எம்.ஜி .ஆர். இன் கனவை எடப்பாடியார் நிறைவேற்றுவாரா
ஏன் தமிழ்நாட்டின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் ?
1980 களிலிருந்தே சென்னை நகரம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது . அப்பொழுதே அன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தமிழ் நாட்டின் வடக்கு கோடியிலிருந்து மாநிலத்தின் நடுவிற்கு தலைநகரத்தை கொண்ட செல்ல நினைத்தார். அதற்கு அப்பொழுது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் அது ஒரு தீர்க்க தரிசனம் மிக்க முடிவு என்று பல நிகழ்வுகள் நிரூபிக்கின்றன .
அன்று 400 ச .கிமீ பரப்பளவிலிருந்து 600 ச.கிமீ அளவு விரிந்தாலும் தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டமான சென்னையால் மக்கள் தொகை பெருக்கத்தை தன உள் கட்டமைப்பை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியவில்லை . அனைவரின் நன்மையையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் மாவட்டங்களிலிருந்தும் ஒரே தூரத்தில் இருக்கக்கூடிய திருச்சி -துறையூர் - முசிறி நமது முன்னோர்கள் தலைநகரமாக ஆட்சி செய்த இந்த நகரங்களை இணைத்து உருவாக்கினால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பரவலாக இருக்கும் .
இன்றைய சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் ஒவ்வொரு அரசாங்க வேலைக்கும் சென்னை நோக்கி வரவேண்டியுள்ளது.
- 1980 முதல் கடுமையான தண்ணீர் தட்டுபாடு
- 2004 சுனாமி பேராபத்து
- 2015 வெள்ளத்தில் தத்தளித்தது
- 2020 கரோனா தொற்றில் முன்னிலை
- மக்கள் அடர்த்தியில் சென்னை பிற மாவட்டங்களை விட 40 மடங்கு அதிகம்.
- போர்க்காலங்களில் கடற்கரையோரத்தில் இருப்பதால் ஆபத்து
- தமிழ்நாட்டின் வடக்கு கோடியில் இருப்பதால் தென் மாவட்ட மக்களின் அலைச்சல் அதிகம்
Is it not the right time to Shift the Tamil Nadu's Capital from Chennai to Tiruchy ( Thiruchirappalli ) ????
Chennai has been stressed :
- Due to acute water scarcity from 1980s
- Affected by Tsunami 2004
- Could not handle the severity of floods in 2015
- Now facing the heat in COVID 19 infection
- Population density of Chennai district is 40 times more than any other district.
- During any war, being at the coast is not safe
- Chennai is located at Northern most corner of Tamilnadu. People from south are facing lot of troubles in travelling.
- Due to CORONA several Lakhs of people have applied for e-pass with the government to move to other parts of the State.