Search This SAKRITEASE Blog

Tuesday, April 7, 2020

அடி தேடி போனேனடி

 அடி தேடி போனேனடி

(முதலாம் ஏப்ரல் 2020 -வெள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த போது உதித்த அடிகள்)
                                             பாடலின் இராகம் : சண்முக ப்ரியா 

அடி தேடி போனேனடி
அண்ணன் அடி தேடி போனேனடி (2)
மலையினடி இருப்பதாக
சொன்னானடி
தேடி தேடி களைத்த
ஆதி திருவரங்கன்
அயர்ந்ததாக சொன்னானடி (1*) 

சக்கரத்ததாழ்வாரும் போற்றும்
மாதவனும் காணாததடி
நம்மாழ்வார் அடிப்பொடி
மா தவம் செய்யாமல்
கண்டேணடி ( 2*)

அருணகிரிக்கு அடி
எடுத்து கொடுத்த
ஆனை மணாளனும் (தேவ)
வள்ளிக் கிழங்காக
அடி காட்டிக் கொடுத்தானடி (3*)

பத்தவதாரம் கண்டவனும்
காணாததடி
வெண் தாடிக் காரன்
காண்பித்தானடி
களக்காட்டில் சத்திய
வாக்கு எடுத்தானடி
உண்மையை ஊருக்கு
உரக்க உறைப்பேன்
உரைக்க உறைப்பேன்
என்றானடி (4*)


உழவனடி தொழவேண்டுமடி
உலகம் உய்விக்க
மூவடி எடுத்தானடி
மாடுகள் மேய்த்தானடி
சாணத்தை உரமாக்க
புழுவாகவும் அவதாரம்
எடுத்தானடி
எந்த ஏறும் தொடா
ஆழம் தொடும்
புழுவே உழவனடி
உழவனடி தொழவேண்டுமடி
மண்புழுவினடி தொழவேண்டுமடி
அண்ணாமலை அடிக்காண
உழவனானேனடி
ஆழம் போவேனடி
ஆழ்த்தும் போவேனடி (5 *)


நாம் போற்றும் வெண் தாடிக்காரர்கள் கண்டதை விண்டவர்கள்.
இருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டுபவர்கள்.   இல்லை என்று தூற்றும் வெண் தாடிக்காரர்கள் அல்ல 

1.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 
2. ஐப்பானிய விவசாய விஞ்ஞானி மசானபு புஃகோகா
3. வேதாத்ரி மகரிஷி




ஏப்ரல் 6 ம் தேதி நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் .  அவர் பெயரில் எங்கள் கிராமத்தில் "நம்மாழ்வார் தெரு" என்று பெயரிட்டு அதன் இயற்கைக்கு மீண்டும் திரும்பும் பாதைக்கு அடித்தளமாக கொண்டு இயற்கை ஒத்து நடப்போம் 

பத்திகளின் விளக்கங்கள் *****

1*  -  ஆதி திருவரங்கம் என்று திருவரங்க பெருமான் படுத்துக் கொண்டே அருளும் புண்ணிய தலம் திருவண்ணாமலைக்கு 30 கி.மீஅருகில் உள்ளது. இத்திருதலத்தில் கைங்க்ர்யம் செய்பவர்கள் இந்த கோவில் திருச்சி அருகில் உள்ள திருவரங்கத்தை காட்டிலும் பழமையானது என்று கூறுகின்றனர்.  திருவண்ணாமலையில் சிவனின் ஒளி உருவின் அடியையும் முடியையும் விஷ்ணுவும் பிரம்மாவும் காண முடியாமல் தவித்தனர் என்று வரலாறு கூறுகிறது. அண்ணாமலையை தேடி களைத்ததால் பெருமாள் இங்கு படுத்து ஒய்வெடுத்தாரோ என்பது எமது கேள்வி  

