Monday, November 21, 2022

Meenambakkam Airport in to a Agri Land




மீனம்பாக்கத்தில் மீன் பிடிக்கலாமா??

 சமீபத்தில் சென்னையில் விமான நிலையம் விரிவாக்க பணியாக ஒரு புதிய பசுமை விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் கிராமத்தில் உள்ள 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய மாநில அரசு அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இந்த புது விமான நிலையம் அமைய பெற்றால் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள், 1000 ஏக்கரில் உள்ள நீர் நிலைகள் காணாமல் போய் விடும் என்று செய்திகள் கூறுகின்றன.

https://www.dtnext.in/city/2022/10/09/parandur-airport-to-gobble-up-1000-acres-of-waterbodies-farmers

பரந்தூரை சுற்றியுள்ள நீர் நிலைகள்

இன்று சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையமும் மிக பெரிய நீர் ஆதாரமாக இருந்திருக்கிறது. அதன் அருகே இன்றும் இருக்கும் மலையான திருநீர் மலையின் பெயரே -நமது முன்னோர்கள் இங்கிருந்த நீர் நிலையை மிக புனிதமாக வழிப்பட்டு வந்ததால் திரு நீர் மலை என்று மிக புனிதமாக, வைணவ தலங்களில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றி வழிபட்டு வந்துள்ளது தெரிகிறது.

காலம் காலமாக வளர்ச்சி என்ற பெயரில் நீர் நிலைகளையும் வயல்களையும் கான்கீரிட் காடுகளாக்கி இன்று பசுமைக்காக "ஒருவர் ஒரு மரமாவது" நட வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் முக்கால்வாசி பேருந்து நிலையங்கள் ஏரிகளில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய சட்டமன்ற தொகுதியில் ஒன்றான வேளச்சேரி கடல் மட்டத்திற்கும் கீழ் நிலையில் இருந்த ஒரு மிகப் பெரிய ஏரியாகும். இதனால் மழை பெய்தவுடன் தண்ணீரின் இயல்பு படி பள்ளமான இடத்திற்கு ஓடி வந்து விடுகின்றன


மன்னர்களின் ஆட்சியில் ஆறுகளை, ஓடைகள், கால்வாய்கள், கண்மாய்கள் என்று நீர் ஆதாரங்களை பொக்கிஷமாக பாதுகாத்து இன்று வரை சில இடங்களில் இருக்கின்றன. தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசரான இராஜ இராஜ சோழன் என்ற பேரரசரையும் நாம் ஒரு நதியின் பெயரால் ஆறின் மைந்தனாக "பொன்னியின் செல்வனாக"வே போற்றுகின்றோம். 
பொன்னி நதியால் காப்பாற்றப்பட்ட செல்வன்
பொன்னி நதியை காப்பாற்றிய அரசன்


நாம் நமது முன்னோர்களின் பெருமையிலேயே வாழ்ந்து வருகிறோம். ஆனால் நமது பின்னோர்கள் நம்மை அப்படி நினைத்து பெருமைபடும்படி வாழ்கிறோமா ?????????????

மக்களாட்சி என்ற பெயரில், குடிமராமத்து என்று ஊர் கூடி ஏரிகளை பராமரித்து வந்த உன்னத பழகத்தை தொலைத்து விட்டு, 100 நாள் வேலை என்ற பெயரில் பெயருக்கு ஏரிகளை புறம் போக்காக்கும் வேலை மட்டுமே செய்கிறோம்.  

1960 கள் வரை சென்னையின் மிகப் பிரபலமான கூவம் ஆற்றில் இறங்கி குளித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் அந்த ஆறு ஆந்திராவின் எல்லை வரை தெளிவாகவும் சென்னையில் ஒரு சாக்க்டை கால்வாய் ஆகவும் மாற்றியுள்ளோம். 

நமக்கு கையாளவே தெரியாத நீர் ஆதாரத்தை புதியதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். 

பரந்தூர் நீர் நிலைகளை அகற்றுவதற்கு முன்னால் மீனம்பாக்கத்தில் இயங்கும் விமான நிலையத்தை மீண்டும் ஒரு பெரிய ஏரியாகவோ வயல் வெளிகளாகவோ நம்மால் மாற்ற முடியுமா ??

நிலாவிற்கும் செவ்வாய்க்கும் ராக்கெட் விடும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது என்று மார் தட்டும் நாம், ஒரே ஒரு மலையை ஆவது உருவாக்கியிருக்கிறோமா ???? 

குப்பைகளை தான் மலை போல் குவித்துள்ளோம். மலைகளை எல்லாம் உடைத்து ஜல்லி கற்களாக மாற்றி கான் கீரிட் காடுகளை மட்டுமே உருவாக்கிவிட்டு இன்று பருவ நிலை மாற்றம், அதற்கு என்ன செய்யலாம் என்று உலகத் தலைவர்கள் எல்லாம் வருடா வருடம் எங்காவது சந்தித்து ஒரு ஒப்பாரி வைத்துவிட்டு கலைகிறார்கள்.

பருவ நிலை மாற்றத்தால் சென்னையே முழுகும் என்று அபாய மணியும் இவர்களே தான் அடிக்கிறார்கள். அழியப் போகும் நகரத்தில் மக்கள் தொகையை கூட்ட வேண்டுமா ?? குறைக்க வேண்டுமா ???




