Wednesday, July 1, 2020

MGR Chennai to Tiruchy


எம்.ஜி .ஆர். இன் கனவை எடப்பாடியார் நிறைவேற்றுவாரா 


ஏன் தமிழ்நாட்டின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு  மாற்ற வேண்டும் ?

1980 களிலிருந்தே சென்னை நகரம் கடுமையான தண்ணீர்  பஞ்சத்தை சந்தித்து வருகிறது . அப்பொழுதே அன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன்  அவர்கள் தமிழ் நாட்டின்  வடக்கு கோடியிலிருந்து மாநிலத்தின் நடுவிற்கு தலைநகரத்தை கொண்ட செல்ல  நினைத்தார்.  அதற்கு அப்பொழுது பலர்  எதிர்ப்பு தெரிவித்தனர் .  ஆனால் அது ஒரு தீர்க்க தரிசனம் மிக்க முடிவு  என்று பல  நிகழ்வுகள் நிரூபிக்கின்றன .

அன்று  400 ச .கிமீ  பரப்பளவிலிருந்து 600 ச.கிமீ  அளவு விரிந்தாலும் தமிழ்நாட்டின் மிகச்  சிறிய மாவட்டமான சென்னையால் மக்கள் தொகை பெருக்கத்தை தன உள் கட்டமைப்பை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியவில்லை . அனைவரின் நன்மையையும் கருத்தில் கொண்டு  தமிழ்நாட்டின் மாவட்டங்களிலிருந்தும் ஒரே தூரத்தில் இருக்கக்கூடிய திருச்சி -துறையூர் - முசிறி நமது முன்னோர்கள் தலைநகரமாக ஆட்சி செய்த இந்த நகரங்களை  இணைத்து உருவாக்கினால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பரவலாக இருக்கும் . 

இன்றைய  சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் இருப்பவர்கள்  ஒவ்வொரு  அரசாங்க  வேலைக்கும் சென்னை நோக்கி வரவேண்டியுள்ளது.

  • 1980 முதல் கடுமையான தண்ணீர் தட்டுபாடு

  • 2004 சுனாமி பேராபத்து

  • 2015 வெள்ளத்தில்  தத்தளித்தது

  • 2020 கரோனா தொற்றில் முன்னிலை

  • மக்கள் அடர்த்தியில் சென்னை பிற மாவட்டங்களை விட 40 மடங்கு அதிகம்.

  • போர்க்காலங்களில் கடற்கரையோரத்தில் இருப்பதால் ஆபத்து
  •  
  • தமிழ்நாட்டின் வடக்கு கோடியில் இருப்பதால் தென் மாவட்ட மக்களின் அலைச்சல் அதிகம்



Is it not the right time to Shift the Tamil Nadu's Capital from Chennai to Tiruchy ( Thiruchirappalli ) ????

Chennai has been stressed :
  1.  Due to acute water scarcity from 1980s
  2.  Affected by Tsunami 2004
  3.  Could not handle the severity of floods in 2015
  4.  Now facing the heat in COVID 19 infection
  5.  Population density of Chennai district is 40 times more than any other district.
  6. During any war, being at the coast is not safe
  7. Chennai is located at Northern most corner of Tamilnadu. People from south are facing lot of troubles in travelling.
  8. Due to CORONA several Lakhs of people have applied for e-pass with the government to move to other parts of the State.

Translate

Contact Form

Name

Email *

Message *