Search This SAKRITEASE Blog

Wednesday, September 28, 2022

Nammazhwar Bhraman by deed

 நம்மாழ்வார் பிராமணரே

தமிழ்நாட்டில் ஜாதிகளை பற்றிய புரிதலில்
இந்த தலைப்பை பற்றி கேள்வி எழலாம்.

அதுவும் சமீபத்தில் எம்.பி. திரு. ஆ.ராசா, இந்துக்களின் பிறப்பையும் அவர்களை பெற்ற தாய்களின் கற்பு நிலையையும் இந்துக்களின் வேதங்களையும் அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்கள்.

இவரது இந்த பேச்சு ஒன்றும் புதிதல்ல. இது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் பிரித்தாளும் தத்துவத்தின் படி தங்கள் மனம் போன போக்கில் சமஸ்கிருதத்தில் (வடமொழியில் ) உள்ள வாக்கியங்களை இங்கிருக்கும் சாதி கட்டமைப்பில் பிளவுகளை உருவாக்க பயன்படுத்தியது. 

இதில் யார் பிராம்மணர் ? யார் விலை மாந்தர் ? என்ற  விளக்கம் இன்றைய சூழலில் தேவைப்படுகிறது.

வர்ண ஆசிரம தத்துவத்தின் படி நாலு வர்ணங்கள் அதில் பிராம்மண, சத்திரிய,வைஸ்ய மற்றும் சூத்திர ஆகும். இதில் அடிப்படை அஸ்திவாரம் சூத்திர என்பது தான். உடல் உழைப்பால் சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பவர்.  அனைவரும் பிறப்பால் சூத்திரரே.
ஆனால் பிராமணராகவோ, சத்திரியராகவோ, வைஸ்யவராகவோ ஒருவரின் செயல்களாலேயே அறியப்பட்டனர்.

தனக்கென அடுத்த வேளை உணவை கூட சேமித்துக் கொள்ளாமல் பிரபஞ்ச நன்மையை கருத்தில் கொண்டு தவம், தியானம், அனைவருக்கும் பொது நன்மைகளை உத்தேசித்து  வாழ்ந்து காட்டி வழிக் காட்டுபவர்கள் பிராம்மணர்கள்.  இந்த பிராம்மண என்ற நிலையை பிறப்பினால் அல்ல வாழும் தவ ஒழிங்கினாலேயே அடைய முடியும். 


அனைத்து பிரபஞ்ச தன்மைகளின் விவரிப்பதே வேதம் என்று அறியப்படுகிறது. இதில் பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களும் எவ்வாறு தோன்றி மறைகின்றன என்பதை "அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்" என்ற தத்துவத்தின் படி தவத்திலே இருந்து உணர்ந்து பலருக்கும் தெரியப்படுத்த ஒரு ஒலி ஒழுங்கை கொண்டு விவரித்தனர். 

இதில் பிறப்பால் ராஜ குலத்தில் பிறந்தாலும், அந்த அரச சொகுசு வாழ்க்கை என்று அனைத்தையும் துறந்த பின்னர், தன் தவ மேன்மையால் பிரபஞ்ச பேராற்றலை நுணுக்கமாக சில சொற்களின் ஒலி அமைப்பை கொண்டு "காயத்ரி மந்திரம்" என்ற சொற்றொடரை மூலம் விவரித்தவர் "விசுவாமித்ர" ( பிரபஞ்ச நண்பன் என்பது பொருள் ) என்ற முனிவர் சத்திரியினாக இருந்து பிராம்மணராக தன்னை தகவமைத்து கொள்ள முடியும் என்று வழிக் காட்டுகிறார். 

இதற்கு எதிர்மாறாக பிராம்மணராக வாழ்ந்த தந்தைக்கே பிறந்திருந்தாலும் பிறன் பொருட்களை, பெண்களை கவர தனது கவனத்தை தவ வலிமையை இழந்த இராவணரை அசுரர் என்கிறார் - வேடுவராக வாழ்ந்த பின் தவ பயன்களால் பிராம்மணராக மாறிய "ராமாயணம்" என்ற காவியத்தை தொகுத்த வான்மீகி என்ற முனிவர்.

 இதையே மீனவ பெண்ணின் மகனாக பிறந்து "மகாபாரதம்" என்ற உயர்ந்த காவியத்தை தொகுத்த "வியாசர்" என்ற பிராம்மணர் ஆமோதிக்கிறார்.

இது எதோ பழைய காலத்து கதை என்று ஒதுக்கி தள்ளப் போனாலும், இன்றைய கால கட்டத்தில், பிராம்மணர்களாக வாழ முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.  அதற்கு மிக கடினமாக அந்தக் கால பிராம்மணர்களாக போல் உழைக்க வேண்டும். இன்று பிறப்பால் பிராம்மண என்று அறியப்படுகிற பலரும் அவர்கள் தேர்தெடுத்த பொருள், சுகம் சேர்க்கும் முறையால் சத்திரிய, வைசிய, சூத்திர வழியினராக இருக்கின்றனர். இந்த இடத்தில் முக்கியமாக உணர வேண்டியது இதில் எந்த முறையும் யாரும் பின்பற்றலாம் அதில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்பதே.

நம்மிடையே மிக சமீபத்தில் வாழ்ந்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா, தனக்கோ தன் எதிர்கால சந்ததிக்கோ சொத்துக்களை சேர்க்காமல் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாக இயற்கையுடன் ஓன்றி வாழ வேண்டும் என்பதனை தனது உடலைவிட்டு நீங்கும் வரை வாழ்ந்து காட்டிய நம்மாழ்வார் ஒரு பிராம்மணரே. எண்ணற்றே இளைஞர்கள் இன்று நஞ்சில்லா விவசாயம் செய்ய வயலில் இறங்கியுள்ளார்கள் என்பதே அவர் சமூகத்தில் செய்த உண்மையான பசுமை புரட்சி.

எந்த அரசியல்வாதியும் போல் கும்பல் சேர்த்து ஆர்பாட்டமும் இல்லாமல் மக்களை தன் அன்பால் அயராது உழைப்பால் ஈர்த்து தனக்கென வாழாமல் உலக நன்மைக்காக வாழ்ந்ததால் மக்கள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அய்யா ஒரு பிராம்மணரே.

உலகமே வியந்து பாராட்டும் தன் சொத்துகள் அனைத்தையும் விற்றும் மேலும் உழைப்பினால் வரும் வருமானத்தையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு உதவ வாழ்ந்து வரும் "பாலம்" திரு.கலியாண சுந்தரம் அய்யா அவர்களும் பிராம்மணரே.

இன்னமும் எண்ணற்ற கோவில்களில் எண்ணை விட்டு விளக்கேற்ற கூட மிகவும் சிரமப்படுகிற நிலையில் இருந்தாலும் அரசாங்கமும் ஊரும் ஆதரிக்காமல் போனாலும் தன் கடமைக்காக இன்னமும் ஏழ்மை நிலையிலும் உலக நன்மைக்காக வாழும் குருக்கள்கள், பூசாரிகள் போன்றவர்களும் பிராம்மணர்களே. 

வரும் காலங்களில் தான் பலவழிகளில் சேர்த்துள்ள சொத்துகளையெல்லாம் மக்களின் நன்மைக்கே விட்டுவிட்டு தனக்கு தனது வாரிசுகளுக்கு என்று வாழாமல் அனைத்து உயிர்களிடத்தும் எந்நேரமும் அன்பு செய்தே வாழ்ந்து காட்டினால் திரு. ஆ.ராசா பிராமணராகலாம். 

