாரி யும் கு.கா.ராஜும் நீ ஆட்சியில இருகிறதுக்கு உதவுவாங்க "

மு.க.நிதி : " அப்படியே ஆகட்டும் தாயே !!! நான் திரும்பி வரும் போது "கலி முத்திருச்சு தர்மம் செத்துருச்சு"னு புலம்ப வச்சு உன் ஆட்டத்தை எல்லோரும் காண துடிக்க வைச்சுட்டு வரேன் தாயே "

காளி : " டேய் ! முக்கியமா இந்த மோ.க.காந்தி என்ன அடிக்கடி "உண்ணாவிரதம்" இருக்கேன்னு என்ன படாத பாடு படுத்தறான்டா. நீ அப்படியெல்லாம் படுத்தக் கூடாது. அவன தினம் தினம் காப்பாத்தறதே பெரிய வேலையாப் போச்சு. நீ ஆட்சி பண்ணும் போது அண்டை நாட்டுல ஒரு பெரிய ஆட்டம் போடுவேன், உன்ன எல்லோரும் கன்னாபின்னா திட்டுவானுங்க. ஆனாலும் நீ எதுவுமே நடக்காத மாதிரி தலைமாட்டுல மனைவியையும் கால் மாட்டுல துணைவியையும் உட்கார வெச்சுகிட்டு கடற்கரையிலேயே ஃபேன் போட்டுகிட்டு காலைல உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவுல உண்ணாவிரதம் இருக்கணும். புரியுதா ! அப்பதான் உன் உடம்ப நிரந்திரமா புதைக்க கடற்கரையிலே இடம் தருவேன். "  

மு.க. நிதி : " அப்படியே செய்யறேன்மா !! நாம் எப்ப அங்கிருந்து கிளம்பனுமா ?? எனக்கு எப்படி தெரியும் ?? ""

காளி : " உனக்கு பல தடவ நாள் குறிப்பானுங்க. ஆனா என்னோட  அதி தீவிர பக்தர்கள் டொ.ட்ர்ம்ப், வி.புடின், ந. மோதி, ஷி. ஜின்பிங் எப்போ ஒண்ணா ஆட்சி செய்யறாங்களோ அப்ப உன் முடிவு நெருங்கிருச்சுன்னு தெரிஞ்ச்சுக்கோ. இவங்க தான் அணு உலை, ஹைட்ரோ கார்பன் எடுக்கறேன், மீத்தேன் எடுக்குறேன்னு பூமியில் ஒரு இடம் விடாம காட்ட அழிச்சு , மலையை கொடஞ்சு தண்ணிய கொட்டி , நாட்ட நகரமயமாக்கறேன்னு மொத்தமா இயற்கையா இருக்கிறத வேகமா அழிக்கிறேன்னு முயற்சிப்பாங்க. நம்ப தம்பிங்க நம்பள விட வேகம்னு தெரிஞ்சுகிட்டு ஒரு ஆடி மாசமா பாத்து ஆத்தா கிட்ட கிளம்பி வந்துடு"

மு.க. நிதி : " அப்பெடியே செஞ்சுடறேன் ஆத்தா !!"


மிக சமீபத்தில் ஆத்தா என்னை அழைத்து 

காளி : " டேய் ! சகிருட்டிஸ் இங்க நடந்ததெல்லாம் பாத்த இல்ல !! அப்படியே இதை நாட்டுல நடக்கிறதை பார்த்து மனசு உடைஞ்சு என் மேல் நம்பிக்கை இல்லாம போயிட்டு இருக்காங்க. இத துக்ளக்ல வர மாதிரி எழுதி சில அன்பர்களுக்காகவாவது எல்லாம் என் ஆட்டம்னு தெரிவிடா !!!!

சகிருட்டிஸ் : அம்மா !! இப்ப துக்ளக் உன் பக்கத்திலதான் இருக்கிறார். அவர் மனசாட்சி பதூதாதான் இப்ப பாத்துக்குறார். துக்ளகாவது சட்ட வல்லுனர் நியாயம் தர்மம் இதிகாசம் புராணம்லாம் எழுதுவார். இப்ப இருக்கிறவர் ஆடிட்டர் - எல்லாத்திலேயும் கணக்கு பாக்குகிறவர். இப்பதான் போன வாரத்திலே சர்ர்குலேஷன் அதிகமாகியிருக்குன்னு சந்தோஷப்பட்டார்.

துக்ளக் : எனக்கு முன்னாடியே தெரியும் எல்லா ஆத்தா விளையாட்டுன்னு. எனது முகமது பின் துக்ளக் நாடகத்திலேயே 1971ல் இத பத்தி எழுதியிருக்கேன்னு. மொரார்ஜி தேசாய் கிட்ட கூட இந்த எமர்ஜன்சிக்கெல்லாம் காரணம் ஆத்தாதான்னு விளக்கினேன். அதனாலதான் வாஜ்பாய் கூட இந்திரா காந்தி போக்ரான்ல் அணு குண்டு வெடிசப்போ "துர்கா" தேவின்னு பாராட்டினார். இந்த பையன் இயற்கை விவசாயத்த பத்தி எழுதினத நான் கூட 2016 ல துக்ளக்ல போட்டேன். கண்டன்ட (Content) பாத்தா 7-1/2 பக்க நாளேடு போடனும்கிறாப்ல இருக்கு.  எதுக்கும் பதூதாகிட்ட சொல்லிப் பாக்கிறேன். அவருக்கு ஏற்கனேவே ஏகப்பட்ட வேலை இதுல ரிசர்வ் வங்கி இயக்குனரா வேற ஆயிட்டார். அவரே கட்டுரையாளரா இருந்தப்போ எந்த போல்ட்(Bold) கன்டென்ட்ட(Content) பத்தியும் எழுதிடுவார். இப்ப அவரே ஆசிரியரானதால சிலர பத்தி எழுதறத தவிர்கிறார்ன்னு நினைக்கிறேன். 


அல்லாம் அவள் செயல்


9.8.18.

Translate

Contact Form

Name

Email *

Message *