2* -  இங்கு குறிப்பிடபடும் நம்மாழ்வார் _ இயற்கை வேளாண் விஞ்ஞானி 

3* - அருணகிரி நாதருக்கு திருவண்ணாமலையில் வைத்து தான் முருக பெருமான் “முத்தை திரு” பாடலின் அடி எடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாடவைத்தார். அது போல் எனக்கு வெள்ளிக் கிழங்கு வயலில் தோண்டி எடுத்த போது இந்த பாடல் வந்ததால் வள்ளிக் கிழங்கு தேடிய போது முருகன் எடுத்து கொடுத்த வரிகள் என்று விவரிக்கின்றேன்

4* -  நம்மாழ்வார் அய்யாவிற்கு திருநெல்வேலி மாவட்ட களக்காடு வட்டாரத்தில் தான் இயற்கை வேளாண்மை மீட்டெடுக்கும் முயற்சியை தொடங்கியதாக அய்யா பற்றிய நூல்கள் கூறுகின்றன, தமிழ் இந்து நாளிதழில் வந்த அய்யாவின் வாழ்னாள் குறிப்பிலும் இந்த தகவ்ல் பகிரப்பட்டுள்ளது. அந்த இணையதளம் இங்கே https://www.hindutamil.in/news/blogs/203690-10-1.html
https://nammalvar-37.webself.net/
பிரபஞ்சத்தின் ஆச்சரியத்தின் ஒன்றாக  அந்த களக்காடு கிராமம் தான் எனது பூர்வீகமும். களக்காட்டில் அருளும் சிவ பெருமானின் பெயர் சத்தியவாகீஸ்வரர். எனது தந்தையின் பெயரும் இந்த தெய்வத்தின் பெயரால் வந்த்து தான் 

5* - நம்மாழ்வார் மிகவும் போற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஜப்பானிய கிழவன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு மசனோபு புகுவோகா “ உழவில்லா வேளாண்மை “ உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் – அவர் மன்புழுவே உண்மையான உழவன் என்கிறார். அந்த கருத்தினை நம்மாழ்வார் அய்யா பலக் கூட்டங்களில் உரக்க கூறியிருக்கிறார். இன்னொரு ஆச்சரியம் “கிருஷி” னா என்ற எனது பெயரின் மருவு – சமஸ்கிருதத்தில் “ விவசாயி “ என்று  பொருள். அதனால் மண்புழு புல்லாங்குழல் கிருஷ்ண பரமாத்மா போல் மயில் பீலியுடன் வாசிப்பதாக நிழற் படம் தயாரித்து இந்த பதிவில் வெளியிட்டுள்ளேன்


-- கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்

Monday, February 10, 2020

Velachery Punnai Maram Karpagambal

வேள்விசேரி புன்னை மரமும் கற்பகாம்பாளும்

நான்கு வருடங்களுக்கு முன்பு 2015 ல் ஒரு புது செடி ஒன்று முளைத்திருந்தது. என்னால் என்ன செடி / மரம் என்று அடையாளம் கண்டுபடிக்க முடியவில்லை.



இந்த சமயத்தில் ஆங்கில ஆராய்ச்சியாளர் எழுதிய ஆங்கில புத்தகமான "தி கிரேட் இந்தியன் ஹெட்ஜ்" தமிழாக்கம் "உப்பு வேலி" என்ற பெயரில் வெளிவரும் தகவல் கிடைத்தது. அந்த புத்தகம் உப்பு வியாபாரத்திற்காக ஆங்கிலேய அரசு மரங்களை கொண்டு உயிர் வேலி பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் அமைத்து இந்தியர்களை எப்படி சுரண்டியது என்பதை பற்றி எழுதி இருந்தது.

நான் எனது வயல் வாங்கிய புதிது. உயிர் வேலி அமைக்க முயன்று வந்தேன். அதனால் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புத்தகம் வாங்க சென்றேன். அங்கு திரு. ராய் மாக்சிம் கூறிய தகவல்களை கேட்டு இரண்டு புத்தகங்கள் வாங்கி அதில் ஒன்றில் நமது அபிமான எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களுக்காக அவர் எழுதிய "உப்பு கணக்கு" புத்தகத்தை பற்றி கூறி திரு ராய் அவர்களின் கையெழுத்துடன் புத்தகத்தை பெற்று எழுத்தாளர் திருமதி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று அளித்துவிட்டு படித்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அவரும் அதை படித்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அவர் உஷாவாக வரைந்த அவரின் அபிமான தெய்வமான "கற்பகாம்பாளின்" ஓவியத்தை எனக்கு பரிசளித்தார். அதனை வீட்டிற்கு கொண்டு வந்து சுவரில் மாட்டினேன்.