இதில் "பஞ்சமர்" "பஞ்சமி" என்ற சொற்களும் செயல்களும் ஏன் வந்தன என்பதையும் பார்க்க வேண்டும். நாலு வர்ணத்தாருக்கும் எப்படி வாழ்வது என்ற நியதிகளை வகுத்த இந்த பூமியின் ஆதிவாசிகள், இதில் எந்தவிதிகளுக்கும் எனக்கு வாழ உடன்பாடில்லை என்பவரை கட்டாயப்படுத்தாமல் மற்றவர்களின் விதி முறைகளுக்குள்ளும் புகாமல் அமைதியுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். நாளடைவில் இந்த விலகலும் இடைவெளியும் அதிகரித்துள்ளது.  பஞ்சம - என்ற வடமொழி சொல்லுக்கு ஐந்தாவது என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள். 

இன்றும் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் "ஜார்வா" என்ற காட்டுவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகுள் நுழையும் எந்த அன்னியரையும் அவர்கள் அம்பு எய்தி கொன்று விடுகிறார்கள். அவர்கள் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதை நாம் நமது வாழ்க்கை முறையே சிறந்தது என்றும், நாமே அவர்களை விட நாகரீகம் மிகுந்தவர்கள் என்று அவர்களுக்கு ஆடை உடுத்தி, கரும் பலகை பாடமெடுக்க ஆரம்பித்தால் அதைவிட அநாகரீகம் அபத்தம் வேறெதுவும் இல்லை.

மலைகளில் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்களின் அற்புதமான வாழ்வியலை உள்வாங்கி கொள்ளாமல் அவர்கள் ஏதோ நகரங்களில் வாழாதததால் மிக பின் தங்கிவிட்டவர்களாக பார்ப்பதே ஒரு மனநோய்.

 நல்ல தரமான மூங்கில் அரிசி சாப்பிடுபவரை மலையிலிருந்து இறக்கி பாலிஷ் செய்யப்பட்ட"ரேசன்" அரிசி சாப்பிட வைப்பது எப்படி ஆரோக்கியமாகும் ? மூலிகைகள் கொண்டே தன்னை குணப்படுத்தி கொள்ள கூடியவரை "ஊசி" குத்துவது அநாகரீகம்.

இங்கு ஒரு சிவிங்கி (சீத்தா) குட்டிகூட வாழ தகுதியாக இல்லாத கொன்று குவித்த "இந்தியா" நாகரீகமானதாகவும், இன்னமும் பல மிருகங்களும் சுதந்திரமாக வாழும் ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழும் நாடுகளில் தான் இன்னமும் சீத்தாகளும் விரும்பி வாழும் ஆப்பிரிக்க "நமிபியாவை" இருண்ட கண்டமாக பார்ப்பது அறிவின்மை.

நம்மாழ்வார் அய்யா எப்போதும் கூறுவது போல் "கரும்பலகை"யில் எழுதி கற்பிப்பது, ஆசிரியரை ஒரு மேடையில் ஏற்றியும் மாணவரை அதைவிட ஒரு படி கீழ் இறக்கி வைப்பது தான் நிஜமான ஏற்றத்தாழ்வு.  மரத்தினடியில் அனைவரும் சமமாக அமரச் செய்து தகவல் பகிர்தல் என்பது இரண்டு வழி பாதையாகும். 


"விபச்சாரி" யார் ??

ஓரு ஆணை விட அதிகமான ஆணுடன் உறவு கொள்பவர் என்ற நிலை பெண்களின் கற்பு நிலையை இழிவுபடுத்தி அவர்களை திட்டவே எல்லா மொழிகளிலும் சொற்களை ஆணாதிக்க சமுதாயம் பயன்படுத்தி வருகிறது.

மகா கவி பாரதியார் இடியென இந்த கேள்வியை ஒரு நூறாண்டுக்கு முன்பே கேட்டார். யாராலும் உரிமை கோர முடியாத, ஒரு விலைக்காக உடல் இன்பத்தை தரக்கூடிய ஒருவரிடம் செல்லும் ஆணின் கற்பு நிலையை மட்டும் ஏன் விமர்சிப்பதில்லை ? விலை மகளிடம் செல்லும் ஆண்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்வதால் அத்தகைய ஆண்களும் "விபச்சாரன்" என்று ஏன் அழைப்பதில்லை ராஜா சார் ??? 

இந்த உலகத்தில் எல்லா மனித ஆண்களும் கற்பு நிலை பிழறாமல் வாழ்ந்தால் "விலை மாந்தர்"கள் என்ற உடலை விற்கும் அவல நிலையை இல்லாமல் செய்துவிடலாம். இது தான் மிக முக்கியமான சமூக நீதியாகும்



தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகளில் இன்றளவும் நடத்தப்படுவது "தெருக்கூத்து" தான். அதிலும் மிக அதிகமாக அரங்கேற்றப்படுவது "மகாபாரதமும்" அதில் வரும் "பாஞ்சாலி"யின் சபதமும் ஆகும். ஐந்து நதிகள் ஓடும் ஒரு மாநிலத்தில் பிறந்த அந்த பெண்ணை, அதுவும் ஐந்து கணவர்களை மணந்த அந்த பெண்ணை "த்ரௌபதி அம்மனாக" "பாஞ்சாலி அம்மனாக" ஊர் காவல் தெய்வமாக இன்னமும் நமது நாட்டில் பல கிராமங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதே பஞ்சமரில் வரும் "பாஞ்ச்" (இந்தியில் ஐந்து)  பாஞ்சாலியிலும் வருகிறது.



அப்படிபட்ட ஒரு பெண்ணை "விபச்சாரி" என்று தூற்றாமல் அவரை பெண் தெய்வமாக வணங்கும் இந்து மதம் எங்காவது ஒரு தாயை விபச்சாரியாக கூறியுள்ளதா ?? இறைப்பணிக்கு தன்னை தானே அர்பணித்த "தேவர்களின் அடியாரை"யும் தேவாலயங்களில் தங்களை அர்பணித்த "கன்னியாஸ்திரி"களையும் தங்கள் உடல் இச்சைக்காக தவறாக வழி நடத்திய 
ஆண்கள், சக ஆண்களை தாயின் கற்பின் நிலையை வைத்து திட்டி வருவது "சமூக அநீதி" என்று வழக்குரைஞரான தாங்கள் ஏன் இன்னும் உணரவில்லை ????

ஒரு பெண்ணே ஆட்சி செய்ய துணிந்தாலும் அவரின் துணிகளில் ஒளிந்திருக்கும் ஒரு உடலாக பார்க்கும் எண்ணம் என்று மாறும் ? பொது ஊடகங்களை உங்களது தாயாரும் உங்கள் மனைவியும் உங்கள் மகளும் பார்க்கிறார்கள் என்ற அக்கறையுடன் கழக தம்பிகளுக்கு பாசறைகளில் பாடம் எடுக்க வேண்டிய பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்பதாக தமிழக மக்கள் உங்களை அனுப்பியுள்ளார்கள்.

 "காத்து வாக்கில இரண்டு காதல்" சமீபத்தில் ஒரு படம் வந்திருக்கு. நீங்க விளம்பரத்துல கூட பார்த்திருக்கலாம். அதில் விஜய் சேதுபதி நடிக்கும் பாத்திரத்தை பார்த்து சம்ந்தாவும் நயந்தாரவும் நடிக்கும் பாத்திரங்கள் "ஐ லவ் யூ " என்பார்கள் அதற்கு அவர் ஒரு பதில் தான் சொல்லறார் "ஐ லவ் யூ டூ ". "நானும் உங்களை விரும்புகிறேன் " "நான் உங்கள் இருவரையும் விரும்புகிறேன் " என்று இரு பொருள் பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது.




