Search This SAKRITEASE Blog

Saturday, May 29, 2021

Xi Lanka

சீ ஸ்ரீ லங்கா

Xi Sri Lanka



லங்கையின் பாராளுமன்றத்தில் 25 மே 2021 கொழும்பு துறைமுக நகரத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்து இங்கு எந்த நாட்டு நாணயத்திலும் வியாபாரம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்ட சட்டத்தை வோட்டெடுப்பின் மூலம் சட்டம் செயலாக்கம் பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(https://www.seatrade-maritime.com/ports-logistics/sri-lanka-passes-controversial-port-city-bill )

ற்கனவே இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு அந்த நாடு இலங்கைக்கு வழங்கிய அமெரிக்க டாலர் 1.2 பில்லியன் கடனை திருப்பி அடைக்க முடியாமல் போனதால் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டதாக 2018 ல் அறிவிக்கபட்டது.

 https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html

ப்போது கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதர மண்டலமும் மற்ற நாடுகளிடம் இலங்கையின் தேசியத்தை அடகு வைத்துவிட்டதாக இலங்கையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பரவலாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ந்தியாவிற்கும் சீனாவிற்கும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டுமே இருந்து வந்த போர் மேக பதட்ட சூழ்நிலை இப்பொழுது இந்தியாவின் தெற்கு பகுதிக்கும் நீண்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே சீனா இந்திய பர்மா எல்லை வரை, பூடானின் எல்லையில் கிராமங்கள் அமைத்தும் மற்றும் கரோனா கிருமிகளை இந்தியாவில் பரவ செய்து இந்திய பொருளாதாரத்தை நலிவுற செய்தல் என்று பலவிதங்ககளிலும் தொந்தரவு தந்துக் கொண்டே இருக்கிறது. 

லங்கையில் ஏற்கனவே பல ஆண்டுகள் நடந்த சிங்கள- தமிழர்கள் மோதல் பல்லாயிரக்காண மக்கள் மாண்டும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறிவிட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் ராஜபக்சே சகோதரர்கள் பல காரணங்களை காட்டி இம்சித்து வந்துள்ளனர். 

ந்த சூழ்நிலையில் நாட்டை,  இந்தியா முகாலயரிடமும் ஆங்கிலேயரிடமும் உள்நாட்டு பிரிவினைவாதிகளால் சிக்கியது போல், இலங்கையும் ஏற்கனவே ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு விடுதலை அடைந்திருந்தும் மீண்டும் உள்ளூர் ஊழல் அரசியல்வாதிகளின் சண்டைகளினால் சீனாவிடம் அடிமையாக்க தொடங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சிங்கார சீனன்

காகவி சுப்ரமணிய பாரதியார் " சிந்து நதியின் இசை" பாடலில் "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” "  என்று மிக தீர்க்க தரிசனுத்துடன் அன்றே பாடினார். 



அன்றே கட்டியிருந்தால் இலங்கை உள்னாட்டு போர் நடக்காமலே கூட இருந்திருக்கும்.  தமிழர்கள் கொத்து கொத்தாக அழிந்தும் அகதிகளாக புலம் பெயர்ந்தும் தவித்தனர். இன்னும் சில வருடங்களில் சீனாவின் ஆதிக்கம் பெருக பெருக சிங்களவரும் அகதிகளாக ஓட வேண்டியது தான். உலகத்தில் இன்னும் சில நாடுகளில் தான் புத்த மதம் பெயரளவிற்காகவவது இருக்கிறது.  புத்தரின் உண்மையான அன்பையும் அகிம்சையும் உணராமல் வெறுப்பை மட்டும் உமிழ்ந்த சிங்களவர் புத்தம் பிறந்த மண்ணிற்கே அகதிகளாக வரவேண்டிய சூழ்நிலையை மஹிந்த ராஜ்பக்சே சகோதரர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். 

விசித்திரமான உண்மை என்னவெனில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் இராஜ இராஜ சோழன், மஹிந்தன் என்ற சிங்கள அரசனை வென்றார். அந்த மஹிந்தன் மலைகளில் ஒளிந்துக் கொண்டதாக அன்றைய வரலாறு கூறுகிறது. அன்றும் புத்தர்களை மதம் மாற்றவோ அவர்களின் புத்த விஹாரங்களை இடித்தோ பெண்களை அவமான படுத்தும் எந்த சம்பவங்களும் சோழர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறவில்லை. சைவத்தை உண்மையாக நேசித்து பெரிய கோவில்கள் மக்கள் நலனிற்காக தந்தார்கள்.  ஆனால் இத்தகைய நற் பண்புகளை நாம் சீ ஜின்பிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. 



மாமல்லைக்கு வந்து கலைகளை கண்ட சீ இப்பொழது இந்தியாவிற்கு தொல்லை தர கொல்லை புறத்திற்கு வந்துள்ளார். சீன பேரரசு என்ற கனவுடன் வலம் தரும் சீனா போர் முரசை ஏற்கனவே இமயமலை திபெத்து எல்லையில் கொட்டிவிட்டது.  ஆனால் தன் உள்நாட்டு மக்களின் பெரும் வெறிப்பிறகு ஆளாகியிருக்கும் சீன அரசு மக்கள் அடக்குமுறையை மீறி வெடிக்கும் போது பல சிறிய நாடுகளாக சிதறும் வாய்ப்பு அதிகம். 


க்கள் எல்லாம் "சீ" என்று ஒதுக்கும் முன் "சீ" மனம் திருந்தி பல சிறு நாடுகளின் மீது செலுத்தி வரும் ஆதிக்கத்தை நிறுத்திக் கொண்டு உலக அமைதிக்கு தங்கள் பங்காற்ற வேண்டும். பண பலமும் ஆயுத பலமும் கொண்டு உலகாள துடிக்கும் சிலரும் ஒரு சிறு கிருமி அளவிற்கு கூட நமது பலத்தினால் பயனில்லை என்பதை இனியாவது உணரவேண்டும். சிங்களவரும் உண்மையான புத்த தன்மையை உணர்ந்து இயற்கையோடு ஒத்து வாழ பழக வேண்டும். 