மேற்கத்திய நாடுகளுக்கு என்ன துணிகளை தயாரிக்க தெரியாதா ??? கார்களை உற்பத்தி பண்ண முடியாதா ?? முட்டைகள் தயாரிக்க தெரியாதா ??
 ஐரோப்பியர்கள் ஏன் இதனை எல்லாம் மூன்றாம் தர நாடுகள் என்று கூறி நம்மை செய்ய சொல்கிறார்கள் ??? அவர்கள் நாடுகளில் நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சுற்று சூழலை மாசுபடுத்தும் தொழில்களை விட்டுவிலகி வருகிறார்கள். 
( மறை நீரை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள் https://www.vikatan.com/literature/environment/159071-virtual-water-tracking-the-unseen-water-in-goods-and-resources )

அவர்கள் தின்பதை பார்த்து பிட்சாவையும் பர்கரையும் முழுங்கும் நாம், ஜீன்ஸ்களை கிழித்து கொண்டு அலையும் நாம், அவர்கள் நாட்டில் ஓடும் மெரிசிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யு, ஆடி என்று கார்களை வாங்கி வெட்டி ஜம்பம் அடிக்கும் நாம், அவர்களை போல் நீர் நிலைகளை சுத்தமாக பராமரிப்பதை எப்பொழுது கற்றுக் கொள்ள போகிறோம்??

நமது இன்றைய அவசர , அவசிய தேவை என்ன ? கடல் உள் புக வாய்ப்பிருக்கும் நகரத்தில் குவியாமல், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நமது குடிமக்களை பரவலாக குடியமர்த்துவது தான். தமிழகத்திற்கு 700 கிமீ கடற்கரை இருக்கிறது. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் எல்லாம் உள் நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

இப்பொழுதைய முக்கிய தேவை கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே. மக்கள் அனைவரும் அவரவர் பூர்விக கிராமங்களை நோக்கி திரும்பி செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். 

List of Districts of Tamil Nadu

#DistrictArea (km²)Population (2011)Density (/km²)
1Ariyalur1,9407,54,894389
2Chennai17546,46,73226553
3Coimbatore4,73234,58,045731
4Cuddalore3,70326,05,914704
5Dharmapuri4,49715,06,843335
6Dindigul6,03621,59,775358
7Erode5,76022,51,744391
8Kancheepuram4,48339,98,252892
9Kanniyakumari1,68418,70,3741111
10Karur2,90410,64,493367
11Krishnagiri5,12918,79,809367
12Madurai3,71030,38,252819
13Nagapattinam2,56916,16,450629
14Namakkal3,42017,26,601505
15Perambalur1,7565,65,223322
16Pudukkottai4,64416,18,345348
17Ramanathapuram4,10413,53,445330
18Salem5,23734,82,056665
19Sivaganga4,23313,39,101316
20Thanjavur3,41124,05,890705
21The Nilgiris2,5657,35,394287
22Theni2,86812,45,899434
23Thiruvallur3,39437,28,1041098
24Thiruvarur2,27412,64,277556
25Thoothukkudi4,74517,50,176369
26Tiruchirappalli4,50927,22,290604
27Tirunelveli6,69330,77,233460
28Tiruppur5,18724,79,052478
29Tiruvannamalai6,18824,64,875398
30Vellore6,07539,36,331648
31Viluppuram7,19434,58,873481
32Virudhunagar4,24119,42,288458

மேலே இருக்கும் பட்டியலில் மக்க்ள் தொகை கணகெடுப்பு 2011ல் எடுத்ததாக தெரிகிறது. அதனால் 11 வருடங்கள் தாண்டிய நிலையில் 2022 இன்று பல மடங்கு கூடியிருக்கிறது.

இதில் சென்னை மாவட்டம் தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் இருக்கும் ஒரு சிறு மாவட்டம். மக்கள் தொகை அடர்த்தி சென்னையில் 26553. ஒரு சதுர கிமீட்டரில் மக்கள் மூச்சு முட்ட வசிக்கின்றனர்.  ஆனால் மாநிலத்தின் நடுபகுதியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை அடர்த்தியோ வெறும் 322 நபர்கள் மட்டுமே. 

புதியதாக விமான நிலையம் கட்டிதான் தீருவேன் என்றால் நீராதாரங்கள் குறைவாக உள்ள , மக்கள் தொகை அடர்த்தியும் குறைவாக உள்ள பெரம்பலூர் அல்லது திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் விவசாயத்திற்கோ நீர் நிலைகளோ இல்லாத வறண்ட பகுதியில் கட்டி அந்த பகுதியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் அங்கு மக்கள் தொகை படரும், சென்னையில் சுவாசிக்க கொஞ்சம் காற்று வரும்.

மேற்கத்தியரை போல் புத்திசாலி தனமாக யோசித்தால் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகே இருக்கும் பெங்களுரூ விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக நன்றாக வளர்ந்துவிட்டது. அதை நாம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களால் உருவாக்கவே முடியாத கப்பல் போக்குவரத்து துறைமுகம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. 

இதுவும் தவிர இப்பொழுது பல வேலைகளும் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய வழிமறை வளர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு வீட்டிலிருந்து செய்யும் வேலையை கிராமத்தில் ஒரு வீட்டிலி இருந்தும் செய்யலாம். இதற்கு தமிழ்நாட்டில் தென் காசியில் இருந்தும் இயங்கும் ஜோஹோ நிறுவனம்ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பரந்தூரில் ஏன் விமான நிலையம் தேவையில்லை என்று திரு. தேவசகாயம் அய்யா அவர்களின் கட்டூரையையும் படித்துப் பாருங்களேன்.

