Search This SAKRITEASE Blog

Thursday, July 16, 2020

Rajajiyum Kamarajurum kalviyum


இராஜாஜியும் காமராஜரும்

கல்வியும்

 


 15. ஜூலை.2020 


இன்று கர்மவீரர் காமராஜர் அய்யாவின் 118 வது பிறந்தநாள். அய்யா வாழ்ந்து காட்டி வழிக்காட்டிய வழியை பின்பற்றுவோம். தமிழ்நாட்டில் கல்வி பரவலாக காமராஜரின் பங்கு அளப்பரியது.  

 

அதே சமயம் தீர்க்க தரிசி திருஇராஜாஜி அவர்களை பலரும் குறைத்து எழுதுவது சிறப்பன்றுஅவர் ஒரு சிறந்த கல்வித் திட்டத்தை முன் மொழிந்தார்.

 

மாணவர்கள் பள்ளிக் கல்வியை தாண்டி தங்கள் பெற்றோர்களிடமும் உள்ள சிறப்பு திறன்களை கற்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வி காலையிலும் தொழிற் கல்வி பிற்பகலில் கற்க வேண்டும் என்பது திட்டம்இது முக்கியமாக மாணவர்கள் தன்னம்பிகையுடன் தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக

 

அவரின் கல்வித் திட்டத்தை பற்றி தமிழ் விக்கிபீடியாவில் (https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம்  ) உள்ளது அப்படியே இங்கே :

 

திட்டம்

1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமேஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1.    பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.

2.    மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.

3.    இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.

4.    இத்தகு தொழில்கள் (கைவினை மற்றும் வேளாண்மை) செய்யும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், இரண்டாம் நேர முறையை வேறொரு தொழில் செய்பவருடன் கழிக்கலாம்.

5.    இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில்கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல்ஈடுபடுத்தப்படுவர்

6.    இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.

இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது.

 

 இராஜாஜியின் கொள்கையை பல மேலை நாடுகளில் அற்புதமாக பின்பற்றி அவர்கள் விஞ்ஞான முன்னேற்றத்தில் பல மடங்கு நம்மை விட அதிக கண்டுபிடிப்புகளை கொண்டு வரச் செய்தது.  மேலை நாடுகளில் ஒருங்கிணைந்த அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து , நார்வே போன்ற பல நாடுகளில் மாணவர்களின் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அவர்களுக்கு அழுத்தமில்லாமல் வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கபடும் போது அற்புதமான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகின்றனர்.   இன்று நம்ம் ஊர் மாணவர்கள் பலரும் வெளினாடுகளுக்கு சென்று மேல் படிப்பு படிக்கும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கையும் எதையும் ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து அவர்கள் பலரும் சாதித்து வருகிறார்கள்.

 

கல்வியை பற்றி புரிதல் அவசியம்கல்வி என்பது பள்ளியில் ஆரம்பிப்பதில்லைகுழந்தைகள் பிறந்த முதலே அவர்களின் கிரகிக்கும் திறன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்தாயும்தந்தையுமே முதல் குருவாவார்கள்அவர்களிடமிருந்து கற்றால் தான் பிள்ளைகள் பெற்றோரை மதித்து போற்றுவர்.  இன்றைய தமிழக நிலைமை என்ன ஒரு விவசாயியின் மகன் விவசாயத்தை வெறுக்கிறார். அதனால் அவர் தந்தையை மதிப்பதில்லை. விவசாயி நிலம் விற்ற காசைக் கொண்டு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்து அந்த மகனோ / மகளோ ஒரு குமாஸ்தா வேலைக்கு லாயக்கற்றவர்களாக ஆக்கி விட்டது கல்வி முறை.  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சுவரில்லாத பள்ளிக் கூடம் என்பதே உண்மையான கல்வி முறை என்று அடிக்கடி வலியுறுத்துவார். இயற்கையிலிருந்து இயல்பாகவே கற்க வேண்டும் , முடியும் என்பதை தன் வாழ்நாள் முழுவதும் பரப்பினார்.

