Search This SAKRITEASE Blog

Wednesday, June 10, 2020

Theist Kanchi Atheist


ஆத்திகம் தொழுத 
நாத்திகம் வளர்த்த காஞ்சி 

காஞ்சியில் கஞ்சி


கரையேறிய வேட்டிகள்

கரையில்லா காவி கொண்ட
குடந்தை குளவிளக்கு
கரைந்தும் போகுமோ என்றே
அஞ்சும் அளவிற்கு
வாயாடிகள் வலம் வந்து
அரற்றிய அண்ணனின் தம்பிகளும்

அஞ்சற்க என்று அரவணைக்க


வந்தணன் தவமுனிவன்

நச்சுபுகையாய் நாத்திகம் பரவ
நஞ்சுண்ட நமச்சிவமாய்
காமாட்சி அடி அமர்ந்து
அருளாசி வழங்கினான்

காசிற்காக விலை போன
கடைக்காரன் விற்கவும்
துணிந்தனன் நம் மரபை
வெறும் கைக்குட்சிக்கெண்டு
வறும் காலால் நடந்தே
நாற்திசையும் நன்மையளித்தே
திருத்தவே முடியாத கட்சியிலும்
திருநீரிட்டு முத்தையாவை
கண்ணனுக்கு தாசனாக்கி கவிதை
கடல் விரித்தனன்

நகரங்களிலெல்லாம் காஞ்சி 1
நிலைமாறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர் கூடா()
நடிப்பில் நிலைகுலைந்து நிற்க
ஏகாம்பரமே குடையாய் கொண்டு
ஏகம் அன்றி இரண்டில்லை என்ற
சங்கரனின் வாக்கையே
வாழ்ந்து காட்டினன்

காமக் களியாட்டம்
கட்சி வெறியாட்டம்
நிதிக்கு முன்னிலை
நீதிக்கு இழிநிலை
தமிழகமே தறுதலை
தருமத்திற்கு சோதனை
தலைகுனிந்து துணிவிழந்து
நினைவிழந்து போதையில்
பேதையரும் தலைவிரிக்க
ஊழலின் ஊழ்வினையால்
உரமிழந்த தென்னாட்டில்
கனறும் கனலாய்
அன்பே கலமாய்
அருட்பெரும் சுடரே
மூழ்கும் கடலிலும்
கரையேற்றும் தவமுனிவன்
தரித்த தண்டமே
தவிக்கும் மனதில்
தருவாய் படர்வாய்
தவமாய் அமர்வாய்
சந்திரசேகரா




யற்கையின் அற்புதமே

நன்மையும் தீமையையும்
ஒருசேர பிறந்திட
இப்பறமும் அப்புறமும்
முப்புறமும் எரிசெய்த

காஞ்சிபுர(ற)த்திலும்


இறைவனின் திருவிளையாட்டில்




மனிதம் உயர்ந்திட

மானுடம் தழைத்திட
நிலம் என்னும் பூதத்தில் 2
நீ நடந்ததும்
நாடகமென்று
நாளை உரைப்பாரோ

நடப்பதெல்லாம் நாடகம்
நடத்தும் இறைவனே
நடந்ததே நமச்சிவாயம்
அண்ணலும் நீயே அண்ணனும் நீயே
அம்பியும் நீயே எம்பியும் உயர
வாழும் உயிர்க்கெல்லாம்
வரமளிப்பாயே.


சகிருட்டிஸ்

விளக்கம் :
5. ஜுன்.2020 – வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சியில் வாழ்ந்த வாழ்விக்கின்ற மகான் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிறந்த நாளில் அவர் எத்தகைய காலக்கட்டத்தில் அவர்களின் முன்னோர்கள் கும்பகோணத்தில் நடத்தி வந்த மடத்தினை காஞ்சிபுரத்திற்கு மாற்றினார்கள் என்று சிந்தனை ஓடியதால் எழுந்தன வரிகள்.
இயற்கை என்னும் இறைவன் எப்படி ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இரு வேறு ஆற்றலை நடக்கவிட்டு நாடகமாடினான் என்று வியந்து எழுதியதே இந்த பாடல்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மிகப் பெரிய காரணம் குடிக் கொண்டுள்ளது.  உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாகவே யாம் இந்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.  இதில் சரி தவறு என்ற நிலைபாடும் இல்லை. இயற்கையில் முரணும் ஒரு அங்கமே என்று தோன்றுகிறது.

குறிப்பு :
1. சீன யாத்திரிகர் ஹுவான் சுவாங் தான் பார்த்த இந்திய நகரங்களிலேயே காஞ்சி தான் தலை சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.  பல்லவ பேரரசின் தலை நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது .

2. சிவனின் பஞ்சபூத தலங்களுள் நிலத்திற்கான தலமாக போற்றப்படுகின்ற கச்சி ஏகம்பன் என்று சிவனடியாரால் அன்போடு அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.