தேவை மனமாற்றம். 

Wednesday, May 19, 2021

Rahuls of India


 If this Rahul is able to catch the imagination of the audience for atleast next 20 years, India & even world will be more peaceful place to live in. His singing with great devotion and the typical bhava ( expression with deep understanding of the lyrics ) is really soul stirring. He is just entering the adolescence, with a young boyish voice , he is able to understand the mood of the composer of songs in any language with utmost perfection to tie the soul of his listeners with his music.  If he is able to keep his passion towards music alive despite likely distraction of stardom & related addictions, he is likely to influence another generation to name the children as RAHUL. He will be a great ambassador for peace with Music.

Tons of inspiration, perspiration & determination this Rahul is able to give India in the last 25 years.  To a certain extent , Kapil Dev was the 1st one to shore up Indian dream of Sports as a profession & later gave a platform in Indian Cricket League (ICL ) for youngsters to be groomed, which later BCCI overshadowed with IPL. From KD, it was RD who has started shouldering the responsibility to grow youngsters. Dravid was the best motivator from non striker's end is the value even his famous over rated contemporaries could not match. Even in 2021 Rahul Dravid is busy training 500 odd coaches for training youngsters in every nook & corner of the cricket crazy nation. Right from his playing days to till now as the Head of National Cricket Academy, Every Rival Captain , Coaches & trainers acknowledge The Great Wall of India is becoming stronger & Making India Stronger. It is high time, political system absorb him in the political spectrum and use his training & administrative skills for the betterment of the Nation.  Rahul Dravid should not shy away from politics. The 1st step in acting as a angry man (in Credit card Ad ) has surprised many and he proclaims in the ad as " Indira Nagar ka gunda hoon mein " is probably a right qualification for a politician. 


Rahul Dravid is already a motivational speaker and he must get inspired from Rahul Gandhi, who could daringly speak on anything anywhere without any data on Hand. Rahul Gandhi could see Modi everywhere. From the clogged drains to the choking viruses he could see Modi's hand anywhere. He is actually become a PM Modi's Bhakt.  Modi's biggest boon is Mr. RG as the opposition leader. More He tantrums on the actions and inactions of  the Central Government, it gets a political mileage to NaMo. 

Rahul Gandhi's biggest contribution to Indian politics was putting efforts to bring RTI Act 2005. It could really bring out many bureaucratic corrupt practices to the public domain. Unfortunately his party's own government UPA II had to pay the price heavily with the list of charges through this act. He went on to become Rahul Chahar in bowling more googlys.
Rahul Gandhi is hitting the wrong lines and already his actions and messages are more helping India's arch rivals to file potshots at India. The speed at which 2nd wave Started spreading in India, no country can handle it easily , that too with huge population load India is having. Rahul Gandhi is fast losing the ground as he is busy accusing the ruling party for everything at the moment of serious crisis. Even if the Present Government is not able to handle it efficiently as alleged by him, the series of events strongly makes India becoming a victim of bio war for its over adventure towards Vaccine Diplomacy where it started exporting Vaccines to 75 odd countries. Whole world knows the cunningness of powerful pharmaceutical lobbies and their adverse reactions to loss of business. India paid a heavy price in the name of " Green Revolution" in 1960s by introducing pesticides in farming & decades later same companies come to sell anti cancer drugs.  Investing in diseases & reaping in the medicine has been the international pharmaceutical companies' modus operandi.

In 2024, if all the opposition parties and their masters still thinking of RG's face to could stop Modi Juggernaut,  it will be a sitting duck to score a Hatrick. For a democracy to win, the opposition has to be strong & healthy to give a healthy environment to evolve public conscience. Though Mamata of Bengal has given a hatrick of Victories,  making her as a common candidate will not be easier for other regional parties and get a pan India appeal. Same with TN's Stalin, Kerala's Vijayan, Odisha's Patnaik, Bihar's Nitish etc... Common person acceptable to all the  regional Kings may be their pet King Maker Mr. Prashant Kishor (PK ). Probably he can be made the Chair Person of the Congress Party as the Mother- son duo couldn't make a choice & 23 grumbling voices are echoing the walls for a change. It will be a real test for Mr. PK to lead from the front.  Then rope in all the khans of Bollywood to pitch in with their concerns about the safety of India. These can be a mega ghatbandhan, may be all of them can collectively pounce on that untameable bull with a 56" Chest. That will be a real Jallikattu 2024. Otherwise we have to a Import a Martian alien only. 



Unbearable summer heat & breaking news of repeated calamities to COVID's second wave, China's hegemony propelling WW3, only one person can bring real peace to the mind is world's 1st Rahul's Father, who went on to became Gautama Buddha. 




OMG !!! Xi Jinping getting headache on dreaming His Holiness Dalai Lama becoming the Head of Tibet. 



Oh Mind  !! Relax !! Stop watching TV , 
seeing web stories, reading news papers.
 
Just listen to " Pibare Rama Rasam" by Rahul Vellal 


Mohd. Rafi's " Sukh ke sab saathi"


KJ Yesudas's  " kaa karoon sajini "


Sakritease

Friday, May 14, 2021

Vacant Jeeyar Post

 

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாராயண ஜீயர் இடத்துக்கு தகுதியான நபர்கள் வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

கடந்த மே 6ஆம் தேதி, “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உட்பட்ட 51 ஆவது ஜீயர் இடம் காலியாக இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அறங்காவலர் வேணு ஸ்ரீனிவாசனும், இணை ஆணையரும் வெளியிட்டிருந்தார்கள்.