 4 Ways Your Child with Special Needs can be Included Outside of ...G Nammalvar – A Scientist Turned Saint and Became Messiah of ...

இன்றைய நிலைமை என்னகுழந்தைகள் ஒழுங்காக படிக்கவில்லையென்றால் உடனே ஆசிரியர் நோக்கி கை நீள்கிறதுஇது தவறானது.  பிள்ளைகள் கற்பிப்பதில் பெற்றோரும் பங்கு பெற வேண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இராஜாஜியின் அடிப்படை தத்துவம்.  

 

அன்று இராஜாஜியை காமராஜர் உட்பட பலரும் எதிர்த்தனர்.. திமுக அதனை குலக் கல்வி முறை என்று மிகவும் பழித்தது

 ஆனால் இன்று திமுக விலும் தந்தையிடம் அரசியல் கல்வி படித்தவர் மட்டுமே தலைவராக முடியும் என்று நிருபித்து வருகிறது.  ( இந்த வழிமுறையை நியாயப்படுத்த எழுதப்படவில்லை, ஆனால் தந்தையிடமிருந்து தனயன் உள்வாங்க வாய்ப்பு அதிகம் என்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டு. )

 A rare photograph of a very young Udhayanidhi Stalin with his ...

காமராஜரின் அரசு கொண்டு வந்த பகலுணவு திட்டம் மூலமாகத்தான் வறுமையின் எல்லையில் இருந்த பலரும் உணவிற்காகவாவது பள்ளியில் ஒதுங்கினர்.  அவரின் நீர் மேலாண்மை திட்டங்களினால் பல ஊர்களுக்கும் அணைகள் மூலமாக பயன் பெறுகின்றன.  தொடங்கிய பல தொழிற்சாலைகளும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.  

 

தமிழ்நாட்டின் நலனில் மிகுந்த அக்கறையுடன் இருந்த இரு பெரும் ஆளுமைகளான இராஜாஜியும் காமராஜரும் தனிப்பட்ட முறையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தது நமது நாட்டிற்கும் அவர்கள் இருவரின் அரசியல் வாழ்க்கைகும் பெரிய தடைகற்களாக போய்விட்டது.


உண்மையில் அவர்கள் இருவரின் கல்விமுறைக்கும் ஒரு இடைப்பட்ட கல்விமுறை , இருவரின் சிறந்த கொள்கைகளின் இணைந்து கொடுக்கப்பட்டிருந்தால் தமிழகம் தரமான கல்வியில் ஒரு உன்னத நிலை அடைந்திருக்கும். நமது பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் நமது முன்னோர்களின் மேன்மையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கும்.  விவசாயி மேலும் வளமாக விவசாயம் செய்திருப்பார்.  ஆனால் இன்று விவசாயத்தை விட்டு கம்பெனி வேலைகளுக்கு வந்தவர்களால் வெள்ளைகார நிறுவனங்களின் பொருட்களை கூவி வித்து இன்று மண்ணெல்லாம் யூரியாவை பூச்சி மருந்துகளை கொட்டி மண்ணை மலடாக்கிவிட்டு இப்பொழுது கண்ணை கசக்கி கொண்டிருக்கிறோம்.

 

காமராஜரின் பிறந்த சமூகமான நாடார் சமூகத்தினரால் தான் பெரும்பாலான மளிகை கடைகள், துணி கடைகள் வெற்றிகரமாக பல பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி நடந்துக் கொண்டிருக்கிறது.  இதனை நடத்துபவர்கள் பலர் பள்ளி கல்வியை புறக்கணித்தவர்கள்.  பல்வேறு சிறு தொழில் செய்து வெற்றி கண்டு வரும் இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் அதிகம் பள்ளி படிப்பு படிக்க விருப்பமில்லாததால் சொந்த தொழில்  (எ.கா. செருப்புக் கடைகள், பேன்சி கடைகள் ) செய்து வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் பள்ளிக் கல்வியை காட்டிலும் வாழ்க்கை கல்வியினாலும் தன்னம்பிக்கையினாலும் வெற்றிக் கண்டவர்கள்.  இதே தமிழ்நாட்டில் தான் நாம் இஞ்சினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருப்போரை பார்க்கிறோம்.