சகிருட்டிஸ்
Sakritease Nov 2022



Monday, November 14, 2022

Butler India Pak strokes emotions

 


One more good thing happened to the cricket crazy nation - Only 85,000 die hard cricket fans watched the T20 Cricket  world Cup 2022 Final on TV. Many didnt  know what the COOK was cooking but everyone could see what a BUTLER and his men could deliver on plate in the semi finals and the Finals.

Already many cricket pundits have asked for the heads to roll on for the defeat of India in semi finals and Pakistan in Final.

The failure of Indian cricket team to win a world cup for a long time is mainly due to the high pressure hype created by the Marketing machinery of the cricket administration. Media wanted to stroke the nationality passion of the fans and capitalise on the selling their products by catching the eye balls.

TV Channels always makes India Vs Pakistan Men cricket matches as wars between two nations. Stroking nationalism in sports is causing causalities on sportsmanship.

Yes, Cricket is one zing thing that connects the nation in one thread but let us not over stretch it. 

Today's Cricket analysts - ex-cricketers like Sunil Gavaskar or Virendra Sehwag are criticizing the attitude and choking nature of present cricketers. But gentlemen, look at your back, Gavaskar failed in 1987 world cup semi finals, Sehwag failed to win for the nation in 2003 Final. Only in 1983, 2007- the then Captains could inspire and were not expected to win the tournament and so they could win. In 2011, it had many controversies and conspiracy theories surrounding the win.  

We as a nation, are putting our bets on making hero worships and expecting One man to demolish the entire opposition like a Rajinikanth Movie.  It is easy for Neeraj Chopra to win the first Medal and it will be too difficult the 2nd one as the sponsors start lining up thier doors and money showering makes the athlete come under intense pressure and scrutiny which many human minds will not be able to sustain.

The consistent teams, who could win repeated tournaments or matches are because of collective brilliance and contributions by many players. Hero worship culture, could only make few billionaires like Tendulkar , Kohli etc....who could own ferrari cars, private jets. It is time we stop this madness. 
Sports fundamental priority is for physical and mental health. The England team could win the Title as they had 11 batsmen and 7 bowlers, whereas Indian team always dependent on Individual brilliance.

Many had wondered what could have been a Indian team, had not the English Butcher Mountbatten split the country in to two. Sachin to Pound and Wasim Akram to impound, Kohli on meat and Shaheen Afridi to mat. May be we can even  our dream to add Rashid Khan and Shakib ul Hasan as Indian spinners to choke the middle overs. Had not been Mountbatten, Indian Cricket Team would have been a Mount to be beaten, that too by a team of Butler, rather a defining moment under the Rishi Sunak governance, who has a Indo-Pak roots but Only in England he could win.



Now T20 is over it is time for G20 and Mr. Modi is travelling to attend in Bali, the Only Hindu state in a Muslim Country, Indonesia, Today.

Sakritease 2022
சகிருட்டிஸ் 2022






Wednesday, September 28, 2022

Nammazhwar Bhraman by deed

 நம்மாழ்வார் பிராமணரே

தமிழ்நாட்டில் ஜாதிகளை பற்றிய புரிதலில்
இந்த தலைப்பை பற்றி கேள்வி எழலாம்.

அதுவும் சமீபத்தில் எம்.பி. திரு. ஆ.ராசா, இந்துக்களின் பிறப்பையும் அவர்களை பெற்ற தாய்களின் கற்பு நிலையையும் இந்துக்களின் வேதங்களையும் அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்கள்.

இவரது இந்த பேச்சு ஒன்றும் புதிதல்ல. இது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் பிரித்தாளும் தத்துவத்தின் படி தங்கள் மனம் போன போக்கில் சமஸ்கிருதத்தில் (வடமொழியில் ) உள்ள வாக்கியங்களை இங்கிருக்கும் சாதி கட்டமைப்பில் பிளவுகளை உருவாக்க பயன்படுத்தியது. 

இதில் யார் பிராம்மணர் ? யார் விலை மாந்தர் ? என்ற  விளக்கம் இன்றைய சூழலில் தேவைப்படுகிறது.

வர்ண ஆசிரம தத்துவத்தின் படி நாலு வர்ணங்கள் அதில் பிராம்மண, சத்திரிய,வைஸ்ய மற்றும் சூத்திர ஆகும். இதில் அடிப்படை அஸ்திவாரம் சூத்திர என்பது தான். உடல் உழைப்பால் சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பவர்.  அனைவரும் பிறப்பால் சூத்திரரே.
ஆனால் பிராமணராகவோ, சத்திரியராகவோ, வைஸ்யவராகவோ ஒருவரின் செயல்களாலேயே அறியப்பட்டனர்.

தனக்கென அடுத்த வேளை உணவை கூட சேமித்துக் கொள்ளாமல் பிரபஞ்ச நன்மையை கருத்தில் கொண்டு தவம், தியானம், அனைவருக்கும் பொது நன்மைகளை உத்தேசித்து  வாழ்ந்து காட்டி வழிக் காட்டுபவர்கள் பிராம்மணர்கள்.  இந்த பிராம்மண என்ற நிலையை பிறப்பினால் அல்ல வாழும் தவ ஒழிங்கினாலேயே அடைய முடியும். 