ராம பானம் என்னும் அமைப்பின் தலைவரும், ஸ்ரீரங்கம் கோயிலில் நடத்தப்படும் வைணவ சம்பிரதாய அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவருமான வழக்கறிஞர் திரு. ரங்கராஜ நரசிம்மன் தனது வீடியோ பதிவில் "பைபிள்" விற்ற திரு. வேணு ஸ்ரீனிவாசன் சட்டவிரோத அறங்காவலர் குழு தலைவராக இருந்துக் கொண்டு சமயத்திற்கு எதிராக செயல் படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். 

https://youtu.be/_6pmGDY5pp0

வேணு ஸ்ரீனிவாசன்  !!! உங்களுக்கு இதெல்லாம் வேணுமா ஸ்ரீனிவாசன் !!!!

ஏதோ "அப்பாச்சி" பைக் உற்பத்தி செய்றீங்கன்னு பாத்தா உங்க "அப்புச்சி" பரம்பரை சம்பாதித்த பெயர எல்லாம் எதை சம்பாதிக்கறதுக்கா இழக்கறீங்க ?? தமிழ்நாட்டிற்கே "நேரம் தவறாமை" என்ற சமயத்தின் நேரத்தை உணர்த்திய " திருக்குருங்குடி வெங்கரம் சுந்தரம் ஐயங்கார்" நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை எந்த மரத்தில் மோத இந்த வேகத்தில் பயணிக்கிறீர்கள் ? ஏற்கனவே ஒரு முன்னாள் அய்யங்கார் வாசுவும் இல்லாம யேசுவில்லாம மய்யமாய் போய் மண்டைய பிச்சுண்டு இருக்கிறார்.  "ராம்" என்று பெயர் வைத்த ஒரு முன்னாள் அய்யங்கார் "தி இந்து" என்றாலே வெறுக்கிறார். 

அரங்கனை வெறுத்து விட்டதாக அரங்கம் ஏறி முழங்கிய பின் எதுக்கு அறங்காவலர் பதவி ??? உங்கள் மனதிற்கு இதமான எந்த மார்கத்தில் வேண்டுமானால் செல்லுங்கள். நீங்கள் வழக்கமாக வேகமாக பைக் ஓட்டும் கிழக்கு கடற்கரை சாலை மார்கத்திலேயே சென்று மாலத்தீவிற்கு கூட சென்று விடுங்கள். ஆனால் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே உள்ள "திரு மாலின் தீவை" விட்டு செல்லுங்கள். 

மதம், மார்க்கம் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை விடுத்து அடுத்தவர் நம்பிக்கையில் இந்த இடத்தில் தென்கலை வைணவர்களின் மதத் தலைவர் நியமனத்திற்குள் மூக்கை நுழைப்பது வன்முறை. இது கலாச்சார, சம்பிரதாய, மரபை மீறும் வண்புணர்வாகும்.  புது ஜீயர் தேர்தெடுக்க வைண பெரியவர்கள் வைணவ ஆச்சார்யர்களின் பரி பூரண ஆசியுடன் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.  

சீர் அரங்கத்து பெருமாளை குண்டு கொண்டு துளைப்பேன் என்று முழங்கிய முத்தையாவெல்லாம் "கண்ணதாசன்" ஆகி "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை" எல்லாம் கட்டி தழுவியதை இந்த தமிழகம் கண்டுவிட்டது.

முத்துவேலரின் பேரர்கள் கூட இன்று அலகு குத்தி வேல் தூக்கி காவடி எடுக்க தயாராகிவிட்டார்கள்.

இப்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக் கூட காலியாக இருக்கிறது. இந்த பதவிக்கு திரு மோடி தலைமையிலும் செல்வி மமதா பானர்ஜி தலைமையிலும்  ஒரு குழு வைத்து தலைவரை தேர்தெடுத்தால் ஒத்து கொள்வார்களா ?

அதிமுக பொது செயலாளர் பதவி 4 ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஏன் திரு.முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து ஒருவரை தேர்தெடுக்கலாமா ?

"துக்ளக்" வார இதழ் ஆசிரியர் பதவி  4 ஆண்டுகளுக்கு முன் காலியானது.  நல்ல வேளை அதற்கு திரு. கீ. விரமணி & நக்கீரன் கோபால் தலைமையில் குழு அமைத்து அடுத்த ஆசிரியரை தேர்ந்தெடுக்காமல் விட்டீர்களே !!!  

கடவுளை நம்பாதவன் கடவுளின் வழிப்பாட்டு தலத்திற்கு வர வேண்டிய அவசியமென்ன ? மற்ற நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை குலைக்க முற்படுவது வன்முறைக்கே வழிவகுக்கும். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நாம் இந்த கரோனா பெருந்தொற்றில் சிக்கி தவிக்கின்றோம். அன்பை மட்டும் விதைப்போம். பண்போடு வாழ்வோம். 

இது சேர , சோழ, பாண்டி, பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்த உன்னத ஆன்மீக மண். அன்றைய அரசர்கள் ஆட்சியை அதிகாரமாக பார்க்காமல் அது தமக்கு இறை அளித்திட்ட இறைப்பணியாகவே பார்த்தனர்.  ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகத்தை இணைத்தே செய்தனர். ஆனால் மன்னராட்சியில் வழிப்பாட்டு தலங்கள் அரசாங்கத்தை சார்ந்தே இருந்தன மக்களாட்சியில் பல் வேறு மதங்கள் வந்து மதமாற்ற முயன்று வரும் சூழ்நிலையில் எல்லா மதங்களுக்கும் இருக்கும் சுதந்திரம் இந்து மதத்தினருக்கும் இருக்க் வேண்டும். இந்துக்களின் கோவில் இந்துக்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும்.

இசுலாமிய , கிறித்துவ மத வழிப்பாட்டு தலங்களை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் இருப்பது போல் இந்துக்களிடையேயும் சில வேற்றுமைகள் நிர்வகிப்பதில் எழவே செய்யும் ஆனாலும் இந்துக்களும் பொறுப்பாக நடக்க வேண்டும். 

