NO Vax (K ) US ( A)
Search This SAKRITEASE Blog
Sunday, July 31, 2022
NO-Vax (K) -US
Monday, July 4, 2022
பஞ்சாங்கம் விஞ்ஞானமா ???
நம்பியது நாராயணனை போற்றும்
தும்பா நதிக்
கரை ஓரம்
தும்பை பூவாய்
உனது தீரம்
நம்பி உன்னை
இறக்கி விட்டது
விண்வெளி
வெகு தூரம்
விக்கிரமாதித்தன்
வேதாளம்
விட்டும்
விடாது வாட்டும்
விக்கிரமால்
விரிந்தது உன் வானம்
விகாஸ் எஞ்சின்
உன் வெகுமானம்
செயற்கை கோள்கள்
ஏவினாய்
செயற்கையாய்
கோள்கள் கூறினோம்
திரவங்களையே
நீ நம்பினாய்
திராவகத்தையே
உன்மேல் வீசினோம்
மாதவம் செய்தாய்
என்று
மாதவன் சொன்னான்
இன்று
நம்பாதது
‘நம்பி’யதை தூற்றும்
நம்பியது
நாராயணனை போற்றும்
பஞ்ச பூதங்கள்
கணக்கும்
பஞ்ச அங்கங்கள்
கணிக்கும்
வானவியல்
என்னும் விஞ்ஞானமே
வானோர்கள்
உணர்த்தும் மெய்ஞானமே
அணுவின் ஆட்டத்தையும்
அளந்தான்
அண்டமே பிண்டமென
கண்டான்
ஓரடி வைக்காத
மரத்தடி முனிவனும்
மூவடியால்
உலகளந்த கறுத்த சிறுவனும்
முகமதில்
வெண்காடே வளர்ந்தாலும்
கலம் கொண்டு
களம் பல கண்டாலும்
காற்றில்
போடும் புகை கோலம் தேவையில்லை
பால்வெளியில்
எதையும் சாரா பாய் கொண்டு பறக்க
மனவெளியில்
விரிசடையன் திருநடனம் காண்பாற் தமக்கே
- களக்காட்டு கவிராயர் கிருஷ்ண குமார்
1.7.2022 ராக்கெட்ரி - நம்பி விளைவு -இந்த படம் என்று வெளி வரும் என்று காத்திருந்து - முதல் நாளில் திரையரங்கில் காசு கொடுத்து பார்த்த படம். ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு படும் கஷ்டங்களை தாண்டி தன் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க அவரும் அவர் குடும்பத்தாரும் படும் சவால்களை மாதவன் குழுவினர் மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்கள்.
இந்த படத்தில் "மங்கள்யான்" என்ற செவ்வாய் கிரக ஆராய்ச்சி கலன் அனுப்ப பஞ்சாங்கத்தை கொண்டு எந்த நேரத்தில் கலத்தை விண்ணில் செலுத்தினால் அந்தக் கலம் மிகக் குறைவான செலவில் குறைவான காலத்திற்குள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் என்று திரு. நம்பி நாராயணனின் மருமகன் விஞ்ஞானி திரு. அருணன் கூறுவதாக ஒருக் காட்சி வருகிறது. இதை பற்றி இந்த படத்தின் இயக்குனர் திரு. மாதவன் படம் வெளி வருவதற்கு முன்பே ஒரு பேட்டி அளித்திருந்தார். அதற்கு பகுத்தறிவாதிகள் சிலர் கண்டனம் தெரிவித்ததால் படம் ஓடுவதற்கு ஏதாவது பங்கம் வருமென்று நினைத்தாரோ என்னவோ ? மாதவன் அவரது டிவிட்டை நீக்கிவிட்டதாக செய்தி வந்தது.
திரு. நம்பி நாராயணின் வாழ்க்கையே அவரை ஒரு நாடே தேசத் துரோகி என்று தூற்றிய போதும் , ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்த பின்பும், மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டாலும் அவர் நம்பிய உண்மையை அவரின் உண்மை நிலையில் என்றுமே மாறவில்லை என்பது தான் சிறப்பம்சமே.