நீங்கள் இந்துக்களின் வேதங்களை படித்ததெல்லாம் ஆங்கிலேயர்கள் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறதாக வேலைக்கு அமர்த்திய சம்ஸ்கிருதத்தை மூல மொழி இலக்கணங்களை புரியாமல் மொழி பெயர்த்தவைகளை தான். தனது மனம் போன முறையில் "TOO" விற்கும் "TWO" விற்கும் இருக்கும் ஒரே உச்சரிப்பை வைத்து இரண்டு பெண்களை ஏமாற்றும் சொல் வித்தைகளாகும். 

https://www.youtube.com/watch?v=MJmxdlCtFWU

நம்மாழ்வார் போற்றும் ஆண்டாளின் ஆளுமையை அன்பை, பரவசத்தை, அவரை "திருப்பாவை"யாக பார்த்ததால் தான் தமிழகத்தின் அரசின் சின்னமாக நம்மையும் அந்த அன்னை ஆள்கிறார்.


சகிருட்டிஸ் செப்2022

SAKRITEASE SEP 2022


Friday, September 16, 2022

The Everyday Embryonic Awakener

 MS 106

துயில் எழுப்பும் தூய  ஆழ்வார் 




Climbing up that sacred hills along the eastern ghats of that peninsular India in the serene month of Marghazi ( Mid December to Mid January ), a soul awakens every aspiring living being from its embryonic slumber in the chill weather of December, with a penetrating voice.

இதமான மார்கழி மாத குளிரில் இந்திய தீப கர்ப்பத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அந்த புனித மலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் ஊடுருவி எழுப்பி விடும், ஒரு தெய்விக குரல் .


Why does the Lord Vishnu need a awakener on Earth everyday ? is the Lord, who is the declared protector of all beings, needs to be awakened ? is the Lord so sluggish, sleepy character always in slumber ?

மகாவிஷ்ணுவை பூமியில் தினமும் எழுப்ப ஒருவர் தேவையா ?? அனைவரையும் காத்து ரட்சிக்கும் இறைவனை தினமும் எழுப்ப வேண்டுமா ? கடவுள் என்ன எப்போதும் உறங்கி கொண்டிருக்கும் சோம்பேறியா ?? 

Everyday trillions of lives have to spring up to life form and the universe decided to send one of its awakener on earth, who like the Saint Narada ( aptly This sage also acted as Saint Narada in one of the cult classics ) is on duty 24 x 7 x 365. 

ஓவ்வொரு நாளும் பல்லாயிர கோடி உயிரினங்கள் ஆழ் உறக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு வர பிரபஞ்சம் ஒரு  துயில் எழுப்ப நாரதர் போன்ற ஒருவரை 24 மணி நேரம் பணியாற்ற அனுப்பியது.     ( இவர் ஒரு திரைப்படத்தில் நாரதராகவே நடித்தார் என்பதும் இவரின் தனிச்சிறப்பு )

Who is this Vishnu ?  why he is in a reclining pose on the curled serpent ?

யார இந்த விஷ்ணு ? ஏன் இவர் சுருண்ட பாம்பின் மீது படுத்திருக்கிறார் ??

One question many of us would have wondered. When a river completely dries up bone dry and after it rains and water flows, fishes start jumping and swimming in the water. Can the fish survive without water ?  A fully grown up fish may not be able to survive but fish's egg can be in slumber in a ready to hatch from embryonic state whenever a drop of water falls on it.

ஒரு கேள்வி நம்மில் பலருக்கும் வந்திருக்கும்.  முற்றிலும் வறண்டு போன ஒரு நதியில் மழை பெய்து தண்ணீர் ஓட தொடங்கிய பின் மீன்கள் எங்கிருந்து வந்து துள்ளி குதிக்கின்றன??. தண்ணீர் இல்லாமல் மீன்களால் வாழ முடியுமா ?? முழுதும் வளர்ந்த மீனால் வாழ முடியாமல் போகலாம் ஆனால் மீனின் முட்டைகள் ஆழந்த உறக்கத்தில் பல நாட்கள் அடுத்த மழை துளி மேலே படும் வரை இருக்க முடிகிறது.

Vishnu, is a state, which is always ready to hatch as a life being. A seed which is always ready to germinate.

விஷ்ணு, என்பது ஒரு நிலை, அது எந்த நேரத்திலும் உறக்க நிலையிலிருந்து உயிர்தெழும் தன்மைக்கு வரக் கூடியது. எந்த நிலையிலும் முளைக்க தயாராக இருக்கும் விதையின் நிலை.

So the sages, who composed various hymns to describe the variety of aspects of Nature, the universe, had described the ready to hatch state as Vishnu. For a commoner to understand , they tried to bring to describe it with tangible forms, which a human can relate to in a Human like form. Fish, according to Puranas, is the first form or avatar of Vishnu and the second is a tortoise and on. Even in Narasimha avatar, when Prahalada was asked, where is the Vishnu ? He replies that One which is always ready to come to life in any form in any place.

இயற்கையின் பேராற்றலை விளக்கிய ஞானிகள், விஷ்ணு என்பது எப்பொழுதும் உயிர்தெழ தயார் நிலையாக விளக்குகின்றனர். பாமர மக்களும் இந்த தன்மையை தத்துவத்தை புரிந்து கொள்ள அது மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மனித உருவத்தை வைத்தே விளக்கியுள்ளனர். விஷ்ணு , முதன் முதலாக மீனாகத்தான் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு ஆமை மற்றும் பிற உருவ அமைப்புகளிலும் பிறப்பெடுத்தாக கூறுகின்றன. நரசிம்ம அவதாரத்தின் போது பக்தன் பிரகலாதனை அவன் தந்தை "நாராயணன் எங்கே?" என்று கேட்டவுடன், பிரகலாதன் "அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று அந்த உயிர்ப்பு தன்மையின் தயார் நிலையை உணர்த்துவார். 

This is the reason that Venkatesa Suprabhatam is recited every day in the morning. Why MS ? 

இதனாலேயே வெங்கடேச சுபரபாதம் தினமும் காலையில் ஒலிக்க பெறுகிறது. ஆனால் அதனை திருமதி எம் எஸ் அம்மா அவர்களின் குரலில் மட்டுமே ஏன் ஒலிக்க பெறுகிறது ???

A great musician, is aptly described as "Gaana amrutha varshi" - the one who pours out the music like the rain droplets. When the rain falls, it is natural, the fish will hatch. Anyone who have heard "Katrinile varum geetham" would definitely vouch to see Lord Krishna in every aspect of our lives.

வான் மழையை போல் இசை மழையை பொழியக் கூடியவரை " கான அம்ருத வர்ஷி" என்று குறிப்பிடுவர். மழை பெய்ததும் மீன்கள் முட்டையிலிருந்து உயிர்தெழ ஆரம்பிக்கும். அம்மா அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" பாடலை பாடக் கேட்பவர்கள் கண்ணனை தமது வாழ்வில் உணரத் தொடங்கிவிடுவர்.

More so, in her name, M stands for Madurai, where the ruling Lord is Meenakshi - meaning "Rule of the fish " or the "fish eyed god".

இதுவும் தவிர எம் எஸ் என்ற எழுத்தில் எம் என்பது மதுரையை குறிக்கும், எங்கு அந்த பேராற்றலை -"மீனாட்சி" என்று வணங்கப்படுகிறதோ - "மீனின் ஆட்சி " "மீனை போன்ற கண்களை உடைய" என்ற பொருள்பட வணங்கப்படும் ஊரில் பிறந்தவர்.

The Universe has chosen to send this, Gaana Gandharva ( Celestial Musician ), on this day to awaken 106 years ago, trillions of vishnus, to life and enable the Earth to be a better place to live in.

இந்த பூமியில் பல்லாயிர கோடி உயிர்கள் - விஷ்ணுக்கள் உயிர்தெழ, 106 வருடங்களுக்கு முன்பு இந்த தேவலோக கந்தர்வ காந்த இசைக் கலைஞரை இந்த பூமி, பலரும் வாழ தகுதியான இடமாக மாற்ற பிரபஞ்சம் அனுப்பியது.