அனைத்து பிரபஞ்ச தன்மைகளின் விவரிப்பதே வேதம் என்று அறியப்படுகிறது. இதில் பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களும் எவ்வாறு தோன்றி மறைகின்றன என்பதை "அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்" என்ற தத்துவத்தின் படி தவத்திலே இருந்து உணர்ந்து பலருக்கும் தெரியப்படுத்த ஒரு ஒலி ஒழுங்கை கொண்டு விவரித்தனர். 

இதில் பிறப்பால் ராஜ குலத்தில் பிறந்தாலும், அந்த அரச சொகுசு வாழ்க்கை என்று அனைத்தையும் துறந்த பின்னர், தன் தவ மேன்மையால் பிரபஞ்ச பேராற்றலை நுணுக்கமாக சில சொற்களின் ஒலி அமைப்பை கொண்டு "காயத்ரி மந்திரம்" என்ற சொற்றொடரை மூலம் விவரித்தவர் "விசுவாமித்ர" ( பிரபஞ்ச நண்பன் என்பது பொருள் ) என்ற முனிவர் சத்திரியினாக இருந்து பிராம்மணராக தன்னை தகவமைத்து கொள்ள முடியும் என்று வழிக் காட்டுகிறார். 

இதற்கு எதிர்மாறாக பிராம்மணராக வாழ்ந்த தந்தைக்கே பிறந்திருந்தாலும் பிறன் பொருட்களை, பெண்களை கவர தனது கவனத்தை தவ வலிமையை இழந்த இராவணரை அசுரர் என்கிறார் - வேடுவராக வாழ்ந்த பின் தவ பயன்களால் பிராம்மணராக மாறிய "ராமாயணம்" என்ற காவியத்தை தொகுத்த வான்மீகி என்ற முனிவர்.

 இதையே மீனவ பெண்ணின் மகனாக பிறந்து "மகாபாரதம்" என்ற உயர்ந்த காவியத்தை தொகுத்த "வியாசர்" என்ற பிராம்மணர் ஆமோதிக்கிறார்.

இது எதோ பழைய காலத்து கதை என்று ஒதுக்கி தள்ளப் போனாலும், இன்றைய கால கட்டத்தில், பிராம்மணர்களாக வாழ முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.  அதற்கு மிக கடினமாக அந்தக் கால பிராம்மணர்களாக போல் உழைக்க வேண்டும். இன்று பிறப்பால் பிராம்மண என்று அறியப்படுகிற பலரும் அவர்கள் தேர்தெடுத்த பொருள், சுகம் சேர்க்கும் முறையால் சத்திரிய, வைசிய, சூத்திர வழியினராக இருக்கின்றனர். இந்த இடத்தில் முக்கியமாக உணர வேண்டியது இதில் எந்த முறையும் யாரும் பின்பற்றலாம் அதில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்பதே.

நம்மிடையே மிக சமீபத்தில் வாழ்ந்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா, தனக்கோ தன் எதிர்கால சந்ததிக்கோ சொத்துக்களை சேர்க்காமல் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாக இயற்கையுடன் ஓன்றி வாழ வேண்டும் என்பதனை தனது உடலைவிட்டு நீங்கும் வரை வாழ்ந்து காட்டிய நம்மாழ்வார் ஒரு பிராம்மணரே. எண்ணற்றே இளைஞர்கள் இன்று நஞ்சில்லா விவசாயம் செய்ய வயலில் இறங்கியுள்ளார்கள் என்பதே அவர் சமூகத்தில் செய்த உண்மையான பசுமை புரட்சி.

எந்த அரசியல்வாதியும் போல் கும்பல் சேர்த்து ஆர்பாட்டமும் இல்லாமல் மக்களை தன் அன்பால் அயராது உழைப்பால் ஈர்த்து தனக்கென வாழாமல் உலக நன்மைக்காக வாழ்ந்ததால் மக்கள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அய்யா ஒரு பிராம்மணரே.

உலகமே வியந்து பாராட்டும் தன் சொத்துகள் அனைத்தையும் விற்றும் மேலும் உழைப்பினால் வரும் வருமானத்தையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு உதவ வாழ்ந்து வரும் "பாலம்" திரு.கலியாண சுந்தரம் அய்யா அவர்களும் பிராம்மணரே.

இன்னமும் எண்ணற்ற கோவில்களில் எண்ணை விட்டு விளக்கேற்ற கூட மிகவும் சிரமப்படுகிற நிலையில் இருந்தாலும் அரசாங்கமும் ஊரும் ஆதரிக்காமல் போனாலும் தன் கடமைக்காக இன்னமும் ஏழ்மை நிலையிலும் உலக நன்மைக்காக வாழும் குருக்கள்கள், பூசாரிகள் போன்றவர்களும் பிராம்மணர்களே. 

வரும் காலங்களில் தான் பலவழிகளில் சேர்த்துள்ள சொத்துகளையெல்லாம் மக்களின் நன்மைக்கே விட்டுவிட்டு தனக்கு தனது வாரிசுகளுக்கு என்று வாழாமல் அனைத்து உயிர்களிடத்தும் எந்நேரமும் அன்பு செய்தே வாழ்ந்து காட்டினால் திரு. ஆ.ராசா பிராமணராகலாம். 