 Nadar Professional Stores, Chromepet - Provision Stores in Chennai ...Eid 2020: Flout Social Distancing Norms, People Step Out For ...

இன்று நமது பொறியியல் கல்லூரி படித்த இளைஞர்கள் சென்டி மீட்டருக்கும் மில்லி மீட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கும் ஏட்டு சுரக்காய்களே

 

இதற்கு நமது அடிப்படையில் உள்ள கோளாறை புரிந்துக் கொள்ள வேண்டும்.  பள்ளியிலும் கல்லூரியிலும் கரும்பலகையில் படிப்பதை மட்டுமே கல்வி என்று நாம் கடந்த 50 ஆண்டுகளாக நம்பத் தொடங்கிவிட்டோம். இந்த இடங்களில் நாம் எழுத்தை மட்டுமே தெரிந்து கொள்ள பழக்கப்படுகிறோம்.  பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் பலரால் வங்கியில் கடன் பெற்று / அல்லது வேறெங்காவது பணம் பெற்றாவது ஒரு தொழில் நடத்த முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களுக்கு இல்லை. ஏனென்றால் இந்த ஏட்டு சுரக்காய் எழுத்து  அறிந்தவனுக்கு அவன் படித்த படிப்பு ஏதாவது ஒரு நிறுவனத்தில் சென்று கை நிறைய சம்பளம் வாங்கி பீரோ நிறைய உடுத்தி வாய் நிறைய உண்டு சாலை நிறைக்கும் கார் வாங்கி சாலையை அடைக்க மட்டுமே பழக்கப் படுத்துகிறது. அது போன்ற வாழ்க்கையை எதிர்பார்த்து அது அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாததால் கடனே என்று பல இலட்சம் கடன் வாங்கி அதனை அடைக்க வழி தெரியாமல் தாங்கள் விரும்பாத வேலையில் சலிப்புடன் வாழ்பவர்கள் தான் அதிகம்.  இதற்கு பலரும் தாங்கள் விரும்பும் ஒரு கைத் தொழிலாவது கற்றுக் கொள்ளாததே காரணம்.

 

எந்த ஒரு பொறியியல் கல்லூரிக்கும் செல்லாமல் ஒரு தூக்கனாங்குருவி கட்டும் கூடு எந்த மனிதனாலும் இயல்பாக செய்ய முடியவில்லை. இந்த இடைவெளியை இட்டு நிரப்பத்தான் அன்றே  மூதறிஞர் இராஜாஜி முயன்றிருக்கிறார்.  நம்மாழ்வார் இதனையே கற்பித்தல் என்பது ஒரு வழி பாதையாக பார்த்தார்.  மாணவர் ஆசிரியர் என்ற பிரிவில்லாத இரு மாணவர்களிடையே கருத்து பரிமாற்றமாக வாழ்ந்துக் காட்டினார். 

 

https://www.amazon.in/iyalbe-Engineering-Awakening-engineer-Tamil-ebook/dp/B07886JJN2

(  https://www.amazon.in/iyalbe-Engineering-Awakening-engineer-Tamil-ebook/dp/B07886JJN2 )

இன்று கரோனா உலகத்தில் பல இடங்களிலும் கையையும் காலையும் கட்டிப் போட்டுள்ளது.  இந்தியா முழுவதும் பலரும் வேலையிழக்கும் வாய்ப்பு அதிகம்.  இரண்டாம் உலகப் போருக்கு பிறகு வீறுக் கொண்டு எழுந்த ஜப்பான் போல் அனைவரும் கடினமாக உழைத்தால் தான் வாழ்க்கையை வாழ முடியும்.  அதற்கு உழைப்பில் கௌரவம் பார்க்காமல் உயர முயற்சிப்பவர்கள் மட்டுமே ஜெயிக்க முடியும்.

