Sunday, March 12, 2023

Male Not Needed ஆண்கள் தேவையில்லை

 


9. மார்ச் 2023 அன்று தமிழக முதல்வர் காணொளி வாயிலாக மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் மூலமாக பசுக் கன்றுகளை ( கிடாரி / பெண் கன்றுகள் ) மட்டுமே பிறக்கும் படி செய்யும் செயற்கை சினை ஊசி தயாரிக்கும் ஆராய்ச்சி கூடத்தை நீலகிரி மாவட்டத்தில் திறந்துள்ளதாக இந்த செய்தி இணைப்பு தெரிவிக்கிறது  https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/mar/10/tamil-nadus-first-sex-sorted-semen-lab-opened-in-nilgiris-2554693.html

இது நாள் வரை அநேக கிராமங்களில் மாடுகள் வைத்திருப்போர் கால்நடை மருத்துவரிடமோ அல்லது தனியார் பால் நிறுவனங்கள் வாயிலாக மாடுகளுக்கு சினை ஊசிப் போட்டு கருவூட்டல் நடத்தி வந்தனர். அதில் அந்த மாடுகளுக்கு காளை கன்றோ ( ஆண் கன்று ) அல்லது கிடாரி கன்றோ ( பெண் / பசுக் கன்று ) பிறந்து வந்தது.  இதில் மாடு வளர்ப்பவர்களுக்கு காளை கன்று பிறந்தால் அவற்றை இறைச்சிக்காக விற்று வந்தனர். ஆனால் நாள் நாளாக சில மாதங்கள் தங்கள் மாடு பால் கறக்க வேண்டும் என்பதற்காக அந்த காளை கன்றுக்கும் தீனிப் போட்டு பராமரிக்க வேண்டி வந்தது. பசுக் கன்று என்றால் சில வருடங்களில் வளர்ந்து அதுவும் ஒரு பசுவாகி அதற்கும் ஒரு ஊசி போட்டு தாயாக்கி பால் கறக்கின்றனர். 

இனிமேல் இந்த பசுக் கன்று ஊசி மட்டுமே போடப்பட்டு வந்தால் இன்னமும் சில வருடங்களில் நமது நாட்டில் காளை மாடுகள் என்ற ஆண் மாடுகளை நாம் கண்ணால் பார்க்க முடியாது அவை ஆராயச்சி நிலையங்களில் மட்டுமே வளர்க்கப்படும் அபூர்வ இனமாகிவிடும். 

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கூட கோவில்களில் முக்கியமாக சிவன் கோவில்களில் கோவில் மாடு என்று காளை மாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊருக்கு பொதுவாக வளர்க்கப்படு வந்தன. அந்த கோவில் காளைகள் ஒவ்வொரு விவசாயியும் வளர்க்கும் பசு மாடுகளுடன் இணைந்து சினை ஊட்டும். இதனால் அந்த காளை மாடுகள் கிராமத்தினரால் வணங்கப்பட்டு வருடாவருடம் தைப்பொங்கலின் போது அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன. 

விவசாயத்தில் படிப்படியாக இயந்திரங்கள் நுழைய தொடங்கியபின் வண்டி ஓட்ட, ஏர் ஓட்ட என்று எருதுகளாக்கப்பட்ட காளைகள் டிராக்டர் மற்ற வாகனங்கள் வர துவங்க கிராமத்தினருக்கு காளைகளின் தேவை குறைய ஆரம்பித்தது. அதுவும் பாரம்பரிய நெல் ரகங்கள் மாறி குட்டை ரக நெல் ரகங்கள் அறிமுகபடுத்திய பின் வைக்கோல் கிடைப்பது குறைய குறைய மாடுகளுக்கு தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டு காளை மாடுகள் பராமரிப்பது செலவாக பார்க்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் காளை மாடுகளை லேபில் வைத்து விந்தணுக்களை சேகரித்து அதில் பெண் கருவை மட்டும் உருவாக்கும் எக்ஃஸ் X  வகை க்ரோமோசோமகளை வைத்துக் கொண்டு ஆண் கருவை உருவாக்கும் Y வகை க்ரோமோசோமகளை அழித்து விட்டு அதன் மூலம் தயாரிக்கப்பட்ட சினை ஊசியை பசுமாட்டின் கருப்பையினுள் செலுத்திவிடுவர். 