இதில் "பஞ்சமர்" "பஞ்சமி" என்ற சொற்களும் செயல்களும் ஏன் வந்தன என்பதையும் பார்க்க வேண்டும். நாலு வர்ணத்தாருக்கும் எப்படி வாழ்வது என்ற நியதிகளை வகுத்த இந்த பூமியின் ஆதிவாசிகள், இதில் எந்தவிதிகளுக்கும் எனக்கு வாழ உடன்பாடில்லை என்பவரை கட்டாயப்படுத்தாமல் மற்றவர்களின் விதி முறைகளுக்குள்ளும் புகாமல் அமைதியுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். நாளடைவில் இந்த விலகலும் இடைவெளியும் அதிகரித்துள்ளது.  பஞ்சம - என்ற வடமொழி சொல்லுக்கு ஐந்தாவது என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள். 

இன்றும் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் "ஜார்வா" என்ற காட்டுவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகுள் நுழையும் எந்த அன்னியரையும் அவர்கள் அம்பு எய்தி கொன்று விடுகிறார்கள். அவர்கள் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதை நாம் நமது வாழ்க்கை முறையே சிறந்தது என்றும், நாமே அவர்களை விட நாகரீகம் மிகுந்தவர்கள் என்று அவர்களுக்கு ஆடை உடுத்தி, கரும் பலகை பாடமெடுக்க ஆரம்பித்தால் அதைவிட அநாகரீகம் அபத்தம் வேறெதுவும் இல்லை.

மலைகளில் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்களின் அற்புதமான வாழ்வியலை உள்வாங்கி கொள்ளாமல் அவர்கள் ஏதோ நகரங்களில் வாழாதததால் மிக பின் தங்கிவிட்டவர்களாக பார்ப்பதே ஒரு மனநோய்.

 நல்ல தரமான மூங்கில் அரிசி சாப்பிடுபவரை மலையிலிருந்து இறக்கி பாலிஷ் செய்யப்பட்ட"ரேசன்" அரிசி சாப்பிட வைப்பது எப்படி ஆரோக்கியமாகும் ? மூலிகைகள் கொண்டே தன்னை குணப்படுத்தி கொள்ள கூடியவரை "ஊசி" குத்துவது அநாகரீகம்.

இங்கு ஒரு சிவிங்கி (சீத்தா) குட்டிகூட வாழ தகுதியாக இல்லாத கொன்று குவித்த "இந்தியா" நாகரீகமானதாகவும், இன்னமும் பல மிருகங்களும் சுதந்திரமாக வாழும் ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழும் நாடுகளில் தான் இன்னமும் சீத்தாகளும் விரும்பி வாழும் ஆப்பிரிக்க "நமிபியாவை" இருண்ட கண்டமாக பார்ப்பது அறிவின்மை.

நம்மாழ்வார் அய்யா எப்போதும் கூறுவது போல் "கரும்பலகை"யில் எழுதி கற்பிப்பது, ஆசிரியரை ஒரு மேடையில் ஏற்றியும் மாணவரை அதைவிட ஒரு படி கீழ் இறக்கி வைப்பது தான் நிஜமான ஏற்றத்தாழ்வு.  மரத்தினடியில் அனைவரும் சமமாக அமரச் செய்து தகவல் பகிர்தல் என்பது இரண்டு வழி பாதையாகும். 


"விபச்சாரி" யார் ??

ஓரு ஆணை விட அதிகமான ஆணுடன் உறவு கொள்பவர் என்ற நிலை பெண்களின் கற்பு நிலையை இழிவுபடுத்தி அவர்களை திட்டவே எல்லா மொழிகளிலும் சொற்களை ஆணாதிக்க சமுதாயம் பயன்படுத்தி வருகிறது.

மகா கவி பாரதியார் இடியென இந்த கேள்வியை ஒரு நூறாண்டுக்கு முன்பே கேட்டார். யாராலும் உரிமை கோர முடியாத, ஒரு விலைக்காக உடல் இன்பத்தை தரக்கூடிய ஒருவரிடம் செல்லும் ஆணின் கற்பு நிலையை மட்டும் ஏன் விமர்சிப்பதில்லை ? விலை மகளிடம் செல்லும் ஆண்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்வதால் அத்தகைய ஆண்களும் "விபச்சாரன்" என்று ஏன் அழைப்பதில்லை ராஜா சார் ??? 

இந்த உலகத்தில் எல்லா மனித ஆண்களும் கற்பு நிலை பிழறாமல் வாழ்ந்தால் "விலை மாந்தர்"கள் என்ற உடலை விற்கும் அவல நிலையை இல்லாமல் செய்துவிடலாம். இது தான் மிக முக்கியமான சமூக நீதியாகும்



தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகளில் இன்றளவும் நடத்தப்படுவது "தெருக்கூத்து" தான். அதிலும் மிக அதிகமாக அரங்கேற்றப்படுவது "மகாபாரதமும்" அதில் வரும் "பாஞ்சாலி"யின் சபதமும் ஆகும். ஐந்து நதிகள் ஓடும் ஒரு மாநிலத்தில் பிறந்த அந்த பெண்ணை, அதுவும் ஐந்து கணவர்களை மணந்த அந்த பெண்ணை "த்ரௌபதி அம்மனாக" "பாஞ்சாலி அம்மனாக" ஊர் காவல் தெய்வமாக இன்னமும் நமது நாட்டில் பல கிராமங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதே பஞ்சமரில் வரும் "பாஞ்ச்" (இந்தியில் ஐந்து)  பாஞ்சாலியிலும் வருகிறது.