அத்தகையதொரு வாழ்க்கை சரித்திரத்தை ஐந்து வருட காலமாக உயிர் மூச்சாக சுவாசித்து காதலித்து நடித்திருக்கும் மாதவன் , பஞ்சாங்கத்தின் மேன்மையை அதை பயன்படுத்தி வெற்றிக் கொண்டவர்கள் பக்கத்திலே இருந்தும் பின் வாங்கியுள்ளது ஆச்சரியபடுத்தியது. அதனாலேயே இந்த பதிவு எழுத தூண்டியது.
பஞ்சாங்கம் என்பது ஏதோ பிராமணர்கள் பூஜை செய்வதற்கும், கல்யாணம் மற்றும் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களுக்கு நல்ல நேரம் பார்க்க ஒரு சம்பிரதாயமான ( போலி நாத்திகர்கள் வார்த்தையில் கூறினால் பகுத்தறிவில்லாத , விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட, மூட நம்பிக்கையின் ஊன்று கோலாக ) சடங்காக நாட்காட்டியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க வான வெளியில் இயங்கும் அனைத்து கோள்கள் , கிரகங்கள் இயங்கும் வேகத்தை அவைகள் பூமியின் ஏற்படுத்தும் தாக்கத்தை துல்லியமாக கணக்கிட்டு கால கணக்குகளை வருடா வருடம் தமிழ் வருடப் பிறப்பின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
இந்த வைதிகம் எனும் கலையில் அனைத்துமே வானவியல் கணக்கின் அடிப்படையில் தான் அமைகிறது. இதில் மக்களுக்கு சந்தேகம் அல்லது அவ நம்பிக்கை வருவதே இந்த வைதிகர்கள் இந்த கிரகங்களின் நிலைபாட்டை வைத்து ஜோதிடம் என்னும் கலையில் எதிர்காலம் போன்றவற்றை கூற முற்படும் போது ஏற்படும் கணக்கும் பிழை மற்றும் ஜோசியங்கள் சொல்லுவதற்கு முன் கடைப்பிடிக்க பட வேண்டிய சில வழி முறைகளில் கடைப்பிடிக்கபடாமல் கூறுவதால் அவர்கள் கூறும் பலன்கள் சில சமயம் சொல்லிய படி நடப்பதில்லை.
எத்தனையோ விஞ்ஞான முன்னேற்றத்தில் கண்டுபித்தாக கூறப்படும் கருவிகளை கொண்டு பல முறை தவறாக மருத்துவம் பார்க்கப்பட்டு பல மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் மருத்துவர்கள் திறமை தானே தவிர மருத்துவம் எனும் விஞ்ஞானத்தின் குறையில்லை. அது போலவே முழுமையாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் தன் மனம் போன போக்கில் சில ஜோதிடர்கள் கூறிவிடுவதால் மக்களுக்கு ஜோதிடம் மீதும் அவர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் மீதும் அவநம்பிக்கை வந்து விடுகிறது. மருத்துவம் போலவே, ஜோதிடம், வானவியல், பஞ்சாங்கம் அனைத்தும் விஞ்ஞானமே.