ஆனால் அதற்கு காமராஜரை போல் அதிகம் பள்ளி கல்வி கற்காதவர்களுக்கே எளிமையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னம்பிக்கை தராத கல்வியை படித்தவர்களுக்கு ஏட்டு கல்வி ஒரு சுமையாக இருக்கிறது.  இதை 70 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து தான் தீர்க்கதரிசியான திரு. இராஜகோபாலச்சாரியார் பள்ளிக் கல்வியுடன் தொழிற் கல்வியை இணைத்தார்.  அன்றும் நாம் ஜாதி அரசியல் பேசி அந்த ஞானியையும் அவர் தந்த ஞானத்தையும் புறக்கணித்தோம்.

 

இன்று நமது கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் பின்லாந்து நாட்டிற்கு சென்று அவர்கள கல்வி முறையை கற்றுக் கொள்ள சென்று வருகின்றனர். அவர்கள் நாட்டு கல்வி பற்றி கூறுகையில் அந்த நாட்டு மாணவர்கள் 15 வயது முடிவடைதற்குள் இரண்டு கைத் தொழிலாவது கற்றுக் கொள்கிறார்கள்அதனால் அந்த மாணவர்களால் தன்னம்பிக்கையுடன் ஒரு சுய தொழில் செய்ய களமிறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கல்வியை அறிவு வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக பார்க்கிறார்கள் அவர்கள் குடும்ப பெயர்களில் கூட டெய்லர், வுட் கட்டர், கார்டர், போர்டர் என்ற தங்கள் தொழில் பெயரை வைத்துக் கொள்வதில் அவர்கள் கூச்சம் கொள்வதில்லை.  நாமோ நமது தந்தையின் தொழிலை சொல்வதற்கு கூட வெட்கப்படுகிறோம்.

 

. DIY - do it  yourself என்ற தத்துவம் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமடையவும் பல விஞ்ஞான வழி கண்டுபிடிப்புகளுக்கும் இராஜாஜி வழி மொழிந்தது போல் தன்னம்பிக்கை தரும்  கல்வித் திட்டங்களே காரணம்.  


இதனை உணர்ந்து இந்தியாவிலும் பல நல்ல முயற்சிகள் நடந்தவண்ணமுள்ளது.  அப்துல் கலாம் அய்யா மாணவர்கள் எப்படி கற்று கொள்ள வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு எழுச்சியூட்டி இருக்கிறார்கள்.  அதே போல் ஆசிரியர்களும் எப்படி கடைசி மூச்சு உள்ள வரையில் தானும் கற்று மாணவர்கள் கற்றுக் கொள்ள உகந்த சூழ்நிலையை உருவாக்க ஒரு கருவியாக இருக்க வேண்டும் தன் வாழ்க்கை பயணத்தில் தன்னை செதுக்கிய ஆசிரியர்களை என்றென்றும் நினைவு கூர்ந்தார்.

IGNITE 2012 results are out! | c@g

“ எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு “

 என்ற வள்ளுவர் வாக்கின் படி பொருளுணர்ந்து வாழ்வோம்.

APJ Abdul Kalam birth anniversary: Top 10 inspirational Kalam ...

 


Wednesday, July 15, 2020

ayyappanum vijayanum



Three important cases happening in Kerala

1. Gold Smuggling case involving high profile candidates.

2.  Kerala Government's attempt to control the properties of Lord Anantha Padmanaba Swamy Temple in Thiruvanathapuram has been squashed by the Supreme Court which released its verdict this week.

3. In Sabarimala case of allowing women between 10 to 50 years of age defying age old customs and traditions and scientific reasoning - Kerala Government set its foot at the wrong place by allowing the non-believers to enter the premises.