Worship the Tree



நான்கு வருடங்களுக்கு முன்பு 2015 ல் ஒரு புது செடி ஒன்று முளைத்திருந்தது. என்னால் என்ன செடி / மரம் என்று அடையாளம் கண்டுபடிக்க முடியவில்லை.



இந்த சமயத்தில் ஆங்கில ஆராய்ச்சியாளர் எழுதிய ஆங்கில புத்தகமான "தி கிரேட் இந்தியன் ஹெட்ஜ்" தமிழாக்கம் "உப்பு வேலி" என்ற பெயரில் வெளிவரும் தகவல் கிடைத்தது. அந்த புத்தகம் உப்பு வியாபாரத்திற்காக ஆங்கிலேய அரசு மரங்களை கொண்டு உயிர் வேலி பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் அமைத்து இந்தியர்களை எப்படி சுரண்டியது என்பதை பற்றி எழுதி இருந்தது.

நான் எனது வயல் வாங்கிய புதிது. உயிர் வேலி அமைக்க முயன்று வந்தேன். அதனால் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புத்தகம் வாங்க சென்றேன். அங்கு திரு. ராய் மாக்சிம் கூறிய தகவல்களை கேட்டு இரண்டு புத்தகங்கள் வாங்கி அதில் ஒன்றில் நமது அபிமான எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களுக்காக அவர் எழுதிய "உப்பு கணக்கு" புத்தகத்தை பற்றி கூறி திரு ராய் அவர்களின் கையெழுத்துடன் புத்தகத்தை பெற்று எழுத்தாளர் திருமதி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று அளித்துவிட்டு படித்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அவரும் அதை படித்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அவர் உஷாவாக வரைந்த அவரின் அபிமான தெய்வமான "கற்பகாம்பாளின்" ஓவியத்தை எனக்கு பரிசளித்தார். அதனை வீட்டிற்கு கொண்டு வந்து சுவரில் மாட்டினேன்.


பிறகு கற்பகாம்பாளின் தவம் பற்றி படித்தேன். அதில் அம்பாள் மயிலாக தவமிருந்தது ஒரு புன்னை மரத்தடியில் என்ற தகவல் கிடைத்தது. கபாலிஸ்வரருக்கும் புன்னை வன நாதர் என்ற பெயரும் சன்னிதியும் இருப்பது தெரிய வந்தது. இப்பொழுது எங்கள் வீட்டில் முளைத்திருந்த மரம் பற்றி அறிய முற்பட்டேன்.


என்ன ஆச்சரியம் வீட்டில் முளைத்திருப்பது புன்னை மரம் என்று தெரிய வந்தது.

இது என்ன இறைவியின் திருவிளையாடல் என்றே தோன்றுகிறது. அம்மன் எழுந்தருளல் முன் அவளின் மரத்தை இங்கு முளைக்க செய்துவிட்டாள்.
பல முனிவர்களும் தங்கள் தவம் ஒரு முகமாக இருக்க மரங்களாக அவதரிப்பதாக அகத்தியர் வாக்காக சமீபத்தில் படித்தேன்.

"மரம் செய்ய விரும்பும்" என் முயற்சிக்கு இறையின் அருளாக புன்னை மரம் எழுந்திருப்பதாக உள்ளுணர்வு உணர்த்துகிறது.

அநேக சிவன் கோவில்களில் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கிறது.

வன்னி மரக்காட்டில் தவமிருந்ததால் வான்மீகி என்ற பெயர் பெற்று இன்று அந்த ஊர் திருவான்மீகியூர் என்பது திருவான்மியூராக மருவி இருக்கிறது. புரசைமரக் காடாக இருந்து இடம் இன்று புரசைவாக்கமாக உள்ளது. அங்கு இன்று இருக்கும் சிவன் கோவிலுக்கும் தல மரம் புரசை மரமே. திருவேற்காடு, திருவாலங்காடு, மாங்காடு என்ற பெயர்களில் இருந்தே விளங்கும் அது எந்த மரம் அந்த பகுதியில் மிகுந்து இருந்ததோ அதன்படியே நமது முன்னோர்கள் அந்தந்த ஊர்களுக்கு பெயரும் அதில் ஒரு மரத்தடியில் சிவனையும் வைத்து மரத்தையே சிவனாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள்.

"தெய்வமணிமாலை"யில் அருட்பிரகாச வள்ளலாரும் கந்த கோட்டத்தில் உள்ள முருகனை பற்றி கூறிவருகையில் தரு ஓங்கு சென்னையில் தருமம் மிகும் என்று கூறுகிறார்.

மீண்டும் மயிலாப்பூர் புன்னை வனக்காடாக மாறுமா? சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து புராதன சிவாலயங்களை நாம் ஒரு வரைபடமாக மாற்றி அந்தந்த மரங்கள் இருக்கும் காடாக நினைத்து பார்த்தால் சென்னையே தருமபுரியாக மாறி தருமபரிபாலனம் செய்ய உகந்த ஊராக மாறி தமிழ் நாட்டில் தருமம் தழைத்து விடும்.