அப்படிபட்ட ஒரு பெண்ணை "விபச்சாரி" என்று தூற்றாமல் அவரை பெண் தெய்வமாக வணங்கும் இந்து மதம் எங்காவது ஒரு தாயை விபச்சாரியாக கூறியுள்ளதா ?? இறைப்பணிக்கு தன்னை தானே அர்பணித்த "தேவர்களின் அடியாரை"யும் தேவாலயங்களில் தங்களை அர்பணித்த "கன்னியாஸ்திரி"களையும் தங்கள் உடல் இச்சைக்காக தவறாக வழி நடத்திய 
ஆண்கள், சக ஆண்களை தாயின் கற்பின் நிலையை வைத்து திட்டி வருவது "சமூக அநீதி" என்று வழக்குரைஞரான தாங்கள் ஏன் இன்னும் உணரவில்லை ????

ஒரு பெண்ணே ஆட்சி செய்ய துணிந்தாலும் அவரின் துணிகளில் ஒளிந்திருக்கும் ஒரு உடலாக பார்க்கும் எண்ணம் என்று மாறும் ? பொது ஊடகங்களை உங்களது தாயாரும் உங்கள் மனைவியும் உங்கள் மகளும் பார்க்கிறார்கள் என்ற அக்கறையுடன் கழக தம்பிகளுக்கு பாசறைகளில் பாடம் எடுக்க வேண்டிய பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்பதாக தமிழக மக்கள் உங்களை அனுப்பியுள்ளார்கள்.

 "காத்து வாக்கில இரண்டு காதல்" சமீபத்தில் ஒரு படம் வந்திருக்கு. நீங்க விளம்பரத்துல கூட பார்த்திருக்கலாம். அதில் விஜய் சேதுபதி நடிக்கும் பாத்திரத்தை பார்த்து சம்ந்தாவும் நயந்தாரவும் நடிக்கும் பாத்திரங்கள் "ஐ லவ் யூ " என்பார்கள் அதற்கு அவர் ஒரு பதில் தான் சொல்லறார் "ஐ லவ் யூ டூ ". "நானும் உங்களை விரும்புகிறேன் " "நான் உங்கள் இருவரையும் விரும்புகிறேன் " என்று இரு பொருள் பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது.




நீங்கள் இந்துக்களின் வேதங்களை படித்ததெல்லாம் ஆங்கிலேயர்கள் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறதாக வேலைக்கு அமர்த்திய சம்ஸ்கிருதத்தை மூல மொழி இலக்கணங்களை புரியாமல் மொழி பெயர்த்தவைகளை தான். தனது மனம் போன முறையில் "TOO" விற்கும் "TWO" விற்கும் இருக்கும் ஒரே உச்சரிப்பை வைத்து இரண்டு பெண்களை ஏமாற்றும் சொல் வித்தைகளாகும். 

https://www.youtube.com/watch?v=MJmxdlCtFWU

நம்மாழ்வார் போற்றும் ஆண்டாளின் ஆளுமையை அன்பை, பரவசத்தை, அவரை "திருப்பாவை"யாக பார்த்ததால் தான் தமிழகத்தின் அரசின் சின்னமாக நம்மையும் அந்த அன்னை ஆள்கிறார்.


சகிருட்டிஸ் செப்2022

SAKRITEASE SEP 2022


Friday, September 16, 2022

The Everyday Embryonic Awakener

 MS 106

துயில் எழுப்பும் தூய  ஆழ்வார் 




Climbing up that sacred hills along the eastern ghats of that peninsular India in the serene month of Marghazi ( Mid December to Mid January ), a soul awakens every aspiring living being from its embryonic slumber in the chill weather of December, with a penetrating voice.

இதமான மார்கழி மாத குளிரில் இந்திய தீப கர்ப்பத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அந்த புனித மலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் ஊடுருவி எழுப்பி விடும், ஒரு தெய்விக குரல் .


Why does the Lord Vishnu need a awakener on Earth everyday ? is the Lord, who is the declared protector of all beings, needs to be awakened ? is the Lord so sluggish, sleepy character always in slumber ?

மகாவிஷ்ணுவை பூமியில் தினமும் எழுப்ப ஒருவர் தேவையா ?? அனைவரையும் காத்து ரட்சிக்கும் இறைவனை தினமும் எழுப்ப வேண்டுமா ? கடவுள் என்ன எப்போதும் உறங்கி கொண்டிருக்கும் சோம்பேறியா ?? 

Everyday trillions of lives have to spring up to life form and the universe decided to send one of its awakener on earth, who like the Saint Narada ( aptly This sage also acted as Saint Narada in one of the cult classics ) is on duty 24 x 7 x 365. 

ஓவ்வொரு நாளும் பல்லாயிர கோடி உயிரினங்கள் ஆழ் உறக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு வர பிரபஞ்சம் ஒரு  துயில் எழுப்ப நாரதர் போன்ற ஒருவரை 24 மணி நேரம் பணியாற்ற அனுப்பியது.     ( இவர் ஒரு திரைப்படத்தில் நாரதராகவே நடித்தார் என்பதும் இவரின் தனிச்சிறப்பு )

Who is this Vishnu ?  why he is in a reclining pose on the curled serpent ?