பிறகு கற்பகாம்பாளின் தவம் பற்றி படித்தேன். அதில் அம்பாள் மயிலாக தவமிருந்தது ஒரு புன்னை மரத்தடியில் என்ற தகவல் கிடைத்தது. கபாலிஸ்வரருக்கும் புன்னை வன நாதர் என்ற பெயரும் சன்னிதியும் இருப்பது தெரிய வந்தது. இப்பொழுது எங்கள் வீட்டில் முளைத்திருந்த மரம் பற்றி அறிய முற்பட்டேன்.


என்ன ஆச்சரியம் வீட்டில் முளைத்திருப்பது புன்னை மரம் என்று தெரிய வந்தது.

இது என்ன இறைவியின் திருவிளையாடல் என்றே தோன்றுகிறது. அம்மன் எழுந்தருளல் முன் அவளின் மரத்தை இங்கு முளைக்க செய்துவிட்டாள்.
பல முனிவர்களும் தங்கள் தவம் ஒரு முகமாக இருக்க மரங்களாக அவதரிப்பதாக அகத்தியர் வாக்காக சமீபத்தில் படித்தேன்.

"மரம் செய்ய விரும்பும்" என் முயற்சிக்கு இறையின் அருளாக புன்னை மரம் எழுந்திருப்பதாக உள்ளுணர்வு உணர்த்துகிறது.

அநேக சிவன் கோவில்களில் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கிறது.

வன்னி மரக்காட்டில் தவமிருந்ததால் வான்மீகி என்ற பெயர் பெற்று இன்று அந்த ஊர் திருவான்மீகியூர் என்பது திருவான்மியூராக மருவி இருக்கிறது. புரசைமரக் காடாக இருந்து இடம் இன்று புரசைவாக்கமாக உள்ளது. அங்கு இன்று இருக்கும் சிவன் கோவிலுக்கும் தல மரம் புரசை மரமே. திருவேற்காடு, திருவாலங்காடு, மாங்காடு என்ற பெயர்களில் இருந்தே விளங்கும் அது எந்த மரம் அந்த பகுதியில் மிகுந்து இருந்ததோ அதன்படியே நமது முன்னோர்கள் அந்தந்த ஊர்களுக்கு பெயரும் அதில் ஒரு மரத்தடியில் சிவனையும் வைத்து மரத்தையே சிவனாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள்.

"தெய்வமணிமாலை"யில் அருட்பிரகாச வள்ளலாரும் கந்த கோட்டத்தில் உள்ள முருகனை பற்றி கூறிவருகையில் தரு ஓங்கு சென்னையில் தருமம் மிகும் என்று கூறுகிறார்.

மீண்டும் மயிலாப்பூர் புன்னை வனக்காடாக மாறுமா? சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து புராதன சிவாலயங்களை நாம் ஒரு வரைபடமாக மாற்றி அந்தந்த மரங்கள் இருக்கும் காடாக நினைத்து பார்த்தால் சென்னையே தருமபுரியாக மாறி தருமபரிபாலனம் செய்ய உகந்த ஊராக மாறி தமிழ் நாட்டில் தருமம் தழைத்து விடும்.



நம்மால் முடியுமா???? மீண்டும் கற்பகாம்பாள் மயில் உருவில் வந்து புன்னை மர விதைகளை தூவினால் சாத்தியமே.


Tuesday, October 15, 2019

Farmer President Abdul Kalam

Former Farmer President
Dr APJ Abdul Kalam 


Let's call our beloved President Dr. APJ Abdul Kalam as Farmer President as he has sown maximum no. of seeds on Young Minds . 