சகிருட்டிஸ்

Monday, May 10, 2021

SAY no to allopathy

 With SAY No to Allopathy

Disclaimer : This article & views expressed are not for hurting any individual or organisation. Objective is to make the health care system more holistic and available for everyone easily irrespective of anyone’s economic status. Author have highest regards for all the Doctors, Nurses, technicians, sanitation workers who are braving all the odds to fight against the pandemic and many of them have lost their invaluable lives too.  With great empathy & to prevent further loss of life due to over workload placed on the frontline workers, this article aims put the things in the right perspective.

Today in this PANDEMIC situation our Health care system is severely stressed. Sudden unexpected surge of COVID 2nd wave have caused a really havoc.  Politicians are busy exploiting and blaming each other for the current hyper emergency situation.  But in reality this unprecedented calamity is due to undue dependence of Allopathy type of treatment.  More than the disease, it is the panic created by the system is causing more loss.  

The lifestyle and food habits have changed drastically and are resulting in most of the mental & physical diseases. The common people have been made to believe that whatever may be the disease only allopathy can cure the disease. For even a headache , everyone is made to believe only a tablet can cure the headache, whereas the root cause for the head ache is not analysed.  Even in villages many are eating tablets and taking injections for Sugar & BP.  Most of the common public have become sick psychologically. Without even an iota of thinking commoner believe they have to take medicine to cure any disease. In this scenario, for even a slightest cough or just above the normal temperature people are thronging the Hospital.

Most of us come across street dogs (wrongly called as stray dogs) & might have noticed some days they eat grass growing on the streets whenever they feel heavy with indigestion and they vomit the next day to clear their stomach & lead their regular life. The dogs are able to observe their environment and able to heal themselves without even consulting any doctor or going to hospital.  Human beings have also this natural intuition / conscience inbuilt in us, but most of us tend to ignore our internal call and we need a doctor to tell us that we are alright. Allopathy based today modern medical fraternity wants us to do whole body health check up to make us believe that there will be some symptoms which may lead to a major ailment. Keeping all of us in tenterhooks. Fundamentally what is being loaded in our mind is that we are all prone to diseases and modern medicine can only identify the diseases with their gadgets. 

Even Traditional Allopathy was not for prescribing medicines for every symptom. Earlier to World War II, in today’s standards, then Allopathy practitioners would have been considered as ultra conservative. They were also analyzing the patients’ by feeling their pulses with their fingers and diagnosed according to their intuition and experience. During the war time, there was a necessity to get the wounded soldiers back in to action by quickly eliminating the pain. So the soldiers were given heavy dosed medicines to eliminate the symptoms or external injuries only as it was a war field.

This 21st century is for fast food & fast relief. So whatever that were offered to soldiers are now being given to common public. A disease which takes time gradually to build up is being cured by cutting off the parts itself which is having pain. So definitely curing & long lasting methods arrived with thousands of years of experience from this land, Siddha & Ayurveda are now being called as alternative medicine & Allopathy as the main stream medicine. So the present situation is a Doctor practicing allopathy is considered as superior to other system of medicines’ practitioners because of instant symptoms removal. Most of the students struggle a lot to become a MBBS doctor whereas other system of medicines are looked down upon.  Even for the latest edition of Corona, there is no definite cure or medicine available in Allopathy. In Tamilnadu, Siddha Doctors have 100 % success rate in curing the patients ( Ref. : https://indianexpress.com/article/cities/chennai/siddha-therapy-in-focus-as-tamil-nadu-govt-authorises-use-in-covid-treatment-6497651/).

 Ayurveda has offered no of day to day solutions. Homeopathy is able to give significant solutions. Yoga offers a permanent protection system. Traditional Acupuncture & Mudras give simplest healing with great confidence to the patients without even giving any medicine.  Yet all the root cause analyzing methods are called as alternative system of medicines in India. 



Why? Allopathy practiced by the majority of the hospitals uses many electronic Gadgets to assist the Doctors to analyse the patients and give reports in volumes of papers, CDs, films etc…  The hospitals are spending millions of Rupees are purchasing all the electronic equipments. So their overhead cost increases and the hospital owners cannot be expected to run the hospital for philanthropy. The Return on Investment (ROI ) becomes the important criteria. So even if the patient requires a MRI or CT scan or not, Doctors are forced to prescribe most of the tests which are not necessary.  Engineering is only getting more sophisticated than the core medical arena.  Engineers are trying out do the human element in medical treatment by introducing more artificial intelligence elements.


Even Conscience keeping doctors have to hide their integrity towards the patient welfare. It puts lots of Allopathy doctors life under stress as they are not able to speak their mind. Even though they know that the patient on their table is quite stable and many not need any drugs, still they are forced to write for admission for observation and write for few unwanted medicines. We have to note that wherever any politician is interested in doing any business, the money spinning aspect is more. Many of the leading hospitals & medical colleges are either directly run by a Politician or his benami clan.

This makes a human being in a doctor or medical fraternity gradually die and they are forced to look at patients as mere numbers.  Hence most of the allopathy practising doctors are running holding on to tiger’s tail rather dragon’s tail. They are forced to catch up the speed of the dragon in making money otherwise the dragon will find out who are being dragged by its tail.  




Few allopathy Doctors have now started alerting on the exploitation in the name of allopathy, like Dr B. M Hegde (http://bmhegde.com/hegde/viewpage.php?page_id=8 ) (https://www.youtube.com/watch?v=HzTvEK1sVi0 ) ,

Dr. Fazlur Rahman MBBS DV MD PhD(Acu) (https://www.youtube.com/watch?v=vPbstGMt4Fw )

 

Present day Allopathy is treating human body as separate compartments as though each organ of the body operates independently. For e.g. when a patient is suffering from ulcer which has spread from stomach to mouth, a ENT physician treats only up to a portion ending with throat & area below the throat has to be handled by a Pulmonologist or a Gastroenterologist. They prescribe two different set of medicines for the same body. Simplest solution for the patient is to eat when he/ she is hungry. Same away when a baby is born a gynaecologist treats the mother only, with their patient (Mother) as priority & Paediatrician treats the baby as the priority, that too when whatever physiological & psychological changes on the mother is going to have effect on the Baby. Human body which functions as one unit, where head to toe are connected by several nerves, requires holistic healing including the mind.