மிக துல்லியமாக ஜாதகத்தை பார்த்து சொல்லக் கூடிய நல்ல அனுபவ்மிக்க ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் பல கணக்குகளை மனக் கணக்காகவும் சிலர் கைகளிலும், சிலர் எழுதியும் போட்டு பார்த்தபின்பு தான் பலன்களை கூறுவர். விரைவு உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவு படைக்கும் தரம் குரைந்த சமையற் கலைஞரை போல், இந்த வேக காலத்தில் பல ஜோதிடர்கள் வேகமாக பலன் சொல்லப் போக ஜோதிடம் என்னும் விஞ்ஞான கலை மற்றும் பஞ்சாங்கங்கள் மீது பழி விழுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடப்படும் பஞ்சாங்கங்களில் மிக துல்லியமாக அமாவாசை, பௌர்ணமி, போன்ற அன்றாட திதிகள் சரியாக எத்தனை நிமிடத்தில் ஆரம்பித்து எத்தனை மணி எத்தனை நிமிடத்தில் முடிகிறது என்று தெளிவாக குறிப்பு தருகிறார்கள். தினம் தினம் சூரிய உதயம் , மறைவு, நிலா ஒளி பிறப்பு மறைவு அனைத்தையும், இந்தந்த நாளில் இந்தந்த ஊரில் சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கு எந்தெந்த ஊரில் தெரியும் என்பதை மிக துல்லியமாக கணக்கிடுகிறார்கள். இவை அனைத்துமே இயற்கையின் ஒவ்வொரு நடப்பும் ஒரு கணக்கின் படியே நடப்பதால் இதனை ஆண்டு அனுபவித்தவர்கள் தங்கள் அனுபவத்தை அழகான கணக்காக விட்டுச் சென்றுள்ளனர்.
பண்டைய தமிழர்களின் விஞ்ஞான முன்னறிவிற்கு எடுத்துக் காட்டு "சிவப்பு" நிறத்தில் இருக்கும் ஒரு கிரகத்திற்கு "செவ்வாய்" என்று பெயரிட்டு அதனை வழிபட்டு இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.
அப்போது பண்டைய தமிழர்கள் ராக்கெட் வைத்திருந்தனரா ?? செயற்கை கோள் வைத்திருந்தனரா ?? என்ற விஞ்ஞான முன்னேற்றம் அடைந்திருந்தனரா ? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஆதித் தமிழர்கள் மெய்ஞானம் என்னும் உள் மன விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த பரு உடலை ஒரு கருவியாக்கி பிரபஞ்சத்தில் உள்ள பல நிகழ்வுகளை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருந்தனர்.
இதனையே சித்தர் பெருமக்கள் மிக எளிமையாக " அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம்" என்று மிக எளிமையாக விளக்கியுள்ளனர். அதாவது இந்த அண்டத்தின் அனைத்து தன்மைகளையும் இந்த பரு உடலிலும் இருக்கிறது. அதனால் இந்த பரு உடலை உள்ளுணர்வால் உணரக்கூடிய தன்மை பெற்றவர்களுக்கு இந்த பேரண்டித்தில் உள்ள அனைத்தையும் உணர முடியும்.
அதனாலேயே அன்றைய சித்தர்கள் பூத உடலால் செவ்வாய் கிரகத்திற்கு செல்லாமல் தமது சூட்சம உடல் மூலமாக செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை உணர்ந்து அதனை மிகத் தெளிவாக செவ்வாய் என்று கூறியதன் மூலம் உணரலாம்.
சைவ மதத்தின் நாயன்மார்களில் ஒருவரான மாணிக்க வாசக பெருமான் மிகத் தெளிவாக சிவலோகம் எனப்படும் உன்னத நிலையை அடைய தமிழ் சொற்களின் அமைப்பின் மூலமே "சிவத்தன்மையை" உணர்த்துகிறார். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மிக எளிமையாக எது சிவம், அந்த நிலை உணர இந்த பரு உடலை எப்படி பயன்படுத்த வேண்டும், மன நிலையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அனுபவித்ததையே பாடல் வடிவில் விளக்கமாக விளக்கியுள்ளனர்.
நாம் இன்றைய காலக் கட்டத்தில் மனித உடலுக்கு புறத்தில் உள்ள கருவிகளை கொண்டே இந்த கிரகங்களை அணுக முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த புற கருவிகளை வடிவமைப்பவர்களே விஞ்ஞானிகள் என்று வியந்து வருகிறோம். ஆனால் இந்த பரு உடலால் உணர முடியாத தன்மையிலும் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் பலவற்றை அனுபவித்து இயற்கை வழங்கியுள்ள உடலை கொண்டே உணர வழிச் சொல்லி சென்றுள்ளனர் உண்மையான விஞ்ஞானிகள் மெய்ஞானிகளே.