Sunday, July 5, 2020

Sat on Kulam Police

காவலரைப் போற்று

நமது ஊடங்களுக்கு எது முக்கியம்  ? இன்றைய பரபரப்பு செய்தி அது மூலமா டி.ஆர்.பி  ரேட்டிங் அதன் மூலமா விளம்பர வருமானம். மும்பை நடிகர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் ? நடிகையை மூன்றாவதாக திருமணம் செய்தவரின் டைவோர்ஸ் கேஸ் என்னாச்சு ?

நாட்டோட எல்லையை பாதுகாக்கும் பணியில் இராணுவ வீரர்கள் 20 பேர் இறக்கிறாங்க. தமிழ் நாட்டை சேர்ந்த ஹவில்தார் திரு. பழனி வீர மரணம் எய்தினார். 

கரோனா நோய் தொற்று நம்மை ஒரு பக்கம் பயங்கரமா ஆட்டம் காட்டுகிறது.  எப்படி மக்களும் அரசாங்கத்தின் அங்கங்கள் எல்லோரும் தீவிரமாக தன் உயிரையும் பணையம் வச்சு போராட்டிட்டு இருக்காங்க.  இதில் காவல் துறையும் தன் பங்குக்கு சில காவலர்களையும் இழந்து பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். சில காவல் நிலையங்களையே நோய் தொற்றுக்கு பயந்து மூடி வைக்க வேண்டிய நிலைமை. காவல் துறையில் வேலை செய்யும் பல காவலர்களுக்கும் தினம் உடம்புக்கு கொடுக்க வேண்டிய ஒய்வு கிடைப்பதில்லை. தன் பணிச்சுமையை எப்படி எங்க இறக்கி வைப்பது என்று புரிந்துக் கொள்ள முடியாத மன அழுத்தம் மிக்க ஒரு வேலை.  கீழ் நிலையில் உள்ள பல போலிஸ்காரர்கள் பலரும் உணர்ச்சி மறத்து போன நிலையில் எல்லா அவமானங்களையும் தாங்கித்தான் வயிற்று பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது.


ஆனால் மீடியாவில் எப்பவுமே சாத்தான் குளத்தையே  ஒரே செய்தியாக்கி ஏற்கனவே சோர்ந்திருக்கும் மக்களையும் காவல்துறையையும் மேலும் சோர்வடைய செய்கிறார்கள்.

70 வருட விடுதலையில் நாம் தெரிந்து கொண்ட பாடம். பண பலம், ஆள் பலம் உள்ளவர்கள் மட்டுமே இங்கு அரசியல்வாதியாக நிலைச்சு நிற்க முடியும். சட்டத்தை வளைக்க தெரிந்தவர்களே மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.  இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து மட்டுமே பலரும் வேலைக்கு வரமுடியும்.  இப்படி லஞ்சம் கொடுத்து வாங்கியே இங்கு இருக்கும் அனைத்து வேலைகளும் நடக்கிறது.  இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவர் எப்படி ஒழுங்கா வேலை செய்வார் என்று நாம் எதிர்பார்ப்பது ???

இதற்கெல்லாம் என்ன தீர்வு ? சினிமாக்காரர்கள் பாணியில் நமது மக்களின் மன ஓட்டம் அறிந்த யாராவது ஒரு அந்நியனோ, ஒரு இந்தியன் தாத்தாவோ, ஒரு மாரியோ மொள்ள மாரியோ வந்து ஒட்டு மொத்தமா எல்லா கெட்டவர்களையும் அடிச்சு உதைச்சு கொன்னு போட்டுதான் மட்டுமே மாற்ற முடியும் என்று நாம எல்லோரும் முடிவிற்கே வந்துவிட்டோம்.  

