Search This SAKRITEASE Blog

Friday, April 15, 2022

அண்ணாமலையை வாழ்த்திய ராகுல்


கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர் கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு  "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள் ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

சகிருட்டிஸ்

Thursday, March 24, 2022

TMS 100

 இசை தமிழின் தவக் குரல் 


I can only pity those who are not fortunate to listen to pure Tamizh diction of Late. Sri. T. M. Soundar Rajan, who made immense contribution to Tamil Cinema & Devotional Music and gave careers to the then Super stars MGR & Sivaji in their hey days in 1950-1980. Hindi Play Back singers like Mohd. Rafi and Kishore Kumar might have thanked their stars as Music kept TMS busy in South Indian Music.

இவர் சிவாஜியின் குரலா , எம் ஜி ஆரின் குரலா ??
சிவனுக்கே இவர் தான்யா குரல் 
"நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே" என்ற
பாடல் வரியை கேட்டவர் எல்லாம் சிவனை இசையால் உணர்ந்தவர் என்று
அறுதியிட்டு உறுதி கூறலாம்.



"நான் ஆணையிட்டால்" என்பார்
எங்க வேலை செய்யலன்னா நம்ப முதுகு தோல்
உறிஞ்சுடுமோங்கிற அளவிற்கு மிரட்டுவார். 



"புதிய வானம் புதிய பூமி" ன்னு இவர் குரல் கொடுத்தா
நமக்கே சிம்லா குளிர்ல பெட்டிய கைல வச்சுகிட்டு ஜாலியா 
பாட்டு பாடிகிட்டு போலாம்னு தோனும்.



கண்ணதாசனும் விசுவநாதனும் ஒரு மூங்கில வெட்டி வந்து துளை போட்டா அதுலயும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"னு அந்த சௌந்திரமான ராஜக் குரல் தான் கேட்கிறது.



வைணவராக பிறந்தாலும் முருகனுக்கு அனைவரையும் அடிமையாக்கி " உள்ளம் உருகுதய்யா " என்று உருக்கி இன்றைக்கு சூப்பர் சிங்கர் வரை கோலோச்சும் "முத்தைதரு பத்தித்திருநகை" பாடலால் இன்றும் அருணகிரி போற்றிய தமிழை வளர்ப்பவர். 



தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும் அதிலும் இசை தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மூன்றெழுத்து ,
டி.எம்.எஸ்
தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பிறந்துள்ள பலருக்கும் தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை, அதனால் இவர் பாடல்களை மாணவர்கள் தினமும் கேட்கும் படியாக இவர் குரலில் பாடிய " நீராரும் கடலுடுத்த" என்ற தமிழ் தாய் வாழ்த்தையாவது தினம் கேட்கும்படி செய்ய வேண்டும். 

வேற்று மொழிக்காரர்கள் இவர் பாடல்களை கேட்டாலே தமிழ் எளிதாக பிழையில்லாமல் கற்றுக் கொள்ளலாம்.

என்னதான் நானும் கிஷோர் குமாரின் இந்திப் பாடல்களின் ரசிகனாக இருந்தாலும் , அவரின் "படோஸன்" திரைப்படத்தில் " ஏக் சதுர் நார்" என்ற பாடலில் தமிழ் வித்வானுக்கு பாட டி.எம்.எஸ் ஸை அழைத்திருந்தால்,  கிஷோர் குமாருக்கு சரியான போட்டியாக இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். இதற்கு ஏதாவது சாப்ட்வேர் அல்லது ஆப் வந்துள்ளதா ? என்று யாராவது விவரம் தெரிந்தால் சொல்லவும். இதுவரை வரவில்லையென்றால் புதிதாக வடிவமைப்பவர்கள் , நமக்கு மனதிற்கு பிடித்தவரின் குரலில் அவர் பாடாத பாடல்களை அவர் குரலில் பாடியிருந்தால் எப்படியிருக்கும் என்று ரசிக்க நன்றாக இருக்கும்.




பல நூறாண்டுகள் தமிழ் பேசும் இடங்களிலெல்லாம் டி.எம். சௌந்திர ராஜனின் கம்பீர குரல் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

" ஓர் ஆயிரம் பார்வையிலே" என்ற வார்த்தையை கேட்டால் " ஓரு கோடி குரல்கள் கேட்டாலும் இந்த குரலோட தனித்துவம் வராதுன்னு உறுதியா சொல்லலாம். 




Sunday, March 13, 2022

Punjab's Brooms day விளக்குமாறு

 பஞ்சாப் தேர்தல் 2022



சிங்கங்களுக்கு மான் பிடிக்கும்

சிங்குகளுக்கும் மான் தான் பிடிக்குமா ?

(பகவந்த சிங் மான் )


கெஜ்ரிவால்

பேச்சறிவால்

வென்றாரா ? 



காங்கிரஸ்

சோனி (யா) ஆனதால்

வென்றாரா ? 


யாராவது

விளக்குமாறு 

கேட்டுக் கொள்கிறோம் ?