| ஐரோப்பிய அணு ஆராயச்சியில் நடராஜ சிலை - அணுவின் ஆட்டத்தை விளக்கும் விதமாக |
சகிருட்டிஸ்
Sakritease
July 2022
Saturday, June 25, 2022
Kapil the DEVILery of Cricket
A Committed Sinner Par Excellence
Everyone of His Delivery
was an art of DEVILery
His every Outswinger
was India's mood swinger
He appeared on ad of shaving cream
every forest was shaven till we scream
Every tree was cut for a willow
Every street had a fellow
who will stroke a unseen ball
to sixer
every teen became azharuddin
every ghar had one tendulkar
Every traffic policeman had a Prayer
Let's play everyday a one dayer
No road had traffic
cricket fever became terrific
That red cherry
was corona of 83
Streets were full of sons
every dozen became an opposition
Every moment in Sun
were cherished as fun
Sinner didnt lose his sight
for everyone's delight
threw his weight
showed India's Cash under the Light
Till that day ( 25 June 1983)
when Lloyd Marshalled
his last gentlemen
Till that Moment
Vivian was Caught
by that acumen
Cricket was a Game
played Under Lord('s) Sun
still the Man with Toothful Grin
Kapil Dev ka Jawab Nahin
Oh Lord Kapil Dev ( Lord Siva )
Save us from Lord's Kapil Dev
The Cricket -The Endemic Fever of India
sakritease 25 June 2022
Sunday, May 22, 2022
SriSinka Thoththa paya
ஸ்ரீசிங்கா தோத்தபய ராஜபக்சே
இன்றைய நிலையில் ஒரே ஒரு நாளைக்குத்தான் பெட்ரோல் இருப்பதாக இலங்கையின் புதுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இலங்கையின் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இளவரசன் சித்தார்த்தன் போதி (அரச) மரத்தடியில் ஞான நிலையை தமிழ் மாதமான வைகாசி விசாகத்தில் முழு நிலவு நாளன்று (16.5.2022 ) அடைந்ததாக உலகம் முழுவதும் பௌத்தர்கள் இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் கொண்டாடினர். புத்த மதத்தை தழுவிய இலங்கை சிங்களவர்களால் இந்த பௌர்ணமியை மனதார கொண்டாட முடியவில்லை.
புத்தனின் அக விரிவாகத்தை உள்வாங்காமல் போன புத்தனை வணங்கும் சிங்களவர் உள் விரியாமல், ஆதிக்க வெள்ளை தோல் மயக்கத்தில் இன்றும் அடிமையாய் பிரித்தாளும் அயல் நாட்டு சதிகளில் சிக்கி சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என்று பன்முனை வன்முறைக்கு உள்ளாகி பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது.
இலங்கை இந்தியாவின் கேரளாவை ஒத்த மலை சீதோஷண நிலையில் அற்புதமான பல மூலிகைகளை இயற்கையாகவே உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு இந்தியாவை போன்று மிளகு, ஏலக்காய் போன்ற அடர் காடுகளில் இயற்கையாய் வளர்ந்த தாவரங்கள் கொண்டு தனது பொருளாதாரத்தை சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலங்களுக்கும் முற்பட்டு இயற்கையால் வார்த்தெடுக்கப்பட்ட சொர்க்க பூமியாக இருந்தது.