ஆண் மாடுகளை இனிமேல் பார்ப்பதற்கு ஆராய்ச்சி கூடங்களுக்கு தான் செல்ல வேண்டும். இந்த திட்டத்தை இந்திய அரசாங்கம் மாநில அரசுகளின் மூலமாக நாடெங்கும் பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் மனிதர்களாகிய நாம் பார்க்க வேண்டியது மனிதர்களாகிய நமது மன நோயை :

விலங்குகள் அனைத்தும் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டது போல மாடுகளில் பெண் தான் வேண்டும், 
நாய்களில் ஆண் தான் வேண்டும், 
மரங்களில் காய்க்கும் பெண் மரம் தான் வேண்டும், 
யானைகளில் ஆண் யானைகள் தான் தந்ததிற்காக வேண்டும், 
மயில்களின் தோகைக்காக ஆண் மயில் தான் வேண்டும், 
மான்களின் கொம்புகளுக்காக ஆண் மான் தான் வேண்டும் 
என்று மனிதருக்கு எது பயன்படுகிறதோ அந்த வகை உயிரினம் மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகிறது.

விலங்குகளுக்கு இந்த உலகத்தில் தங்கள் விருப்பம் போல வாழ அனுமதி இருக்கிறதா ? விலங்குகள் ஏன் மனிதர்களிடம் தாங்கள் வாழ அனுமதி கேட்க வேண்டும் ?? மனிதர்கள் என்ன பூமியின் முதலாளிகளா ???

 காடுகளை எல்லாம் கொள்ளை அடித்து அழித்து இன்று பல காட்டு விலங்குகளும் வாழ இடமின்றி அவை முன்னாடி வாழ்ந்த காட்டு பகுதிகளை தேடி வரும் போது அவை நமது நகரத்திற்குள் வந்துவிட்டதாக கூப்பாடு எழுப்பி ஆர்பாட்டம் செய்வது. அவற்றை கொன்றழிப்பது என்று மனித விபரீதங்கள் மேலும் அவலங்களை விலங்குகளின் மீது கட்டவிழுத்து விடுகிறது.

மனிதரின் வக்கிர சிந்தனைகள் மற்றும் விபரீத முயற்சிகளால் மனித குழந்தைகள் பிறப்பதற்கும் செயற்கை கருவூட்டல் மூலம்  (பெண்களுக்கு சினை ஊசி )  தான் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் பிறக்கின்றன. 
பெண் கருப்பைகுள் ஊசி மூலம் கரு
மனிதர்கள் சினை ஊசி மூலம் பிறந்த மாடுகளிலிருந்து தான் பெரும்பான்மையாக பால் குடிக்கின்றனர், பல பால் பொருட்கள் தயிர், வெண்ணை, நெய், பாலாடை கட்டி, பால் கோவா பயன்படுத்துகின்றனர். இதனால் மாடுகளின் இயற்கைக்கு விரோதமான கருவூட்டலினால் பசுமாடுகளின் மன நிலையும் பாதித்து அவைகளிடம் பெறும் பொருட்களால் மனிதர்களின் மன நிலை, உடல் நிலை பாதிப்பும் சமுதாயம் அனுபவிக்க தொடங்கி விட்டது. 

பல சிறுவர்கள் ஆட்டிசம், மன வளர்ச்சி, மூளை வளர்ச்சி, வேகமான உடல் வளர்ச்சி என்று பல விதமான உடல் மன பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். உலகத்தில் அதிகமாக இளைஞர்களை உடைய நாடு என்று இந்தியாவை இன்று கூறினாலும் ஆனால் அந்த இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை. 

மனோதத்துவ ரீதியாக பசுவின் பொருட்களை மற்றெந்த விலங்குகளை காட்டிலும் மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் பசுவின் வாழ்க்கை தரம் குறைய குறைய மனிதர்களின் வாழ்க்கை தரமும் குறைந்து வருகிறது. மக்களின் மனநிலையில் ஒரு இயலாமை, தாழ்வு மனப்பான்மை, கோபம், வருத்தம் மிக ஆரம்பித்துவிட்டது. இதுவும் நாம் கட்டிப் போட்டு மாடுகளுக்கு செய்யும் கொடுமை மனிதர்கள் வாழ்வில் கொடும் குற்றங்களாக கூட வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. மனிதர்கள் மாடுகளை அவைகளின் இணையுடன் சேர அனுமதி மறுப்பதால், மனித ஆண்களும் பெண்களும் இணைந்து இந்த பூமி பந்தில் வாழ்வதில் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது.  