This Ratna of Bharath, played the role of Sakuntala, once again in that role too, a fish takes away her ring and had to rear her son, The Bharath, which this nation was named after. This soul, is the true essence of this great nation, brand ambassador of this universe.

இந்த பாரதத்தின் உயர்ந்த இரத்தினம், ஒருமுறை சகுந்தலையாகவும் நடித்தார். அந்த பாத்திரத்திற்கும் அவரது மீன் தொடர்பு இருந்தது. அந்த சகுந்தலையின் மகனான பரதனின் பெயராலேயே இந்த பூமி "பாரத" என்ற அழைக்கப்பட்டது.


Till the last file having that Suprabatham in any remotest server on earth, vishnus will be awakened by this voice forever.
உலகத்தில் ஏதொவொரு இணையத்தில் சுப்ரபாதம் என்ற ஒலி நகல் இயக்கப்படும் வரை இவருடைய குரலினால் பல விஷ்ணூக்கள் உயிர்தெழுந்து கொண்டே இருப்பார்கள்.

In the land of doubters, universe gave hopes to lives in the voice of divinity. 
இறைமை என்னும் இயறகை பேராற்றலின் மீது நம்பிக்கை இல்லாமல் தத்தளித்த பல உயிர்களுக்கும் நம்பிக்கை ஊட்ட பிரபஞ்சம் இந்த குரலிசைஞரை அனுப்பியது.

Still if there are doubters of existence, see the tiny seeds of a Banyan tree, which can show the Vishwa Roopam of Vishnu, with the extent of spread of the Banyan Tree.
இதற்கு மேலும் இயற்கை பேராற்றலின், இறைவனின் முழுத் தோற்றத்தை ( விஸ்வரூபத்தை) காண விழைபவர்கள் ஆல மரத்தின் பழத்தில் இருக்கும் ஒரு விதைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் "விஷ்ணூ" என்ற ஆலமரத்தின் அகன்ட விரிந்த தன்மையை கண்டு களியுங்கள். 

அந்த மலையை அப்பனாக நினைத்து "மலையப்பா" என்று அழையுங்கள், அதனை தாங்கியிருக்கும் அந்த மாடு மேய்க்கும் கறுத்த சிறுவனின் சுண்டு விரலும் கண்ணிற்கு புலப்படும், வண்டாக அவன் துளைத்த மூங்கில் துளையின் வழியாக "காற்றினிலே வரும் கீதம் " உங்கள் காதுகளுக்கு கேட்கும். அதனை இயற்றிய கிருஷ்ண மூர்த்தியை (கல்கி ) போற்றும் உள் மனம்.


Sakritease 16 Sep 2022
சகிருட்டிஸ் 16 செப் 2022




Saturday, September 10, 2022

Netaji Statue can end a Raj Path

 


A Pose of Bose can dispose even a Might in a Night

On 8th Sep 2022 when the PM Mr. Modi unveiled the Statue of Netaji Subash Chandra Bose at the India Gate in New Delhi and renamed the British Raj Path in to Kartavya Path ( Path of Responsibility & Duty ) , British Queen Elizabeth II decided to leave her mortal coil and could not carry innumerable wealth she and her ancestors annexed during their rein across the world.


In contrast, Mr. Subash Chandra Bose, who even left his family for the nation, is still being remembered even after 75 years of Indian Independence. The then PM of UK, Mr. Clement Atlee had openly acknowledged that the Britain was forced to free India from their clutches mainly due to the efforts of Netaji and his influence over Indian Officers and soldiers serving the British Indian Army. We were taught in schools and among literate elites that former UK PM Winston Churchill was a great visionary and a statesman and German chief Adolf Hitler as a Villain on Earth. Most of the European Nations built their countries' wealth mostly by annexing and looting other countries wealth. Winston Churchill even created artificial starvation in India by diverting the food grains produced in India to other British Colonies and Lakhs of Indians died in Bengal due to starvation.
( Please read this content to know more on Bengal Famine 1943 - https://en.wikipedia.org/wiki/Churchill%27s_Secret_War )

France, UK, Dutch, Portugal were not saints to call the Germany as the aggressor. It is the greediness of European race have caused lots of wars in different countries across the world and still raging. The harm, the fair skinned maniacs of the Atlantic coast have caused a worst blot on the evolution of human species on Earth. Whole of Europe (except Russia ) is not equivalent to the size of India or its population and diversity. Yet the European Union, could not function as one entity till now and UK is already out of it. Europeans have left huge scars in many countries across Asia, Africa, Australia, America.

 It is high time that, we humans, have to realize that imperialism should end to evolve as a peace loving beings on Earth. Though many would like to differ and argue, Europeans had to leave many countries post world war II, mainly due to their own monster Mr. Hitler & Co. hitting them with their own weapons.

Netaji Mr. Subash Chandra Bose didn't fight for getting any premier post for himself or his clan but for entire humanity against slavery.  He just used a snake ( Hitler ) and its venom to use it as an anti dote against the British ( another venomous snake ) to free from the clutches of imperialistic attitude and greediness.

It is now the Duty ( Kartavya - Sanskrit word ) of every human being to free every clutches including that on Animals and evolve a beautiful world where every being can live in bliss in this wonderful Planet. May the soul, which departed from the body which was heavily decorated with wealth and wearing blood stained clothes of the British Queen, realise the divinity to the fullest. 

sakritease
சகிருட்டிஸ்


Friday, September 2, 2022

This Goat will hatch a Egg

 இந்த ஆட்டுக்குட்டி கண்டிப்பாக  முட்டை போடும் 


கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று நினைக்க தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது திரு. செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் கூறியது  போல் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர், கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு வந்து   "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள்,  ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்  ஆடு வளர்ப்பிலும் ஈடுபடும் இவரை "ஆடு" என்று ஏளனமாக கிண்டலடிக்கிறார்கள். ஆனால் சாமான்ய குடிமக்களுக்கு அடிதட்டிலிருந்து மேலெழுந்து வருபவர்களை பிடிக்க  ஆரம்பித்து விட்டது.  திரு மோதியை "டீக்கடைகாரர்" என்று திரு. மணி சங்கர அய்யர் கிண்டலடிக்க போக அதுவே நாட்டில் உள்ள பல டீக்கடைகளிலும் விவாத பொருளாகி, பத்திரிகையாளர் திரு சோ கூறியது போல அந்த ஏளன பேச்சு ஏணிப்படி போட்டுக் கொடுத்தது. 

இப்போது இவரை "ஆட்டுக்குட்டி" என்று கிண்டலடிக்க போக கிராமங்களில் ஆடு மேய்ப்பவர்கள் கூட இவரை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திரு .அண்ணாமலை !!! உங்களை ஏசுபவர்களை திரும்பி ஏசவும் வேண்டாம் ஏசு போல்  காட்டவும் வேண்டாம் , வீசப்படும் கற்களின் மீது ஏறி நின்றால் போதும். உங்களுக்கு  முன்னே  இருந்த  திருமதி. தமிழிசைக்கோ, திரு .முருகனுக்கோ  கிடைக்காத எதிர்ப்பை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள். ஒரு டாக்டரால் முடியாததை ஒரு வக்கீலால் முடியாததை, ஒரு இன்ஜினீயர் செய்து காட்ட வேண்டும். 

தமிழகமே சாராய வியாபாரத்தின் பிடியில் இருந்து மீளவே முடியாது என்ற அவநம்பிக்கையில் அலறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஆட்டுக்கு குட்டி முட்டை இட்டால் தான்  இந்த அவல நிலை மாறும் என்று மக்களின்  உள்ள குமுறலை உங்களால்  மட்டுமே மாற்ற முடியும்  என்ற எண்ணத்தை உங்களை எதிர்பவர்களே ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த ஆட்டு குட்டி முட்டை தான்  வாங்கும் என்று வாய் பேசினாலும் இந்த "ஆட்டுக்குட்டி முட்டை  போட்டு விடும்" என்ற நம்பிக்கை கழகங்களின் அறிக்கைகளில் தெளிவாக தெரிகிறது. 