 

This compartmentalization has made the healthcare system very expensive and unaffordable to the common man.  Health care expenses has become so frightening that you can see many help seeking ads in every social media for the young kids to elders suffering different ailments seeking aids from philanthropist.  The general situation is everyone is scared of living & afraid of health issues. So Allopathy centered health care system is not giving confidence to live & everyone is tuned to buy health insurance plan or seek government’s help to subsidize the insurance coverage. Every advertisement on the television states that Public is likely to fall sick if they do not buy their phenol or alcohol based chemicals.

Current Pandemic whether it has come naturally or as a biological war has stressed the health care systems’ breaking point. 


How many front line workers like Doctors, Nurses, and sanitation workers have died? Reason is the wrong priority placed over technological machines than on Human intuitions. Wrong priority for Allopathy based symptoms treatment.  What is now needed is the understanding is to treat the cause & not the symptoms.   India’s original system of health care was Siddha, Ayurveda & Yoga.  These systems went to the root & prescribed what to eat, when to eat, how to eat, where to eat, how much to eat. A sign of a good medical practitioner is that the they must be able to tell the cause by touching the pulse of the patient, watching the gait etc.. and try to cure them with confidence giving talks, bit of changing in food habits & lifestyle. In most of the cases patients’ minds plays the spoiler game. Mind which is invisible to any electronic gadgets so far, can be treated only by soothing talks and healing touches of the physician. Now today’s media outburst is of over reporting & creating panic in the minds. It is more of a mind game, where pharmaceutical companies want to exploit. The economy of health of the nation & Human beings is wrongly rooted now.

See the cost of producing , bringing and distributing oxygen cylinders & blame games between the politicians. Why do we need such a humongous infrastructure of buildings, equipments, transport network after bringing down naturally grown hills & forests ????

Right from child hood we have to enable children learn yoga.  Yoga postures are derived from the postures of the animals. All the siddhas, yogis, rishis were the scientists in today’s technical terms. They had researched on each & every herb, every sound, and every colour. They did the bio mimicry of every creature and analysed their life pattern. They collected the wisdom, compiled them in the form of hymns and stored in the clouds as that can be downloaded from the thin ether to the rightly tuned person at any point of time. Today’s science yet to reach that advancement so we are not able to believe it.  We were all living based on village economy which attained self-sufficiency to feed everyone  including the animals and all creatures to co-exist.

Every village of pre-colonisation era had a set of operating procedures to contain any pandemic. There were certain water tanks in the villages only suitable for drinking purposes.  They had set norms for bathing and dress code for that. They had collective responsibilities to clean the water bodies. These were taught with colour stories. Health of a society was collective and holistic. Every place of worship was the energy center to recharge the mind & soul which does not have a place in today’s name sake modern medicine. Today’s places of worship have become pleading centers for all the miseries faced by humanity.

We all will definitely overcome this pandemic situation with many causalities behind. But what we are going to build after this is the most important. Our priority should be for build more oxygen centers in the form of trees. Let us green all the hills, allow the rivers to flow, allow the forests to flourish, live in a self-sustained village with an open mind to observe the Nature and its pattern & live in sync with that.

This article is not to for discarding one system of medicine. Let us use Allopathy only during emergency like road accidents until we have high speed vehicles zipping past the highways.  Let us prioritize health & well being through natural way of living in sync with nature. Let us understand one fundamental thing that each body is different and environment, life style for each individual is different. Life in earth is a great opportunity for every being. So let us live & let other beings also to lead a happy life in this planet. 


Sakritease

Tuesday, May 4, 2021

None can stall in Mamata

 


None could STALL him from becoming the CM of TN this time. So Mr. MK Stalin is in.

The grand Indian festival of Assembly Elections to four states & one union territory culminated with the declaration of Results on 2nd May 2021.

It was a Sunday & Son's day, when a son who has remained a rising son of M.Karunanidhi for nearly 30 years has finally come near to the throne. Hopefully None can Stall the incoronation of Stalin except his own son. 

Though Ms. Mamata Banerjee, Mr. Pinarayai Vijayan, Mr. Sarbananda Sonowal &  Mr. V. Rangaswamy have also emerged victorious, for Stalin it is the maiden victory for assembly elections where he was fully in-charge from the word go. 

Dear Mr. Stalin, This is your hard fought out victory. You have undergone many physical & mental hardships to reach this level after years of efforts. Even when your father was not able to move physically, he ensured you were away from even your party's President post citing sibling rivalry. So this victory is lot more special to you. You have toured extensively to see the human gods in every bye lanes of Tamizh Nadu & your wife visited every lord forms in many temples of TN & cleared all the blocks in your way. 

So you must make the best use of this golden opportunity. DMK regimes has been infamous for many law bending activities in the past. Many notorious law offenders had been shielded from the law's natural flow of action. Even now your candidate & now MLA from Karur has openly stated in the campaign that as soon as you are sworn in, Kaveri's sand will be loaded in Lorries & tractors. So you have to work more hard to make your legislators allow the state to flourish with more greenery by abiding the law. In this huge country with 130 crores of Population hardly about few hundreds of people can only aspire to sit in the Chair of the Chief Minister. Even though you could become a Deputy CM a decade ago, time has made you to wait in front of a Nobody from ADMK to successfully complete their term even in the absence of their founding leaders & has become a strong opposition leader. 

Today's Tamizhans mind is fully engrossed with money and freebies.  People firmly believe nothing can move in Government without bribe or corrupt practices. Tamilians think that it is impossible for any politician to change this corrupt culture. So we are all desperate that some film hero who could at least change the SYSTEM in the films can do some magic in real life.  But one went to be a non-starter and other could not even win one seat. Here is a great opportunity right now in your hands to give us a transparent & efficient governance freeing the Government from all the accumulated debts, freeing the people from alcohol & other contra band addictions. It is not the Big Temple, which is standing tall for 1000 years echoing our great Tamil Culture, it is the great governance of Raja Raja Chozhan & Rajendra Chozhan & their purpose to establish righteousness still inspiring many more generations to come. Hope you can be a right inspiration too.