சகிருட்டிஸ் Sakritease


Saturday, January 15, 2022

No VAX Slam Australia

 


At this time Australia is contemplating cancelling the Visa for Serbian Tennis Star Novak Djokovic as he is not vaccinated to enter Australia and Australian Tennis Grand slam event. When most of the developed world claiming to be fully vaccinated, a Tennis Super star, probably the Only sports person to openly challenge the Vaccination drives and oppose the Vaccination theory of Global Pandemic. As the events unfold it is most likely, he will be barred from participating in the Game's other events. But the questions he has raised will not be answered on the face value : why there is more more infections where there is more vaccination being done ? When some European Nations have asked their nationals to start living with this virus too as with any other flu virus. Covid-19 - Delta, Beta, gamma, Omicron are as usual virus variants happening like Dengue, Chikungunya, flu viruses. Humans immunity system  automatically develops, developed immunity sheath naturally. is this not like shakespeare's Emperor's new clothes story ? 


The Naked truth of Vaccination has been aced by a Tennis star, who has 20 Grand slams to his name. This is the real slam he has aced now. Africa, one of the biggest continents with a large population with least vaccination is also least infected. Probably Nadal & Andy Murray are happy to cry foul as they stand a chance to clinch the Australian Title without a Serbian defence. It is wide open to guess, what will happen to a person, who is bold enough a call a spade a spade, An Australian, founder of Wikileaks, Julian Assange, languishing in an embassy in UK. 


ஊரில் அம்மணமாக பலர் திரியும் போது ஒரே ஒருவன் கோவணம் கட்டிக் கொண்டு சென்றால் ஊர் எப்படி தூற்றுமோ அப்படி இன்று ஆஸ்திரிலேயாவின் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள உலகத்தின் முதல் தர டென்னிஸ் வீரர் செர்பியா நாட்டின் "நோவாக் ஜோகொவிச்" தான் கரோனா கிருமிக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள போவதில்லை என்றும் தான் ஏற்கனவே இந்த கிருமியினால் பாதிக்கப்பட்டு நலமானதால் தனக்கு தடுப்பூசி தேவை இல்லை என்றதும் ஆஸ்திரேலியா நாடு அவரை நாடு கடத்த அவரின் விசாவை தடை செய்ய முடிவிற்கு வந்து விட்டது. ஐரோப்பாவில் இந்த வைரஸ்ஸையும் வழக்கமான மற்ற ஜுரம் வரவழைக்கும் வைரஸ் போல வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற பேச தொடங்கி இருக்கும் வேளையில் இந்த உலகத்தின் முன்னணி டென்னிஸ் வீரரை விளையாடவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் பலரும் இறங்கியுள்ளனர். நோவாக் விளையாடமல் போனால் ஜெயிக்க வாய்ப்புக் கிடைக்கும் நடாலும் முர்ரேவும் நோவாக்கிற்கு தடை உருவாவதில் உள்ள சந்தோஷம் கண்கூடு.

இன்றைய காலகட்டத்தில் அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் தான் தினமும் அதிக பாதிப்புகள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போட அந்த நாடுகளின் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை அல்லது மக்கள் விருப்பம் காட்டவில்லை அங்கு இந்த கிருமியின் புதிய வடிவத்தினால் பாதிப்புகளும் குறைவாகவே உள்ளன.   இந்த கிருமிகளின் பாதிப்புகள் குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.  எந்த கிருமிக்கும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை ஒவ்வொருவரின் உடலே உருவாக்கும் என்று இயற்கை உடலியலை கூர்ந்து நோக்குபவர்களின் கருத்தாக உள்ளது. இல்லை செயற்கையாக தடுப்பூசி மூலமாகவே உருவாக்க முடியும் என்றும் நம்பும் ஒரு ஆராய்ச்சியாளர்கள் கூட்டமும் உள்ளது.  ஆனால் மாற்றுக் கருத்து கொண்டவர்களை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் செயலும் நடக்கிறது.  உலக நாடுகள் பலவற்றின் ஊழல்களை உரக்க அமபலபடுத்திய ஆஸ்திரேலியாவின் 'விக்கிலீக்கிசின்" ஜூலியன் அசாஞ்செ இன்று பிரிட்டனில் ஒரு மன நோயாளி போல் ஆக்கப்பட்டு உண்மைகளை வெளியில் சொன்னதற்கு ஊமையாக்கப்படு வருகிறார். 

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வருவது போல் எந்தவித புது ஆடையையும் அணியாமல் வரும் "மாமன்னரின் புதிய ஆடை" காணாமலே கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஏட்டு சுரக்காய்கள் நாடுகள் பலவற்றில் முற்ற தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. 


இது ஒரு சகிருட்டிஸின் நேர் பார்வை.
 Sakritease's crying foul.






Friday, December 3, 2021

Oh My (Micron ) God

                         ஓ மை (க்ரான்) கடவுளே !!!!!


2019ல் வுஹானில் ( சீனா) தொடங்கிய ஒரு கரோனா உயிரியின் ( வைரஸ்) பயணம் தொடரியாக தொடர்கிறது. 

உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களின் உயிரை காக்க தடுப்பூசி எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன. 

இந்த உயிரிகளின் இயல்பே தங்களை கொல்ல / அடக்க வரும் விஷத்தை கொண்டே தங்களை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மையை இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் அளித்துள்ளது.