சகிருட்டிஸ்
Sakritease

Sunday, July 31, 2022

NO-Vax (K) -US

 NO Vax (K ) US ( A)


The World No. 1 Tennis Player and the Serbian anti vaccine crusader is looking forward to play in US Open Tennis Tournament.

He was barred from Playing at Australian Open by Australia Government this year. But He was allowed to play at French open and Wimbledon. The irony is in Wimbledon Grass courts, Serbian Crusader for Natural Immunity defeated an Australian. Now this Serbian is ready to forego the championship title at USA, if there also he is banned from entering for not getting Vaccinated.

He is more concerned about the Natural immunity, which every body naturally develops and against artificial immunity through doses of vaccination. At this point of History , USA President Mr. Joe Biden has twice contracted COVID -19 despite being immunized by the best available doses of Vaccines and booster doses. https://www.bbc.com/news/world-us-canada-62361884



What does the statistics reveal?



Which means 93% of the global population is not affected by CORONA Virus. Even among the infected only 1% dies.  This has been true to every other communicable dieseases.

Yes we may call it Pandemic but no need for PANIC. 
Due to panic we have created more garbage in terms of mask, medical wastes, which we may not get decomposed for another millennium. Short term narrow minded perspective may view it as a business volume, whereas on long term environmental impact is huge.

The world wide statistics as gathered by WHO itself reveals there are other major death causing diseases than the communicable diseases together.





We as human beings are the cause of the many deaths occurring in this planet due to Pollution, Accidents, Homicides, terrorism etc... Probably the Genetical disorder of the killing spree of the Humans needs to be cured than fighting against viruses, which are essential for human and other beings existence too. Let us develop our immunity by living in sync with nature. 

Every animal in the world knows which grass to eat and when to cure themselves without even attending any medical College or obtaining a doctorate.  The Nature naturally grows all that is needed to cure every ailing being in its territory. It has given a curative instinct and self healing liquids to flow naturally to every part of body.  Live in sync with nature has to be our Mantra.
Sathya sai Baba's message is to Love all and Serve all, that is what our beloved Serbian Superstar is doing in the Tennis Court - He always starts with LOVE ALL  & he SERVES ALL his aces up his sleeve. 


Novak Djokovic stands NO-VAX. 
He deserves every Grand slam but not slamming at the Courts of law. 


Sakritease Aug 2022


Monday, July 4, 2022

பஞ்சாங்கம் விஞ்ஞானமா ???

நம்பியது நாராயணனை போற்றும்



தும்பா நதிக் கரை ஓரம்

தும்பை பூவாய் உனது தீரம்

நம்பி உன்னை இறக்கி விட்டது

விண்வெளி வெகு தூரம்

 

விக்கிரமாதித்தன் வேதாளம்

விட்டும் விடாது வாட்டும்

விக்கிரமால் விரிந்தது உன் வானம்

விகாஸ் எஞ்சின் உன் வெகுமானம்

 


செயற்கை கோள்கள் ஏவினாய்

செயற்கையாய் கோள்கள் கூறினோம்

திரவங்களையே நீ நம்பினாய்

திராவகத்தையே உன்மேல் வீசினோம்

 

மாதவம் செய்தாய் என்று

மாதவன் சொன்னான் இன்று

நம்பாதது ‘நம்பி’யதை தூற்றும்

நம்பியது நாராயணனை போற்றும்

 

பஞ்ச பூதங்கள் கணக்கும்

பஞ்ச அங்கங்கள் கணிக்கும்

வானவியல் என்னும் விஞ்ஞானமே

வானோர்கள் உணர்த்தும் மெய்ஞானமே

 


அணுவின் ஆட்டத்தையும் அளந்தான்

அண்டமே பிண்டமென கண்டான்

ஓரடி வைக்காத மரத்தடி முனிவனும்

மூவடியால் உலகளந்த கறுத்த சிறுவனும்

 

முகமதில் வெண்காடே வளர்ந்தாலும்

கலம் கொண்டு களம் பல கண்டாலும்

காற்றில் போடும் புகை கோலம் தேவையில்லை

பால்வெளியில் எதையும் சாரா பாய் கொண்டு பறக்க

மனவெளியில் விரிசடையன் திருநடனம் காண்பாற் தமக்கே

- களக்காட்டுவிராயர் கிருஷ்ண குமார்


1.7.2022 ராக்கெட்ரி - நம்பி விளைவு -இந்த படம் என்று வெளி வரும் என்று காத்திருந்து - முதல் நாளில் திரையரங்கில் காசு கொடுத்து பார்த்த படம்.  ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு படும் கஷ்டங்களை தாண்டி தன் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க அவரும் அவர் குடும்பத்தாரும் படும் சவால்களை மாதவன் குழுவினர் மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்கள்.


இந்த படத்தில் "மங்கள்யான்" என்ற செவ்வாய் கிரக ஆராய்ச்சி கலன் அனுப்ப பஞ்சாங்கத்தை கொண்டு எந்த நேரத்தில் கலத்தை விண்ணில் செலுத்தினால் அந்தக் கலம் மிகக் குறைவான செலவில் குறைவான காலத்திற்குள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் என்று திரு. நம்பி நாராயணனின்  மருமகன் விஞ்ஞானி திரு. அருணன் கூறுவதாக ஒருக் காட்சி வருகிறது. இதை பற்றி இந்த படத்தின் இயக்குனர் திரு. மாதவன் படம் வெளி வருவதற்கு முன்பே ஒரு பேட்டி அளித்திருந்தார். அதற்கு பகுத்தறிவாதிகள் சிலர் கண்டனம் தெரிவித்ததால் படம் ஓடுவதற்கு ஏதாவது பங்கம் வருமென்று நினைத்தாரோ என்னவோ ? மாதவன் அவரது டிவிட்டை நீக்கிவிட்டதாக செய்தி வந்தது.


திரு. நம்பி நாராயணின் வாழ்க்கையே அவரை ஒரு நாடே தேசத் துரோகி என்று தூற்றிய போதும் , ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்த பின்பும், மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டாலும் அவர் நம்பிய உண்மையை அவரின் உண்மை நிலையில் என்றுமே மாறவில்லை என்பது தான் சிறப்பம்சமே. 

அத்தகையதொரு வாழ்க்கை சரித்திரத்தை ஐந்து வருட காலமாக உயிர் மூச்சாக சுவாசித்து காதலித்து நடித்திருக்கும் மாதவன் , பஞ்சாங்கத்தின் மேன்மையை அதை பயன்படுத்தி வெற்றிக் கொண்டவர்கள் பக்கத்திலே இருந்தும் பின் வாங்கியுள்ளது ஆச்சரியபடுத்தியது. அதனாலேயே இந்த பதிவு எழுத தூண்டியது.

பஞ்சாங்கம் என்பது ஏதோ பிராமணர்கள் பூஜை செய்வதற்கும், கல்யாணம் மற்றும் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களுக்கு நல்ல நேரம் பார்க்க ஒரு சம்பிரதாயமான ( போலி நாத்திகர்கள் வார்த்தையில் கூறினால் பகுத்தறிவில்லாத , விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட, மூட நம்பிக்கையின் ஊன்று கோலாக ) சடங்காக நாட்காட்டியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க வான வெளியில்  இயங்கும் அனைத்து கோள்கள் , கிரகங்கள் இயங்கும் வேகத்தை அவைகள் பூமியின் ஏற்படுத்தும் தாக்கத்தை துல்லியமாக கணக்கிட்டு கால கணக்குகளை வருடா வருடம் தமிழ் வருடப் பிறப்பின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. 