Kerala
Dear the Last Communist CM Mr. Pinarayi Vijayan in India, Congratulations on reversing a decades long trend of alternating between UDF & LDF. You are now the ONLY LEFT over CM from Communists parties. Though highly literate ( Not educated) Keralite proudly calls the state as God's own Country but prefer to toil hard in the hells at the Middle East Arab countries facing severe humiliation as they could not live with dignity in the naturally made heaven. The hermitage of Ayyappan can be alive as long as the thick forest which allows the Tigers to be alive.  Now Keralites have seen some glitter of Hope in you, especially during these tough times of COVID roasting our nation. The Land of Ayurveda has to be alive to save the country from Pandemic.  Kerala is the Lungs of India. Sir, Please restore the health of Kerala to its natural state from this new term in office.

West Bengal

Dear Mamata Didi , 

Congratulations on the Stupendous hat trick victory from the land of arts. Maa Durga has been blessing the state with the abundance of Ganga. But ever from the days of Robert Clive looting in 17th Century, Bengal has been fighting for every rights and loosing millions of lives in every century. WB produced the greatest ever freedom fighter in Netaji Subash Chandra Bose & Sri Aurobindo Ghosh. But in their later years they adopted the peaceful spiritual advancement path for betterment of the human race in the entire world.  Land which propagated Universal peace through the Gospel of Ramakrishna by Swami Vivekananda is yet to be in peace within itself. 

Didi ! see the dire straits of poor Bengalis in many streets across India. There are no enough employment opportunities for Bengalis in Bengal. They have to do menial jobs living in slums across India & Abroad. Fighting spirit is fine if it does not harm other beings. You are a great artist painting the human feelings in canvas, the "Pariborton" ( Change for better ) should start from one self.  How long Bengal will remain Violent ??? Didi, it is very difficult to survive,  being a lone woman warrior in a male dominated society for so long. Yes you might have been hurt deeply in this society. But there is a universal mother in you, please give us a healing touch irrespective of religion, caste, gender or social status. Trinamool, which means the roots of the grass, have to heal and grow in to lush green forest to bring prosperity in every nook & corner. 

Dear All politicians,
Not every Indian is in politics but every Indian is deeply affected by every one of your actions. Though you are all among us, born in between us, have entered the political scene to do good for the mass. But most of the time, when you reach a status of fame, name & money you are getting carried away. An Invisible Virus could cause such a great havoc & restlessness among us, whatever we have achieved as Human beings is very little.  So please don't take the political status too much on to your head.

Political Masters are very few, you are very privileged to be at the top, but your every move is affecting us in millions. So please cool your heels, enough of your running, let us all take a deep breathe to see the beautiful world dawning soon by your responsible actions viewing the world with wider, larger & longer perspective. 

Sakritease

Tuesday, March 30, 2021

Raja Ji Ji Chi chi

 





கருப்பன்ஆ ராசா ஜீ ஜீ !!!

வெளுப்பன்மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு.  'ஜீ'ன்னு ஒரு வாட்டி  சொன்னா போதாதா . அதென்ன ரெண்டு வாட்டி "ஜீ"

கருப்பன் : அண்ணன் மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு "ஜீ" பத்தாதுண்ணே இரண்டு "ஜீ" வேணும்

வெளுப்பன் : அவருக்கு தமிழ்ல "ஜெ" "ஜீ" கிடையாதுடா. அவரே பேரே "ராசா" ன்னு தான போடறாரு

கருப்பன் :  அப்ப "ஜீ" க்கு பதிலா "சீ" ன்னு போட்டுடறேன். 

வெளுப்பன் :  இன்னிக்கு தமிழ் நாடே "சீ சீ" தானே அவர் பேச்சு கேட்டு சொல்லுது.  டேய் ஒரு ஆள திட்டனும்னா அவன திட்டுங்கடா எதுக்கு தமிழ் நாட்டில எதுக்கெடுத்தாலும் அவங்க அம்மா சகோதரின்னு பெண்கள திட்டறீங்க. தமிழ்நாட்டின் அரசியல் நாகரீகம் ரொம்ப வருஷமா தரம் தாழ்ந்து தான் இருக்கு.  கருத்து மோதல் இருக்கலாம் ஆனால் தனி நபர் தாக்குதல் மிக கேவலமான நிலைக்கு சென்று 70 வருஷமா ஆகி விட்டது.  சாதாரண பொதுமக்களும் அன்றாட வாழ்க்கையில் பெண்ணோட கற்பு நிலை சொல்லி தான் திட்டறாங்க.  பெண்ணை வெறும் உடம்பாக பார்க்கும் நம்ம எண்ணம் மாறினாத்தான் நம்ம சமுதாயம் நிஜமா முன்னேற்ற அடையும். 

கருப்பன் :  அண்ணே !!  அப்ப இராஜ இராஜ  சோழனோட ஆட்சித்தான் வரணும்.  நல்ல ராஜா இருந்தா தான் நல்ல குடிமக்கள் உருவாகுவாங்க. நல்ல குடிமக்கள் இருந்தாத்தான் நல்ல அரசாங்கம் அமையும்.  கரெக்ட் தான அண்ணே  !!!!

வெளுப்பன் : உன்ன மாதிரி கறுத்த சிறுவர்கள் திருந்தினாத்தான்டா தமிழ் நாட்டோட பாரம்பரிய கருத்து செறிவை மீட்க முடியும்.  மன்னராட்சி காலத்துல கூட தான் ஆட்சிக்கு வரலாமான்னு மக்கள் கிட்ட "குடவோலை" சீட்டு மூலமா ஓட்டு போடும் முறையை உலகத்திற்கே ஜனநாயகம் - மக்களாட்சியை அறிமுகபடுத்தினது நம்ம இராஜ இராஜ சோழன் தான்.  அவரு மன்னராட்சி காலத்தில மக்களாட்சி நடத்தினாரு, இப்ப மக்களாட்சி காலத்தில எல்லாம் கட்சி அரசியல்வாதிகளும் அவங்க குடும்ப வாரிசுகளையே மன்னராட்சி மாதிரி கொண்டு வராங்க.  