| "ராஜராஜன்" பெயர் பொறித்த கல்வெட்டு |

மன்னராட்சியில் தன்னை நோக்கி மன்னர் பதவி வந்தும் அதனை மக்கள் மூலமாக குடவோலை முறையில் ஓட்டெடுப்பு நடத்தி தான் பதவி ஏற்பதை அந்த மாமன்னர் இராஜ இராஜ சோழர் மக்களாட்சி நடத்தி உறுதிபடுத்தியிருக்கிறார். அரசன் என்ற அகம்பாவம் துளியும் இன்றி அனைத்தும் இறைவன் என்னும் இயற்கையின் பேராற்றல், மக்கள் அதனை போற்றி அந்த இறைவனின் திருப்பணியாக மக்கள் சேவையாக வாழ்க்கையை இறைபணியாக வாழ வேண்டும் என்று தஞ்சையில் பெரூவுடையார் - சிவ பெருமானை - பிருமாண்டத்தை விளக்கும் விதமாக ஒரு பெரிய கோவிலை அமைத்து, அதனை மையமாக வைத்து நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ளார். அனைத்து செயல்களிலும் இறைவனின் பேராற்றலை ஒவ்வொரு கணமும் போற்றி வாழும்படியாக வாழ்ந்ததால் அந்த நாட்டில் மக்களிடம் பொறுப்புணர்வும் கலையுணர்வும் காவிரி ஆறு போல் பெருக்கெடுத்துள்ளது. பல நாடுகளுக்கும் தமிழர்களை விவசாயம் செய்ய, சொல்லிக் கொடுக்க ஆங்கிலேயர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம். இதனாலேயே இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்ரிக்கா என்ற பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்வியல் பரவியுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் "மகிந்தனின்" எண்ணம் மாறவில்லை, இலங்கை இன்றும் நல்ல ஆட்சியாளர்களை தேடிக் கொண்டிருக்கிறது. அதே போல் ஆயிரம் ஆண்டுகளின் பின்பு மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் "ராபர்ட் ஹான்சன்" ஆக பிறந்தாலும் இதே இலங்கைக்கு அந்த இராஜாதி இராஜன் தன் குருவான "யோகசுவாமி" என்ற சைவ சித்தாந்த குருவை நாடி வந்து சிவாய சுப்ரமணிய சுவாமியாக அவதாரமெடுத்து சைவ சித்தாந்தத்தை உலக மெங்கும் 50 இடங்களில் "இறைவனார் திருக்கோவில்" களை நிறுவி நல்லெண்ணங்களை பல கோடி மக்களின் மனத்தில் நிறுவி அதற்கு தலைமை பீடமாக ஒருங்கிணைந்த அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் குஹ்வாய் மடத்தினை நிறுவியுள்ளார்கள். அரசனாக பிறந்தாலும் எளிய தொண்டனாக தன்னிரகற்ற சேவை செய்வபர்களால் மட்டுமே இந்த பூமி வளம் பெரும். ( இவரை பற்றிய இணைய குறிப்பு Sivaya_Subramuniyaswami )
இதற்கு பொதுமக்களின் பார்வை,எண்ணம் குறைந்த கால லாபங்களை, இலவசங்களை நாடாமல் உயிரினங்களின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு வாழ்வோமானால் நம்மிடையே பிறக்கும் அரசியல்வாதிகளும் எண்ணங்களில் செயல்களில் விரிவார்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படும் அனைத்து பேராசைகளும், அடாவடிகளும், அட்டூழியங்களும் சாதாரண குடிமக்கள் பலரிடம் நிறைந்திருக்கும் குணங்களின் பிரதிபலிப்பே. நாம் எல்லோரும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் போலவும் தலைவர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல சித்தரித்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். நம்மிடைய நன்மை மிகுந்தால் "இராஜ இராஜ"ர்கள் ஆட்சிக்கு வருவார்கள். நம்மிடையே தீமை மிகுந்தால் "மகிந்த"ர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள்.
அனைவரும் இறைவனின் (இயற்கையின்) அற்புத படைப்பு என்ற மன பக்குவ கண்டு தொலை நோக்கொடு அனைவரோடு பகிர்ந்து வாழும் உண்மையான நாகரீகத்திமான ஆப்பரிக்க பழங்குடி மக்களின் "யுபுந்து" என்ற தத்துவப்படி இயற்கையிடம் குறைவாக நுகர்ந்து அவரவர் வாழும் இடங்களில் இயற்கையாக விளையும் பொருட்களை உண்டு வாழ்ந்து மனிதப் பிறவி என்ற அற்புத வாழ்வை போற்றி இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களும் எந்தவித பயமுமின்றி வாழ எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் அருள் புரியட்டும்.