விவசாயத்தில் கூட "மேல் நோக்கு நாள்" :கீழ் நோக்கு நாள்" குறிப்பிடப் பட்டு எந்தெந்த பயிர் எந்த நேரத்தில் விதைக்கப்பட வேண்டும் எந்த நேரத்தில் ஊட்டம் கொடுக்க வேண்டும் என்று இந்த விஞ்ஞான ரீதியாக பயன்படுத்துகிறார்கள்.  இந்த நாட்களை பற்றிய கணக்கிற்காக, நிலா பூமியை எந்த வேகத்தில் சுற்றுகிறது, அதன் சுற்றுப் பாதையில் பூமியிடமிருந்து விலகும் போக போக என்ன வேகம் எடுக்கிறது பூமி அருகில் வர வர என்ன வேகத்தில் வருகிறது என்று அதன் வேக மாறுபாட்டை கூட மிக துல்லியமாக அளந்து தெரிவிக்கிறார்கள் இதனை இயற்றும் வைதிகர்கள். 

இந்த வைதிகம் எனும் கலையில் அனைத்துமே வானவியல் கணக்கின் அடிப்படையில் தான் அமைகிறது. இதில் மக்களுக்கு சந்தேகம்  அல்லது அவ நம்பிக்கை வருவதே இந்த வைதிகர்கள் இந்த கிரகங்களின் நிலைபாட்டை வைத்து ஜோதிடம் என்னும் கலையில் எதிர்காலம் போன்றவற்றை கூற முற்படும் போது ஏற்படும் கணக்கும் பிழை மற்றும் ஜோசியங்கள் சொல்லுவதற்கு முன் கடைப்பிடிக்க பட வேண்டிய சில வழி முறைகளில் கடைப்பிடிக்கபடாமல் கூறுவதால் அவர்கள் கூறும் பலன்கள் சில சமயம் சொல்லிய படி நடப்பதில்லை.

எத்தனையோ விஞ்ஞான முன்னேற்றத்தில் கண்டுபித்தாக கூறப்படும் கருவிகளை கொண்டு பல முறை தவறாக மருத்துவம் பார்க்கப்பட்டு பல மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் மருத்துவர்கள் திறமை தானே தவிர மருத்துவம் எனும் விஞ்ஞானத்தின் குறையில்லை. அது போலவே முழுமையாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் தன் மனம் போன போக்கில் சில ஜோதிடர்கள் கூறிவிடுவதால் மக்களுக்கு ஜோதிடம் மீதும் அவர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் மீதும் அவநம்பிக்கை வந்து விடுகிறது. மருத்துவம் போலவே, ஜோதிடம், வானவியல், பஞ்சாங்கம் அனைத்தும்  விஞ்ஞானமே.  

மிக துல்லியமாக ஜாதகத்தை பார்த்து சொல்லக் கூடிய நல்ல அனுபவ்மிக்க ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் பல கணக்குகளை மனக் கணக்காகவும் சிலர் கைகளிலும், சிலர் எழுதியும் போட்டு பார்த்தபின்பு தான் பலன்களை கூறுவர். விரைவு உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவு படைக்கும் தரம் குரைந்த சமையற் கலைஞரை போல், இந்த வேக காலத்தில் பல ஜோதிடர்கள் வேகமாக பலன் சொல்லப் போக ஜோதிடம் என்னும் விஞ்ஞான கலை மற்றும் பஞ்சாங்கங்கள் மீது பழி விழுகின்றது.

ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடப்படும் பஞ்சாங்கங்களில் மிக துல்லியமாக அமாவாசை, பௌர்ணமி, போன்ற அன்றாட திதிகள் சரியாக எத்தனை நிமிடத்தில் ஆரம்பித்து எத்தனை மணி எத்தனை நிமிடத்தில் முடிகிறது என்று தெளிவாக குறிப்பு தருகிறார்கள். தினம் தினம் சூரிய உதயம் , மறைவு, நிலா ஒளி பிறப்பு மறைவு அனைத்தையும், இந்தந்த நாளில் இந்தந்த ஊரில் சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கு எந்தெந்த ஊரில் தெரியும் என்பதை மிக துல்லியமாக கணக்கிடுகிறார்கள். இவை அனைத்துமே இயற்கையின் ஒவ்வொரு நடப்பும் ஒரு கணக்கின் படியே நடப்பதால் இதனை ஆண்டு அனுபவித்தவர்கள் தங்கள் அனுபவத்தை அழகான கணக்காக விட்டுச் சென்றுள்ளனர்.

பண்டைய தமிழர்களின் விஞ்ஞான முன்னறிவிற்கு எடுத்துக் காட்டு "சிவப்பு" நிறத்தில் இருக்கும் ஒரு கிரகத்திற்கு "செவ்வாய்" என்று பெயரிட்டு அதனை வழிபட்டு இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

அப்போது பண்டைய தமிழர்கள் ராக்கெட் வைத்திருந்தனரா ?? செயற்கை கோள் வைத்திருந்தனரா ?? என்ற விஞ்ஞான முன்னேற்றம் அடைந்திருந்தனரா ? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஆதித் தமிழர்கள் மெய்ஞானம் என்னும் உள் மன விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த பரு உடலை ஒரு கருவியாக்கி பிரபஞ்சத்தில் உள்ள பல நிகழ்வுகளை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருந்தனர்.



இதனை புரியவைக்க , இன்றைய காலக்கட்டத்திலும் பூமியில் எங்கு நீரோட்டம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சிலரால் மட்டும் தன் உடம்பில் இயங்கும் காந்த அலைகளை அந்த நீரின் காந்த அலைகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடிவதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். எல்லா மனித உடல்களிலும் உயிர் இருக்கும் வரை இரத்தம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் காந்த சக்தியும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எல்லோராலும் நீரோட்டத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் அதனை ஒரு மூட நம்ப்பிக்கையாக பார்க்கிறோம். ஆனால் அதுவும் விஞ்ஞானமே.




இதனையே சித்தர் பெருமக்கள் மிக எளிமையாக " அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம்" என்று மிக எளிமையாக விளக்கியுள்ளனர். அதாவது இந்த அண்டத்தின் அனைத்து தன்மைகளையும் இந்த பரு உடலிலும் இருக்கிறது. அதனால் இந்த பரு உடலை உள்ளுணர்வால் உணரக்கூடிய தன்மை பெற்றவர்களுக்கு இந்த பேரண்டித்தில் உள்ள அனைத்தையும் உணர முடியும். 


அதனாலேயே அன்றைய சித்தர்கள் பூத உடலால் செவ்வாய் கிரகத்திற்கு செல்லாமல் தமது சூட்சம உடல் மூலமாக செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை உணர்ந்து அதனை மிகத் தெளிவாக செவ்வாய் என்று கூறியதன் மூலம் உணரலாம்.

சைவ மதத்தின் நாயன்மார்களில் ஒருவரான மாணிக்க வாசக பெருமான் மிகத் தெளிவாக சிவலோகம் எனப்படும் உன்னத நிலையை அடைய தமிழ் சொற்களின் அமைப்பின் மூலமே "சிவத்தன்மையை" உணர்த்துகிறார். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மிக எளிமையாக எது சிவம், அந்த நிலை உணர இந்த பரு உடலை எப்படி பயன்படுத்த வேண்டும், மன நிலையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அனுபவித்ததையே பாடல் வடிவில் விளக்கமாக விளக்கியுள்ளனர். 