கருப்பன் நிச்சயமா மாறுவோம்ண்ணே. " பொன்னியின் செல்வன்" கூடிய சீக்கிரம் ரீலிஸ்ண்ணே. 

வெளுப்பன் டேய் தமிழ்நாடு அரசியல் சினிமான்னு ரெண்டு புதைக்குழில சிக்கி தவிக்குதுடா.  மேல வாங்கடா !!!!





Monday, March 15, 2021

50 years of DMK- ADMK alliance

 

50  வருட கழக கூட்டணி

50 years of DMK- ADMK alliance


2021 மீண்டும் ஒரு தேர்தல். எந்த கூட்டணி வெல்லப் போகிறது என்பது பல கோடி ரூபாய்களுக்கான கேள்வி ??? ஆனால் யதார்த்த நிலை இரண்டு கழகங்களின் கூட்டணி 50 வது ஆண்டை பொன் விழாவை தமிழகத்தில் இந்த பொது தேர்தலில் கொண்டாட போகிறது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? 1971ல் திமுக இரண்டாக பிரிந்ததே கழகங்களின் மொத்த பிடியில் தமிழ்நாட்டை கொண்டு வரவே.  ஏனென்றால் அரசியல் என்பது ஒரு மிகப் பெரிய பண வியாபாரிகளின் சதுரங்கம், பதவி,  அதிகாரங்களுடன் கிடைக்கக் கூடிய வருமானம்.

தமிழ்நாட்டில் எல்லா பொதுமக்களுக்கும் நன்றாக தெரிந்த விஷயம் – எந்த கழகம் ஆட்சியிலிருந்தாலும் சாராயம் மாற்று கட்சிகாரரின் கம்பெனியிலிருந்தும் வாங்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.  இது எப்படி சாத்தியம் ? இப்படி பழி சண்டை போடுகிறவர்களுக்குள் கூட்டணியா என்று ஆச்சரியப்படுகிறீர்களா ? இதனை பல இடங்களில் திரு. கருணாநிதியும் திரு. எம்.ஜி. இராமசந்திரனும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.



இந்த தேர்தலிலும் ஒரு காட்சி வருகிறது கட்சியின் முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதியில் மாற்று கட்சியினர் பலவீனமான வேட்பாளர்களையே நிறுத்திக் கொள்வர். திரு. அர்விந்த் கேஜ்ரிவால் வாராணாசியில் திரு. மோடியை எதிர்த்து போட்டியிட்டது போல் தமிழ்நாட்டில் பெருந்தலைகள் நேருக்கு நேர் ஒரே தொகுதியில் மோதுவதில்லை. திரு. உதயநிதி ஸ்டாலின் நிற்கும் தொகுதியான சேப்பாக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க வில் சேர்ந்த நடிகை திருமதி. குஷ்பு போட்டியிடுவதற்காக அலுவலகம் கூட திறந்து விட்டார். ஆனால் திமுகவின் எதிர்காலமான திரு. உதயநிதிக்காக அதிமுக தொகுதியை விட்டு கொடுத்துவிட்டு அதிமுக முக்கியஸ்தர்களுக்காக அவர்களின் தொகுதியில் பலவீனமான பிரமுகர்களை திமுகவும் நிறுத்துகின்றன.



இந்த மறைமுக உறவு கடந்த 50 வருடங்ககள் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் மொத்தமாக தேயவைக்க பயன்பட்டுத்துள்ளது. இந்த மறைமுக கூட்டணியை திரு. கருணாநிதியும் திரு. ஆர். எம். வீரப்பனும் ஒரே மேடையில் முன்பே உறுதிப்படுத்தி உள்ளனர்.


இரண்டு கழகங்களுக்கும் அவர்கள் கொடியில் உள்ளது போல் ஒரு சின்ன வெள்ளை கோடு தான் வித்தியாசம். பெருந்தலைவர் திரு. காமராஜர் கூறியது போல் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்.



மொத்தமாக தமிழகம் ரூபாய் ஐந்து லட்சம் கோடி கடனை 50 வருடங்களாக சேர்த்தது தான் கழக அர்சுகளின் சாதனை.  இரண்டு கட்சிகளும் செயலாற்றும் முறையும் ஒரே பாணியில் இருவரும் மாறி மாறி அடுத்த கட்சியை ஊழலில் ஈடுபடுபவர்கள் என்று கைக்காட்டி திசை திருப்பி விட்டு விட்டு வெறும் அடியாள் பலம், கட்டப் பஞ்சாயத்து, சட்டத்துக்கு புறம்பான தொழில்கள், சாராய தொழிற்சாலைகள், கல்வி வியாபாரம் அனைத்து செயல்களிலும் இலஞ்சம் , முக்கியமாக மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் இலஞ்சத்தில் பங்களித்து இலஞ்சம் ஊழல் செய்வது சமூகத்தில் இயல்பானது, அன்றாட வாழக்கையில் இலஞ்சம் தவறில்லை என்ற மனநிலையை உருவாக்கி தமிழக மக்கள் ஒரு மந்த நிலையில் அடிமை போல் இரு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றனர்.



இந்த சூழலில் 2006ல் மாற்றம் கொண்டு வர திரு. விஜயகாந்த் களமிறங்கினார், ஆனால் அவரால் குடும்ப கட்சியை தாண்டி பல வெளி திறமையாளர்களை ஈர்க்கமுடியாமல் உடல் நலமும் ஒத்துழைக்காமல் அவர் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது.