யார இந்த விஷ்ணு ? ஏன் இவர் சுருண்ட பாம்பின் மீது படுத்திருக்கிறார் ??

One question many of us would have wondered. When a river completely dries up bone dry and after it rains and water flows, fishes start jumping and swimming in the water. Can the fish survive without water ?  A fully grown up fish may not be able to survive but fish's egg can be in slumber in a ready to hatch from embryonic state whenever a drop of water falls on it.

ஒரு கேள்வி நம்மில் பலருக்கும் வந்திருக்கும்.  முற்றிலும் வறண்டு போன ஒரு நதியில் மழை பெய்து தண்ணீர் ஓட தொடங்கிய பின் மீன்கள் எங்கிருந்து வந்து துள்ளி குதிக்கின்றன??. தண்ணீர் இல்லாமல் மீன்களால் வாழ முடியுமா ?? முழுதும் வளர்ந்த மீனால் வாழ முடியாமல் போகலாம் ஆனால் மீனின் முட்டைகள் ஆழந்த உறக்கத்தில் பல நாட்கள் அடுத்த மழை துளி மேலே படும் வரை இருக்க முடிகிறது.

Vishnu, is a state, which is always ready to hatch as a life being. A seed which is always ready to germinate.

விஷ்ணு, என்பது ஒரு நிலை, அது எந்த நேரத்திலும் உறக்க நிலையிலிருந்து உயிர்தெழும் தன்மைக்கு வரக் கூடியது. எந்த நிலையிலும் முளைக்க தயாராக இருக்கும் விதையின் நிலை.

So the sages, who composed various hymns to describe the variety of aspects of Nature, the universe, had described the ready to hatch state as Vishnu. For a commoner to understand , they tried to bring to describe it with tangible forms, which a human can relate to in a Human like form. Fish, according to Puranas, is the first form or avatar of Vishnu and the second is a tortoise and on. Even in Narasimha avatar, when Prahalada was asked, where is the Vishnu ? He replies that One which is always ready to come to life in any form in any place.

இயற்கையின் பேராற்றலை விளக்கிய ஞானிகள், விஷ்ணு என்பது எப்பொழுதும் உயிர்தெழ தயார் நிலையாக விளக்குகின்றனர். பாமர மக்களும் இந்த தன்மையை தத்துவத்தை புரிந்து கொள்ள அது மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மனித உருவத்தை வைத்தே விளக்கியுள்ளனர். விஷ்ணு , முதன் முதலாக மீனாகத்தான் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு ஆமை மற்றும் பிற உருவ அமைப்புகளிலும் பிறப்பெடுத்தாக கூறுகின்றன. நரசிம்ம அவதாரத்தின் போது பக்தன் பிரகலாதனை அவன் தந்தை "நாராயணன் எங்கே?" என்று கேட்டவுடன், பிரகலாதன் "அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று அந்த உயிர்ப்பு தன்மையின் தயார் நிலையை உணர்த்துவார். 

This is the reason that Venkatesa Suprabhatam is recited every day in the morning. Why MS ? 

இதனாலேயே வெங்கடேச சுபரபாதம் தினமும் காலையில் ஒலிக்க பெறுகிறது. ஆனால் அதனை திருமதி எம் எஸ் அம்மா அவர்களின் குரலில் மட்டுமே ஏன் ஒலிக்க பெறுகிறது ???

A great musician, is aptly described as "Gaana amrutha varshi" - the one who pours out the music like the rain droplets. When the rain falls, it is natural, the fish will hatch. Anyone who have heard "Katrinile varum geetham" would definitely vouch to see Lord Krishna in every aspect of our lives.

வான் மழையை போல் இசை மழையை பொழியக் கூடியவரை " கான அம்ருத வர்ஷி" என்று குறிப்பிடுவர். மழை பெய்ததும் மீன்கள் முட்டையிலிருந்து உயிர்தெழ ஆரம்பிக்கும். அம்மா அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" பாடலை பாடக் கேட்பவர்கள் கண்ணனை தமது வாழ்வில் உணரத் தொடங்கிவிடுவர்.

More so, in her name, M stands for Madurai, where the ruling Lord is Meenakshi - meaning "Rule of the fish " or the "fish eyed god".

இதுவும் தவிர எம் எஸ் என்ற எழுத்தில் எம் என்பது மதுரையை குறிக்கும், எங்கு அந்த பேராற்றலை -"மீனாட்சி" என்று வணங்கப்படுகிறதோ - "மீனின் ஆட்சி " "மீனை போன்ற கண்களை உடைய" என்ற பொருள்பட வணங்கப்படும் ஊரில் பிறந்தவர்.

The Universe has chosen to send this, Gaana Gandharva ( Celestial Musician ), on this day to awaken 106 years ago, trillions of vishnus, to life and enable the Earth to be a better place to live in.

இந்த பூமியில் பல்லாயிர கோடி உயிர்கள் - விஷ்ணுக்கள் உயிர்தெழ, 106 வருடங்களுக்கு முன்பு இந்த தேவலோக கந்தர்வ காந்த இசைக் கலைஞரை இந்த பூமி, பலரும் வாழ தகுதியான இடமாக மாற்ற பிரபஞ்சம் அனுப்பியது.