பூச்சி மருந்து தெளிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அனுபவத்தில் ஒரு பூச்சியை கொல்ல ஒரு மருந்தை பயன்படுத்தினால்  அடுத்த வருடம் அதே மருந்து அந்த பூச்சியை கொல்லாது என்றும்  அடுத்த வருடம் அதை விட வீரியமான ஒரு விஷத்தை தெளித்தால் தான் அந்த பூச்சியை கொல்ல முடியும் என்பது அனுபவ பாடம்.

ஆனால் உண்மையில் நமது பாரம்பரிய ஆரோக்கியமான விவசாய முறையில் பயிரை பலப்படுத்தி பூச்சியை விரட்டும் வழிமுறைகளினால் மட்டுமே ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய முடிகிறது. பூச்சிகளை கொல்லும் எந்த மருந்தும்  மனிதனையும் கொல்லும் என்பதே இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம். 

வைரஸ் / பாக்டிரியா போன்ற நுண்ணியர்கள் இல்லாமல் உலகில் எந்த இயக்கமும் இல்லை. பாலை தயிராக்குவதற்கு கூட ஒரு நுண்ணியரி உதவினால் மட்டுமே முடியும். 

இந்த பதிவை எழுதும் போது இந்தியாவில் 125 கோடி பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில் கரோனா கிருமி இப்போது தன்னை எதிர்க்கும் உடல்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டே வருவது புலனாகிறது.  இப்போது வந்திருக்கும் வடிவ மாற்றத்திற்கு ஓமைக்ரான் என்று பெயரிட்டுள்ளனர்.  இது வரைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகள் "டெல்டா" என்ற வடிவமைப்பிற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.  அதனால் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல் இந்த ஓமைக்ரான் வடிவமைப்பை எதிர்க்குமா ?? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

மனிதர்கள் தோன்றுவதற்கே இந்த கிருமிகள் தான் காரணம்.  இந்த ஐப்பசி மாதத்தில் ( அக்டோபர் - நவம்பர் 2021 ) வரலாறு காணாத அடைமழை பெய்து இது வரை வெள்ளமே வராத ஓட்டமே இல்லாத பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த பல வருடங்களாக ஓடாத ஆறுகளில் வெள்ளம் வந்த போது மீன்கள் எங்கிருந்து வந்தன ????????  



இயற்கை மீன்கள், தவளைகளின் முட்டைகளுக்கு தகுந்த சூழ்நிலை வரும் வரை உறங்கும் நிலையில் இருக்கக் கூடிய தன்மையை வழங்கியுள்ளது.  இதே போல் கோடானு கோடி உயிரினங்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய உயிரிகள் வெளியே வருவதற்கும் பூமியில் மனித இனம் அளவிற்கு அதிகமாக இயற்கை வளங்களை சுரண்டுவதால் கிருமிகளின் வீரியம் அதிகமாகி மனித இனத்தின் எண்ணிக்கையை குறைக்க முனைந்திருக்கிறது. மீனிலிருந்து . தவளை, தவளையிலிருந்து ஆமை என்று பரிணாம வளர்ச்சியில் மனிதன் வரை இயற்கை பல வித உயிரினங்களை படைத்துள்ளது.  இந்த உயிர் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. இதில் எந்த உயிரினம் பாதிக்கபட்டாலும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும். 

இது போல் அதிக நாள் பயன்படுத்தாத தானியங்கள் வைத்திருக்கும் காற்று புகா வண்ணம் இருக்கும் ஜாடிகளில் கூட புழுக்கள், வண்டுகள் உருவாகிவிடுகின்றன. எங்கே இருந்தன அந்த வண்டுகள் ?? எந்த உயிரினத்தின் உடலும் இறந்த பின் அதன் வெப்பம் குறைய தொடங்கிய உடன் புழுக்கள் வந்து அழுக தொடங்குவது எப்படி ? அத்தனை மெதுவாக ஊறக்கூடிய புழுக்கள் எப்படி இந்த உடல் இறந்துவிட்டது என்று தெரிந்து கொண்டன ? எங்கிருந்து வந்தன ??  உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் இதே போல் நடப்பது யார் எழுதிய இலக்கணம் ??? இதுவே பிரபஞ்ச விதி.  ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் உறக்க நிலைகளில் பல உயிரினங்கள் இருக்கின்றன. தகுந்த சூழ்நிலை உருவானால் அந்தந்த உயிரிகள் உயிர் பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. 

https://www.who.int/news-room/fact-sheets/detail/chronic-obstructive-pulmonary-disease-(copd)

நெஞ்சகத்தில் நுரையிரல் சம்பந்தமாக வரும் நோய்களால் வருடத்திற்கு 32 இலட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் இந்த இணையதள தகவல் தெரிவிக்கின்றது. 

https://www.worldometers.info/coronavirus/?utm_campaign=homeAdvegas1?