பல மனித ஆண்களால் பெண்களை கவரக் கூடிய தனமை குறைந்து அது வெறியாக மாறி பல ஊர்களிலும் பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த விபரீதம் இன்னமும் தீவிரமாகி சிலர் மிருகங்களை கூட வன்புணர்வு  செய்யும் அளவிற்கு மனிதனின் உடலும் மனதும் காளைக்கும் பசுவிற்கும் இயல்பாய் நடக்கும் இசைதலை தடுத்ததால் மனிதன் வாழ்க்கையும் மாடுகளின் வாழ்க்கையை போல் சீரழிந்து வருகிறது.
நாயை கற்பழித்த ஆளை தில்லியில் கைது செய்தனர்

விஞ்ஞானம் என்ற பெயரில் பின் விளைவுகளை நீண்ட கால நோக்கில் சிந்திக்க தெரியாத வருமானம் மட்டுமே கவனத்தில் கொண்ட விஞ்ஞானிகளும், அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் மாட்டையும் அதன் பாலையும் ஒரு இயந்திரத்தனமான வியாபரமாக பார்க்க பார்க்க மனித சமுதாயம் இனி படிப்படியாக மனிதர்களிலும் ஆண்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். குழந்தைகள் பெற விரும்பும் பெண்கள் எண்ணிக்கை குறையும்.

மனிதன் என்ற உயிரினத்தை ஏன் படைத்தோம் என்று இந்த பிரபஞ்சம் வெறுத்து போய் மனிதனை மனிதனை கொண்டே அழிக்க ஆரம்பித்துவிட்டது தான் இன்று மாடுகளின் பால் இனத்தை கொண்டு சினை ஊசி போடுவது வரை கொண்டு விட்டுள்ளது. 

இன்றைய மனிதருக்கு பால் தேவையே இல்லை. உண்மையாக பால் மனிதருக்கான உணவே இல்லை. பால் அருந்தும் கன்றுகள் பிறந்து சில வருடங்களிலேயே பருவத்திற்கு வந்து விடும். ஆனால் மனித உடலுக்கு பருவ நிலைக்கு வர 13 -16 வருடங்கள் தேவைப்படும். என்று சீமை பசுக்களை அறிமுகப்படுத்தி அவற்றுக்கு சினை ஊசி போட்டு பால் தயாரிக்க ஆரம்பித்தனரோ அன்றே மனிதரின் உடல் ஆரோக்கியம் சீர் குலைய தொடங்கி இன்று 8 வயது சிறுமி கூட பருவமெய்தும் சூழ்நிலை. பால் கறக்கும் இயந்திரங்களாக பசுவை கொடுமைபடுத்த ஆரம்பித்தலிருந்து மனிதனின் பேரழிவு தொடங்கிவிட்டது.

பாலை காட்டிலும் அதிகம் சுண்ணாம்பு சத்து முருங்கை இலைகளிலும் கேழ்வரகிலும் உள்ளது.  இதுவும் தவிர பாலுக்கு மாற்றாக தேங்காயிலிருந்து எடுக்கப்படும் பால், பாதாம் பருப்பிலிருந்து பால், சோயாவிலிருந்து பால் விற்பனைக்கு வந்துவிட்டது. 

புவி  வெப்பமயமாதலில் மாடுகளின் பங்கு :

மாடுகள் பாலுக்காக மட்டும் அல்லாமல் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் பல இலட்சம் ஹெக்டேர்கள் நிலப் பரப்பு இது போல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்காக பயன்படுத்தபடுகிறது. இதனால் ஒரு கிலோ இறைச்சி உற்பத்தி செய்ய பயிர்கள் உற்பத்தி செய்வதைவிட பல மடங்கு அதிக இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மனிதர்களின் உணவு தேவைக்கு போதுமான நிலங்கள் இல்லாத சூழ்நிலைக்கு பலரும் பட்டினியால் வாட நேருகிறது. இந்த பூமி பத்தாது என்று நிலவுக்கு போகலாமா ? செவ்வாய்க்கு போகலாமா ? என்று வீண் ஆராய்ச்சியை உலகம் செய்து கொண்டிருக்கிறது. அனைவரும் தாவர உணவு உண்டால் இந்த பூமி இன்னமும் 7 மடங்கு மக்கள் தொகை உயர்ந்தாலும் உணவளிக்க தயாராக இருக்கிறது.