A tree ( Nagalingam Tree Sapling)  planted in memory of our Farmer President Dr. APJ Abdul  Kalam ayya's 88th Birthday on 15th October 2019 in our Farm.  

Importantly the Grow Bag is being reused to house another sapling. 


Thanks to Wing Commander (Retd.) Mr. Krishna Murthy ( https://www.facebook.com/chidambaramsubramaniam.krishnamurthy)  for gifting me this sapling.  He will give million reasons to plant & gift trees.  A great inspiration to all who are working on field with trees.  



Friday, October 4, 2019

Gandhi 150 Nammazhwar Street

                     ஆழ்ந்து
                 அகன்ற
           நுண்ணியன்

                        - திருவாசகத்தில் ஒரு வரி





ஒவ்வொரு உயிரையும் மிக நுணுக்கமாக தனித்துவத்துடன் படைக்கிறான் இறைவன்.  ஒரு வேப்பமரம் போல் இன்னொரு வேப்பமரம் சகல ஒற்றுமைகளுடன் இருப்பதில்லை.  ஏதேனும் சிறு வேறுபாடுகள் இருக்கவே செய்யும். 

அது போல் ஒரு மனிதனுக்கு கிடைக்கப் பெற்ற அனைத்தும் மற்றொருவனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.  அதனால் இராணுவ ஒழுங்கை போல் ஒரே சீராக எல்லோரும் எல்லா விஷயங்களிலும் ஒன்று போல் நடக்க வாய்ப்பில்லை. 

கிருத்துவராலும் முகமதியராலும் உலகின் மிக பெரிய போர்கள் நடந்து பல கோடி உயிர்களை பலிவாங்கிட்டோம். என்னை போலவே மற்றொருவனும் சிந்திக்க வேண்டும் நான் வணங்கியதையே வணங்க வேண்டும் என்று முற்படுவது இயற்கைக்கு முரணாகும். 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா போல் வாழ்ந்து காட்டி வழிக் காட்டலாம்,  ஆனால் எதையும் யார் மீதும் திணிக்கக் கூடாது.  இந்த இயற்கை முரணே வன்முறையை  தூண்டுகிறது.  இன்று அமெரிக்கா என்ற மிகப் பெரிய கிருஸ்துவ நாடும் இரான் என்கிற இஸ்லாமிய நாடும் எந்த நேரத்திலும் போர் மூளலாம் ( அக்டோபர் 2, 2019 - காந்தியின் 150 வது பிறந்தநாளில் எழுதும் குறிப்பு ) என்ற அச்சுறுத்தும் நிலையில் இந்த கருத்தை பகிர்கிறோம்.

மதமாற்றம் என்பதும் வன்முறையே. மலையின் மீது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மலை வாழ் மக்களை சமவெளியில் வாழும் மக்கள் நாகரிகம் இல்லாதவர்கள் போல் பார்க்க தொடங்கியதால் இன்று மலை வாழ் மக்கள் ரேஷன் அரிசிக்காக கால் கடுக்க நடந்தும் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளிவிட்டோம்.  அதனால் இன்று மலைகளும் எழில் குறைந்து மரங்கள் அற்று மழை மேகங்களும் இல்லாமல் வயல்கள் தண்ணீரின்றி வாடுகின்றன.

இன்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் " ஜார்வ" பழங்குடியினர் மட்டும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதாக அறிகிறோம்.  அவர்களையும் நாகரீகமாக்குகிறேன்  என்று ஒரு பாதிரியார் கடலில் குதித்து காணாமல் போய்விட்டார். 

இயற்கையென்னும் இறைவனுக்கு / இறைவிக்கு எத்தனை உயிர்கள் படைக்கப்பட்டதோ அனைத்து உயிர்களும் அவைகளுக்கு விருப்பமான ஒரு பெயரையோ உருவத்தையோ வழிப்பட்டே வருகின்றன.  இதில் மனிதரில் சில கூட்டத்தினர் மட்டும் நான் வணங்குவதை நீ வணங்கவில்லை என்றால்  என்று மிரட்டி ஓயாமல் போர் புரிகின்றனர். 

