Sunday, August 18, 2019

athivarathar

அத்திவரதர் aththivarathar
aththi varathar க்கான பட முடிவு

வரதா வரதா உன்னை பார்க்க 
வரதா வேண்டாமா என்று
எண்ணும் அளவிற்கு
எண்ண முடியாத கூட்டம்

கச்சி ஏகம்பனையும்
காஞ்சி காமாட்சியையும்
40 வருடங்களாக தரிசித்தவர்
உன்னை 48 நாட்களில் 
காண ஒடி வந்துவிட்டனரோ!!!! 

ஆயர்பாடியிலிருந்து கண்ணன்
வந்திருந்தால் அவன் குழலில் ஊத
காற்றே இருந்திருக்காது 
இராமன் வந்திருந்தால் 
அவன் வில்லே முறிந்திருக்கும்
கயிலையின் நாயகன் வந்திருந்தால்
அவன் கங்கை தொலைந்திருப்பாள்
பிறையை காணாது வையமே இருண்டிருக்கும் 
சூரியன் வந்திருந்தால் அவன்
குதிரைகளின் கால்கள் தளர்ந்திருக்கும் 

நாக்கே தள்ளிடினும் 
உன்மீது நம்பிக்கை 
உந்தி தள்ளியதால்
நாலு இலட்சம் பேர்
நாள்தோறும் வந்தனரே
aththi varathar க்கான பட முடிவு
கறுத்த சிறுவனை 
சுமந்த சுந்தரியும் 
நின் கருத்த திருமேனிகாண
நிற்க துணிந்ததால் 
படுத்தவனை காணாமல் 
நின்றவனை காண விழைந்தோம்

நீள் நெடுந் தெருவில்
நீண்ட வரிசையில் 
நண்டும் சிண்டும்
நடை தளர்தாலும்
நரை விழந்தாலும்
நாராயணனை
நம்பியவர் பலரும் 
நடுநிசி தாண்டிடினும்
நாற்பதாண்டுக்கு பிறகு
நொடிக்காவது காண
நெடுமாலும் காத்திருந்தாரே

aththi varathar க்கான பட முடிவு

அத்தி வரதரே
அபய வரதரே
இருண்ட சாலையில்
இருள் கவிழ்ந்தபோதும் 
அருள் ஒளிப்பாய்ச்சி
அருமை உணர்த்திய 
அண்ணலே இனி 
அத்திமரம் தோறும் 
அருட் தோற்றம் தெரிய
அருள்வீர் நரன் தொழும்
நாரணா.

காத்திருந்தோரை வழிநடத்திய காவலரும் 
காலில்லோதோருக்கும் தாங்கி தரிசிக்க 
தூக்கிய காவல்தெய்வங்களே போற்றி
இரவு பகல் துஞ்சாது பெருமாளின் அருளை அள்ளி வழங்கிய அந்தணர் அனைவரும் குவிந்த மனிதரால் குவிந்த 
குப்பைகள் நீக்கி பலபல பணியில் ஆற்றிய பலரையும் குவிந்த கரங்களால்
எடப்பாடியார் முதல் இடுப்பொடிய 
பாடுபட்டு பரந்தாமனை காண வழிசெய்த அனைவரையும் வணங்குவோம் .


Translate

Contact Form

Name

Email *

Message *