இப்போது சாத்தான் குளத்தில் போலிஸ் கஸ்டடியில் வைச்சு இரண்டு வியாபாரிகளை விசாரித்ததில் அவர்கள் இறந்து போய்விட்டனர்.  இதில் சந்தேகத்திற்கு உண்டான காவலர் நால்வர் கைது இந்த நிமிடம் வரை.  இதில் உடனே நமது சினிமாக்காரர்களுக்கு கோவம் வந்துவிட்டது. “நான் போலிஸ் வேஷம் போட்டதற்காக வெட்கப்படுகிறேன்” என்கிறார் ஒரு நடிகர் “ நான் போலிஸ் ஸ்டோரியே எடுத்தேன், அதற்கு அவமானப்படுகிறேன் “ என்று பொங்குகிறார் ஒரு டைரக்டர்.  அய்யா நீங்கதான் போலிஸ்னா சாமின்னு சொல்லிட்டு  “நான் போலிஸ் இல்ல பொறுக்கி”அப்படின்னு வசனம் வச்சீங்க.  இந்த முரண்பாடு உங்ககிட்ட மட்டும் இல்ல நம்ம சமுதாயம் முழுவதுமே முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது.

சினிமா காரர்கள் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால் இன்றைய போலிஸ்காரர்களின் நிலைமை “சின்னதம்பி” படத்தில் வரும் பாடல் போல “குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி பாட சொல்கிற உலகம் “.  காவலர்கள் அவர்கள் பற்றி வரும் எந்த விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முடியாது. அவர்கள் தேவையான ஒய்வோ விடுப்போ வசதிகளும் கிடையாது. பெண் காவலர்களின் நிலைமை அவர்கள் வெளியிடங்களுக்கு போகும் போது சரியான கழிவறை வசதிகள் கூட கிடையாது.  இவர்களுக்கு ஒரு யூனியன் கூட கிடையாது.  காவலர்கள் மிகுந்த மன உளச்சலில் தான் வேலை செய்கிறார்கள்.  அதனால் அவர்கள் நாளடைவில் ஒரு உணர்ச்சியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

                               

யானைகளை புத்துணர்ச்சி முகாமிற்கு அனுப்புவது போன்று     (https://ta.wikipedia.org/s/7gu4 ), காவலர் ஒவ்வொருவரையும் வருடத்திற்கு ஒரு 15 நாளாவது அவர்களது உடல் , மன புத்துணர்ச்சி முகாமிற்கு அனுப்பவது தான் சிறந்தது. மனதளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தான் நீதிபதிகளுக்கு வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை வழங்கப்படுகிறது.  உடல் , மனம் இரண்டுமே பாதிக்கபடக் கூடிய காவலருக்கு தின, வார, மாத, வருடாந்திர ஒய்வு அளித்தால் தான் அவர்களிடம் நாம் தரமான சேவையை எதிர் பார்க்கலாம்.

சாராயம் குடிக்கிற சீன் இல்லாம இன்று ஒரு சினிமா வரமுடியுமா ?? அடிதடி. கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களையே இன்று ஹீரோ என்று காட்ட வேண்டியுள்ளது. ஏனென்றால் இன்றைய சினிமா எடுக்க பணம் போடுபவர்கள் பலரது பிண்ணனியும் சாராயத்துடனும், ரௌடிகளுடனும், அரசியலுடனும் தொடர்பு இருப்பவர்களே. 

இறந்த வியாபாரிகள் வீட்டிற்கு எதிர்கட்சி ஆளும் கட்சியும் போட்டி போட்டு கொண்டு நிதி வழங்குகிறார்கள். இது தவிர அரசாங்க நிதி உதவி வேறு.  இதிலேயே பிரச்சனையின் மூலக் கூறு எங்கே உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

 இராணுவ வீரருக்கு கடும் குளிரில் எதிரியிடமிருந்து நம் நாட்டை காப்பதற்காக உயிர் துறந்தும்,  இன்று அவர் குடும்பத்திற்கு வழக்கமான இழப்பீடு. கரோனாவில் நமக்காக பாடுபட்டு இறந்த காவலருக்கும் , மருத்துவருக்கும் வழக்கமான இழப்பீடு. பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு, இலஞ்சம், ஊழல்.  தமிழ்நாடு மிகப்பெரிய குழப்பமான ஊழல் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது.