போதும்யா!!!
 "போர் போர் என்னும் கூவல் கேட்டு
போர் ( bore)  அடிக்கிறது "

வாங்க கொஞ்ச நாள் அமைதியா வாழ்ந்துட்டு நம்ம ஒவ்வொருத்துருக்கு "உள்" ளையும் "கட" க்கும் இறையையும் தட்டி எழுப்பி நாமும் "கடவுள்" ஆவோம்.
1000 கோடி பேரும் 1000 கோடி மதங்கள் தான். சக மனிதர , உயிர்களை துன்புறுத்தாம வாழ்வோம்.

எங்க கிராமத்தில இயற்கையோடு ஒன்றி வாழ ஒரு முயற்சியா இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயம் நடக்கும் நிலங்கள் உள்ள தெருவிற்கு காந்தி ஜெயந்தி இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் " நம்மாழ்வார் தெரு" என்று பெயரிடுவதாக தீர்மானம் இயற்றிட்டோம். 

(இடம் : மேல்பாச்சார் கிராமம்,  திருவண்ணாமலை மாவட்டம்) 

ஏன்னா இயற்கையை உள்ளது உள்ளபடியே ஏத்துகிறது தான் இயற்கை வேளாண்மையின் தத்துவம்.  நம்மாழ்வார்  அய்யா  எப்பவும் சொல்லுகிற விஷயம் "களை" என்று ஒரு செடி கிடையாது.  நமக்கு அதனோட பயன் தெரியாததால பெயர் தெரியாததால ஒரு செடியை வெட்ட நினைக்கிறோம்.  ஆனால் இயற்கை அந்த மண்ணுக்கு என்ன தேவையோ அதைதான் படைக்கிறது என்பார். 




Monday, September 23, 2019

பாரதியை ஒருமையில் அழைப்போம்

பாரதியின்  சீடரான பாரதி தாசனை கூட நாம் "அவன் " "எழுதினான்" என்று ஒருமையில் உரிமையோடு  குறிப்பிடுவதில்லை ஆனால் நாம் பாரதியை பற்றி குறிப்பிடும் போது  ஒருமையில் தான் குறிப்பிடுகிறோம்.



ஏன் இந்த வேறுபாடு ? பாரதி செல்வ ஏழ்மையில் வாழ்ந்ததாலா ? 
நிச்சயமாக இல்லை.  மற்ற கவிஞரின் கவிதைகள் அறிவை தொடும் மனதை தொடும்,  ஆனால் பாரதியின் சொற்கள் ஆன்மாவில் ஊடுருவி இரண்டற்ற ஒருமையில் கலக்கிறது.  இதனாலேயே நாம் எல்லோரும் இந்த அமரக்கவியை நமது உள் ஆன்மாவின் அறைகூவலாகவே பார்க்கிறோம்.  


Sakritease லோகோவிலும் அவனின் மீசையையும் பொட்டையும் அதனாலேயே  உரிமையோடு அவனைப் போல் கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் எழுத  முயற்சிக்க அவனின் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடுகின்றோம்.
https://sakritease.blogspot.com/2018/10/sakritease-facebook-page.html

https://www.facebook.com/sakritease/


சமகாலத்தில் வாழ்ந்த நமது உள்ளம் வரை பல பாடல்களில் தொட்ட நேர்மையான கவிஞர் கண்ணதாசனை கூட அவர் என்றே குறிப்பிடுகின்றோம்.  

ஏனென்றால் பாரதி என்பது நமது உள்ளே ஆன்மாவாய் கணண்று கொண்டிருக்கும் ஒரு அக்னி குஞ்சு.  

பாரதியின் செல்வ ஏழ்மையை எண்ணி பலர் வருத்தப்பட்டிருக்கலாம்.  ஆனால் அவன் இறந்தே நூற்றாண்டு நெருங்கும் வேளையில் இன்றும் நம்மில் பலருள் அணையாவிளக்ககாக கணண்று கொண்டிருப்பவன் என்ற நித்தயமான உன்னத நிலையை தொட்டவன் சுப்ரமணிய பாரதி மட்டுமே. 