"உபுந்து" என்பது கிட்டத்தட்ட மகாகவி சுபரமணிய பாரதியார் கூறியதை போல் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற கோட்பாடின்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது. இன்றைய நிலையில் நாம் நாகரீக உலகில் வாழ்வது போல் அலட்டிக் கொண்டு அநாகரீகமாக மலைகளை வெட்டி குவாரிகள் ஆக்கி மரங்களை வெட்டி சவப் பெட்டிகள் அலங்காரங்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். ஆப்பரிக்க காடுகளில் தான் இன்றும் சில நாகரீகமான மனிதர்கள் இயற்கையோடு மிகவும் ஒன்றி மிக குறைந்த நுகர்வு முறையில் இயற்கை அளிப்பதை மட்டும் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்க்கிறார்கள்.
தனக்காக வாழ்பவர் அனைவருமே "தோத்தபய" தான். அதுவரை இந்த பூமி ஒரு "ஸ்ரீசிங்கா" தான். மனிதம் என்பது மூழ்கிய "சிங்க்" (sink ) தான்.
சகிருட்டிஸ்
sakritease May 2022
Monday, May 2, 2022
Ramadan wishes
எடுத்துக்காட்டாக திரு. ஏ. ஆர். ரஹ்மான் உலகம் போற்றும் உன்னத இசைக் கலைஞர். அவர் முதன் முதலில் "சின்ன சின்ன ஆசை" என்ற பாடலுக்கு இசையமைத்து சினிமாத்துறையில் தன் தடம் படைத்தார். அதற்காக அந்த ஒரு டியூன் மட்டுமே தான் போடுவேன் மற்ற டியூன் போடமாட்டேன் என்று கூறியிருந்தால் அவரின் திரை இசை பயணம் 30 ஆண்டுகள் நீடித்திருக்க முடியாது. ஒரே ராகத்தில் இசையமைத்தால் கூட அதற்கு வேறொரு பாடகர் வேறொரு இசைகருவி என்று பல வித்தியாசங்களை அதில் சேர்த்து ஒரு புதுமையான பாடல் கேட்கும் உணர்வை அளிப்பதில் வல்லவர்.
Sunday, May 1, 2022
My National Language is ......
A never ending debate goes on & on about the common language which Indians shall use.
This article is a lateral analysis on Technical and National point of view.
Come on ! Let us take on the bull on its horn, which language might have originated first.
For this we can analyse the consonants of four Languages as in the picture below :
In the four given, you can see Tamizh ( Tamil as commonly written ) doesnt have the three variations of 'Ka" as you can see in other three languages. In this generation, if we compare our computer languages, newest language have more tributes than the older languages and as we always would have experienced the latest are always adding new features to the existing ones. So from this perspective it is clear that Tamizh would have originated first.The Tamizh (Tamil) which has originated in the Lands of Lemuria ( Now this land mass is buried under the Indian ocean between India, Australia and eastern Africa) is about 20,000 years old. Knowing this, we begin to wonder why some people are trying to expedite "keezhadi" archaeological site expedition to establish Tamil is 2000 Years old. If Archaeological Survey of India, wants to do any meaningful expedition, it should be under this ocean. Probably some good sense prevail soon for unearthing the antiquity of this region.
![]() |
| Hindi Sign boards inside Tamil Nadu Govt administered Arunchaleswarar Temple |
Friday, April 15, 2022
அண்ணாமலையை வாழ்த்திய ராகுல்
Thursday, March 24, 2022
TMS 100
இசை தமிழின் தவக் குரல்
Sunday, March 13, 2022
Punjab's Brooms day விளக்குமாறு
பஞ்சாப் தேர்தல் 2022
சிங்கங்களுக்கு மான் பிடிக்கும்
சிங்குகளுக்கும் மான் தான் பிடிக்குமா ?
(பகவந்த சிங் மான் )
பேச்சறிவால்
வென்றாரா ?
காங்கிரஸ்
சோனி (யா) ஆனதால்
வென்றாரா ?
யாராவது
விளக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம் ?

