காவல்துறை, அரசியல், சினிமாத்துறை, நீதிபதி , வக்கீல் என்று அனைவருமே இந்த சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் தான்.  யாரும் வானத்திலிருந்து  குதித்து  வரவில்லை. குற்றம், குறை, பித்தலாட்டம், ஊழல், இலஞ்சம், அதர்மம் இல்லாத துறையே இல்லை. அதே சமயம் இந்த துறைகளிலும் இத்தனை இக்கட்டான சவாலான சுழ்நிலையிலும் நேர்மையாக, தன்னால் இயன்றளவிற்கு நன்மை செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். நால்வர் செய்யும் தவறை வைத்து நாலாயிரம் பேரை குறை சொல்ல முடியுமா ? குறை சொல்லும் அருகதை நமக்கு இருக்கிறதா ?

எங்கே நமது சமுதாயத்திற்கு இடறுகிறது ?

தமிழ், தமில், தமிள் என்று ஒரு உணர்ச்சி வயப்படும் கூட்டமாகவே மாற்றப்பட்டுவிட்டோம்.  என் மொழி தொன்மையான மொழி . நாட்டின் பிரதமரே லடாக்கில் இராணுவத்தினரிடம் பேசும் போதும் திருக்குறளை தான் மேற்கோள் காட்டுகிறார் என்று பெருமை கொள்கிறோம்.  ஆனால் நாம் நமது எதிர் கால தலைமுறை பெருமை கொள்ளும் படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.  நமது  முன்னோர்கள் அவர்களின் அடைந்த பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாக கட்டிடக் கலை, சிற்பக் கலை, இலக்கியம் என்று விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மிகத் தெளிவாக பிற மனிதர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதற்கு புறநானூறும் உள்மன வளர்ச்சிக்கு அகநானூறும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.  இதனை இன்னமும் எளிமையாக்கி திருக்குறள், ஆத்திச்சூடி, திருமந்திரம் என்று நாம் வாழ வழிக்காட்டிச் சென்றார்கள்.

ஆனால் நாம் இன்று நவீனம் என்ற போதையில் மயங்கி இயற்கையை வெகுவாக சிதைத்து வெறும் ஒரு கிருமிக்கு பயந்து ஊரடங்கி போயிருக்கிறோம்.  நம்மை உணர்ச்சிவசப்படுத்த ஒரு  breaking news ற்காக காத்திருக்கிறோம்.  நமக்கு இயற்கையோடு ஒன்றி வாழத் தெரியவில்லை.  இயற்கையில் வளரும் தாவரங்களை அவற்றின் மேன்மையை நாம் உணரவில்லை. மலைகளை வெறும் குவாரிகளாக்கிக் கொண்டிருக்கிறோம், ஆறுகளை வெறும் சாயக் கழிவு விடும் சாக்கடைகளாக்கிக் கொண்டிருக்கிறோம்.  உணவெல்லாம் நச்சு கலந்தே உண்ணுகிறோம்.

“இயற்கைக்கு திரும்பும் பாதையை” நமக்கு இப்பவும் காட்டுவதற்கு பல ஞானியர்களும் வந்த வண்ணமே உள்ளனர்.

அவர்கள் காட்டிய வழியில் மலையெங்கும் மரங்கள் நடுவோம், ஆறுகளை ஓடச் செய்வோம், உழுதுண்டு வாழ்வோம்,  இயற்கையை வழிப்படுவோம், கலைகளை வளர்ப்போம், நமது முன்னோர் காட்டிய பண்பாட்டுடன் வாழ்வோம். நமது எதிர் கால சந்ததியினர் நம்மை நினைத்து பெருமை அடையும் படி வாழ்வோம்.