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஜனவரி 2020 முதல்  நவம்பர் 2021அதாவது கிட்டத்தட்ட 2 வருடத்தில் கரோனாவினால்  52 இலட்சம் பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

கரோனாவோ வேறெந்த கிருமியினாலோ தாக்கபடாமலேயே கூட இந்த உலகத்தில் மக்கள் இதே அளவிற்கு இறந்து வருகின்றனர் என்பதே யதார்த்தம். மிக முக்கிய காரணம்  சுற்று சூழல் மாசு அதிகமாக விரியும் தன்மை குறைந்து உள்ள நுரையிரல்களை தாக்குகின்றன.  சுத்தமான காற்று, சுத்தமான குடினீர், தூய்மையான  சத்தான உணவு, இயற்கையை ஒத்த வாழ்க்கை முறை மட்டுமே நுரையிரல் சார்ந்த இறப்புகளை குறைக்க உதவும். 

கரோனாவிற்கு பயந்து இப்பொது மீண்டும் ஓமைக்ரானிற்கு பயந்து ஏ.சி. அறைகளில், கார்களில் இரண்டு முகக் கவசங்கள் போட்டால் நுரையிரல் விரியாமல் மேலும் சுருங்கிவிடும். எதற்கு பயப்படுகிறோமோ அந்த விபரீதத்திற்கு வழி வகுப்பது போல் நமது முன்னெச்சரிக்கை கொண்டு செல்கிறது.



முக்கியமாக நாம் நெருக்கமாக வாழும் நகரங்களை விட்டு நகர வேண்டும் என்று கரோனோ மற்றும் அதன் புது வடிவம் ஓமைக்ரான் நமக்கு உணர்த்தும் பாடம்.  

இயற்கையிலிருந்து நாம் நுகர்வதை குறைக்க வேண்டும்.  மலைகளை , மரங்களை, அதில் உற்பத்தியாகும் ஆறுகளை நாம் சீராக பாதுகாத்து போற்றி நன்றியுடன் வாழ்வதே நமக்கு நோய்களிலிருந்து விடுதலை பெற வழி. 

நாம் போடும் குப்பைகளை போட்டபடியே நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்தோம் என்றால், மனிதர்களை குறைக்க இயற்கையிடம் ஆயிரம் வழிகள் உள்ளன.  இயற்கை அனுப்பும் ஒரு சின்ன ஓமைக்ரான் கிருமியை தாங்ககூடிய சக்திகூட பெரும்பான்மையான மனிதர்களிடம் இல்லை என்பது தான் இன்றைய நிஜம். 

கிருமிகளிடம் இருக்கும் இறை தன்மையை உணர்வோம்.  இயற்கையின் படைப்பாற்றலை பணிவோடு போற்றி வாழ்வோம். 

சகிருட்டிஸ்.

Monday, November 1, 2021

NO ash No win

 NO Ash No Win


Everyone is puzzled Why Virat Kohli is avoiding R Ashwin in any format.

In a must win game against New Zealand on 31st Oct 2021 he chose to not to pick Ashwin.

There is something gone wrong between Ashwin & Kohli before the England Tour where he benched Ashwin in all the four tests played there. That too when Ashwin of recently playing only Test format for BCCI's team.  R Ashwin even played one off game for Surrey and picked 6 wickets in an innings on the English Soil. Even on the World Test Chamionship final , Only Ashwin was threatening NZ batsmen and only one to pick the wickets. 

Most bizzare happened before the 4th test started in England, when Kohli explained he prefers Jadeja over Ashwin as there are more left handers in English side. The statistics says the quite opposite story where Ashwin is the highest wicket taker of Left Handers. Even the most dangerous English Player Ben stokes had become a sitting bunny for Ashwin.

In the ongoing ICC T20 world cup too. In the two matches played till now, neither bowlers nor batsmen could make any impact on the opposition. Pakistan rubbed hard on the wound with a NO Loss victory. Kohli has now a unique record of being the only captain to get defeated by a Pakistan Side in a ICC tournament. 

All these are happening because of high ego quotient of Kohli. Even after his ignominious exit after 36 all out at Adelaide against Australia, more silent task master Ajinkya Rahane could win the whole series with the same set of men & that too even with Net bowlers  at Gabba, Brisbane.

It is mainly due to the Chest Thumping attitude of Virat Kohli and not listening to the fellow mates instead even focusing fighting with Spectators on the Ground. Calm & Cool captains like Kane Williamson, Eoin Morgan, Rohit Sharma & Ajinkya Rahane are able to inspire more and are allowing the team members to raise up to the occasion. Kohli's "I am the boss" attitude is not bringing the best of out of Indian Cricketing Men. Lets not allow the great Batsman in Kohli to die in this process. Virat !! Quit Captaincy and focus on Batting like Sachin Tendulkar.

Everyone is able to gauge from Kohli's reactions that he is not happy with BCCI management in appointing Rahul Dravid as the Next Head Coach. Rohit, Rahane or KL Rahul or even Pant will gel with the Task Master Dravid and bring out their best in the best interests of the team. 


Kohli must know Kumble's 619 wickets is more valuable than Sachin's 25,000 runs or Kohli's 50,000 runs.  Batsmen scoring runs on a batsmen friendly wickets and rules in either on IPL or ICC tournaments, bowlers are more valuable than a batsman. So Ashwin quick to take 400 + test wickets needs to get more opportunities and bring more glory to the cricket mad country like India. 