மாடுகள், ஆடுகள், கோழிகள் என்று அனைத்து உயிரினங்களும் அவரவர் விருப்பப்படி காடுகளில் சுதந்திரமாக மனிதர்களின் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ நாம் அனுமதித்தால் மட்டுமே மனிதர்களும் இந்த பூமியில் வாழ இடம் இருக்கும். அதை விடுத்து மாட்டின் இன சேர்க்கையை நாம் கையில் எடுத்துக் கொண்டால் மாடுகளின் இயல்பான இணை தேடும் இணையும் அனுபவங்களை மனிதன் தடுத்தால், மனிதர்கள் வாழ்விலும் ஆண் பெண் இணைந்து வாழக் கூடிய வாழ்க்கை உலகத்தில் முடிவிற்கு வந்துவிடும்.

விலங்குகளுக்கு மனிதனின் விலங்கிலிருந்து விடுதலை வேண்டும்.


உலகம் ஆண்களில்லாமல் ஆனந்த பூஞ்சோலையாக மாறுமா ??
சதாசர்வகாலமும் ஏதாவது ஒரு நாட்டில் புகுந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு , போர் செய்து பல உயிர்களையும் கொன்று குவித்து வரும் மனித ஆண்களை கண்டு பிரபஞ்சத்திற்கும் அச்சம் வந்துவிட்டதா ??? அதனால் மனிதர்களை தேவையில்லாமல் இயற்கையோடு விளையாட வைத்து இந்த அழிக்கும் நாடகத்தை தொடங்கிவிட்டதோ ???

 தமக்கு தாமே ஆப்பு வைத்துக் கொள்ளும், கொல்லும் கலையை மனிதன் கைவிட வேண்டும். அதைவிடுத்து மாடுகளின் கர்ப பைக்குள் கையை விடக் கூடாது.




துணை கேள்விகள் :

1. தமிழ்நாட்டில் தான் இந்தியாவில் மிக அதிகமாக சிவனுக்கு கோவில்கள் உள்ளன. அதில் பல கோவில்களிலும் மாதம் இருமுறை பிரதோஷ நாளன்று சிவன் ஏறும் வாகனமாக கருதப்படும் காளைக்கு (நந்திக்கு ) பல விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன. "அன்பே சிவம்" என்று திருமூலர் சித்தரின் வாக்கின்படி சிவனையும் நந்தியையும் வணங்கும் சிவன் அடியார்கள் ஒவ்வொரு சிவன் கோவிலிலும் ஜீவன் உள்ள ஒரு காளை மாட்டையாவது ஆரோக்கியமாக வைத்து பராமரிக்கிறார்களா ???

2. ஜல்லிக்கட்டு காளைக்காக 2017ம் வருடம் மிகவும் பிரபலமாக போராட்டம் எல்லாம் நடந்தது.  அத்தகைய காளைகளை அவர்களின் இணை தேவை எழும் போது ஏதாவது பசுவிடம் செல்ல அனுமதிக்கிறார்களா ?? காளைகளின் காய் அடித்து ( ஒரு கொடூரமான விந்து அடக்கும் முறை ) அதற்கு பருவ எழுச்சி ஏற்படாமல் செய்வது சரியா ?? இந்த கொடுமை இப்போது தெருக்களில் வாழும் நாய்கள் வரை தொடரப்பட்டு பல ஊர்களில் ஆண் நாய்களின் விதை பைகளை கருத்தடை செய்கிறேன் என்று நீக்கிவிடுகிறார்கள்.

3. வாடிய பயிர்களை கண்டு வாடிய வள்ளலார் வாழ்ந்த வாழ்கின்ற நாட்டில் வாழ நமக்கு தகுதி இருக்கிறதா ??


சகிருட்டிஸ் மார்ச் 2023
sakritease March 2023

2 comments:

  1. Manidhargal sindhanai maravendum.
    Kadavul than thunainpurita vendum

    ReplyDelete
  2. பசுவைப் புனிதமாகக் கருதும் நாட்டில் இவை நடப்பது மிகவும் வருந்தத்தக்கது

    ReplyDelete

Translate

Contact Form

Name

Email *

Message *