தாகூரின் 100 கவிதை தொகுப்புகளை ஒன்றாக இணைத்தாலும் பாரதியின் ஒரு கவிதைக்கு ஈடாகாது.  

பாரதி "சிந்து நதியின்" பாடலில் பாரதி ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களை கொண்டாடுவான்,  ஆனால் தாகூரின் "ஜனகண " வில் மொத்த தென்னிந்தியாவிற்கும் ஒரு சொல்லில் "திராவிட"  என்று போட்டுவிட்டு தனது அறியாமையை தாகூர் வெளிப்படுத்தி இருக்கிறார்.  

வெள்ளையருக்கு சாமரம் வீசியதாலும் வங்காளிகளின் ஒற்றுமையாலும் தாகூர் ஏதோ மாபெரும் கவியை போல் இந்தியா கொண்டாடுகிறது.  

பறவைகளிடம் கூட ஜாதி பார்க்காமல் " ஜாதிகள் இல்லையடி பாப்பா " என்று பாடிய பிரபஞ்ச மாகவிஞனை " பார்ப்பனன்" என்று ஒதுக்கியது ஒரு சிறுமதியர் கூட்டம்.  இந்த கூட்டம் "பெண்ணின் உள்ளாடைக்குள் உள்ளம் தேடும்" காமவரிஞர்களை "கவிப்பேரரசு" என்று கொண்டாடி கூலிக்கு தமிழ் விற்கும் கும்பல் கூவுகிறது. 

இதனால் பாரதிக்கு எள்ளளவும் தாழ்வு இல்லை.  அவன் வணங்கிய சூரியனைப்போல் அவன் என்றுமே மறையாத சூரியன். 

சூரியன் என்பது எங்கும் உதிப்பதுமில்லை என்றும் மறைவதில்லை.  ஞாயிற்றுக்கு ஞாயிற்றுகிழமையில் விடுமுறை எல்லாம் இல்லவே இல்லை.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதாலே ஒளி பெறுகிறது மற்றும் இழக்கிறது.

பூமியே சுற்றுவது நின்றாலும் பாரதியின் தாக்கம் எங்கும் அவன் போற்றிய பராசக்தி  போல் விரவியே இருக்கும்.  

வாழ்க பாரதி!  வாழ்க வையகம்! 

செப்டம்பர் 11 / 12 2019 பாரதியின் 98 வது உடல் நீத்த நாளில் அவனின் நினைவாகவே

Tuesday, August 27, 2019

Goodminton Goldminton


GOODminton GOLDminton

It is overtime for all the goldsmiths of the world to make more gold medals and our Sindhu & Manasi have started winning gold from now on.  Sindhu & Manasi are the new age Kapil Devis opening the door for Indians at World Badminton.


For Cricket it was 1983 & Badminton 2019 both won by tall, dark,  passionate professionals.  

From now on let's all Indians call this sport as GOODminton there is nothing bad about it  anyway. 

Had our great poet Mahakavi Subramania Bharathi been alive he would have added a special line in his famous poem "Sindhu nadhiyin Isai" about this PV Sindhu too.  

( watch this song played in a Tamil Movie - https://www.youtube.com/watch?v=AKLzxSGhVyw )

In this poem, Bharathi had written about specialties of each region of India. What Bharathi would have exchanged for Sindhu's & Manasi's Golden shuttle cock probably another present day child prodigy Rahul Vellal (https://www.facebook.com/RahulVellal/ singing "Sindhu nadhiyin Isai" in praise of the true native dark Indian girl & slightly changed "Manasa sancharare " to "Manasi" sancharare.


Let's make case in the Supreme Court that the skin colour offending company brand "Fair & Lovely " rename as "Dark & Lovely" - the Sindhu has arrived in South India at Hyderabad - a long journey crossing many hills from the place of origin for the river Sindhu. 

Here many main stream media didnt give enough limelight, there is another world champion Ms. Manasi Joshi from India in this same championship. Once again we are all after grading the stars based on their market value. This shall change soon. Manasi, you have made India Proud.