 



Rajini (K) Can't (H) Be Fair

 Rajini (K) Can't (H) "Be Fair"

அண்ணாத்தேசே😲


எத்தனை கோடி மக்கள் மனதில் மாற்றம் வராதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தி, புண்களை ஆற்றக்கூடிய ஆற்றல் மிக்கவராக பார்க்கப்பட்டவர் இன்று அந்த புண்ணிற்கு உரம் போட்டு புற்று நோயாக மாற்றிவிட்ட புகழுக்கு சொந்தக்காரர். 


திரு. "சோ" ராமசாமி ஒரு தீர்க்க தரிசி என்று நினைத்திருந்தோம். 1996ல் இவரை முதல்வராக்க அரும் பாடுபட்டார். நல்ல வேளை இன்று இந்த "அண்ணாத்தை"யை கண்டிருந்தால் அவர் "அச்சச்சோ" ராம சாமி இப்படி ஆயிடுச்சே பலராலும் துக்கம் விசாரிக்கப்பட்டிருப்பார். 


"ஆன்மீக அரசியல்" "இப்ப இல்லன்னா எப்ப ?" என்ற இந்த ஸ்டண்ட் மன்னனின் மராத்திய- கன்னட வசனங்களை நம்பி பார்டரில் தத்தளித்த ரசிகர்களை ஈரோட்டு நாத்திக கன்னட ராமசாமியை காட்டிலும் வெறும் வெங்காயமாகவே ஆக்கிவிட்டார் இந்த "அண்ணாச்-சே" !!


தமிழக மக்களுக்கு எப்பவுமே ஒரு ஏக்கம். அதுவும் சினிமா ஹீரோக்களின் மீது  ஒரு தனி மோகம். குறைந்தபட்சம் இவர்கள் சினிமாவிலாவது நல்லவர்களைப் போல் நடிக்கிறார்களே என்று மனதை தேற்றிக் கொண்டு ஓட்டை குத்துகிறார்கள். 


அதனை ஒரளவிற்காகவாவது நல்லது செய்ய முயற்சித்தார் "ரிக்ஷாக்கார" மதன கோபால ராமசந்திரன். அந்த புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பால் குடிக்க அலைந்தன / அலைகின்றன. இந்த "ஆட்டோக்கார" அண்ணாத்தையையும் நம்பின அனைத்து மக்களையும் சென்னையில் "ஆட்டோ"க்களை நம்பி பின்னாடி போன டூவிலர் காரர்களைப் போல் முட்டு சந்தில் முட்டிக் கொண்டு தவிக்கின்றனர். 


இந்த "முள்ளும் மலருமா" என்ற அல்ப சந்தேகத்தோட ஒரு பதிவை அக்டோபர் 2017ல் போட்டோம். 

இந்த விமர்சனித்தில் "ஸ்ரீதேவியை" தமிழ்நாடாக குறிப்பிட்டிருந்தோம்.  அதில் அந்த போலி "நாத்திக மணி"க்கூடப் பரவாயில்லை ரீட்டையர் ஆன பின்பு அரசியல் செய்து பொழுதை கழிக்கலாம் என்று தோற்றாலும் பரவாயில்லை என்று இரண்டு தேர்தல்களில் தோற்று மய்யம் கொண்டுள்ளார். இந்த ஏ"காந்த" மணி மட்டும் மக்களின் முகத்தில் கறி பூசுவேன் என்று இன்னமும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். 


இவர் "சிஸ்டம்" சரியில்லை என்றார், நாமும் "ஆஹா !! இவர் சாக்கடையில இறங்கி சுத்தம் செய்யப் போறார்னு பார்த்தோம் " பார்த்தா பெருந்தலைவர் கூறியபடி " இவரும் அந்தக் குட்டையில் ஊறின மட்டை" தான் தன் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதில் "மன்னன்""இராஜாதி ராஜா" என்று நிருபிக்கிறார்.  

தமிழ்நாட்டோட சிஸ்டம் எப்பவும் எப்படி இருக்கிறதென்றால் இங்கும் எல்லோருமே "பெறும்" தலைவர்கள் தான் (மக்கள் உட்பட - 5 வருடத்திற்கு ஒரு 2000, பிரியாணி, சாராய பாட்டில்)  சிலர் மட்டுமே "பெருந்"தலைவர். 

கர்ம வீரர் "காமராஜர்" கனவு வீரர் "கலாம்" மட்டுமே பிள்ளைகளை "பெறாதவர்" அதனால் அவர்களே "பெருந்தலைவர்"

ன்றைய தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு "பெறு" விற்கும் "பெரு" விற்கும் வித்தியாசம் தெரியாது என்பதே யதார்த்த நிலை. 

மராத்திய மாமன்னன் சிவாஜி மட்டுமே "வணங்காமுடி". இந்த முடியில்லா "சிவாஜி"யை வணங்கும்படி செய்தது எந்த வணங்காமுடி ? தான் பெற்றவர்களுக்காக மக்களின் அன்பை பெற்றும் இழக்க துணிந்தது ஏனோ ?? 