This Ratna of Bharath, played the role of Sakuntala, once again in that role too, a fish takes away her ring and had to rear her son, The Bharath, which this nation was named after. This soul, is the true essence of this great nation, brand ambassador of this universe.

இந்த பாரதத்தின் உயர்ந்த இரத்தினம், ஒருமுறை சகுந்தலையாகவும் நடித்தார். அந்த பாத்திரத்திற்கும் அவரது மீன் தொடர்பு இருந்தது. அந்த சகுந்தலையின் மகனான பரதனின் பெயராலேயே இந்த பூமி "பாரத" என்ற அழைக்கப்பட்டது.


Till the last file having that Suprabatham in any remotest server on earth, vishnus will be awakened by this voice forever.
உலகத்தில் ஏதொவொரு இணையத்தில் சுப்ரபாதம் என்ற ஒலி நகல் இயக்கப்படும் வரை இவருடைய குரலினால் பல விஷ்ணூக்கள் உயிர்தெழுந்து கொண்டே இருப்பார்கள்.

In the land of doubters, universe gave hopes to lives in the voice of divinity. 
இறைமை என்னும் இயறகை பேராற்றலின் மீது நம்பிக்கை இல்லாமல் தத்தளித்த பல உயிர்களுக்கும் நம்பிக்கை ஊட்ட பிரபஞ்சம் இந்த குரலிசைஞரை அனுப்பியது.

Still if there are doubters of existence, see the tiny seeds of a Banyan tree, which can show the Vishwa Roopam of Vishnu, with the extent of spread of the Banyan Tree.
இதற்கு மேலும் இயற்கை பேராற்றலின், இறைவனின் முழுத் தோற்றத்தை ( விஸ்வரூபத்தை) காண விழைபவர்கள் ஆல மரத்தின் பழத்தில் இருக்கும் ஒரு விதைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் "விஷ்ணூ" என்ற ஆலமரத்தின் அகன்ட விரிந்த தன்மையை கண்டு களியுங்கள். 

அந்த மலையை அப்பனாக நினைத்து "மலையப்பா" என்று அழையுங்கள், அதனை தாங்கியிருக்கும் அந்த மாடு மேய்க்கும் கறுத்த சிறுவனின் சுண்டு விரலும் கண்ணிற்கு புலப்படும், வண்டாக அவன் துளைத்த மூங்கில் துளையின் வழியாக "காற்றினிலே வரும் கீதம் " உங்கள் காதுகளுக்கு கேட்கும். அதனை இயற்றிய கிருஷ்ண மூர்த்தியை (கல்கி ) போற்றும் உள் மனம்.


Sakritease 16 Sep 2022
சகிருட்டிஸ் 16 செப் 2022




Saturday, September 10, 2022

Netaji Statue can end a Raj Path

 


A Pose of Bose can dispose even a Might in a Night

On 8th Sep 2022 when the PM Mr. Modi unveiled the Statue of Netaji Subash Chandra Bose at the India Gate in New Delhi and renamed the British Raj Path in to Kartavya Path ( Path of Responsibility & Duty ) , British Queen Elizabeth II decided to leave her mortal coil and could not carry innumerable wealth she and her ancestors annexed during their rein across the world.


In contrast, Mr. Subash Chandra Bose, who even left his family for the nation, is still being remembered even after 75 years of Indian Independence. The then PM of UK, Mr. Clement Atlee had openly acknowledged that the Britain was forced to free India from their clutches mainly due to the efforts of Netaji and his influence over Indian Officers and soldiers serving the British Indian Army. We were taught in schools and among literate elites that former UK PM Winston Churchill was a great visionary and a statesman and German chief Adolf Hitler as a Villain on Earth. Most of the European Nations built their countries' wealth mostly by annexing and looting other countries wealth. Winston Churchill even created artificial starvation in India by diverting the food grains produced in India to other British Colonies and Lakhs of Indians died in Bengal due to starvation.
( Please read this content to know more on Bengal Famine 1943 - https://en.wikipedia.org/wiki/Churchill%27s_Secret_War )

France, UK, Dutch, Portugal were not saints to call the Germany as the aggressor. It is the greediness of European race have caused lots of wars in different countries across the world and still raging. The harm, the fair skinned maniacs of the Atlantic coast have caused a worst blot on the evolution of human species on Earth. Whole of Europe (except Russia ) is not equivalent to the size of India or its population and diversity. Yet the European Union, could not function as one entity till now and UK is already out of it. Europeans have left huge scars in many countries across Asia, Africa, Australia, America.

 It is high time that, we humans, have to realize that imperialism should end to evolve as a peace loving beings on Earth. Though many would like to differ and argue, Europeans had to leave many countries post world war II, mainly due to their own monster Mr. Hitler & Co. hitting them with their own weapons.

Netaji Mr. Subash Chandra Bose didn't fight for getting any premier post for himself or his clan but for entire humanity against slavery.  He just used a snake ( Hitler ) and its venom to use it as an anti dote against the British ( another venomous snake ) to free from the clutches of imperialistic attitude and greediness.

It is now the Duty ( Kartavya - Sanskrit word ) of every human being to free every clutches including that on Animals and evolve a beautiful world where every being can live in bliss in this wonderful Planet. May the soul, which departed from the body which was heavily decorated with wealth and wearing blood stained clothes of the British Queen, realise the divinity to the fullest. 

sakritease
சகிருட்டிஸ்


Translate

Contact Form

Name

Email *

Message *