On this 25th August 2019, Sunday, seems to be a day of individual brilliance. The 3rd test in ashes series between England & Australia, team from down under were dominating the total test match & England was on the mats at 286 for 9, when the last batsman walked in. World Cup hero Ben stokes once again rose up to the occasion to turn the tables upside down. 
incredible Ben stokes ashes 2019 - 3rd test 

The last wicket partnership scored unbeaten 76 runs with stokes contributing 73 runs out of it & Leach just scored an unbeaten one. "Never say die" is the standout point in this encounter which caught the attention of all the cricket lovers across the world. Most of the teams in the past have only surrendered to the opposition in such a tight spot. The same stokes who gave the four consecutive sixes to Carlos Braithwite in T20 world cup final has worked very hard to become one of the best batsmen for England. 

All the three wins have the same thing in common - Hard work, commitment, confidence can pay big dividends.

Sunday, August 18, 2019

athivarathar

அத்திவரதர் aththivarathar
aththi varathar க்கான பட முடிவு

வரதா வரதா உன்னை பார்க்க 
வரதா வேண்டாமா என்று
எண்ணும் அளவிற்கு
எண்ண முடியாத கூட்டம்

கச்சி ஏகம்பனையும்
காஞ்சி காமாட்சியையும்
40 வருடங்களாக தரிசித்தவர்
உன்னை 48 நாட்களில் 
காண ஒடி வந்துவிட்டனரோ!!!! 

ஆயர்பாடியிலிருந்து கண்ணன்
வந்திருந்தால் அவன் குழலில் ஊத
காற்றே இருந்திருக்காது 
இராமன் வந்திருந்தால் 
அவன் வில்லே முறிந்திருக்கும்
கயிலையின் நாயகன் வந்திருந்தால்
அவன் கங்கை தொலைந்திருப்பாள்
பிறையை காணாது வையமே இருண்டிருக்கும் 
சூரியன் வந்திருந்தால் அவன்
குதிரைகளின் கால்கள் தளர்ந்திருக்கும் 

நாக்கே தள்ளிடினும் 
உன்மீது நம்பிக்கை 
உந்தி தள்ளியதால்
நாலு இலட்சம் பேர்
நாள்தோறும் வந்தனரே
aththi varathar க்கான பட முடிவு
கறுத்த சிறுவனை 
சுமந்த சுந்தரியும் 
நின் கருத்த திருமேனிகாண
நிற்க துணிந்ததால் 
படுத்தவனை காணாமல் 
நின்றவனை காண விழைந்தோம்

நீள் நெடுந் தெருவில்
நீண்ட வரிசையில் 
நண்டும் சிண்டும்
நடை தளர்தாலும்
நரை விழந்தாலும்
நாராயணனை
நம்பியவர் பலரும் 
நடுநிசி தாண்டிடினும்
நாற்பதாண்டுக்கு பிறகு
நொடிக்காவது காண
நெடுமாலும் காத்திருந்தாரே

aththi varathar க்கான பட முடிவு

அத்தி வரதரே
அபய வரதரே
இருண்ட சாலையில்
இருள் கவிழ்ந்தபோதும் 
அருள் ஒளிப்பாய்ச்சி
அருமை உணர்த்திய 
அண்ணலே இனி 
அத்திமரம் தோறும் 
அருட் தோற்றம் தெரிய
அருள்வீர் நரன் தொழும்
நாரணா.

காத்திருந்தோரை வழிநடத்திய காவலரும் 
காலில்லோதோருக்கும் தாங்கி தரிசிக்க 
தூக்கிய காவல்தெய்வங்களே போற்றி
இரவு பகல் துஞ்சாது பெருமாளின் அருளை அள்ளி வழங்கிய அந்தணர் அனைவரும் குவிந்த மனிதரால் குவிந்த 
குப்பைகள் நீக்கி பலபல பணியில் ஆற்றிய பலரையும் குவிந்த கரங்களால்
எடப்பாடியார் முதல் இடுப்பொடிய 
பாடுபட்டு பரந்தாமனை காண வழிசெய்த அனைவரையும் வணங்குவோம் .


Translate

Contact Form

Name

Email *

Message *