"நிதி"பெற ஆயிரம் வழிகள் "உதய"மாகலாம் அதற்காக இந்த "கறுப்பு" "ஜெயண்ட்" (Giant Magnet) விழலாமா ??

Rajini is not fair, we know. 


சின்ன சந்தேகம் : 

சேப்பாக்கத்தில் மணம் வீச முயன்ற தாமரை பூவின் "வாசம்" தீடீரென்று "ஆயிரம் விளக்கில்" சென்று பொசுங்கியது ஏனோ ? மூன்றாம் அரண்மனைக்கு வந்த போது தான் தெரிந்தது "நிதி"யின் மீது மட்டுமே "கருணை" உள்ளவரை "விடியல்" ஒரு பகல் கனவே என்றே. அந்த "அண்ணாமலை"க்கும் ஒரு அரோகரா. அந்த அண்ணாமலையில் ஆடுகள் மேய்த்த "இடைக்காட்டு" சித்தர் தமிழகத்திற்கு அருள் புரியட்டும். 










Monday, August 2, 2021

Medals Reservation for India in Olympics


Olympics happening now in Tokyo (2020) -Around 11,000 athletes from 206 countries participating in this sporting event happening once in 4 years & due to pandemic instead of 2020 it is happening in 2021.

As on today India could fetch One Silver ( Ms. Mira Chanu ) & One Bronze ( Ms. Sindhu). India Could send only 125 candidates along with their 100 + coaching bandwagon.  A country with 125 crores population could send only 125 sports persons of International Level whereas China- 406, Japan - 552 USA -613 could send these many people.

Even out of 125 may be another 2 or 3 medals may add up.

Every 4 years we Indians have been betting on few names on Medals list though rest of the contingent also giving their best after years of training. 

How to increase our Medals tally hereafter ??? When we could face China at Galwan with eye ball to eye ball and could give a fitting 20 : 50 score head on at the deadly Himalayan Heights. Our Jawans who represent the great country based on their valor, true merit and sacrifice.
 

In sports too we must start asking reservation for medals as it is being done for everything in India.

Just today India has been given the Presidency of UN security council, we must make use of it & push International Olympics Committee to give fair representation for India based on the Population.



Just like the Indian Government has passed the Bill to give 27% reservation for OBCs  & 10% for Economically weaker sections in Medical seats in Central Government's quota, Our country should teach social justice theory to the world as we were in slavery for last 700 years and we were a deprived and looted country.



Most likely some of the African countries too may ask for similar concessions, we must attempt for getting at least 20% quota for India, 25% for Africa, 10% for South America, 10% for Asia other than China & Japan, 5% for Arabia  & Remaining for other Countries. 

Around 5000 medals are being presented this edition of Olympics so India could have easily got 1000 Medals easily. 

https://medium.com/@thirtysixlabs/voice-against-reservation-say-no-to-reservation-bee8a0ec60a1


There too we have to ensure social justice as practiced in India.  If Hussain Bolt runs for 100 metres, Indian SC/ST candidate will run only for 50 metres, Indian OBC 65 metres and Indian OC 85 metres. There also we can teach a Lesson to the world on how we are creating equals among unequals.  


Even though Nelson Mandela rejected the idea of reservation in South Africa, India should push through reservation for Blacks and Indian origins there to get a quota system.   https://www.youtube.com/watch?v=a_iPAKcAOZs

Already many member countries of International Cricket council are complaining that BCCI is arm twisting them with their money power. Already Mr. Modi has trained his man Mr. Anurag Thakur there.

So hereafter in cricket team selection also we must give due representation for the caste and religions. If there is a tussle between Virat Kohli and Rohit Sharma for T20 world cup captaincy, it must be decided based on their community. Most likely Sharma sounds like a forward community name hence He must not be given priority. If in England test series, you have to select only one spinner between Ravichandran Ashwin and Kuldeep yadav and all likelihood Yadav has to be selected. In fast bowlers Umesh Yadav has to be given priority over Ishant Sharma. e.g. in five match series Ashwin should play 2 matches and Kuldeep 3 matches. Umesh 3 & Ishant 2 like that also acceptable.

If the bowler is from SC / ST community, BCCI must tweak laws  to allow to bowl two no-balls, two bouncers and Two wides in an Over.  At least one Mohammed has to play - either Shami or Siraj. If the tussle is coming between Ishan Kishen and Sanju samson comes for wicket keeping, Samson should be given priority.

For appointing Coaches to use the same policy. Rahul Dravid or Ravi Shastri, preference to Dravid especially if he is from Karnataka's Lingayat community as Shastri sounds totally Bhramanical name from Konkan coast. 


Where treating the Human body from ailment itself with utmost care and quality is needed, we can make Doctors based on Caste and religions, why not implement it all systems. Already Political parties are demanding reservation in Private sector companies, why not implement it in every aspect of life. 


Even Modi's prime opposition members believe in his invincibility in 2024 elections but Mr. Modi & co does not believe so it seems by this announcement of Reservation has come before for UP Assembly elections. In 2014, development was given thumping victory across the country. Probably Mr. Prashant Kishore's recent caste -religion arithmetic win in WB & TN assembly elections has put BJP in back foot it seems.