நம்மால் முடியுமா???? மீண்டும் கற்பகாம்பாள் மயில் உருவில் வந்து புன்னை மர விதைகளை தூவினால் சாத்தியமே.


க கி கு

Saturday, June 6, 2020

Drama of Kanchipuram



காஞ்சியில் கஞ்சி

கரையேறிய வேட்டிகள்
கரையில்லா காவி கொண்ட
குடந்தை குளவிளக்கு
கரைந்தும் போகுமோ என்றே
அஞ்சும் அளவிற்கு
வாயாடிகள் வலம் வந்து
அரற்றிய அண்ணனின் தம்பிகளும்

அஞ்சற்க என்று அரவணைக்க

வந்தணன் தவமுனிவன்
நச்சுபுகையாய் நாத்திகம் பரவ
நஞ்சுண்ட நமச்சிவமாய்
காமாட்சி அடி அமர்ந்து
அருளாசி வழங்கினான்

காசிற்காக விலை போன
கடைக்காரன் விற்கவும்
துணிந்தனன் நம் மரபை
வெறும் கைக்குட்சிக்கெண்டு
வறும் காலால் நடந்தே
நாற்திசையும் நன்மையளித்தே
திருத்தவே முடியாத கட்சியிலும்
திருநீரிட்டு முத்தையாவை
கண்ணனுக்கு தாசனாக்கி கவிதை
கடல் விரித்தனன்

நகரங்களிலெல்லாம் காஞ்சி 1
நிலைமாறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர் கூடா()
நடிப்பில் நிலைகுலைந்து நிற்க
ஏகாம்பரமே குடையாய் கொண்டு
ஏகம் அன்றி இரண்டில்லை என்ற
சங்கரனின் வாக்கையே
வாழ்ந்து காட்டினன்

காமக் களியாட்டம்
கட்சி வெறியாட்டம்
நிதிக்கு முன்னிலை
நீதிக்கு இழிநிலை
தமிழகமே தறுதலை
தருமத்திற்கு சோதனை
தலைகுனிந்து துணிவிழந்து
நினைவிழந்து போதையில்
பேதையரும் தலைவிரிக்க
ஊழலின் ஊழ்வினையால்
உரமிழந்த தென்னாட்டில்
கனறும் கனலாய்
அன்பே கலமாய்
அருட்பெரும் சுடரே
மூழ்கும் கடலிலும்
கரையேற்றும் தவமுனிவன்
தரித்த தண்டமே
தவிக்கும் மனதில்
தருவாய் படர்வாய்
தவமாய் அமர்வாய்
சந்திரசேகரா



யற்கையின் அற்புதமே
நன்மையும் தீமையையும்
ஒருசேர பிறந்திட
இப்பறமும் அப்புறமும்
முப்புறமும் எரிசெய்த

காஞ்சிபுர(ற)த்திலும்

இறைவனின் திருவிளையாட்டில்


மனிதம் உயர்ந்திட
மானுடம் தழைத்திட
நிலம் என்னும் பூதத்தில் 2
நீ நடந்ததும்
நாடகமென்று
நாளை உரைப்பாரோ

நடப்பதெல்லாம் நாடகம்
நடத்தும் இறைவனே
நடந்ததே நமச்சிவாயம்
அண்ணலும் நீயே அண்ணனும் நீயே
அம்பியும் நீயே எம்பியும் உயர
வாழும் உயிர்க்கெல்லாம்
வரமளிப்பாயே.


சகிருட்டிஸ்

விளக்கம் :
5. ஜுன்.2020 – வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சியில் வாழ்ந்த வாழ்விக்கின்ற மகான் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிறந்த நாளில் அவர் எத்தகைய காலக்கட்டத்தில் அவர்களின் முன்னோர்கள் கும்பகோணத்தில் நடத்தி வந்த மடத்தினை காஞ்சிபுரத்திற்கு மாற்றினார்கள் என்று சிந்தனை ஓடியதால் எழுந்தன வரிகள்.
இயற்கை என்னும் இறைவன் எப்படி ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இரு வேறு ஆற்றலை நடக்கவிட்டு நாடகமாடினான் என்று வியந்து எழுதியதே இந்த பாடல்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மிகப் பெரிய காரணம் குடிக் கொண்டுள்ளது.  உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாகவே யாம் இந்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.  இதில் சரி தவறு என்ற நிலைபாடும் இல்லை. இயற்கையில் முரணும் ஒரு அங்கமே என்று தோன்றுகிறது.

குறிப்பு :
1. சீன யாத்திரிகர் ஹுவான் சுவாங் தான் பார்த்த இந்திய நகரங்களிலேயே காஞ்சி தான் தலை சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.  பல்லவ பேரரசின் தலை நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது .

2. சிவனின் பஞ்சபூத தலங்களுள் நிலத்திற்கான தலமாக போற்றப்படுகின்ற கச்சி ஏகம்பன் என்று சிவனடியாரால் அன்போடு அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.




Translate

Contact Form

Name

Email *

Message *