நாம் இன்றைய காலக் கட்டத்தில் மனித உடலுக்கு புறத்தில் உள்ள கருவிகளை கொண்டே இந்த கிரகங்களை அணுக முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த புற கருவிகளை வடிவமைப்பவர்களே விஞ்ஞானிகள் என்று வியந்து வருகிறோம். ஆனால் இந்த பரு உடலால் உணர முடியாத தன்மையிலும் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் பலவற்றை அனுபவித்து இயற்கை வழங்கியுள்ள உடலை கொண்டே உணர வழிச் சொல்லி சென்றுள்ளனர் உண்மையான விஞ்ஞானிகள் மெய்ஞானிகளே. 


ஐரோப்பிய அணு ஆராயச்சியில் நடராஜ சிலை - அணுவின் ஆட்டத்தை விளக்கும் விதமாக


சகிருட்டிஸ்

Sakritease 

July 2022


Saturday, June 25, 2022

Kapil the DEVILery of Cricket

 A Committed Sinner Par Excellence


Everyone of His Delivery

was an art of DEVILery

His every Outswinger

was India's mood swinger


He appeared on ad of shaving cream

every forest was shaven till we scream

Every tree was cut for a willow

Every street had a fellow

who will stroke a unseen ball

to sixer


every teen became azharuddin

every ghar had one tendulkar

Every traffic policeman had a Prayer

Let's play everyday a one dayer

No road had traffic

cricket fever became terrific

That red cherry 

was corona of 83


Streets were full of sons

every dozen became an opposition

Every moment in Sun

were cherished as fun


Sinner didnt lose his sight

for everyone's delight

threw his weight

showed India's Cash under the Light


Till that day ( 25 June 1983)

when Lloyd Marshalled

his last gentlemen

Till that Moment

Vivian was Caught

by that acumen



Cricket was a Game

played Under Lord('s) Sun

still the Man with Toothful Grin

Kapil Dev ka Jawab Nahin


Oh Lord Kapil Dev ( Lord Siva )

Save us from Lord's Kapil Dev

The Cricket -The Endemic Fever of India


sakritease 25 June 2022


Sunday, May 22, 2022

SriSinka Thoththa paya

 ஸ்ரீசிங்கா தோத்தபய ராஜபக்சே


இன்றைய நிலையில் ஒரே ஒரு நாளைக்குத்தான் பெட்ரோல் இருப்பதாக இலங்கையின் புதுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இலங்கையின் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இளவரசன் சித்தார்த்தன் போதி (அரச) மரத்தடியில் ஞான நிலையை  தமிழ் மாதமான வைகாசி விசாகத்தில் முழு நிலவு நாளன்று (16.5.2022 ) அடைந்ததாக உலகம் முழுவதும் பௌத்தர்கள் இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் கொண்டாடினர். புத்த மதத்தை தழுவிய இலங்கை சிங்களவர்களால் இந்த பௌர்ணமியை மனதார கொண்டாட முடியவில்லை.

புத்தனின் அக விரிவாகத்தை உள்வாங்காமல் போன புத்தனை வணங்கும் சிங்களவர் உள் விரியாமல், ஆதிக்க வெள்ளை தோல் மயக்கத்தில் இன்றும் அடிமையாய் பிரித்தாளும் அயல் நாட்டு சதிகளில் சிக்கி சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என்று பன்முனை வன்முறைக்கு உள்ளாகி பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது. 

இலங்கை இந்தியாவின் கேரளாவை ஒத்த மலை சீதோஷண நிலையில் அற்புதமான பல மூலிகைகளை இயற்கையாகவே உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு இந்தியாவை போன்று மிளகு, ஏலக்காய் போன்ற அடர் காடுகளில் இயற்கையாய் வளர்ந்த தாவரங்கள் கொண்டு தனது பொருளாதாரத்தை சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலங்களுக்கும் முற்பட்டு இயற்கையால் வார்த்தெடுக்கப்பட்ட சொர்க்க பூமியாக இருந்தது. 



17-18 நூற்றாண்டுகளில் சீனாவை பலமுறை ஆக்கிரமிக்க முயன்றும் தோற்ற ஆங்கிலேயர்கள் , சீனாவை பொருளாதார ரீதியாக முறியடிக்க சீனாவின் ஏற்றுமதியில் முதல் இடம் பெற்ற தேயிலையை உறபத்தி செய்ய, இலங்கையின் மலை பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியை தொடங்கியது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் நீலகரி, டார்ஜிலிங் போன்ற மலைகளிலும் தேயிலை உற்பத்தியை துவக்கியது.  தேயிலை மரத்தை 4 அடிக்கு மிகாமல் வெட்டப்படுவதால் அந்த மரங்களால் மலைகளில் கூடும் மேகங்களை ஆறாக்க முடியாமல் போனதால் மழை பொழிவு குறைந்தது.  மழை பொழிவும் , ஆறுகளின் ஓட்டமும் குறைந்ததால் பல விவசாய விளைச்சல்களும் குறைந்து இலங்கை ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமானது. இலங்கை வாழ் மக்களும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்த அற்புத நுகர்வு குறைவான வாழ்க்கைமுறைகளிலிருந்து மாறி அதிகமாக இயற்கையை நுகரும் ஐரோப்பிய அமெரிக்க கலாசாரத்தை பின்பற்றி இப்போது தற்சார்பு வாழ்க்கை முறையை இழந்து உலக நாடுகள் கொடுக்கும் கடன் பத்திரங்களில் கடன்பட்டு திருப்பக் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது.

பிரபஞ்சத்தில் அனைத்தும் உயிரகளிடத்தும் அன்பை போற்றிய புலாலை மறுத்த புத்தனின் அகிம்சையை மறந்த சிங்களவரும்,  சைவத்தின் தலைமை பீடமாக கொண்ட யாழ்பாணமும் திரிகோணமலையும் அதன் உன்னத தத்துவங்களை மறந்த தமிழருக்கும் 1980களில் தீவிரமடைந்த உள்நாட்டு சமய, சித்தாந்த போர் 2009 ல் உச்சகட்டம் அடைந்து போர் தளவாடங்களை வாங்கி சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷியா என்ற பல நாடுகளிலும் கடன் வாங்கி தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். இதன் உச்சகட்டமாக குடும்ப அரசியல் கும்பல்கள் நாட்டின் சொத்துகளை களவாண்டு தங்கள் குடும்பத்தாருக்காக சொத்துகள் பல நாடுகளிலும் சேர்த்து,  சொந்த நாட்டு மக்களை கடனில் இலவச பொருட்களில் ஆசைகாட்டி மயக்கமுற செய்து நாட்டை சூறையாடியுள்ளனர். அரசு பதவிகளில் குடும்ப அரசியல் நுழைந்து மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கும் நாடுகள் அனைத்தும் இலங்கையின் இன்றைய நிலையை அடையும் என்பது யதார்த்தம்.


"ராஜராஜன்" பெயர் பொறித்த கல்வெட்டு 
இலங்கையின் பிரதமர் பதவியை மக்களின் போராட்டத்திற்கு பயந்து விட்டு விட்டு ஒடியுள்ள "மகிந்த" ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் , தமிழ் எழுத்தாளர் திரு. கல்கி அவர்களின் அற்புத படைப்பான "பொன்னியின் செல்வனில்" இராஜ இராஜ சோழனின்  படைகளுக்கு அஞ்சி இலங்கை மலைகளில் தலைமறைவான "மகிந்தன்" என்ற இலங்கை அரசனை நினைவூட்டுகின்றார்.  என்ன ஒரு பெயர் பொருத்தம். 


ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மகிந்தனின் செயல்பாடுகளில் மாறுதல் இல்லை. மகிந்தர்கள் என்றும் மக்களின் பொது நன்மைக்காக என்றும் ஆட்சி நடத்துவதில்லை. தங்களின் தங்கள் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கைகாக தங்கள் ஆட்சியின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கையை அடகு வைத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகின்றனர்.  இராஜ இராஜ சோழன் போன்ற பேரரசர்கள் தங்கள் குடிமக்கள் நன்மை கருதி பல நீண்ட கால தொலை நோக்கு உள்ள திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.  காவிரி என்ற ஆறு வளப்படுத்தியதால் சோழ வளநாடு உணவு தானியங்கள் உற்பத்தியில் பெரும் தன்னிறைவு கண்டது. தன் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொண்ட தானியங்களில்  மித மிஞ்சியவற்றை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்துள்ளனர். அவற்றை கடல் கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க அவர்கள் கடற்படைகள், கப்பல் கட்டும் தளங்களை நிறுவி தங்கள் வளத்தை பலருடன் பகிர்ந்துள்ளனர்.  

மன்னராட்சியில் தன்னை நோக்கி மன்னர் பதவி வந்தும் அதனை மக்கள் மூலமாக குடவோலை முறையில் ஓட்டெடுப்பு நடத்தி தான் பதவி ஏற்பதை அந்த மாமன்னர் இராஜ இராஜ சோழர் மக்களாட்சி நடத்தி உறுதிபடுத்தியிருக்கிறார்.  அரசன் என்ற அகம்பாவம் துளியும் இன்றி அனைத்தும் இறைவன் என்னும் இயற்கையின் பேராற்றல், மக்கள் அதனை போற்றி அந்த இறைவனின் திருப்பணியாக மக்கள் சேவையாக வாழ்க்கையை இறைபணியாக வாழ வேண்டும் என்று தஞ்சையில் பெரூவுடையார் - சிவ பெருமானை - பிருமாண்டத்தை விளக்கும் விதமாக ஒரு பெரிய கோவிலை அமைத்து, அதனை மையமாக வைத்து நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ளார். அனைத்து செயல்களிலும் இறைவனின் பேராற்றலை ஒவ்வொரு கணமும் போற்றி வாழும்படியாக வாழ்ந்ததால் அந்த நாட்டில் மக்களிடம் பொறுப்புணர்வும் கலையுணர்வும் காவிரி ஆறு போல் பெருக்கெடுத்துள்ளது.  பல நாடுகளுக்கும் தமிழர்களை விவசாயம் செய்ய, சொல்லிக் கொடுக்க ஆங்கிலேயர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம். இதனாலேயே இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்ரிக்கா என்ற பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்வியல் பரவியுள்ளது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் "மகிந்தனின்" எண்ணம் மாறவில்லை, இலங்கை இன்றும் நல்ல ஆட்சியாளர்களை தேடிக் கொண்டிருக்கிறது.  அதே போல் ஆயிரம் ஆண்டுகளின் பின்பு மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் "ராபர்ட் ஹான்சன்" ஆக பிறந்தாலும் இதே இலங்கைக்கு அந்த இராஜாதி இராஜன் தன் குருவான "யோகசுவாமி" என்ற சைவ சித்தாந்த குருவை நாடி வந்து சிவாய சுப்ரமணிய சுவாமியாக அவதாரமெடுத்து சைவ சித்தாந்தத்தை உலக மெங்கும் 50 இடங்களில் "இறைவனார் திருக்கோவில்" களை நிறுவி நல்லெண்ணங்களை பல கோடி மக்களின் மனத்தில் நிறுவி அதற்கு தலைமை பீடமாக ஒருங்கிணைந்த அமெரிக்காவில் உள்ள  ஹவாய் தீவில் குஹ்வாய் மடத்தினை நிறுவியுள்ளார்கள். அரசனாக பிறந்தாலும் எளிய தொண்டனாக தன்னிரகற்ற சேவை செய்வபர்களால் மட்டுமே இந்த பூமி வளம் பெரும்.  (  இவரை பற்றிய இணைய குறிப்பு Sivaya_Subramuniyaswami ) 

இதற்கு பொதுமக்களின் பார்வை,எண்ணம் குறைந்த கால லாபங்களை, இலவசங்களை நாடாமல் உயிரினங்களின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு வாழ்வோமானால் நம்மிடையே பிறக்கும் அரசியல்வாதிகளும் எண்ணங்களில் செயல்களில் விரிவார்கள். 

இன்றைய அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படும் அனைத்து பேராசைகளும், அடாவடிகளும், அட்டூழியங்களும் சாதாரண குடிமக்கள் பலரிடம் நிறைந்திருக்கும் குணங்களின் பிரதிபலிப்பே.  நாம் எல்லோரும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் போலவும் தலைவர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல சித்தரித்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.  நம்மிடைய நன்மை மிகுந்தால் "இராஜ இராஜ"ர்கள் ஆட்சிக்கு வருவார்கள். நம்மிடையே தீமை மிகுந்தால் "மகிந்த"ர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். 

 அனைவரும் இறைவனின் (இயற்கையின்) அற்புத படைப்பு என்ற மன பக்குவ கண்டு தொலை நோக்கொடு அனைவரோடு பகிர்ந்து வாழும் உண்மையான நாகரீகத்திமான ஆப்பரிக்க பழங்குடி மக்களின் "யுபுந்து" என்ற தத்துவப்படி இயற்கையிடம் குறைவாக நுகர்ந்து அவரவர் வாழும் இடங்களில் இயற்கையாக விளையும் பொருட்களை உண்டு வாழ்ந்து மனிதப் பிறவி என்ற அற்புத வாழ்வை போற்றி இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களும் எந்தவித பயமுமின்றி வாழ எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் அருள் புரியட்டும்.

ஒரு மானுடவியலாளர் பல ஆப்பிரிக கோஹ்சாஹ் வனவாழ் குழந்தைகளிடம் ஒரு ஓட்டபந்தய போட்டியை அறிவித்தார். முதலில் ஓடி வருபவர்களுக்கு பலவித பழங்கள் வழங்கப்படும் என்றார். உடனே அந்த குழந்தைகள் அனைவரும் கைகளை ஒன்றாக கோர்த்துக் கொண்டு ஒன்றாக இலக்கை அடைந்தனர். "ஏன் இப்படி ஒன்றாக ஓடி வந்தீர்கள் ? யாராவது ஒருவர் எல்லோரையும் முந்தி வந்திருந்தால் அவர் அனைத்து பழங்களையும் உண்டிருக்கலாமே ?" என்று கேள்வி கேட்டார். அதற்கு குழந்தைகள் " உபுந்து !!  மற்ற அனைவரும் வருத்தமாக இருக்கும் போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் ?? " என்று உற்சாகமாக பதில் கேள்வியை நமது மனித குலத்தின் நோக்கி வீசினர். உபுந்து என்றால் நான் என்பது இந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பு.  


"உபுந்து" என்பது கிட்டத்தட்ட மகாகவி சுபரமணிய பாரதியார் கூறியதை போல் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற கோட்பாடின்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது.  இன்றைய நிலையில் நாம் நாகரீக உலகில் வாழ்வது போல் அலட்டிக் கொண்டு அநாகரீகமாக மலைகளை வெட்டி குவாரிகள் ஆக்கி மரங்களை வெட்டி சவப் பெட்டிகள் அலங்காரங்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். ஆப்பரிக்க காடுகளில் தான் இன்றும் சில நாகரீகமான மனிதர்கள் இயற்கையோடு மிகவும் ஒன்றி மிக குறைந்த நுகர்வு முறையில் இயற்கை அளிப்பதை மட்டும் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்க்கிறார்கள்.

தனக்காக வாழ்பவர் அனைவருமே "தோத்தபய" தான். அதுவரை இந்த பூமி ஒரு "ஸ்ரீசிங்கா" தான். மனிதம் என்பது மூழ்கிய "சிங்க்" (sink ) தான்.


சகிருட்டிஸ் 

sakritease May 2022

Translate

Contact Form

Name

Email *

Message *