Only by Merit, we could produce Jamshedji Tata, Abdul Kalam, Dhirubhai Ambani, Lakshmi Mittal, Sundar Pichai, Narayana Murthy , Satyam Nadella from India. Even Vajpayee, Advani & Modi came only on merit to their positions. P T Usha to P V Sindhu came to this level only by sheer hard work and merit.

Reservation based on economical backwardness is quite acceptable, there too Government must develop more training centers for economically deprived to take the challenge on economically affluent in education & Jobs to make India formidable in International arena, giving merit the utmost importance. Muslim Young Men & Gujarati Young men are more in to business and are more successful though many of them didn't participate in the education race. They are believing the innate talents and survival instincts to become successful. Electoral Politics has already taken a heavy toll on India.  So Politicians should stop creating wedges between Indians on various grounds. 



Every Indian will then feel proud of their country and more forthcoming and competing with best efforts instead of becoming Lazy with a Government Cushion. 


Sakrit(Un )ease

Sunday, June 27, 2021

NEET opposing politicians No to quality treatment

 


"NEET" நீட் தேர்விற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள் தங்கள் சிகிச்சைக்கு மட்டும் உலக தரம் வாய்ந்த மருத்துவர்களை மட்டுமே நாடுவது ஏன் ? தனியார் மருத்துமனையில் அதுவும் வெளிநாட்டினரின் சிகிச்சையை மட்டும் நம்புவது ஏன் ? மருத்துவம் என்பது உயிர் காக்கும் ஒரு துறை.  தங்கள் உயிரை வெல்லம் போல் நினைக்கும்  அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் உயிரை வெறும் கிள்ளுக் கீரையாக மதிப்பது ஏன் ?

எவ்வளவு பொது மக்கள் தங்கள் உறவினர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லையென்று மருத்துவமனைகள் முன் போராடுகிறார்கள் ???
விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை சூறை 26.6.2021 தினமலர் செய்தி


 தங்கள் உறவினர்களுக்கு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்கபடவில்லை என்று பல இடங்களில் பொது மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.  இதற்கு அடிப்படை காரணம் மருத்துவர்களின் தர குறைபாடுகள் தான்.

மனிதர்கள் அனைவரும் எல்லா துறைகளிலும் தேர்ச்சி பெற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையினில் சிறப்பு திறமை பெற்றிருப்பர். 
அதனால் ஒவ்வொரு நபரும் எந்த துறையில் சிறந்தவர் என்று உறுதி செய்ய தேர்வுகள் அவசியமாகிறது. 

"நீட்" எதிர்பவர்களுக்கு அனைவரிடமும் அவர்கள் மனசாட்சி தொட்டு பதில் சொல்ல வேண்டிய கேள்வி " உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிக்க எத்தகைய மருத்துவரை நீங்கள் தேர்தெடுப்பீர்கள் ?? உடற் கூறு பாடங்களில் பல பாடங்களை புரிந்து கொள்ள முடியாதவர், 40 சதவிகித மதிப்பெண் மட்டுமே வாங்கியவரை நம்பி உங்கள் குழந்தையின் உயிரை ஒப்படைப்பீர்களா ?"

அவ்வளவு ஏன் ? பள்ளிக் கூடங்களில் ஒட்டப்பந்தயம் என்ற போட்டியே வைக்கக் கூடாது. ஒரு மாணவன் 100 மீட்டர் ஓட வேண்டும் ஒருவர் 60 மீட்டர் ஒடினால் போதும் என்றால் ஒத்துக் கொள்ள முடியுமா ??? இப்பொது நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் இப்படி ஒரு சலுகையை கேட்டு பெற முடியுமா ? 

தமிழ்நாட்டை தவிர வேறெந்த மாநிலத்திலும் நீட் தேர்வை எதிர்த்து பெரியதாக அலட்டி கொள்ளவேயில்லை. ஏன் நம்ம ஊர் மாணவர்களே நீட் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

நாமெல்லாம் கடைக்கு சென்று ஒரு 10 ரூபாய் பேனா வாங்கினால் கூட எழுதி பார்த்து விட்டு தான் வாங்குகிறோம்.  ஒரு வெண்டைகாய் வாங்கினால் கூட நுனி உடைத்து விட்டு வாங்குவது ஏன்?  இது போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட தரம் எதிர்பார்க்கும் நாம், உயிரயே பணையம் வைக்கும் மருத்துவத்துறைக்கு மட்டும் தரம் வேண்டாமா ??

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் மட்டும் தான் ஒரே படிப்பா ? எத்தனை விதமான விதமான படிப்புகள் உள்ளன. குறைந்த செலவில் ஐஐடி மற்றும் பல உலக தரமான பல்கலைகழங்களிலும் படிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.  இன்று ஆண்ட்ராய்டு போன் வைத்துக் கொள்ளாத கிராமத்து இளைஞனே இல்லை என்ற அளவிற்கு உலகத்தின் எந்த மூலையில் இருப்பவருடனும் தொடர்பு கொள்ளும்  தொழில் நுட்பம் கையில் இருக்கிறது. 