நரகம் என்பது தனியான ஒரு இடம் அல்ல நாம் இன்று ஏற்படுத்தி கொண்டிருக்கும் சூழலே. சாத்தான் குளம் தமிழகத்தில் மட்டும் இல்லை இன்று பூமியில் பல பகுதிகளும் சாத்தான் குளமாகவே காட்சி தருகிறது.  சாத்தானகள் ஆகிய நாம் உருவங்களை அழிக்க முற்படாமல் தீய எண்ணங்களை அழிக்க முற்படுவோம்.  நாமே தெய்வங்கள் ஆவோம், இறைமை என்னும் உன்னத இயற்கையின் பேராற்றல் தன்மையை உணர்வோம்.

 வாழ்க வளமுடன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Wednesday, July 1, 2020

MGR Chennai to Tiruchy


எம்.ஜி .ஆர். இன் கனவை எடப்பாடியார் நிறைவேற்றுவாரா 


ஏன் தமிழ்நாட்டின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு  மாற்ற வேண்டும் ?

1980 களிலிருந்தே சென்னை நகரம் கடுமையான தண்ணீர்  பஞ்சத்தை சந்தித்து வருகிறது . அப்பொழுதே அன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன்  அவர்கள் தமிழ் நாட்டின்  வடக்கு கோடியிலிருந்து மாநிலத்தின் நடுவிற்கு தலைநகரத்தை கொண்ட செல்ல  நினைத்தார்.  அதற்கு அப்பொழுது பலர்  எதிர்ப்பு தெரிவித்தனர் .  ஆனால் அது ஒரு தீர்க்க தரிசனம் மிக்க முடிவு  என்று பல  நிகழ்வுகள் நிரூபிக்கின்றன .

அன்று  400 ச .கிமீ  பரப்பளவிலிருந்து 600 ச.கிமீ  அளவு விரிந்தாலும் தமிழ்நாட்டின் மிகச்  சிறிய மாவட்டமான சென்னையால் மக்கள் தொகை பெருக்கத்தை தன உள் கட்டமைப்பை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியவில்லை . அனைவரின் நன்மையையும் கருத்தில் கொண்டு  தமிழ்நாட்டின் மாவட்டங்களிலிருந்தும் ஒரே தூரத்தில் இருக்கக்கூடிய திருச்சி -துறையூர் - முசிறி நமது முன்னோர்கள் தலைநகரமாக ஆட்சி செய்த இந்த நகரங்களை  இணைத்து உருவாக்கினால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பரவலாக இருக்கும் . 

இன்றைய  சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் இருப்பவர்கள்  ஒவ்வொரு  அரசாங்க  வேலைக்கும் சென்னை நோக்கி வரவேண்டியுள்ளது.

  • 1980 முதல் கடுமையான தண்ணீர் தட்டுபாடு

  • 2004 சுனாமி பேராபத்து

  • 2015 வெள்ளத்தில்  தத்தளித்தது

  • 2020 கரோனா தொற்றில் முன்னிலை

  • மக்கள் அடர்த்தியில் சென்னை பிற மாவட்டங்களை விட 40 மடங்கு அதிகம்.

  • போர்க்காலங்களில் கடற்கரையோரத்தில் இருப்பதால் ஆபத்து
  •  
  • தமிழ்நாட்டின் வடக்கு கோடியில் இருப்பதால் தென் மாவட்ட மக்களின் அலைச்சல் அதிகம்



Is it not the right time to Shift the Tamil Nadu's Capital from Chennai to Tiruchy ( Thiruchirappalli ) ????

Chennai has been stressed :
  1.  Due to acute water scarcity from 1980s
  2.  Affected by Tsunami 2004
  3.  Could not handle the severity of floods in 2015
  4.  Now facing the heat in COVID 19 infection
  5.  Population density of Chennai district is 40 times more than any other district.
  6. During any war, being at the coast is not safe
  7. Chennai is located at Northern most corner of Tamilnadu. People from south are facing lot of troubles in travelling.
  8. Due to CORONA several Lakhs of people have applied for e-pass with the government to move to other parts of the State.

Translate

Contact Form

Name

Email *

Message *