2021ல் நடிகர் திரு. ரஜினிகாந்த வருவார் , ஆன்மீக அரசியல் என்ற பெயரிலாவது ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார் என்று இரு கட்சிகளை வெறுக்கும் பலரும் எதிர்பார்த்து இருந்த போது, அவர் “மூன்று முடிச்சு” திரைப்படத்தில் செய்தது போல் திரு. கமல ஹாசனை குட்டையில் தள்ளிவிட்டு விட்டு அவர் கரை ஒதுங்கி கொண்டுவிட்டார். பலமான பரட்டையை எதிர்பார்த்த மக்கள் சப்பாணியாவது கிடைத்தாரே என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.


சாதாரணமாகவே தெளிவாக குழப்பும்
பரமக்குடிக்காரர் தெளிவாக தென் கோவையை தேர்ந்தெடுத்துள்ளது நல்ல துவக்கம் தான். மேற்கில் மையம் கொண்டு தான் தமிழ்நாட்டில் எல்லா ஆறுகளும் கிழக்கு நோக்கி பாய்கின்றது. கோவையிலிருந்து மய்ய நாயகன் கிழக்கு கடற்கரையோரம் சென்னையில் கரையேறுவார் என்று எதிர்பார்க்கிறார்.



1967ல் ஒரு வைணவ ஞானியார், திரு . இராஜகோபாலசாரியார் (இராஜாஜி ) யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து காங்கிரஸை விரட்ட புறப்பட்டதால் வந்த வினை தமிழ்நாடு ஊழலிலே மக்களின் தார்மீக வளர்ச்சியிலே மிகவும் பின் தங்கி வருகிறது.  




மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு வேலை நடப்பதற்கும் ஒரு சிபாரிசு, சம்பளத்தை தாண்டிய கிம்பளம் தப்பில்லை என்ற மனோபாவம் தமிழ்நாட்டில் ஆழமாக வேறூன்றிவிட்டது. இலவச மோகம் தலை விரித்தாடுகிறது. இரு கழகங்களும் ஐந்து வருடத்திற்கு ஒரு ஓட்டு போடும் இயந்திரமாக வெறும் ஜட பொருளாக மக்களை மட்டமாக எடை போட்டு மலினமாக இலவசம் இலவசம் என்று மக்களின் வரிப்பணத்திலே மக்களுக்கே கடன் சுமையை ஏற்றிவிட்டு அரசியல்வாதிகள் நமது மாநிலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி வருகின்றனர்.






இரண்டு கழகங்களும் எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் இலவச கவர்ச்சி அரசியல் செய்துக் கொண்டு தமிழகத்தின் மக்களை தரத்தை மற்ற மாநில மக்கள் மற்ற நாடுகளின் கேலி பொருளாக்கிவிட்டு மக்களையும் அரசியல்வாதிகளின் கூட்டு களவாணி ஆக்கியுள்ளனர். சட்டப் பேரவைக்கு பண பலம் ஆள் பலம் சட்ட புறம்பாக சொத்து சேர்பவர்கள் மட்டுமே அரசியல் செய்து வர முடியும் என்ற நிலையில் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.



யார் இந்த நிலையை மாற்ற முடியும் ? இன்று தமிழகத்தை நல் வழிப்படுத்த முடியும் ??? என்ற ஏக்கமான கேள்விகள் பல மக்களிடையே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இரண்டு கழகங்களிலும் உள்ள வியாபாரிகள் வெளியில் கட்சி ரீதியாக சண்டையிடுவது போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர்களிடையே அரசாங்க சொத்தை எப்படி தனியார் சொத்தாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவான உடன்பாடு உள்ளது. தொழில் உடன்பாடு செய்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப சண்டைக் காட்சிகளும் வசன நாடக காட்சிகளும் அரங்கேறுகின்றன.



அதனால் தமிழ்நாட்டில் எப்பவும் எடுபடற ஃபார்முலா சினிமா நடிகர்களை நம்புவது தான். மக்களுக்கு குறைந்தபட்சம் இவர்கள் திரையிலாவது நல்லவராக நடிக்கவாவது செய்கிறார்களே என்கிற அல்ப சந்தோசம் தான்.



இந்த 2021 தேர்தல் நமக்கு மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே,  மிக குறைந்த நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது.

சப்பாணிய விட்டா இப்ப மயிலுக்கு வேற வாய்ப்பேயில்லை. இந்த பிறவி வைணவர் போலி நாத்திகம் பேசி மத அரசியல் செய்தாலும் மைனாரிட்டி மெஜாரிட்டி அரசியல் செய்தாலும் அவர் “விஸ்வரூபம்” காட்டின மாதிரி அவர் உள்ளே ஒருவருக்கு ஆதரவு வெளியே ஒன்று செய்ய போகிறார் என்று நம்புவோம்.



கமல் ஆட்சிக்கு வரணும் சொல்லலை, வந்தா கழகங்கள் கிட்டயிருந்து நமக்கு விடுதலை கிடைக்குமேனு சொல்றேன். இவரும் இன்னொரு கொள்ளிக் கட்டைதான் நிருபித்து கழகங்களை போல் இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தமாட்டார்னு நிச்சயம் நம்பலாம். ஏன்னா அவர் ஒரே மாதிரி வேஷம் ஒரே மாதிரி மனிதர்கள் எல்லாம் அவருக்கு சீக்கிரம் சலிச்சுரும்னு,  அவர் வாழ்க்கையில அவரே வாழ்ந்து காட்டியிருக்கார்.  அவர இந்திரன் - சந்திரன் சொல்ல முடியாது தான், அவர் தெனாலியாவே ஆட்சி நடத்தினாலும் நிச்சயம் கழகங்களை விட "பெட்டரா" செய்ய வாய்ப்பிருக்கு



இந்த கொள்ளை இருட்டில இப்போதைக்கு டார்ச் அடிச்சு முன்னேறுவோம் கூடிய சீக்கிரம் அகன்ற பேரொளி நம்மை வழிக் காட்டுவோம்னு நம்புவோம்ங்க. நம்பிக்கை தான் வாழக்கை.

 


சகிருட்டிஸ்

 

 

 

 

 

 

 

Translate

Contact Form

Name

Email *

Message *