மருத்துவமுறை பற்றிய மாற்று சிந்தனை வரவேண்டிய நேரமிது. அதிலேயும் ஆங்கில நவீன மருத்துவம் மட்டுமே உயர்ந்தது போலவும் மற்ற பாரம்பரிய மருத்துவமுறைகள் ஒரு மாற்று குறைந்தது போலவும் மக்கள் மத்தியில் நிலவும் ஒரு அவல நிலை. பாரம்பரிய மருத்துவமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து வருபவை. அவற்றை படிக்க பல்வேறு வகையான வாய்ப்புகள் இருந்தும் ஆங்கில மருத்துவர்களால் அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மருத்துவ சேவை செய்ய நினைக்கும் பலராலும் மருந்து வியாபார சுழலில் சிக்கி தவிப்பது தான் யதார்த்த நிலை. 
மக்களும் மருத்துவ செலவுகளாலயே வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழும் அளவிற்கு பயந்து வாழ்கின்றனர். அதனால் மக்கள் அனைவருமே உடல் ஆரோக்கியத்திற்கு தொடு சிகிச்சை, யோகா போன்ற எளிய நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் வாழ்வியலை பின்பற்றி வளமோடு பயமின்றி வாழ வேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கியமாக  எந்த விஷயத்தில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே நிலைப்பாடை எடுத்தால் அங்கே அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வியாபாரம் இருக்கிறது என்று நாம் ஒன்றை உணர வேண்டும்.  முதலில் சாராயம்,  இந்த இரண்டு கட்சிகளும் மது விலக்கு கொண்டு வரமாட்டார்கள். சாராய ஆலைகள் அனைத்தும் கட்சிக்காரர்கள் நடத்துகிறார்கள். அது போல தனியார் மருத்துவ , பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் கட்சிக்காரர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டின்  தனியார் இஞ்சினீயரிங் கல்லூரிகளில் கடன் வாங்கி படித்த பல இளைஞர்கள் தரமில்லாத கல்வி கற்றதினால் அந்த கடனை அடைக்க  இந்த  சொமேட்டோ, ஸ்விக்கி, டன்சோ போன்ற பைக் மூலம் டெலிவரி செய்து தான் தங்கள் கடங்களை கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். மிகப் பெரிய கனவுகளுடன் அவர்களின் பெற்றொர்கள் இரத்தம் சிந்தி சம்பாதித்தது பொறியியல் படித்தாலே பெரிய வேலை கைநிறைய சம்பளம் என்ற மாயையில் சிக்கி எவ்வளவு குடும்பங்கள் இன்று கஷ்டப்பட்டு வருகிறார்கள். 

 முழுமையான மருத்துவ படிப்பிற்கு அதுவும் நவீன இயந்திரங்களை கையாள்வதற்கு வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கேற்ப செலவு செய்ய வேண்டிய அவசியத்திலும் உள்ளனர்.  மிக ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட்டாலும் படிப்பு காலம் முழுக்க செலவு செய்ய கடன் வாங்கி மருத்துவராக ஆனாலும் அரசாங்க மருத்துவமனைகளில் சம்பளம் மிக குறைவு.  தனியார் மருத்துவமனைக்குள் சேர வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் மாணவர் இருந்தால் தான் அங்கு வேலை கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும் மாணவர் மனசாட்சியை விற்று தான் கடனை அடைக்க முடியும். அது நிச்சயமாக மக்கள் சேவையாக இருக்காது. 

டாக்டர் அப்துல் கலாம் போன்றோர் மிக ஏழ்மை நிலையிலிருந்து உயர் பதவிகளை அடைந்தது மிக கடுமையான உழைப்பால் மட்டுமே.  அப்படி உழைக்க விரும்புபவர்கள் மிக எளிதாக எந்த நீட் தேர்விலும் சுலபமாக வென்றுவிடலாம். அரசியல்வாதிகளின் மித மிஞ்சிய செல்வ கொள்கையில் கடன் வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

அப்துல் கலாம் அய்யாவுடனேயே பணியாற்றிய அறிவியல் விஞ்ஞான பேராசிரியர் திரு .பால குருசாமி அய்யா "நீட்" தேர்வு ஏன் அவசியம்" என்று பட்டியல் இட்டுள்ளார்கள்.  அதற்கு அவரை விட ஒரு அறிவு அதிகமாக இருக்கிற "ஏழாம் அறிவு" சூர்யாவை  பதில் சொல்லும் படி அன்போடு கேட்கலாமே. 


Thursday, June 24, 2021

Virat Kaned by Williamsons

 Simplicity Simply Wins



History repeats in all formats 2019 & 2021 Indian Cricket Hype
all to be written about Indian Cricket aggrandisement in this 2019 article itself.


In Australia tour in Jan 2021 too, a calm captain in Ajinkya Rahane could bring out the best in the players. Problem with Virat is over shouldering the responsibility and not allowing others to own up things. Virat is a prolific run getter and it will be better he focusses on Batting. IPL should come clean and should remove all the tainted hands for ever. All the betting syndicates associated with IPL brand of cricket should be banned for ever.

New Zealand is a quite and low profile country. With minimal resources and revenue, they could still produce the best team with level headed players.

Translate

Contact Form

Name

Email *

Message *